இடுகைகள்

டிஜிட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டிஜிட்டல் பாகுபாடுகளால் பாதிக்கப்படும் ஏழை, வயதான மக்கள்!

படம்
  இப்போது நீங்கள் படிக்கும் கட்டுரை டிஜிட்டல் உலகில் ஏழைகள், கல்வியறிவற்றவர்கள் படும்பாடுகளைப் பற்றியது. அண்மையில் திருவண்ணாமலை சென்றிருந்தபோது, அனைத்து கடைகளிலும் க்யூஆர் கோட் முதன்மையாக இருந்தது. கிரிவலப்பாதையில் தள்ளுவண்டி கடை ஒன்றில் சாப்பிட்டு 30 ரூபாயைக் கொடுத்தபோது, 24 ரூபாய் போக , ஆறு ரூபாய்க்கு பதில் ஐந்து ரூபாய்தான் கிடைத்தது. ஒரு ரூபாய்தான் நஷ்டம். ஆனால் அது உணவக உரிமையாளருக்கு அல்ல எனக்கு நேரிட்டது. க்யூ ஆர் கோடு வழியாக பணத்தை கட்டுவது எளிதானது. ஆனால் அதற்கு கட்டணம் விதிக்கும்போது நிலைமை என்னாகும்? வலுக்கட்டாயமாக ரொக்க பரிமாற்றத்தை ஒழிக்க உலகமெங்கும் முயற்சி நடைபெற்றுவருகிறது. திருவண்ணாமலையில் எனக்கு டீ வாங்கிக்கொடுத்து அவரது அலுவலக அறையில் தங்க வைத்தவர், செய்த செலவுகள் அனைத்தும் க்யூஆர் கோட் வழியாகத்தான். நான் பணமாகவே எடுத்து அனைத்து செலவுகளையும் செய்தேன். நண்பர் தனக்கு நன்கறிந்த குறிப்பிட்ட ஆவின் பார்லர் கடையில் டீ அருந்துகிறார். சீனிவாசா உணவகத்தில் பட்டை சாதம் சாப்பிடுகிறார்.   எனவே, டிஜிட்டலில் பணம் செலுத்துவதில் பிரச்னை இல்லை. ஆனால், எனக்கு அதெல்லாமே அந்நிய இடங்கள்தா

செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  6.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர்.  இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை.  ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன்.  இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் திட்டங்கள், அதன் பயன்கள்!

படம்
  மத்திய அரசு டிஜிட்டல் முறையில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதன் வழியாக செயல்படத்தொடங்கியிருக்கிறது. அரசு சேவைகள் பலவும் இன்று இணையம் வழியாக கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவை தொடர்பான புள்ளிவிவர டேட்டா ஒன்றைப் பார்ப்போம்.  மொத்தமுள்ள 130 கோடி மக்களில் ஆதார் கார்டு பெற்ற மக்களின் எண்ணிக்கை  123 கோடி இணையம் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை  56 கோடி  ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை  44.6 கோடி  புதிய தொழில்நுட்ப திறன்களைப் பெற்றுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை  2,80,000 2021ஆம் ஆண்டு பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்கிய வகையில் கிடைத்த வருமானம் 5 மடங்கு அதிகம். வளர்ச்சி வேகம் 28-30 சதவீதம்.  இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் ஐ.டி, பிபிஓ பகுதி ஊழியர்களின் பங்கு 8 சதவீதம் 2019 - 2021 ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ள அளவு 37 சதவீதம் தற்போதைய நிதித்துறை மதிப்பு 31 பில்லியன். 2025ஆம் ஆண்டு நிதித்துறை வளரும் என மதிப்பிடப்பட்டுள்ள அளவு 150 பில்லியன். அடுத்த ஆண்டு உயரவிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள மதிப்பு 138 பில்லியன்.  யுபிஐ வசதியை அறிமுக்ப்படுத்தியு

டிஜிட்டல் அடிமைத்தனம் - அறிகுறிகளை அறிவது எப்படி?

