இடுகைகள்

உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறமதிப்பீடுகளை பின்பற்றும் பழக்கம் எப்படி தொடங்குகிறது?

படம்
  லாரன்ஸ் கோஹ்ல்பர்க்  lawrence kohlberg ஒருவரிடம் அறம் சார்ந்த மதிப்பீடுகள் எப்படி உள்ளன என்பதை லாரன்ஸ் அறிய நினைத்தார். இதற்கென 72 சிறுவர்களை பங்கேற்க வைத்து இருபது ஆண்டுகளாக சோதித்தார். இவர்களின் வயது வரம்பு 10 முதல் 16 வரை. இதை எளிமையாக புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். ஒருவரிடம் காசு இல்லை. ஆனால் அவரது நோயுற்ற மனைவிக்கு மருந்துகள் தேவை. அதை மருந்தகத்தில் இருந்து திருடவேண்டும் அல்லவா?  இப்படி திருடுவதில் மூன்று அம்சங்கள் உள்ளன. பரிசு, தண்டனை, பழிக்குப்பழியாக கிடைக்கும் தண்டனைகள் என அம்சங்களை ஒருவர் யோசித்துப் பார்க்கலாம்.  மக்கள் நிறையப் பேர் ஏன் திருட்டுகளில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? அதற்கு முக்கியக் காரணம், அரசின் கடுமையான சட்டங்கள், அதிகாரத்தின் மீது கொண்ட பயம் காரணமாக வரும் கீழ்ப்படிதல். இதன் காரணமாக குற்றங்கள் குறைவாகவே ஏற்படுகின்றன. இதற்கு அடுத்ததாக, சரி, தவறு என்பதற்கு கிடைக்கும் பரிசுகள் வருகின்றன. மூன்றாவது நிலையாக ஒருவர் என்னை அடித்தால், நான் அவரைத் திருப்பி அடிப்பேன் என்று கூறுவது வருகிறது. இந்த நிலை பின்விளைவுகளை/எதிர்வினையை அடிப்படையாக கொண்டது. மேற்சொன்ன

வன்முறையை ஒத்திகை செய்து பார்த்து பின்தொடரும் குழந்தைகள்!

படம்
  albert bandura குழந்தைகளின் வன்முறை பற்றி பார்த்தோம். வன்முறையை ஒருவர் செய்வதைப் பார்த்து நாம் கற்கிறோமா அல்லது பொழுதுபோக்காக பார்க்கும் திரைப்படங்கள், விளையாடும் விளையாட்டுகளில் இருந்து கற்கிறோமா என்ற விவாதம் எப்போதும் உள்ளது. ஆல்பெர்ட் பாண்டுரா, குழந்தைகளின் மனதில் வன்முறை எப்படி படிகிறது என்பதை அறிய பொம்மை சோதனை ஒன்றை நடத்தினார். 36 சிறுவர்கள், 36 சிறுமிகள் என கூட்டி வந்து அவர்களை மூன்று பிரிவாக பிரித்தார். இதில், ஒரு குழுவுக்கு பெரியவர்கள் பொம்மையை அடித்து உதைத்து திட்டுவது ஆகியவற்றை செய்வதைப் பார்க்க வைத்தனர். அடுத்து, இன்னொரு பிரிவினருக்கு பொம்மையை மென்மையாக கையாள்வதைக் காட்டினர். இதில் வயதில் மூத்தவர்கள் பொம்மைகளை திட்டி, அடித்து உதைத்து சேதப்படுத்துவதைப் பார்த்த குழந்தைகள் அதை அவர்களும் நினைவில் வைத்துக்கொண்டு திரும்ப செய்தனர்.  டிவி சேனல்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகளில் முன் அறிவிப்போடு வன்முறையான அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை ஒருமுறை விளையாடுபவர்கள் அதிலுள்ள சுவாரசியத்திற்காக திரும்ப விளையாடுவார்கள். இப்படி வெற்றியடைந்த திரைப்படங்கள், விளையாட்டுகள், டிவி தொட

ஆற்றல் மாநாட்டை உருக்குலைக்க முயலும் உள்நாட்டு தீவிரவாதிகளை தடுக்க முயலும் கமாண்டோ படையின் வீரதீரம்!

