இடுகைகள்

உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இருளில் இரு கண்கள் - மின்னூல் வெளியீடு

படம்
Kobo - smash words

அதிமேதாவியின் பார்வையில் உலகம்!

படம்
இந்த நாயகன், 12 ஆண்டுகள் அடைத்து வைக்கப்பட்டு கொத்தடிமையாக வேலை செய்ய வைக்கப்பட்டவன். பின்னர், போலீசாரால் மீட்கப்படுகிறான். மெல்ல உலகை புரிந்துகொண்டு சாதுரியமாக வாழத் தொடங்குகிறான். இதற்கு அவன் 12 ஆண்டுகளாக படித்த ஏராளமான நூல்கள் உதவுகின்றன. இக்கொரிய காமிக்ஸில் குழந்தை கடத்தலுக்கு எதிராக நாயகன் போராடுகிறான். நாயகன் வூஜின், ஆளுமை பிறழ்வு கொண்டவன். ஒருவன் இரக்கமானவன். இன்னொருவன் இரக்கமில்லாதவன். குற்றவாளிகளை தண்டிப்பவன். தனது அறிவை பயன்படுத்தி ஜிசாட் தேர்வில் வெல்கிறான். பல்கலையில் வணிக மேலாண்மையில் சேர்கிறான். யூட்யூப்பில் கடத்தப்பட்டு உதவிகோரும் இளம்பெண் பற்றி அதிகாரி கிம்முக்கு தகவல் சொல்கிறான். அவர் அதை விசாரித்து பார்த்து உண்மையை அறிகிறார். அச்சம்பவம் தொடங்கி வூஜின் சிக்கலான குற்ற வழக்குகளில் உதவி செய்யத் தொடங்குகிறான். பதிலுக்கு உணவும், பணமும் கிடைக்கிறது. பல்கலை நண்பனின் உறவினருக்கு உணவக வணிகத்தில் உதவி தன்னுடைய புத்திசாலித்தனத்தை சோதித்து பார்க்கிறான். இதற்காக தனது கதையை பத்திரிகைகளில் வருமாறு செய்கிறான். நாயகனின் நோக்கம், எளிமையாக சாதாரணமாக வாழ்வது.... இதை அவன் கூறுவ...

லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் = கடந்த காலத்தை கடந்துவிடுங்கள்!

 love for imperfect things buddhist monk haemin sunim penguin லவ் பார் இம்பர்பெக்ட் திங்க்ஸ் புத்த துறவி ஹாமின் சுனிம் பெங்குவின்  ப.276 துறவி ஒருவர் தன்னுடைய சொந்த அனுபவம், பார்த்த நண்பர்களின் வாழ்க்கை பற்றி பேசி அதற்கான தீர்வுகளை முன் வைக்கிறார். நூலின் அத்தியாயங்கள் சிறியவை. அத்தியாயங்கள் முடிந்தவுடன் மேற்கோள்கள் அறிவுறுத்தல்கள் தனியாக இடம்பெறுகின்றன. நூலை இணையத்தில் பார்த்து எப்படிப்பட்ட நூல் என்று கூட பார்க்கவில்லை. நூலின் தலைப்பைப் பார்த்தவுடனே தரவிறக்கி விட்டேன். அப்புறம் பார்த்தால், நூலின் உள்ளடக்கம் எதிர்பார்க்காதபடி சிறப்பாக இருந்தது.  கொரியாவைச் சேர்ந்த புத்த துறவி ஹாமின் சுனிம். இவர் அமெரிக்காவில் உள்ள யுசி பெர்க்லி, ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுள்ளார். அப்போதுதான் புத்தமதத்தில் ஆர்வம் உருவாகி துறவி ஆகியிருக்கிறார்.தென்கொரியாவில் தன்னார்வ அமைப்பை நடத்தி, மக்களுக்கு குழு தெரபி வகுப்புகளை நடத்தி வருகிறார். இவர், ஆன்மிக வழிகாட்டல்களைக் கொண்டு எழுதும் இரண்டாவது நூல் இது. நூலின் சிறப்பு என்னவென்றால், தான் துறவியாகிய வாழ்க்கையில் செய்த தவறுகள், தடுமாற்ற...

பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா?

 பணம் ஒருவரின் இயல்பை பாதிக்கிறதா? பணம் அல்டிமேட்டான் விஷயம். அதை வைத்துத்தான் பொன், பெண், நிலம் ஆகியவற்றை சொந்தமாக்கிக்கொள்ள முடியும். நல்ல உணவை உண்ண முடியும். பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ளலாம். பணமில்லாத நிலையில் காதலைக் காப்பாற்ற முடியாது. திருமணம் நடக்காது. அனைத்திற்கும் பெரும் போராட்டமாக இருக்கும். இந்தியா போன்ற மதவாத நாட்டில், சிறுபான்மையினர் கஷ்டப்பட்டு சம்பாதித்து பணம் சம்பாதிக்கவிட்டால் எளிதாக அவர்களை பெரும்பான்மையினர் அழித்துவிடுவார்கள். உங்களிடமுள்ள பணம் உடலில் தெரியவேண்டும். அப்போதுதான் ஊர், உலகம் சற்று விலகி தள்ளி நிற்கும். கதவைத் திறந்துவிடும். அனைத்து கதவுகளும் காசு என்றால் திறக்கும். திறக்காத கதவுகளும் கூட. இப்போது அமெரிக்கா பிற நாடுகளை நீ அதை செய்யக்கூடாது இதைச் செய்யக்கூடாது என மிரட்டுகிறது என்றால் அதற்கு என்ன காரணம். அதன் நாணயம்தான் பல்வேறு வியாபாரங்களில் பயன்படுத்தப்படுகிறது. வருமானம் ஏகத்துக்கும் வருகிறது. அதை வைத்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது. அந்த நாடு சொல்வதை மூன்றாம் உலக நாடான, அடிமை புத்தி கொண்ட இந்தியா கேட்காவிட்டால் பொருளாதாரம் திட்டமிட்டு வீழ்த்...

ஓராண்டில் நாம் எளிதாக புரிந்துகொள்ள முடியும் உளவியல் சமாச்சாரங்கள்!

 365 டேஸ் சைக்காலஜி உளவியல் கட்டுரைகள் ஆங்கிலம் இந்த நூல் தலைப்புக்கு ஏற்ப முழு ஆண்டுக்கான ஏராளமான கட்டுரைகளைக் கொண்டுள்ளது. அவை அனைத்துமே ஒற்றைப் பக்கங்களாக எழுதப்பட்டுள்ளன. இதன் வடிவமே இதை எளிமையான நூலாக மாற்றுகிறது. கூறியுள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமான உளவியல் விவகாரங்கள். இவற்றை தினசரி ஒன்று என படித்தால் கூட ஓரளவுக்கு உளவியல் பற்றிய அறிவைப் பெற்றுவிட முடியும்.  நூலில் ஒருவரின் சிந்தனை எப்படியானது. கும்பலாக இருப்பவர்களின் சிந்தனை எப்படியானது என்பதை விளக்கியுள்ளது சிறப்பானது. கும்பலாக இயங்குபவர்களின் செயல்பாடு காரணமாக, தனிப்பட்ட சிந்தனைக்கு எதிரான மனநிலை எப்படி உருவாகிறது என்பதை விளக்கி கூறியுள்ளார் ஆசிரியர். இந்தியா போன்ற மதவாத நாட்டில் நாம் கவனிக்கவேண்டிய உளவியல் அணுகுமுறை இது.  நூலில் நிறைய வேறுபட்ட உளவியல் சோதனைகளை நடத்திய அறிவியலாளர்களின் பெயர்கள், சிந்தனைகள், செய்த சோதனைகள் ஏற்படுத்திய சமூக மாற்றங்களைப் பற்றியும் கூறியுள்ளனர். குறிப்பாக உளவியல் சோதனைகள் மூலம் கல்வி கற்பிப்பது கூட மாற்றங்களை சந்தித்துள்ளது. ஆசிரியரை மையமாக கொண்ட அணுகுமுறை, மாணவர்களை மையமாக கொண்...

ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

படம்
  psychology  mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர்.  கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...

ஒருவர், மக்கள் திரளின் முடிவுகளை பின்தொடர்வது ஏன்?

படம்
  உளவியல்  கேள்வி பதில்கள் அதிகாரத்தை எதிர்ப்பது எப்படி? உண்மைகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும். தொடர்ந்து நீங்கள் நம்புகிற உண்மைக்காக போராடவேண்டு்ம். இந்த போராட்டத்தில் யாருக்காக போராடுகிறீர்களோ அவர்களே கூட உங்களை இழிவு செய்யலாம். அரசு உங்களை பயங்கரவாத சட்டத்தில் கைதுசெய்யலாம். உங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்படலாம். அமலாக்கத்துறை சொத்துக்களை பறிமுதல் செய்யலாம். வழக்கு பதிவு செய்து அலைய வைக்கலாம். ஆனால் பொதுநலனுக்கான போராடும், உண்மையைப் பேசும் மனிதர்கள் உலகமெங்கும் இதுபோன்ற நெருக்கடிகளை சந்தித்துதான் முன்னேறுகிறார்கள். இந்த முயற்சியில் அவர்கள் சிறைப்படலாம் அல்லது கொல்லப்படலாம். ஆனால், உங்களின் வாழ்க்கை உண்மையை பேசி மக்களுக்காக போராடுபவர்களுக்கான உரமாகும். முட்டாள்தனமான பணிதல் அரசை வலுப்படுத்தலாம். சர்வாதிகாரப் பாதையில் பயணிக்க ஆதரவளிப்பதாக அமையும். நெருக்கடி வந்தாலும் நேர்மையான அணுகுமுறையை கைவிட்டுவிடக்கூடாது. மதவாதம், அதன் தொடர்ச்சியாக மூடநம்பிக்கைகள், கடந்தகால வரலாற்று வெறுப்பு ஆகியவை நிகழ்கால மக்களின் வாழ்வை குலைத்து போட்டுவிடும். அவற்றை தடுப்பது சிந்தனையாளர்களின் பணி. அ...

வகுப்பறையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஆசிரியர் வழிகாட்டினால் போதுமானது!

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் - மிஸ்டர் ரோனி டன்னிங் குருகர் விளைவு என்றால் என்ன? ஒருவர் தன்னுடைய திறமை , அதன் எல்லை இதுதான் என தெரியாமல் இருப்பது. இசைக்கலைஞர் கூட்டத்தில் ஒரு வராக இருப்பார். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் தன்னால் கான்செர்ட் நடத்திவிட முடியும் என நம்புவார். உண்மையில் அதற்கு தேவையான திறமை அவருக்கு இருக்காது. அதாவது, திறமையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் தன்னால் சிறந்த இசைக்கலைஞராக முடியும் என நம்புவார்.  பழைய பொருட்களின் மீது இழப்பு என தெரிந்தும் முதலீடு செய்வது ஏன்? தீராத சண்டை என்றால் விவாகரத்து பெற்றுவிடலாம் என தலைவன் தலைவி படம் வலுவாக கூச்சல் போட்டு சொல்லியிருக்கிறது. கசப்பான உறவை சகித்துக்கொண்டு வாழ்வது, பழுதான பொருளை மீண்டும் மீண்டும் பழுது பார்த்து இயக்குவது ஆகியவை வாழ்க்கையில் இயல்பாக நடப்பவை. ஆனால், அப்படி செய்வது எதிர்காலத்தில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தாது என செய்பவர் உணர்ந்திருக்கலாம்.ஆனால், அறிந்த உண்மையை நடைமுறையில் கொண்டு வர மாட்டார். அதற்கு காரணம் மனிதர் அல்லது பொருட்கள் மீது உள்ள பற்று, பாசம். இதனால்தான் புதுகார் வாங்கும் காசைக் கூட ஒருவர்...