படம்
  டிஜிட்டல் அடிமை கொரோனா காலம், நமக்கு டிஜிட்டல் பொருட்கள் மீது பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பார்க்கலாம். இன்று நீங்கள் குறிப்பிட்ட நூல்களை கையில் எடுத்துச்செல்லவேண்டியதில்லை. அதற்கு பதிலாக போனை கையில் எடுத்துச்சென்றால்போதும். மடிக்கணினி கூட வேண்டியதில்லை. போனில் உள்ள இணைய வசதியை முடுக்கி, தேவையான நூல்களை நீங்கள் பெற்று படிக்கலாம். அதனை பல்வேறு தளங்களில் சோதித்து கூட பார்க்கலாம். புதிய நூல்களைக் கூட பணம் கொடுத்து தரவிறக்கிக்கொள்ளலாம். சுமை ஏதும் நம் தோளில் ஏறாது. புதிதாக கற்றுக்கொள்ள இணைய வழயில் ஏராளமான வழிகள் உள்ளன.  குறிப்பிட்ட ஒருவருக்காக காத்திருக்கிறோம் என்றால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை. நூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் அல்லது இண்டர்நெட் ஆர்ச்சீவ் சென்று வாசிக்கலாம். இணையத்தில் வேறு ஏதாவது விஷயங்களைப் பார்க்கலாம். குறிப்பாக, யூட்யூபில் பிலிப் பிலிப், கிச்சடி மிஸ்டர் தமிழன் போன்ற சேனல்களைப் பார்க்கலாம். நேரத்தை வீண் என்று ஸ்மார்ட்போன் உள்ளவர் எப்போது சொல்ல மாட்டார்.  எதிர்மறை பக்கம் என்பது சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர்

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

யுபிஐ ஏற்படுத்தும் அதிவேக பிரிவினை! - சாதகங்களும் பாதகங்களும்

படம்
  யுபிஐ ஏற்படுத்தும் பிரிவினை! உங்கள் போன்தான் இனி வாலட்டாக இருக்கப் போகிறது என பில்கேட்ஸ் 1996ஆம் ஆண்டு சொன்னார். அப்போது அவர் அப்படி சொன்னது பலருக்கும் புரியாமல் இருந்தாலும் இப்போது நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. இன்று போன்பே, பேடிஎம், வங்கி ஆப்களில் வாலட்டில் பணம் வைத்து இணையத்தில் பொருட்களை வாங்கும் நிலைக்கு முன்னேறியிருக்கிறோம்.  பூம்பூம் மாட்டிற்கான தொகையை கூட யுபிஐயில் கொடுக்கலாம் என்றளவுக்கு நிலை மாறியதை, சிலர் பெருமையாக பேசுகிறார்கள். இடதுசாரிகள் பிச்சை எடுப்பதை நேரடியாக எடுத்தால் என்ன டிஜிட்டலாக எடுத்தால் என்ன என்று விமர்சிக்கிறார்கள். முதலில் சொன்னதை விட இரண்டாவது கேள்வியில் சற்று பொருள் உள்ளது.  யுபிஐ பிற வசதிகளை விட வேகமாக பணக்கார ர்கள் ஏழைகள் ஆகியோருக்கு இடையில் பாகுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், செக்கை ஒருவர் வங்கிக்கு சென்று மாற்றுவது கடினமானது. வரிசையில் நிற்கவேண்டும். டோக்கன் போடுவது இதில் முக்கியமான அம்சம். இப்படி மாறும் பணம் சரியாக கணக்கில் வந்து விழ பதினைந்து நாட்கள் தேவை. இதில் வங்கி விடுமுறைகள் வந்தால் என்ன செய்வது? பொறு

ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

படம்
  2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார்.  பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார்.  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான்.  முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்

விற்க முடியாமல் நின்றுபோன ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு! கடிதங்கள்