படம்
  operation special warfare c drama 35 எபிசோடுகள்  ப்ளூலைட்னிங் என்ற கமாண்டோ படை. அதில் மொத்தம் பதினான்கு வீரர்கள். எட்டு பெண்கள். ஆறு ஆண்கள். இவர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளைப் பற்றி கவலைப்படாமல் போராடி தீவிரவாதிகளை வீழ்த்தி தூய ஆற்றல் மாநாட்டை எப்படி வெற்றிகரமாக நடத்தினர் என்பதே கதை.  இதில் எட்டு பெண் கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களில் நிங் மெங்தான் நாயகி. இவருடைய அண்ணன் தீவிரவாத தாக்குதலில், தங்கையைக் காப்பாற்றிவிட்டு இறந்துபோவார். இதன் விளைவாக அம்மாவிற்கு அழுது அழுதே கண் பார்வை போய்விடும். நிங்மெங், தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்க ராணுவத்தில் குறிப்பாக கமாண்டோ படையில் இணைவார். ஆனால், கமாண்டோ படை கேப்டன், நிங் மெங்கை மட்டும் வெளியேற்றுவதில் குறியாக இருப்பார். அவரை திட்டுவார். இழிவு செய்வார். ஆனால் நிங்மெங் திறமை மீது கமாண்டோ படையின் உயரதிகாரிக்கு நல்ல அபிப்பிராயம் நம்பிக்கை இருக்கும். எனவே அவர் அவளை வெளியேற்றக்கூடாது என கேப்டனை மிரட்டுவார்.  அடிப்படையில் பார்த்தால் தேசப்பற்று சீரியல்தான். ஆனால், ராணுவத்தில் கூட பெண்களை ஆண் வீரர்கள்தான் காப்பாற்ற வேண்டும். அவர்கள் செய்யும் பணியின்

மொழி என்பது மனிதர்களுக்கே உரிய சிறப்பு அம்சம் - நோம் சாம்ஸ்கி

படம்
  நோம்ஸ் சாம்ஸ்கி மொழியியலாளர், தத்துவவாதி, அறிவுத்திறன் சார்ந்த அறிஞர், சமூக செயல்பாட்டாளர் என சொல்லிக்கொண்டே போகலாம். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் யூதப்பெற்றோருக்குப் பிறந்தார். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில்  தத்துவம், மொழியியல் என இரண்டு பாடங்களை படித்தார். முனைவர் பட்டங்களை நிறைவு செய்தார். 1955ஆம் ஆண்டு, எம்ஐடியில் சேர்ந்தவர் 1976இல் அங்கு பேராசிரியரானார்.  நவீன மொழியியல் சிந்தனை மக்களுக்கு பரப்பியதில் முக்கிய பங்காற்றிய ஆளுமை. அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசுவது, அரசதிகாரத்தை தீவிரமாக எதிர்ப்பது என நோம் சாம்ஸ்கி எதையும் விட்டுவைக்கவில்லை. அதனாலேயே இவரது பெயரைக் கூறினாலே சர்ச்சையும் கூடவே வந்துவிடும். அறிவியல் பங்களிப்புக்காக ஏராளமான விருதுகளை வென்றுள்ளார். மொழியியல் அறிஞர் கரோல் ஸ்காட்ஸ் என்பவரை மணந்தார். இவரது மனைவி 2008ஆம் ஆண்டு மரணித்தார்.  முக்கிய படைப்புகள்  1957 சின்டாக்டிக் ஸ்ட்ரக்சர்ஸ்  1965 கார்டீசியன் லிங்குயிஸ்டிக்ஸ் 1968 லாங்குவேஜ் அண்ட் மைண்ட் நோம் சாம்ஸ்கி, மொழி என்பது மனிதர்களுக்கான சிறப்பான அம்சம் என்று கருத்து கூறினார். இதில், பல ஆய்வாளர்களுக்கு வேறுபட

குழந்தைகளின் மனதில் வளரும் வன்முறை - ஏன் எப்படி எதற்கு?

