அப்பாவுக்கு கடிதத்தைப் பெற்று படிப்பதில் அதீத மகிழ்ச்சி!

 









நரசிங்கபுரம் 20/12/2022

 

அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் கிடைத்தது. அப்பா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அவரது நண்பர் திருவண்ணாமலையில் இருந்து கடிதம் எழுதி அனுப்பி வந்தார். போன் வந்ததும் கடிதம் நின்றுவிட்டது. எனவே, கடிதத்தை வாங்குவதில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. எனக்கு முன்பாகவே படித்துப் பார்ப்பார். அவருக்கு நீங்கள் எழுதும் கையெழுத்தில் சில வார்த்தைகள் புரியவில்லையாம். எப்படி படிப்பே? என்று கேட்டார். அன்பிடம் பழகியவர்க்கே அன்பரசு கையெழுத்து புரியும் என்று சொன்னேன். சரிதானே?

உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சார்? மருத்துவ செலவுகள்? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம். சென்னை வந்தால் சொல்லலுங்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால் சிறப்பு. தினமும் விதவிதமான கணித ஸ்டேட்டஸ்களை வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த 17ஆம் தேதி என் குருநாதர் நடத்திவரும் பை கணித மன்றத்தில் இராமானுஜன் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. ஏஐஆர்எம்சி என்ற அமைப்பிலிருந்து வந்த சீனிவாசராகவா, இராமானுஜனின் சிறப்புகளை பேசினார். ஏராளமான தகவல்கள் கிடைத்தன.

அத்துடன் டி.என்.மகேஷ் என்ற புதிர் புலவரை சந்தித்தேன். கணிதத்தில் மாய சதுரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை ஆயிரக்கணக்கில் தொகுத்து வைத்துள்ளார். மேலும், அதை எப்படி தீர்ப்பது என்பதை அறிய இரு புத்தகங்களை வழங்கினார். புத்தகம் மிக எளிமையாக உள்ளது. சால்வ் செய்ய சில கணக்குகளை கொடுத்திருக்கிறார். நேரம் கிடைத்தால் அதைத் தீர்க்க முயற்சி செய்யவேண்டும்.

நன்றி

காந்திராமன்

 

 https://pixabay.com/photos/vintage-pocket-watch-letters-7439233/


கருத்துகள்