படம்
  பௌண்டைன் இங்க் மாத இதழ் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?  சென்னை முழுவதும் கொரோனா பீதியில் தவித்து வருகிறது. சானிடைசர், மாஸ்க்,  ஆகியவற்றுக்கு பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இந்த நேரத்தில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, வைரஸ், பாக்டீரியா தொற்று நோய்களை மையமாக கொண்ட திரைப்படங்களை தொகுத்து பட்டியலிட்டு செய்தியை வெளியிடுகிறார்கள். விநோதமான மனிதர்கள்.  காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு போனாலும் குறிப்பிட்ட டிகிரியில் இருக்கவேண்டுமென திருப்பி அனுப்பிவிடுகிறார்கள் என்று செய்தியைப் படித்தேன். அரசு தன் பொறுப்பை இப்படித்தான் செய்கிறது என நண்பர் பாலபாரதி அலுத்துக்கொண்டார். மத்திய அரசு தொற்றுநோய்க்கு எதிராக தயாராக இருப்பதாக கூறினாலும் உண்மையில் பாதிப்பை சரிவர உணரவில்லை என்றுதான் தெரிகிறது.  பீஷ்மா என்ற தெலுங்குப்படத்தைப் பார்த்தேன். இயற்கை விவசாயத்திற்கும், வேதிப்பொருள் விவசாயத்தை வலியுறுத்தும் நிறுவனத்திற்குமான சண்டைதான் கதை. படம் நெடுக வரும் காமெடிதான் படத்தை பார்க்க வைக்கிறது.  பௌண்டைன் இங்க் என்ற ஆங்கில மாத இதழின் அச்சுப்பதிப்பு நிறுத்தப்படுகிறது. அந்த இதழ் இனி டிஜிட்டல

பைத்தான் நூலை எழுதிய டெல்லி மாணவர்!

படம்
  டெல்லியைச் சேர்ந்த மாணவர் பார்த் ஆர்யா. பதினேழு வயதாகும் இவர் பைத்தான் மொழி பற்றிய நூலை எழுதி வெளியிட்டுள்ளார். கொரோனா காலத்தில் ஹார்வர்ட் பல்கலையில் கற்ற ஆன்லைன் கல்வியால் நூலை ஐந்து மாதங்களில் எழுதி முடித்துள்ளார்.  நூலை முடித்துவிட்டு அதனை பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வரிடம் காட்டியுள்ளார். அவர்களும் ஆதரவு வழங்க, பைத்தான் நூல் புத்தக வடிவம் பெற்றுள்ளது. இதனை 10-12 வயது மாணவர்கள் படிக்கும் வகையில் எழுதியுள்ளார்.  எனக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தொழில்நுட்ப நூலை எழுதவேண்டும் என்பது ஆசை. அந்த வகையில் இந்த நூல் அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். இதன்மூலம் வறுமை நிலையில் உள்ள மாணவர்கள் எளிதாக பைத்தான் மொழியை புரிந்துகொள்ள முடியும் என்றார் பார்த் ஆர்யா.  நூல் புத்தகமாக, இபுக் வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் நிதியை ஹைதராபாத்திலுள்ள பிரிங்க் எ ஸ்மைல் என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.  தொழில்நுட்பம் என்பது எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே நல்லது கெட்டது தீர்மானிக்கப்படுகிறது. எனக்கு வசதி இருந்ததால் எளிதாக ஆன்லைனில் படிக்க முடிந்தது. வறுமைநிலைய

ஓடிடி தளங்களும் சினிமாவைப் போல டிரெண்டை செட் செய்யும் காலம் தூரத்தில் இல்லை! ஜிதேந்திரகுமார், நடிகர்

படம்
                  ஜிதேந்திரகுமார் நடிகர் நீங்கள் ஐஐடி காரக்பூரில் படித்துவிட்டு மும்பைக்கு வந்தவர் . ஆழ்வார் நகரிலிருந்து வந்த உங்களுக்கு எப்படி நடிகராகும் ஆர்வம் வந்தது ? நீங்கள் நகருக்கு வருகிறீர்கள் . அங்கு உங்களுக்கு யாரையும் தெரியவில்லை என்பது கடினமான ஒன்றுதான் . ஆனால் நான் யூட்யூப் பிரபலமாக இருக்கும்போது நகருக்கு வந்தேன் . அப்போது தி வைரல் பீவர் குழுவினருக்காக நான் வீடியோக்களை இணைந்து பணிபுரிந்து வழங்கியுள்ளேன் . டிவிஎப் பிட்சர்ஸ் எனும் தலைப்பில் நாங்கள் வீடியோக்களை உருவாக்கி புகழ்பெற்றிருந்தோம் . சில போராட்டங்கள் இருந்தாலும் எப்போதும் வேலை இருந்தது . நாங்கள் டிஜிட்டல் ஊடகத்தில் தொடர்களை தயாரிக்க நினைத்தோம் . இதற்காக தயாரிப்பாளர்களை சந்தித்தபோது , இப்படி தொடர்களை தயாரிப்பது முக்கியமானது . எதிர்காலத்தில் திரைப்படங்களும் கூட இப்படி வெளியாகும் என்பதை கூறினோம் . இந்த வகையில் இப்படியொரு ஊடகம் உருவானது புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புகளைத் தரும் . அப்படியென்றால் நீங்கள் டிஜிட்டல் ஊடகத்தை அறிமுகப்படுத்தியவர் என்று கூறலாம் அல்லவா ? ஆம் நீங்கள் அப்படியும்