படம்
  ஆல்பெர்ட் பண்டுரா ஆல்பெர்ட், குழந்தைகளின் மனதில், செயலில் வெளிப்படும் வன்முறையை ஆராய்ந்தார். அன்றைய காலத்தில் பலரும் இதைப்பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. பெரியவர்கள் செய்யும் செயல்களைப் பார்த்து அதைப்போலவே தாங்களும் செய்ய முயற்சி செய்கிறார்கள் என ஆல்பெர்ட் கூறினார். இந்தவகையில் அவர்களின் வன்முறை செயல்பாடுகள் போலச்செய்தல் என்ற முறையில் மனதில் பதிகிறது. அதை அவர்கள் நினைத்துப் பார்த்து வாய்ப்பு கிடைக்கும்போது அதை செயல்படுத்திப் பார்க்கிறார்கள். ஒரு மனிதனின் செயல்பாடு என்பது பிறரைப் பார்த்து மாதிரியாக கொண்டே உருவாகிறது என்றார்.  ஆல்பெர்ட்டின் காலத்தில் குழந்தைகள் பரிசு கொடுப்பது, தண்டனை அளிப்பது வழியாக பல்வேறு விஷயங்களைக் கற்கிறார்கள் என்று நம்பப்பட்டது. ஆல்பெர்ட் இதற்கு மாற்றாக, ஒருவரைப் பார்த்துத்தான் பிறர் குண இயல்புகளை பழக்க வழக்கங்களைக் கற்கிறார்கள். இதற்கு கவனம், ஒத்திகை பார்ப்பது, ஊக்கம், திரும்ப உருவாக்குவது ஆகிய அம்சங்கள் முக்கியம் என்று கூறினார். ஒரு செயலைப் பார்த்து அதை மனதிற்குள் ஓட்டிப்பார்க்கவேண்டும். பிறகு, ஊக்கம் கிடைக்கும்போது அதை திரும்ப செய்துபார்க்க முடியும்.  ஆல்பெர்ட்

மொழி என்பது உடல் உறுப்பு போன்று வளர்ச்சி பெறக்கூடியது - நோம் சாம்ஸ்கி

படம்
  20ஆம் நூற்றாண்டில் கற்றல் கோட்பாட்டை பி எஃப் ஸ்கின்னர், ஆல்பெர்ட் பண்டுரா என இருவரும் சேர்ந்து உருவாக்கினர். அதில் முக்கியமானது, மொழி மேம்பாடு. மொழியைக் கற்பதில் சூழலுக்கு முக்கியமான பங்குண்டு. ஸ்கின்னர், குழந்தைகள் ஒருவர் பேசும் குரலை முதலில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். பிறகு அதை போலசெய்தல் போல பேசுகின்றனர். பேசும் சொற்கள், வார்த்தைகளின் அர்த்தம் தெரிந்துகொள்ள முயல்கின்றனர். இதில், குழந்தைகளின் பெற்றோரின் அங்கீகாரம், பாராட்டுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பாராட்டு, அங்கீகாரம் வழியாகவே ஊக்கம் பெற்று புதிய வார்த்தைகளைக் கற்கத் தொடங்குகின்றனர். பண்டுரா, போலச் செய்தலை இன்னும் விரிவாக்கினார். குழந்தைகள், பெற்றோர் பேசுவதை திரும்பக்கூறுவதோடு, அவர்களின் தொனி, பேசும் வாக்கிய அமைப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள் என்று விளக்கினார்.  மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, மேற்சொன்ன கருத்துகளை, கோட்பாடுகளை தீர்மானமாக மறுத்தார். ஒருவர் மொழியைக் கற்பது, உடலில் பிற உறுப்புகள் மெல்ல வளர்ந்து மேம்பாடு அடைவதைப் போலவே நடைபெறுகிறது. அது பரிணாமவளர்ச்சி சார்ந்தது. அதில் சூழல், பெற்றோர் பங்களிப்பு என்பத

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கான அர்த்தம் - விக்டர் ஃபிராங்கல்

