இடுகைகள்

சூஜித் சிர்கார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதிலுள்ள வெறுமையை கடந்து வருவது கடினமாக இருந்தது! - சூஜித் சிர்கார், இந்திப்பட இயக்குநர்

படம்
  சூஜித் சர்க்கார்  சூஜித் சர்க்கார்  இந்தி திரைப்பட இயக்குநர்.  இருபது ஆண்டுகளாக மனதில் நினைத்து வைத்திருந்த படத்தை உருவாக்கி வெளியிட்டு விட்டார். படத்தின் பெயர் சர்தார் உத்தம் சிங். சிலர் பாராட்டியும், சிலர் திட்டியும் விமர்சனங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது சர்க்கார் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அவரிடம் பேசி தெரிந்துகொள்வோம்.  படம் நிறைவடைந்த பிறகு உங்கள் மனநிலை எப்படி இருந்தது? இருபது ஆண்டுகளாக இந்த படத்தை உருவாக்க வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அதனை உருவாக்கியபிறகு மனதில் வெறுமையாக இருக்கிறது. படத்தை உருவாக்குவது பட்ஜெட் என்றளவில் அல்லாமல் அதன் கதையே பிரமாண்டமானது. அதனால் இதனை செய்வது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. தயாரிப்பாளர் ரோனியிடம் எப்போதும் என்னுடைய பட ஐடியாக்களை பற்றி பேசிக்கொண்டிருப்பேன். ஆனால் இந்த படம் முடிந்தபிறகு எதையும் பேச முடியவில்லை.  எப்படி வெறுமையைக் கடந்து வந்தீர்கள்? நீங்கள் எப்போதும் உங்களை கவனித்து வளர்த்துக்கொள்வது முக்கியம். இந்த வெறுமை என்பது மிக முக்கியமான இடம். இதில்தான் பல்வேறு மக்களும் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்.  இந்த நேரத்தில்