பகல் கனவு, தவறான நினைவுகள், தண்டனை வழங்கப்பட்டால் குற்றம் குறையுமா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி பகல் கனவு காண்பதால் நன்மையா, தீமையா? பகலில் கனவு காண்பது என்பது பொதுவாக நிறைவேறாத ஒன்றாக அனைத்து மக்களும் கருதுகிறார்கள். ஆனால், அதை ஒருவர் தீர்மானிக்க முடியாது. ஏதோ ஒரு நேரத்தில் சடாரென நினைவுகள் சூழ, ஒருவர் கனவுக்குள் செல்கிறார். ஒருநிமிடம் அவர் முழுமையாக அந்த கனவுக்குள் போய்விடுகிறார். இது மூளையின் செயல்பாடுதான். இதை ஒருவர் தானாக உருவாக்குவதில்லை. இப்படி நடக்கும் செயல்பாடு புதுமைத்திறனை ஊக்குவிக்கிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பிரச்னைகளை தீர்க்கும் நிலையில் இருப்பதாக கணிக்கிறார்கள். சுதந்திரமாக யோசிக்கிறது என புரிந்துகொள்ளலாம். உணர்வு ரீதியான செயல்பாடு, எதிர்காலத்தை திட்டமிடுவது ஆகியவற்றுக்கும் பகல் கனவு காண்பது உதவுகிறது.  தவறான நினைவுகள் என்றால் என்ன? மூளையில் உள்ள நினைவுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கும்போதுதான் அவை மேலே வருகின்றன. சிறு கற்களாக வீடுகள் கட்டப்படுவது போல நினைவுகள் அடுக்கப்படுகின்றன. வீடியோ கேமராவில் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்தால் அது எப்போதுமே மாறாது. அப்படியேதான் இருக்கும். ஆனால், மூளையி...

குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை!

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி உளவியல் ரீதியான ட்ராமா என்றால் என்ன? ஒருவரின் இளம் வயதில் உடல் ரீதியாக, உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்திருக்கலாம். இப்போது மூன்றாம் உலகப்போருக்கு உலகம் தயாராகி வருகிறது அல்லவா? அதுபோல...தீவிரவாதத்தால் குடும்ப உறுப்பினர்கள் இறப்பு,மோசமான கோர விபத்துகள், உதவிக்கு ஆட்கள் இன்மை, ஆகியவை ஒருவரை உளவியல் ரீதியாக பாதிக்கிறது. ஒருவருக்கு நேரடியாக நடக்கும் சம்பவங்கள் அல்லது மோசமான சம்பவங்களை காண்பதும் கூட பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக போர். போரால் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். அதில் ஈடுபடும் ராணுவ வீரர்களும் வாழ்நாள் முழுக்க மனநல குறைபாடுகளில் சிக்கி சிதைகிறார்கள். இதில் இயற்கை பேரிடர்களும் சேர்த்திதான். சுனாமி, நிலநடுக்கம், நிலச்சரிவு, புயல் ஆகியவற்றையும் உளவியல் பாதிப்பு ஏற்படுத்துவனவற்றில் இணைக்கலாம்.  மோசமான சம்பவங்கள் பற்றி ஆராய்வது அவசியமா? தனிநபராக தேவையா என்றால் இல்லைதான். ஆனால், உளவியல் ஆய்வுக்காக அத்துறையில் ஆர்வம் காட்டுபவர்கள் வரலாற்றை தேடி உளவியல் ரீதியான பிரச்னை கொண்டவர்களை அடையாளம் காண்கிறார்கள். ...