படம்
மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் விக்டர் ஃபிராங்கல் உளவியல் நூல்  ஆஸ்திரியாவைச் சேர்ந்தவரான விக்டர், நாஜிப்படையினரால் பிடிபட்டு வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைத்த வரலாறு கொண்டவர். இதுபற்றி அவர் எழுதிய நூல்தான் இது. சித்திரவதை முகாம் என்றதும், முழுமையாக நூல் முழுவதும் மோசமான சித்திரவதை அனுபவங்கள்தான் இருக்கும் என நினைக்கவேண்டியதில்லை. நூல் 69 பக்கங்களைக் கொண்டது. ஆனால் படித்து முடிக்க அந்தளவு எளிமையாக இல்லை. அந்தளவு அனுபவங்களின் அடர்த்தி உள்ளது.  நூல் இருபாகங்களாக உள்ளது. முதல்பகுதி முழுக்க வதை முகாம்களின் அனுபவங்கள் உள்ளன. இரண்டாம் பகுதியில், தனது வதைமுகாம் அனுபவங்களின் அடிப்படையில் அவர் கண்டறிந்த லீகோதெரபி எனும் உளவியல் உத்தியை விளக்கியிருக்கிறார். இந்த உத்திகளை படித்து புரிந்துகொள்வது அவர் சார்ந்த துறையினருக்கு எளிமையாக இருக்கலாம். சாதாரணமாக ஒருவர் அதைப் படித்தால் சற்று தலைச்சுற்றிப்போகும் அபாயம் உள்ளது. முயற்சி செய்யலாம். சில நோயாளிகளைப் பற்றிய அனுபவங்களைக் கூறியுள்ளார். அதைப்படிக்கும்போது முன்முடிவுகளின் ஆபத்து கண்களுக்குத் தெரிகிறது.  நூலின் தொடக்கத்திலேயே தான் வதை முகாம்

தாயில்லாத சூழலில் குழந்தைக்கு ஏற்படும் மன நெருக்கடி

படம்
  Mary ainsworth 1950ஆம் ஆண்டு, மேரி, உளவியலாளர் ஜான் பௌல்பையின் ஆய்வுக் கோட்பாட்டை ஒட்டிய ஆய்வுகளை செய்தார். மேற்குலகில் பெற்றோர் பிள்ளைகளோடு குறைந்தளவு ஒட்டுதலைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கிழக்கு நாடுகளில் தாய், குழந்தைகளோடு மிக நெருக்கமாக இருக்கிறார். குறிப்பாக குழந்தைகள் தங்கள் தேவையை தாங்களே நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழலில் இருக்கும்போது என புரிந்துகொள்ளலாம். குழந்தையின் உடல்மொழியை புரிந்துகொண்டு அதற்கு உணவு வழங்குவது, குளிக்க வைப்பது,உடை மாற்றுவது, உறங்க வைப்பது என அனைத்து செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் குழந்தைகள் தாயுடன் பாதுகாப்பான ஒட்டுதலைக் கொண்டுள்ளன.  வினோத சூழ்நிலை என்ற ஆய்வை மேரி செய்தார். அதன்படி, ஒரு அறையில், அம்மா குழந்தை என இருவர் இருக்கிறார்கள். குழந்தை பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. அதை அம்மா கவனித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இப்போது அந்த அறையில் வெளிநபர் ஒருவர் உள்ளே வருகிறார். இந்த சூழ்நிலையில் குழ்ந்தை எப்படி உணர்கிறது, அதன் உடல்மொழி எவ்வாறு மாறுகிறது என்பதை மேரி ஆய்வு செய்தார்.  அடுத்து, ஒரு அறையில் குழந்தையோடு அம்மா இருக்கிறார். குழந்தை முன்பைப

அம்மா பாசம் இல்லாத குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகள், குறைபாடுகள்!

