இடுகைகள்

குடியுரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க குடியுரிமை அமைப்புகளுக்கும் நன்கொடை வழங்குவது அவசியம்!

படம்
  ஏசிஎல்யூ - அமெரிக்க குடியுரிமை சங்கம் அமெரிக்கன் சிவில் லிபர்டிஸ் யூனியன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்களா? இந்த அமைப்பு அமெரிக்காவில் இப்போதைக்கு முக்கியமான செயல் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறது. அங்கு பெண்கள் கருக்கலைப்பை சுதந்திரமாக செய்துகொள்ளும் முறையை ஒழித்துக்கட்ட சில மாகாணங்கள் முயல்கின்றன. இந்த பிற்போக்குத்தனத்திற்கு எதிராக பெண்களின் உரிமையை வலியுறுத்தி ஏசிஎல்யூ போராடி வருகிறது. இத்தனைக்கும் இந்த அமைப்பு மக்களிடம் நன்கொடை பெற்றுத்தான் நூறு ஆண்டுகளாக உரிமைகளைக் காப்பாற்ற போராடி வருகிறது. இப்படி அரசின் சட்டத்திற்கு எதிராக போராடுவதால் அமலாக்கத்துறை தன்னார்வ குடியுரிமை அமைப்பின் அலுவலங்களில் சோதனையெல்லாம் நடத்துவதில்லை. வெளிநாட்டு பணத்தை பெறுகிறார்கள் என்று சொல்லி கேலி, அவதூறு செய்வதில்லை. நிறுவனர்களை, உறுப்பினர்களை, தன்னார்வலர்களை காவல்துறை மூலம் மிரட்டுவதில்லை. முக்கியமான பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைப்பதில்லை. வெளிநாட்டு மக்களைப் போலவே இந்தியாவில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான பணம் ஆன்மிக அமைப்புகளுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் செல்கிறது. எல்லா

சிங்கப்பூரை முதலீட்டாளர்கள் தேடி ஓடுவது ஏன்?

படம்
          சிங்கப்பூரை தேடி ஓடும் பணக்காரர்கள் ! கிரேஸி ரிச் ஆசியன்ஸ் படம் வந்ததில் இருந்து பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய ஆசை வேர்விடத்தொடங்கிவிட்டது . ஏற்கெனவே சிங்கப்பூர் வேலைகளுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் புகழ்பெற்றது . இப்போது உலகிலுள்ள பல்வேறு பணக்காரர்களும் கூட தங்களது கடைகளையும் , வீடுகளையும் சிங்கப்பூரில் உருவாக்கிக்கொள்ள பரபரக்கிறார்ளள் . அதற்கேற்ப நிலத்தையும் வாங்கிப்போட்டு வருகிறார்கள் . பிற நாடுகளை விட சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் எளிதாக சென்று செட்டிலாக முடியும் . அங்கு அதற்கான உலகளவிலான முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர் . அந்த நாட்டில் 13.8 கோடி ரூபாய் வரையில் யார் முதலீடு செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு பாஸ்ட் டிராக் முறையில் குடியிருப்பதற்கான உரிமைகளை வழங்கி வருகிறது . குறிப்பிட்டளவு சொத்துகள் அதாவது ஆயிரம் கோடிக்கும் மேல் இருந்தாலும் அரசின் சலுகைகள் உங்களுக்கு மழையாக பொழியும் . ஹாங்காங் , இப்போது சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றிய நாடா , தனி நாடா என்று தவித்துக்கொண்டிருக்கிறது . எனவே இந்த நேரத்தில் அங்கு சென்று முதலீடுகளை செய்யவும

தேச பாதுகாப்பு சட்டம் என்பது பசுக்கொலைகளை உள்ளடக்கியது அல்ல! முன்னாள் நீதிபதி கோவிந்த் மாத்தூர்

படம்
            கோவிந்த் மாத்தூர் , முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சென்னை உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தின் மீது கொரோனாவை பரப்பிய காரணத்திற்காக வழக்கு பதியவேண்டும் என்று கூறியுள்ளதே ? நீங்கள் நீதிமன்றம் இயங்கும் விதத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் . நீதிமன்றம் சொல்லும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஆராய்ந்தால் கடினமாகவே இருக்கும் . நீதிமன்றங்கள் இப்படி கூறுவது இயல்பானதுதான் . இதனை தலைப்புசெய்தியாக ஊடகங்கள் மாற்றுகின்றன . ஆனால் இதனால் முக்கியமான விஷயங்கள் மக்களின் கவனத்திற்கு வராமல் போகின்றன . நீதிபதிகள் தங்கள் வரையறைகளைத் தாண்டி நடந்துகொள்கிறார்கள் என்று புகார்கள் கூறப்படுகின்றனவே ? உயர்நீதிமன்றம் இப்படி நடந்துகொள்வதாக தெரிந்தால் உடனே உச்சநீதிமன்றத்தை அணுகலாம் . அதில் எந்த தவறும் இல்லை . நீதிமன்றங்கள் நடந்துகொள்வதற்கான விதிமுறைகள் உள்ளன . தவறுகள் கண்டறியப்பட்டால் அவை மெல்ல சரிசெய்யப்படுவது உறுதி . பெருந்தொற்று காலத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடு எப்படியிருக்கவேண்டும் என நினைக்கிறீர்கள் ? அவர்களின் பணி என்ன ? அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளைக் காப்பதுதான

புதிய இந்தியா பிறந்துவிட்டதா?

படம்
pixabay புதிய இந்தியா பிறந்துவிட்டதா? உலக நாடுகள் முழுக்க அரசியல் நிலையின்மை காரணமாக  போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்துள்ளன. மக்களின் எண்ணங்களை போராட்டங்களாக வெடிக்கச் செய்ய சமூக வலைத்தளங்கள் பெருமளவு உதவி வருகின்றன. தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளில் அடிப்படைவாத, தேசியவாத கட்சிகள் வென்றுவருகின்றன. இந்த போராட்ட அலையில் இந்தியாவும் தப்பவில்லை. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அமலான குடியுரிமை திருத்தச்சட்டம், நாடெங்கும் கடும் போராட்டங்களை கிளப்பியுள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளிலுள்ள முஸ்லீம் அல்லாதவர்கள் அரசின் மூலம் குடியுரிமையை எளிதாகப் பெற முடியும் என்கிறது இச்சட்டம். ஏறத்தாழ முஸ்லீம்களை இரண்டாம் தர மக்களாக மாற்றும் இச்சட்டம் அமலாகிவிட்டது என உள்துறை அமைச்சககம் கூறிது.  இல்லை என பிரதமரும் பேச, விவகாரம் மேலும் குழப்பமாகிவிட்டது. தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அசாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால் திட்டத்தின் முடிவில் லட்சக்கணக்கான இந்துகள் குடியுரிமை இல்லாத நிலைமையில் இருப்பது தெரியவர, இந்திய அரசின் திட்டம் தோல்வியுற்றது. திரும்பவும் இத்திட்டத்தை மாநிலம் முழுவத

சென்சஸிற்கும், என்பிஆருக்கும் என்ன வேறுபாடு? -2021 டாஸ்க் இதுதான்!

படம்
என்ஆர்சி, சிஏபி ஆகியவற்றுக்கு அடுத்த வரிசையில் என்பிஆர் செயல்பாட்டைத் தொடக்க நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிட்டது. தேசிய மக்கள்தொகை பதிவேடு என்பது, மக்கள்தொகையைக் கணக்கிட உதவும். இதில் பெயர் இருப்பதற்கும், குடியுரிமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் தகவல்கள் பிற அமைப்புகளுக்கு பயன்படுத்தாமலிருக்க எந்த உத்தரவாதமும் கிடையாது. பொதுவாக அரசு இந்த உறுதியை எப்போதும் தந்த து கிடையாது. இனிமேலும் கிடையாது. மக்கள் தொகையைக் கணக்கிடும் தகவல், என்ஆர்சியுடன் இணைக்கப்படாது என்று உள்துறை அமைச்சகம் கூறுகிறது. ஆனால் உண்மையில் என்ஆர்சியின் முதல் கட்டப்பணி, இந்தியாவில் உள்ள மக்களைக் கணக்கிடுவதுதான். எனவே, இப்பணியை மாநில அரசு தொடங்க கூடாது என இடதுசாரிகள் கூறிவருகின்றனர். இதன்வழியாகவும் சிறுபான்மையினரைக் கணக்கிட்டு அவர்களை தனி முகாம்களின் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. என்ன வேறுபாடு? மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் அரசின் என்பிஆருக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அதோடு நிலப்பரப்பு சார்ந்த தகவல்களும் இதில் முக்கியமானவை. என்பிஆ

இந்துஸ்தான் உதயமாகிறதா? - குடியுரிமை மசோதாவின் விளைவுகள்!

படம்
குடியுரிமைச் சட்ட மசோதா அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 14யை புறக்கணிக்கும் மசோதா விரைவில் குடியரசுத்தலைவரின் கையெழுத்தைப்பெற்று சட்டமாகவிருக்கிறது. இதன்மூலம், இந்திய முஸ்லீம்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இம்மசோதாவின் அமலாக்கத்திலேயே அவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறும் அபாயம் உள்ளது. டிச.11 அன்று மக்களவையில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி பாஜக எம்பிகள் அதிமுக எம்பிகள் ஆதரவளிக்க மசோதா தாக்கலானது. இதன்மூலம் 2014 டிச.31க்குள் இந்தியாவுக்குள் குடியேறியவர்கள், முஸ்லீம்கள் நீங்கலாக பிற மதத்தவர்கள் குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம். நூற்றாண்டு கால இந்தியப் பெருமையை மீட்டு எடுத்துவிட்டோம் என பிரதமர் மோடி, டுவிட்டரில் நெகிழும் போது அசாமில் மூன்றுபேர் போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகி இருக்கிறார்கள். உள்நாட்டுப்போரை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கும் முன்னதாகவே ஆர்எஸ்எஸ் தொடங்கிவிட்டது. இனி அவர்களுக்கு வேலையே இல்லை. இதுபற்றி சமூக நல ஆர்வலர் ஹர்ஷ்மந்தர், நான் பிறப்பால் முஸ்லீம்,. இச்சட்டத்தை அரசு கொண்டுவந்தால் நான் எனக்கான ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யப்ப

அகதிகளுக்கு உதவிய பிரேசில் நாடு!

படம்
வெனிசுலா நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் அங்கு வாழ முடியாமல் வெளியேறும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக கருணை அடிப்படையில் பல்வேறு நாடுகள் அகதிகளை தங்க வைத்து வருகின்றன. பிரேசில் நாடு, ஒரே நாளில் 21 ஆயிரம் வெனிசுலா அகதி மக்களை தன் நாட்டில் தங்க வைத்து சாதனை  செய்துள்ளது. இதற்கு முன்பு 263 பேர்களை மட்டுமே தன் நாட்டில் வாழ அனுமதித்திருந்தது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் பிரேசில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் போராட்டக்கார ர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் மீது நிக்கோலஸ் மதுரோ அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு மக்கள் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகின்றனர். காரணம், பணவீக்கம். நோய்களுக்கு சிகிச்சை தரும் அமைப்புகளும் செயலிழந்து விட்டதால், மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கையில் மைல்கல் என ஐ.நா அமைப்பு பிரேசில் நாட்டைப் பாராட்டியுள்ளது. இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் நிறைய