வங்கியல்லாத நிதி நிறுவனங்களை ஆதரிக்கும் ஆர்பிஐ! - மெல்ல தேயுமா வங்கிகள்?

படம்
              இனி வரும் காலத்தில் வங்கிகளை நம்பி நாம் இருக்கவேண்டியதில்லை . வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மெல்ல காலடி எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளன . இதில கணக்கு தொடங்கி பணத்தை பிறருக்கு அனுப்புவது பெறுவது , வணிகத்திற்கு பயன்படுத்துவது ஆகியவை இனி மெல்ல அதிகரிக்கும் . சாதாரணமாகவே யூனியன்பேங்க் வகை செயலியை விட கூகுள் பே போன்ற வங்கியல்லாத நிறுவனங்களின் செயலிகளை எளிதாக பயன்படுத்த முடிகிறது . இதற்கு காரணம் , அவர்கள் பயனர்களை வங்கிகளை விட எளிதாக புரிந்துகொள்வதுதான் . யூனியன்பேங்க் ஆப் இந்தியா , சிட்டியூனியன் பேங்க் போன்ற நிறுவனங்கள் செயலிகளின் வசதியில் காட்டும் அக்கறையின்மை கூகுள் பே , பேடிஎம் , போன் பே போன்ற நிறுவனங்களின் செயலிகளுக்கு ஆதரவாக அமைகிறது . தற்போது ஆர்பிஐ வங்கியல்லாத நிதிநிறுவனங்கள் பயனருக்கு வழங்கும் நிதியின் அளவை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக உயர்த்தியுள்ளது . மேலும் ஆன்லைனில் பணத்தை பரிமாற்றம் செய்வதற்கும் பல்வேறு சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது . மத்திய நிதி திட்ட அமைப்பில் தற்போது பொதுத்துறை வங்கிகளும் , தனியார் வங்கிகளும் குறிப்பிட்ட வங்கியல்லாத நி

க்யூஆர் கோடு வழியாக கல்வி!- டிஜிட்டல் வழியாக நடைபோடும் மாணவர்கள்

படம்
  இன்று அரசு பாடநூல்களில் க்யூஆர் கோட் செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. இணையம் இருந்தால் மேற்படி தகவல்களை எளிதாக அறியமுடியும். இது கல்வித்துறையில் பெரிய புரட்சி என்றே சொல்லலாம்.  குயிக் ரெஸ்பான்ஸ் கோடு என்பது, நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்களிலேயே தென்படத்தொடங்கிவிட்டது. அதனை ஸ்மார்ட்போன்களில் உள்ள க்யூஆர் ஸ்கேனர் ஆப் மூலம் ஸ்கேன் செய்தால், தொடர்புடைய பொருள் பற்றிய விளக்கம் கிடைக்கும்.  பாடநூல்களில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதி மூலம் மேலும் மேலும் கற்க வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் மாணவர்களுக்கு எந்த பாடங்களில் ஆர்வம் உள்ளது என கண்டுபிடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? அதுதான் மத்திய அரசின் சிந்தனையும் கூட. அதற்காகத்தான் மத்திய அரசின் கல்வித்துறை, நந்தன் நீல்கேனியின ஏக் ஸ்டெப் பவுண்டேஷனுடன் கைகோத்துள்ளது. இந்த பவுண்டேஷனின் தீக்சா எனும் ஆப்பில் மாணவர்கள் பாடநூல்களிலுள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்யவேண்டும். அதனை வைத்து மாணவர்கள் ஆர்வம் கொள்ளும் பாடங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களின் ஆர்வங்களை அரசு எளிதாக அறிந்துகொள்ள முடியும்.  2017ஆம் ஆண்டு ஐந்து மாநி

காணாமல் போகும் அச்சகங்கள்! - திருநெல்வேலி, கோவை, மதுரையில் தள்ளாடும் பழமையான அச்சகங்கள்

படம்
            கணினி வந்தபிறகு டிஜிட்டல்ரீதியான போஸ்டர்கள் , பேனர்கள் என்று தொடங்கி வெற்றிகரமாக நடந்துவருகின்றன . இன்னொருபுறம் இதன் விளைவாக எந்திர அச்சகங்கள் அதிக வாய்புப்புகளின்றி மெல்ல மூடப்படும் நிலையில் உள்ளன . அவற்றில் சில அச்சகங்களைப் பார்ப்போம் . ஶ்ரீ ரத்னம் பிரஸ் , திருநெல்வேலி ஜெயபால் என்பவர் தற்போது இதனை நடத்தி வருகிறார் . இவரது தந்தை ரத்னம் மேலப்பாயத்தில் பிரஸ்ஸில் பணிபுரிந்துவிட்டு தனியாக அச்சகத்தை தொடங்கியுள்ளார் . முதலில் நிறைய ஆட்கள் வேலை செய்து வந்தனர் . தற்போது ஒருவர் மட்டுமே இருக்கிறார் . நகைக்கடைகள் , காபி கடைகளிலிருந்து கிடைக்கும் ஆர்டர்களை செய்து கொடுத்து வருகின்றனர் . பல்லாண்டுகளாக சோறு போட்ட தொழில் என்பதால் , ஜெயபாலுக்கு இதனை விட மனமில்லை . ஆனால் வேலைகளே இல்லாத நிலையில் எத்தனை ஆண்டுகாலம் இப்படியே நடத்த முடியும் என்பதுதான் அவர் முகத்தில் தொக்கி நிற்கும் கேள்வி . நியூ சரவணா புக் பைண்டிங் , கோவை . மேட் இன் இந்தியா பொருட்களை பயன்படுத்துவோம் என பலரும் ஊக்கம் கொண்டிருந்தபோது டவுன் ஹாலில் புகழ்பெற்றிருந்த அச்சகம் நியூ சரவணாதான் . காகிதத்தை வெட்டும் மெஷ

வேடிக்கையான சலிப்பூட்டாத டிஜிட்டல் அருங்காட்சியகம்!

படம்
      sample picture-pixabay         அபிஷேக் போடார் மியூசியம் ஆப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி நீங்கள் பல்வேறு பிரபலமான கலைஞர்களுடன் தொடர்புகளை வைத்துள்ளீர்கள் . அவர்களைப் பற்றிய சுவாரசியங்கள் ஏதேனும் பகிருங்கள் . கலைஞர் மீரா முகர்ஜியை எனது சகோதரி திருமணத்திற்கு அழைத்திருந்தேன் . வந்தவருக்கு அணிகலன் ஒன்றை பரிசாக கொடுத்தேன் . அடுத்தமுறை அவரது வீட்டுக்கு சென்றபோது , அப்பரிசு அவரது வீட்டு வேலையாளின் உடலில் இருந்தது . அதனை கவனித்தனவர் . நான் அதிகம் எங்கும் செல்வதில்லை . சிலமுறை போட்டுப் பார்த்தேன் . பிறகு அவளுக்கு கொடுத்துவிட்டேன் . நீ எனக்கு கொடுத்தபிறகு அது எனக்கு சொந்தம் . எனது விருப்பம் போல அவளுக்கு கொடுத்தேன் என்று சொன்னார் . ஓவியக்கலைஞர் எம்எஃப் ஹூசைன் வெளிநாட்டில் இருந்தபோது , அவரை நான் சந்தித்தேன் . நான் அவரிடம் எதை மிஸ் செய்கிறீர்கள் என்று கேட்டேன் . இந்திய மண்ணைத்தான் என்று சொன்னார் . இப்படி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் உண்டு . ஆனால் அவை அனைத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை நினைவுகூரவைப்பவைதான் . கலை சார்ந்த விஷயத்தில் உங்களை ஈர்த்தது என்ன ? சில ஆண்ட