படம்
  1950ஆம் ஆண்டுகளில் குழந்தைகள் தாய் மீது காட்டும் பாசம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் பேசப்பட்டன. இதை கப்போர்ட் லவ் என்று குறிப்பிட்டனர். குழந்தைகள் அம்மாவைச் சார்ந்தே இருப்பார்கள். காரணம், உணவுத்தேவை. பிறந்தவுடன் குழந்தைகள் உடனே இயங்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். இரண்டு அல்லது மூன்று வயது வரை அவர்களை பாதுகாத்தால் மட்டுமே அவர்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். இதை விலங்குகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பிறக்கும் குட்டிகள் கண்விழித்துப் பார்க்கும்போது எது அசையும் பொருளாக இருக்கிறதோ அதை தங்களது அம்மாவாக கருதுகின்றன. இந்த இடத்தில் குட்டியின் தாய் இருக்கும். விலங்குகளின் பாச ஒட்டுதல் பற்றிய ஆய்வை உளவியல் ஆய்வாளர் கான்ராட் லாரன்ஸ் செய்தார்.  ஜான் பௌல்பை என்ற ஆய்வாளரும் இதேபோன்ற ஆய்வை செய்து காரண காரியங்களைக் கண்டுபிடிக்க முயன்றார். அவருக்கு கிடைத்த ஆய்வு முடிவுகள், லாரன்ஸ் கூறிய கருத்துகளுக்கு மாற்றாக இருந்தன. குழந்தை, அம்மா தவிர வேறு பலரிடம் ஒட்டுதல் கொண்டிருக்கலாம். ஆனால் அம்மாவுடன் கொண்டுள்ள உறவு தனிப்பட்ட ஒன்று. குழந்தை தனது தேவைகளை சிரிப்பு, அழுகை, முனகல் என பல்வேறு வித

பிறக்கும் உயிர்களுக்கான நோக்கம் - எரிக் எரிக்சன்

படம்
  பிறந்த உயிர்களுக்கு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றிக்கொள்ளவே உயிர்கள் முயல்கின்றன என உளவியலாளர் எரிக் எரிக்சன் கருதினார். மனிதர்களின் ஆளுமை எட்டு வகையான நிலைகளைக் கொண்டது. இந்த நிலை பாரம்பரியம், சூழல் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்று கூறினார்.   நம்பிக்கை/ அவநம்பிக்கை - ஒரு வயது குழந்தையின் தேவைகள் நிறைவேற்றப்பட்டால் நம்பிக்கை உருவாகிறது. அப்படி நிறைவேறாதபோது அவநம்பிக்கை உருவாகிறது. இந்த அவநம்பிக்கை குழந்தையின் எதிர்கால உறவுகளைப் பாதிக்கிறது.  சுயமான இயக்கம்/ சந்தேகம், அவமானம் - பதினெட்டு மாதம் முதல் 2 ஆண்டுகள் புதிய விஷயங்களை குழந்தை செய்யத் தொடங்குகிறது. ஆனால், செய்யும் செயலில் சந்தேகம், தோல்வியானால் அவமானம் அடைகிறது. வெற்றி, தோல்வி என இரண்டையும் குழந்தை வேறுபடுத்திப் பார்க்கிறது.  செயல்/குற்றவுணர்வு - மூன்று தொடங்கி ஆறு வயது வரை குழந்தை, குறிப்பிட்ட நோக்கத்துடன் செயல்களை செய்யத் தொடங்குகிறது.இந்த காலகட்டத்தில் செய்யும் செயல்களுக்கு தரப்படும் தண்டனை, கடுமையான குற்றவுணர்ச்சியில் தள்ளுகிறது.    செயலூக்கம்/ தாழ்வுணர்ச்சி - ஆறிலிருந்து பனிரெண்டு வயது வரை இந்

பெற்றோர்கள் இல்லாமல் தனியாக கம்யூனிட்டியாக குழந்தைகள் வளர்ந்தால்....

படம்
  ரஷ்ய உளவியலாளர் லெவ் வைகோட்ஸ்கி, குழந்தைகள் பெற்றோருடன் இருக்கும்போது அனுபவித்த சம்பவங்களை, நிகழ்ச்சிகளை அறிய புரிந்துகொள்ள நினைத்தார். கலாசாரம், அந்தரங்க ரீதியாக, தனிநபர் ரீதியாக மனிதர்கள் உள்ளனர். நாம் நாமாக இருப்பது பிறரின் வழியாகத்தான் நடைபெறுகிறது என்று லெவ் கருதினார். குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்கள், குழந்தைகளின் மூதாதையர் ஆகியோரின் வழியாகவே குழந்தைகளின் அறிவு, மதிப்பீடு, தொழில்நுட்ப அறிவு வளருகிறது. ஒருவர் தன்னுடைய சிந்தனையை, கருத்தை சமூகத்தின் பல்வேறு சூழ்நிலைகளை சந்திப்பதன் வழியாக புரிந்துகொள்கிறார். தன்னை திருத்தி, மேம்படுத்திக்கொள்கிறார். லெவ், ஒருவரின் மனதில் ஒரே நேரத்தில் கற்றலும் கற்பித்தலும் நடைபெறுகிறது என்று கருதுகிறார். ஆசிரியர், மாணவர்களை வழிநடத்தி அவர்கள் புதிய திறன்களைக் கற்க உதவி அவர்களை சிறந்த திறமை கொண்டவர்களாக மாற்ற வேண்டும். லெவின் கருத்துகள் காரணமாக மாணவர்களை மையப்பொருளாக கொண்ட கல்விமுறை, பாடமுறை சார்ந்ததாக மாறியது. ஆசிரியர், மாணவர் என இருவரும் சேரந்து உழைத்து கற்பதாக கல்விமுறையில் இயல்புகள் மாறின.  lev vygotsky 2 bruno bettelhem 1964ஆம் ஆண்டு, பெட்டில்க

