இடுகைகள்

செல்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அல்சீமர் பற்றிய கல்வி அனைவருக்கும் தேவை - மருத்துவர் சஞ்தீப் ஜாவ்கர்

படம்
  மை ஃபாதர்ஸ் பிரெய்ன் - அல்சீமர் நூல் சந்தீப் ஜாவ்கர் மருத்துவர் சந்தீப் ஜாவ்கர் இதயவியல் மருத்துவர், அமெரிக்கா அண்மையில் மருத்துவர் சந்தீப், தனது அப்பாவிற்கு ஏற்பட்ட அல்சீமர் நோய் பற்றிய தனது கருத்துகளை, தொகுத்து நூலாக எழுதியிருக்கிறார். நூலின் பெயர். மை ஃபாதர்ஸ் பிரெய்ன்   - லைஃப் இன் தி ஷாடோ ஆஃப் அல்சீமர்ஸ். தங்களுடைய   பெற்றோர், மனைவி ஆகியோருக்கு அல்சீமர் ஏற்பட்டிருப்பதை ஒருவர் முதல்முறையாக அடையாளம் காண்கிறார். அவர்களுக்கு ஏற்படும் நினைவிழப்பை எப்படி சமாளிப்பது? குறைந்த கால அளவில் ஏற்படும் நினைவிழப்பு என்பது அல்சீமரின் முக்கிய அறிகுறி. இது நோயாளியை கடுமையான விரக்தியில் தள்ளும். விரக்தியும் கோபமுமாக மாறுவார்கள். மேலும், நோயாளிகளை கவனித்தும்கொள்ளும் குடும்ப உறுப்பினர் அல்லது பணியாளர்களுக்கு பொறுமை தேவை. அல்சீமர் வந்த நோயாளிகளுக்கு மூளையில் மாற்றங்கள் ஏற்படுவதால், அவர்களின் செயல்பாடு குணங்கள் மாறும். எனவே, இதைப் புரிந்துகொள்ள அவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு நோய் பற்றிய கல்வி தேவை. அல்சீமர் நோய் வந்தபிறகு நோயாளிகளுக்கு அவர்கள் புரிந்துகொண்டபடியே உலகம் இயங்குமாறு அனுமதிக்

மயிலாப்பூர் டைம்ஸ் - கூட்டு மிளகுத்தூள் எனும் பேரமுது!

படம்
  Mylapore Times வந்தே ஏமாத்துறோம்... அல்டிமேட் லெஜண்ட்ஸ் -1 எனக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அலர்ஜி பிரச்னை இருப்பதால், பால் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் சில சமயங்களில் பால் பொருட்களை சேர்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் தயிரை சேர்த்து அதில் மிளகுப் பொடியைப் போட்டு சாப்பிட்டு வருகிறேன். இதில் தயிர் பிரச்னையில்லை. பெரும்பாலும் ஹெரிடேஜ் கர்ட் பத்து ரூபாய் பாக்கெட்டில் தடையின்றி கிடைத்து விடுகிறது. ஹட்சன் என்றால் எப்போதும் டப்பாதான். அதில் தயிரின் அளவு 40 கிராம் குறைவாக இருக்கும். எனவே, பாக்கெட் தான் வாங்குபவர்களுக்கு லாபம். டப்பா, பாக்கெட் இரண்டுமே பத்து ரூபாய் என்றாலும் கிராம்களை வேறுபடுத்தியுள்ளனர்.  இந்த நேரத்தில் தான் மிளகுத்தூளை வாங்க கடைக்குப் போனேன். மயிலாப்பூரின் பஜார் ஸ்ட்ரீட்டில், பூக்கடை ஒன்று இருக்கும் அதற்கு அருகில் இளங்கோ என்ற நவீன நாகரிக கடை இருக்கும். அதில் வேலை செய்பவர், அவர்தான் முதலாளி. என் ரேஞ்சு என்ன தெரியுமா, என்னைப் போய் பொட்டுக்கடலை மடிக்கச்சொல்லி கேட்குற என்பது போன்ற அலுப்பு முகத்தில் தெரியும். இவர் கடையில் வாங்கிய 50 ரூபாய் அரிசி இன்னொரு அநியாயம். அதில் இருந்த

தலைமுடி மூலம் மனநோய்களை அறியலாம்!

படம்
            முடி மூலம் நோய்களை அறிய முடியுமா ? மூளையிலுள்ள ஹைப்பர் ஆக்டிவ் மரபணுக்கள் மன நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள் . மூளையில் நடக்கும் பிரச்னைகளுக்கு நாம் அதனை திறந்து பார்க்கவேண்டியதில்லை . முடியைப் பார்த்தாலே போதும் . மூளையில் உள்ள எம்பிஎஸ்டி மரபணு , கட்டற்று இயங்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது . இந்த மரபணுவினால் ஹைட்ரஜன் சல்பைடு அதிகளவு மூளையில் உருவாகிறது . இது ஆன்டி ஆக்சிடன்ட்தான் என்றாலும் அதிகளவு உருவாகும்போது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது . ஹைட்ரஜன் சல்பைடு மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை முடக்குகிறது . மேலும் பிற நரம்பு செல்களின் தகவல்தொடர்பையும் பாதிக்கிறது . இதனால் ஸிசோபெரேனியா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது . எம்பிஎஸ்டி மரபணுவால் மூளையில் ஏற்படும் பாதிப்பு மட்டுமன்றி , முடியில் ஸ்டெம் செல்லும் பாதிக்கப்படுகிறது . ஆர்என்ஏவை நகல் எடுத்து எம்பிஎஸ்டி என்சைம்களை உருவாக்க முயல்கிறது . இதனால் தலைமுடியை எடுத்து சோதித்தால் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை அடையாளம் கண்டு்விடலாம் .

வலியில்லாத அழகு சிகிச்சை வருகிறது!- மூலக்கூறு சிகிச்சை முறை!

படம்
வலியில்லாத அழகு சிகிச்சை! கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வலியற்ற முக அழகு சிகிச்சை முறையான மூலக்கூறு சிகிச்சை முறை கண்டறியப்பட்டுள்ளது. நோய்க்கு இணையாக மக்கள் அறுவை சிகிச்சைக்கு பயப்படுகின்றனர். காரணம், இதிலுள்ள வலி, ரத்தப்போக்கு, தையல் ஆகியவைதான்.  தற்போது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் வலியற்ற அழகு சிகிச்சை முறையை கண்டறிந்துள்ளனர். இதற்கு மோலிக்குலர் சர்ஜரி (molecular Surgery) என்று பெயர். உடலிலுள்ள திசுக்களின் வடிவத்தை மாற்றிச்செய்யும் இச்சிகிச்சை, அழகு சார்ந்த விஷயங்களுக்கானது. ”எளிமையாக அனஸ்தீசியா கொடுத்து ஐந்து  நிமிடங்களில் இந்த மூலக்கூறு சிகிச்சையைச் செய்து முடிக்கலாம். இதன் செலவும் மிக குறைவானது” என்கிறார் மருத்துவர் மைக்கேல் ஹில். இம்முறையில் காது, மூக்கு ஆகியவற்றை சீர் செய்யலாம். சிறிய ஊசிகள், மின்சாரம், 3டி வடிவ பொருட்களை இதில் பயன்படுத்துகின்றனர். இதில் முகத்திலுள்ள குருத்தெலும்பில் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை செலுத்தி வளையும் தன்மைக்கு மாற்றுகின்றனர். பின்னர், அதனைத் தேவைக்கேற்ப மாற்றி அமைக்கின்றனர். திசுக்களை அழிக்காமல் குருத்தெலும்பை வளைக