இடுகைகள்

குளச்சல் மு.யூசப் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தவிர்க்கமுடியாத திருடனின் கதை! - திருடன் மணியன் பிள்ளை

படம்
திருடன் மணியன்பிள்ளை ஜி.ஆர். இந்துகோபன் தமிழில்: குளச்சல் மு.யூசுப் காலச்சுவடு நடிகர், பாடலாசிரியர், கல்வித்தந்தை, எழுத்தாளர், அரசியல்வாதி என பலரும் சுயசரிதை எழுதியிருக்கிறார்கள். அதில் பலவற்றை நாமும் படித்திருப்போம். ஆனால் இந்த காலகட்டத்தில்தான் பாலியல் தொழிலாளி, திருடன் ஆகியோரின் சுயசரிதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. கேரளத்தைச் சேர்ந்த மணியன்பிள்ளை நாயர் குடும்பத்தில் பிறந்த திருடர். அவரின் திருட்டு, அவர் சந்தித்த மனிதர்கள், அவரைக் காதலித்த பெண்கள், போலீஸ்காரர்கள், சிறை அனுபவம், தொழிலதிபராக மாறியது, மறுவாழ்வு காலகட்டம் என நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு உணர்ச்சிகளை வாசிப்பவரின் மனதில் எழச்செய்யும் படைப்பு. எழுத்தாளரின் திறன், மணியன் பிள்ளையின் வாழ்க்கையை அழுந்தச்சொல்ல உதவியிருக்கிறது. மணியன் பிள்ளையின் தந்தை மதுவருந்தி குடிநோயால் இறந்துவிட பசியால் துடிப்பவருக்கு அவரின் நாயர் ஜாதியே எமனாகும் அவலம் கண்களில் நீர்கட்டவைக்கிறது. அவரின் தந்தைக்கு சேரும்படியான சொத்தை சதி செய்து அபகரிக்க குடும்பமே அந்த இடத்தில் வாழ முடியாமல் வேறிடம் நோக்கி போகும் காட்சி