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

படம்
  காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார்.  குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப் பொறுத்த

குழந்தைகளின் உளவியல் பற்றிய ஆராய்ச்சியை செய்த ஜீன் பியாஜெட்

படம்
  ஸ்விட்சர்லாந்தின் நியூசாடல் என்ற நகரில் பிறந்தார். இயற்கை மீது பெரும் ஆர்வம் கொண்டவர். தனது பதினொன்று வயதில் தகவல்களை சேகரித்து ஆய்வறிக்கை எழுத தொடங்கிய மேதாவி. மனித குணங்கள், இயற்கை அறிவியல் பற்றிய பாடங்களை எடுத்து படித்தார். இருபத்தி இரண்டு வயதில் நியூசாடல் பல்கலையில் முனைவர் பட்டம் வென்றார். உளவியலில் ஆர்வம் வந்தது பிற்காலங்களில்தான். பிரான்சில் உளவியல் ஆய்வுகள் பற்றி படித்தார். 1921ஆம் ஆண்டு ஜீன் ஜாக்குயிஸ் ரூஸ்யூ என்ற ஜெனிவாவைச் சேர்ந்த அமைப்பில் சேர்ந்தார். திருமணமாகி மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களை வைத்து குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய ஆராய்ச்சிகளை செய்தார். 1955ஆம் ஆண்டு, மனித அறிவு, குணங்கள் பற்றிய மையத்தை தொடங்கினார். இறக்கும் காலம் வரை அதன் தலைவராக இயங்கினார். உலகம் முழுக்க உள்ள கல்வி அமைப்புகளில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.  முக்கிய படைப்புகள் 1932 தி மாரல் ஜட்ஜ்மென்ட் ஆஃப் தி சைல்ட்  1951 தி சைக்காலஜி ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் 1952 தி ஒரிஜின்ஸ் ஆஃப் இன்டெலிஜென்ட்ஸ் இன் சில்ட்ரன் 1962 தி சைக்காலஜி ஆஃப் தி சைல்ட் 

அளவற்ற அதிகாரம் தரப்படும்போது ஏற்படும் தனிநபரின் நடத்தை மாறுதல்கள்!

படம்
  பிலிப் ஸிம்பார்டோ philip zimbardo 1933ஆம் ஆண்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சிசிலிய அமெரிக்க குடும்பத்தில் பிறந்தார். பிரான்க்ஸில் உள்ள ஜேம்ஸ் மன்றோ பள்ளியில் படித்தார். இவரது நண்பராக உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் இருந்தார். நியூயார்க்கில் உள்ள ப்ரூக்ளின் கல்லூரியில், பிஏ பட்டம் பெற படித்தார். யேல் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். 1968ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் செல்லும்வரை ஏராளமான பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார். 1980ஆம் ஆண்டு, மக்களுக்கு உளவியலை அறிமுகம் செய்யும் நோக்கத்தில் டிவியில் டிஸ்கவரிங் சைக்காலஜி என்ற தொடரை தயாரித்தார். 2000ஆம் ஆண்டு, அமெரிக்க உளவியல் பவுண்டேஷன், வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க உளவியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  முக்கிய படைப்புகள் 1972 தி ஸ்டான்ஃபோர்ட் பிரிசன் எக்ஸ்பரிமென்ட்  2007 தி லூசிஃபர் எஃபக்ட் 2008 தி டைம் பாரடாக்ஸ்  2010 சைக்காலஜி அண்ட் லைஃப்  நல்ல மனிதர்கள் என்று அறியப்பட்டவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அதிகாரம் வழங்கப்படுகிறது. அதை அவர்கள் தங்கள் கீழுள்ளவர்கள் மீ