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி  சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது.  அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...

நம் அருகில் வசிப்பவர்களின் பொருளாதார வெற்றி, நம்மை பாதிக்குமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மகிழ்ச்சியை தீர்மானிப்பது எது? லாட்டரியில் பணம் கிடைப்பது மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி எதுவரை உங்களுக்கு இருக்கும். உங்களைத் தேடி பணம் கேட்டு உறவுகள், நண்பர்கள் வரும்வரை மட்டும்தான். அதேசமயம், விபத்துகள் துரதிருஷ்டங்களை சந்திக்கிற மனிதர்களை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவர்களாக எதையும் தேடுவது என்றில்லை. அதுவாகவே கூட அவர்களைத் தேடி வந்து போட்டுத்தாக்கும். மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவில் ஆரஞ்சுகளோடு சென்று பார்க்கும் நிலையில் ஆண்டு முழுவதும் இருப்பார்கள். இப்படி வாழ்க்கை போட்டு சக்கையாக பிழிந்துகொண்டிருக்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா என்றால், இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் பிலிப் பிரிக்மன், டான் கோட்ஸஃ, ரோனி ஜேன் ஆப் புல்மன் ஆகியோர் 1978ஆம் ஆண்டு செய்த ஆய்வில் அடையாளம் கண்டுள்ளனர். லாட்டரி விழுந்தவருக்கு எதிர்காலம் பற்றிய மகிழ்ச்சி உள்ளது. விபத்துக்குள்ளானவருக்கு நிகழ்காலம் நரகம்தான். ஆனால் கடந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்தோம் என யோசித்தார்.  இதெல்லாம் மனம் தொடர்பானது. மும்பையில் பார்ப்பன முதல்வர், மக்களின் பிரச்னைகளை கவனிக்காமல...

விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி குடும்பம் என்றால் என்ன? பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.  அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது? இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது.  குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது? ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதா...

மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மொழி என்பது குழந்தைகளின் தொடக்க ஆண்டுகளில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது? குழந்தைகள் பெற்றோர் வீட்டில் பேசும் மொழியை பழகிக்கொள்கிறது. பிறகு தனது தேவையைக் கூறுகிறது. அதுவரை அந்த குழந்தை கொஞ்சுமொழியில் செய்வது எல்லாமே முயற்சிகள்தான். அதற்கான அர்த்தம் வேறாக உள்ளது என புரிந்துகொள்ளலாம். மொழி என்பது கருத்தை சொல்வதற்கான வாகனம். எனவே மொழி என்பது முக்கியமானதுதான். சொற்கள், வார்த்தைகள் மொழியில் முக்கியமானவைதான். குழந்தையாக இருக்கும்போது சொல்லும் சொல்ல நினைக்கும் சொற்கள், வார்த்தைகள் அந்தளவு முக்கியத்துவம் பெறுவதில்லை.  குழந்தைகள் மொழியை எப்படி பேசி பழகுகின்றன? பிறந்து முதல் இரண்டு மாதங்களில் குழந்தைகள் எழுப்ப முடிவது ஒலியை மட்டுமே. அந்த நிலப்பரப்பு சார்ந்த மொழியைக் கேட்டு அதை நகல் செய்து பேச முயல்வது, குறிப்பிட்ட சொல், வார்த்தையை பிரதிபலிக்க முயல்வது ஆகியவை நான்கு மாதங்களில் நடக்கிறது. முதல் ஆண்டின் இறுதியில் தாய்மொழியின் சிக்கலான சொற்களை, வார்த்தைகளை பேச முயல்கிறது. ஏறத்தாழ இந்த காலகட்டத்தில் பிறர் பேசும் பேச்சுகளிலுள்ள சொற்களை பிரதியெடுப்பது...

மூளை என்பது பிளாஸ்டிக்கை போன்றதா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி மூளையை பிளாஸ்டிக் என்று கூறுவது ஏன்? மூளை, ஒருவர் பெறும் அனுபவங்களைப் பொறுத்து தன்னை வடிவமைத்துக் கொள்கிறது, பரிணாம வளர்ச்சி பெறுகிறது. இதன் காரணமாக அதை பிளாஸ்டிக் என்று கூறுகிறார்கள்  மூளை இளம் வயதில் எப்படி மாறுகிறது? பிறக்கும்போது குழந்தைக்கு மூளை 350 கிராமாக உள்ளது. பின்னர், வயது வந்தவராக மாறும்போது அதன் எடை 1450 கிராம்களாக மாறுகிறது. பிறக்கும்போது மூளையில் நியூரான்களின் தொடர்பு முழுமை பெற்றிருப்பதில்லை. வயது வந்தோராக மாறும்போதுதான் அதன் முழுமையாள வளர்ச்சி நிறைவுபெறுகிறது.  மூளையை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி? மதுபானம் அருந்தக்கூடாது. அடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க வேண்டும். புகைப்பிடித்தல் கூடாது. உடற்பயிற்சியை தினசரி செய்யவேண்டும். அடிப்படையாக மூளையில் டிமென்சியா போன்ற நோய்கள் வரக்கூடாது என்றால், அங்கு ரத்தவோட்டம் சீராக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்கும்போது பல்வேறு மொழிகளைக் கற்பது எளிது. நடப்பது, பேசுவது, சமூக வாழ்க்கையை புரிந்துகொள்வது, எழுதுவது, வாசிப்பது ஆகியவற்றை செய்யமுடியும். இதையெல்லாம் தொடக்கத்தில் க...

உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது?

படம்
    அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி உலகை குழந்தை எப்படி புரிந்துகொள்கிறது? உலகை புரிந்துகொள்ள குழந்தை தொடங்கும்போது கீழே விழுவது, எழுவது பற்றிய பதற்றம் குறைகிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் அதிக பயமின்றி தெருக்களில் ஓடித்திரியும். பெற்றோருக்கு அதைப் பார்க்கும்போது பயமாக இருக்கும். குழந்தைக்கு அப்படியான பயம் ஏதுமில்லை. உலகின் மீதான காதல் இப்படித்தான் தொடங்குகிறது. சூப்பர் மார்க்கெட்டில் மகிழ்ச்சியோடு கத்திக்கொண்டே ஓடுவது, தள்ளுவண்டியில் ஏற்றவேண்டும் என அடம்பிடித்து அலறுவது எல்லாம் உலகின் மீது கொண்ட காதலால்தான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  உணர்வு ரீதியான முரண்பாடுகள் எந்த வயதில் தோன்றுகின்றன? குழந்தைக்கு இரண்டு வயதில் உணர்வு ரீதியான முரண்பாடுகள் தோன்றுகின்றன. இந்த வயதில், அவர்களுக்கு தங்களை பாதுகாக்கும் தாய் மீது குறையும், நிறைவும் என இரண்டு எண்ணங்களுமே தோன்றுகிறது. பாசமும் உண்டு, எதிர்ப்பும் உண்டு. அதேநேரம் எதிர்மறை உணர்வால் அம்மாவின் பாசத்தை இழந்துவிடக்கூடாதே என்ற எண்ணமும் ஓங்கும். கோபமும் ஒருங்கே உருவாகும். இந்த முரண்பாடான உணர்வுநிலை அவர்களது வாழ்க்கை முழுக்கவே தொ...

அப்பாவின் மீது மகனுக்கு உருவாகும் கொலைவெறி!

படம்
    உளவியல் மிஸ்டர் ரோனி ஓடிபல் காம்ப்ளெக்ஸ் என்றால் என்ன? அம்மா மீது ஏற்படும் ஈர்ப்பு எனலாம். சிக்மண்ட் பிராய்ட் இந்த கோட்பாட்டை உருவாக்கினார். இதற்கு சொந்த வாழ்க்கையிலேயே உதாரணம் இருந்தது. அவரின் பெற்றோர் இருபது ஆண்டுகள் தனியாக பிரிந்து வாழ்ந்தனர். அம்மாவிற்கு சிக்மண்ட் முதல் பிள்ளை. அந்த பாசம், ஈர்ப்பு அம்மா, மகன் இருவருக்கும் இடையே தீவிரமாக இருந்தது. அம்மா, 95 வயதில் காலமானார். மகன் சிக்மண்ட் அதற்குப் பிறகு ஒன்பது ஆண்டுகள் கழித்து இறந்தார். ஓடிபல் காலகட்டம் என்பதையும் அவர் வரையறுத்து கூறினார். நான்கு முதல் ஏழுவயது வரையிலான காலகட்டத்தில் மகனுக்கு தாய்மீது அதிக ஈர்ப்பு உருவாகிறது. இந்த எந்தளவுக்கு செல்கிறது என்றால், அப்பாவை எதிரியாக கருதி கொல்லவேண்டும் என்ற அளவுக்கு... அந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டால் அவர்களது இளமைக்கால வாழ்க்கை நன்றாக இருக்கும். மகனின் கோபத்தை அப்பாவின் பலம் கட்டுப்படுத்துகிறது. பிறகு மகன் அக்காலகட்டத்தை கடந்தால் வளர்ந்து அவனுக்கென்று மனைவியைத் தேடி குடும்பத்தை உருவாக்கிக்கொள்கிறான். அவன் மனதில் இருந்த கோபம், அவனது மகனது மனதிற்கு குடியேறுகிறது. கார்ல் ...

உபசாந்தம் - மின்னூல் வெளியீடு - தரவிறக்கி வாசியுங்கள்.

      உபசாந்தம் (Upashantham)  இராம பாரதி https://books2read.com/u/mBdpnN

கிராமத்தில் பெண் பித்தனான தந்தையைக் கொன்ற கொலைகாரனை தேடும் புலனாய்வு பத்திரிகையாளன்!

படம்
  ட்ரூ தெலுங்கு இப்படத்தில் வில்லனும், நாயகனும் ஒருவரே. உளவியல் அடிப்படையிலான கதை. லண்டனில் பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டிருக்க கூடிய நாயகன், ஆந்திரத்திற்கு வருகிறார். அவரது அப்பா திடீரென மின்சார தாக்குதலில் இறந்துவிடுகிறார். அதற்காகவே அயல்நாட்டிலிருந்து வருகிறார். அவர் செய்யவேண்டியதை நெருங்கிய நண்பன் செய்து எரியூட்டிவிடுகிறான். இப்போது நாயகன் செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை. எனவே, அப்பாவின் இறப்பு கொலையா என துப்பறிகிறார். ஆதாரங்களை சேகரிக்கிறார். இறந்துபோன இடத்திற்கு சென்று ஆராய்கிறார். அப்போது அவரை சிலர் விசாரணை செய்யாதே என எச்சரிக்கிறார்கள். யார் அவர்கள் என தேடிப்போகிறார். அப்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறது. அவரை மிரட்டிய இளம்பெண், அவரது காதலி என்று கூறுகிறார். கூடவே வீடியோ ஒன்றையும் கொடுக்கிறார். அப்போதுதான் இறந்துபோனவர் பற்றிய இன்னொரு பக்கம் தெரியவருகிறது. மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற படம் வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அதேபாணி. நாயகனின் அப்பா கைத்தொழில் மன்னன். காம சூத்திர கண்ணன். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக அக்குடும்பத்தில் உள்ள பெண்...

ஆழி - சமூக உளவியல் கோட்பாடுகள் - மின்னூல் வெளியீடு

படம்
  https://kdp.amazon.com/amazon-dp-action/us/dualbookshelf.marketplacelink/B0F62KK95M