இடுகைகள்

காமசூத்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆண்களின் மேலாதிக்கத்தை, சுகத்தை ஆதரித்துப் பேசும் அராபிய காமசூத்திர நூல் - நறுமணத்தோட்டம்

 நறுமணத் தோட்டம் நெஃப் சுவாஹி ஆங்கில மொழிபெயர்ப்பு - ரிச்சர்ட் பர்ட்டன் தமிழில் பெரு முருகன் இந்த நூல் அராபிய காமசூத்திரம். இதை மொழிபெயர்ப்பாளர் தமிழுக்கு மொழிபெயர்த்து முக்கிய இலக்கியப் பங்காற்றியுள்ளார். நூல் எப்படிப்பட்டது என்றாலும் அதன் வழியாக அரபு நாடுகளில் உள்ள சமூக நிலைமை, ஆண், பெண் பாகுபாடு, மேலாதிக்கம் போன்றவற்றை  அறிய முடிகிறது. அதுவே முக்கியமான விஷயம்.  நூலில் அரபு நாட்டு ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை உறவு கொள்ள விரும்புகிறார்கள் என்பதை திட்டவட்டமாக வரையறுத்துவிடுகிறார்கள். உடல் பருமனான, இடுப்பில் மடிப்புகள் விழும் பெண்கள். இவர்கள்தான் ஆண்களுக்கு சுகத்தை தருபவர்கள். உண்மையில் பாலுறவு என்பதில் பங்குகொள்ளும் இருவருக்குமே இன்பம் பகிரப்படுகிறது.  ஆனால், இந்த நூலைப் பொறுத்தவரை முழுக்க ஆண்களுக்கான பார்வையில் எழுதப்பட்டுள்ளது. ஆண்களுக்கு பெண்கள் எப்படி இருக்கவேண்டும், உடல் பருமனாக, யோனி அகலமாக, உடலுறவின்போது பெண் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு எழுச்சி திரும்ப திரும்ப உருவாக்கும் வகையில் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. நூல் எழுதப்பட்ட காலம் பெண்களை அடிமைகளாக வைத்து...

இந்தியர்கள் அனைவருமே காமசூத்திரத்தை படிக்கவேண்டும்! - எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு

படம்
  ஸ்ரீமொயி  பியு குண்டு எழுத்தாளர் எழுத்தாளர் ஸ்ரீமொயி பியு குண்டு சீதா கர்ஸ் என்ற நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? சிற்றின்பம் என்பது த த்துவம், உடல் சார்ந்த தூண்டுதல், ஆன்மிக அனுபவம் என்று கூறலாமா? இந்த நூல் பெண்ணியம் சார்ந்த சிற்றின்ப நூல். இது என்னுடைய இரண்டாவது நூல். மும்பையில் பத்திரிகையாளராக வேலை செய்தபோது சீதா கர்ஸ் நூலுக்கான ஐடியா தோன்றியது. இந்த நேரத்தில் நான் ஒரு பெண்ணைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் துணிகளை காயப்போடுவது, கூண்டில் உள்ள கிளிகளுக்கு உணவிடுவது ஆகியவற்றை செய்துகொண்டிருப்பார். அப்போது அவரின் ஜாக்கெட்டில் உள்ள பட்டன்கள் போடப்படாமல் இருப்பதைக் கூட கவனிக்காமல் இருப்பார். இதுதான் சீதா கர்ஸ் நூலிலுள்ள மீராவின் பாத்திரத்தை உருவாக்க காரணமாக இருந்தது.  இந்த நாவலுக்கு எதற்கு சீதாவின் சாபம் என்று பெயர் வைத்தீர்கள்.  இதில் சீதாவுக்கு எந்த இடமுமில்லை. சீதா, ராமனின் மனைவி. அவளை அவளது வாழ்வில் விரும்பிய ஒருவன் ராவணன்தான். அவனும் கூட அவளை கடத்திச்சென்று வைத்திருந்தாலும் அவளை தொடக்கூட இல்லை. ஆனால் அந்த ஆச...