அரசியலில் கருவியாக பயன்படுத்தப்படும் உளவியல் பற்றி பேசி விமர்சித்ததால் கொல்லப்பட்ட உளவியலாளர்

படம்
  ignacio martin baro இக்னாசியோ மார்ட்டின் பாரோ ஸ்பெயின் நாட்டில் பிறந்தவர். 1959ஆம் ஆண்டு, மதக்கல்வியைக் கற்க தென் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஈகுவடாரின் கொய்டோவில் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். கொலம்பியாவில் உள்ள ஜாவெரியனா பல்கலையிலும் படித்தார். 1996ஆம் ஆண்டு, பாதிரியாக தேர்ச்சி பெற்றவர், எல் சால்வடோருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சான் சால்வடோரி்ல் உள்ள சென்ட்ரல் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார். உளவியல் பற்றி படித்து பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் படித்து முனைவர் பட்டம் பெற்றார். பின்னாளில் அங்கயே உள்ள உளவியல் துறையில் தலைவராக மாறினார். பிறகு, சென்ட்ரல் அமெரிக்காவிற்கு சென்றார்.  மார்ட்டின் பாரோ, எல் சால்வடோரில் ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பற்றி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். 1986ஆம் ஆண்டு, பொதுமக்களின் கருத்து என்ற பெயரில் தனி அமைப்பை உருவாக்கினார். ராணுவத்தின் படுகொலைப் பிரிவு, மார்ட்டினோடு சேர்ந்து மேலும் ஐந்துபேர்களை படுகொலை செய்தது. அரசியல் ஊழல், அநீதி என குற்றம்சாட்டி படுகொலையை நியாயப்படுத்தினர்.  முக்கி

கும்பலின் அதிகார ஆதிக்கத்திற்கு தனிமனிதர்கள் கட்டுப்பட்டு கீழ்படிவது ஏன்?

படம்
  ஒரு தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுகிறார்கள். ஆனால் எதற்காக? தலைவனது வலிமை தொண்டர்களை விட அதிகம். அவனால் செய்யவேண்டிய முக்கிய வேலைகளை பிறருக்கு சொல்லவும் முடியும். அதை திறம்பட செய்துகாட்டவும் முடியும். தொலைநோக்கும், புத்திசாலித்தனமும், வலிமையும் கொண்டவர்களுக்கு எப்போதுமே பின்தொடரும் கூட்டம் உண்டு. இணையத்தில் மட்டுமல்ல நிஜத்திலும்தான். மனிதர்கள் எப்படி பிறருக்கு அடிபணிகிறார்கள் என்பதை உளவியலாளர் ஸ்டான்லி மில்கிராம் ஆராய்ந்தார். இதுபற்றி, பிஹேவியரல் ஸ்டடி ஆஃப் ஒபீடியன்ஸ் என்ற ஆய்வறிக்கையை எழுதி பிரசுரித்த ஆண்டு 1963. பெரும்பான்மையான மக்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கையில் கொடுக்கும்போது, அவர்கள் அதை வைத்து மக்களுக்கு கெடுதல்களையே செய்வார்கள் என்பதும் கூட ஸ்டான்லியின் அறிக்கையில் தெரிய வந்த உண்மைகளில் ஒன்று. ஒருவகையில் ஒருவரின் அறமதிப்புகளின் எல்லையை சோதிக்கும் விதமாக நடைபெற்ற உளவியல் சோதனை என இதைக் கூறலாம்.  அன்றைய காலகட்டத்தில் ஜெர்மனியின் நாஜிப்படையைச் சேர்ந்த அடால்ஃப் ஐக்மன் என்பவரின் விசாரணை பற்றிய செய்தி நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஸ்டான்லி இந்த விசாரணையை ஆர்வமாக கவனித்து வ

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட