இடுகைகள்

1991 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதி சிங்கம் பாதி நரி கால்வாசி எலி - நரசிம்மராவின் கதை!

படம்
open நரசிம்மராவ் வினய் சீத்தாபதி தமிழில் - ஜெ.ராம்கி கிழக்கு பம்மலப்பட்டி வெங்கட நரசிம்மராவ், இந்திய அரசியலில் இன்று மறக்கப்பட்ட முகம். காங்கிரஸ்காரர்கள் யாரும் அவருடைய பிறந்தநாள், நினைவுநாள் என எதிலும் பங்குகொள்வதில்லை. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தவிர காங்கிரஸ் முகங்கள் யாரையும் நினைவஞ்சலியில் பார்க்க முடியாது. அரசியலில் சிங்கத்திற்கு வைக்கப்பட்ட பொறிகளை நரியாக கண்டுபிடித்து, முற்றுகையிடும் ஓநாய்களை சிங்கமாக மாறி விரட்டி ஆட்சி செய்த பிரதமர். ஆந்திராவில் பிராமணக் குடும்பத்தில் பிறந்து, வசதியாக வாழ்ந்தவர். குடும்பத்தில் அதிக மொழிகள் கற்ற புத்திசாலி. ஆங்கிலம் கற்பதற்கு முன்பே ஐந்து மொழிகள் கற்றவர். இவர் மீதான குற்றச்சாட்டாக பாபர் மசூதி இடிப்பு கூறப்படுகிறது. அக்காலகட்ட நிகழ்ச்சிகளை நேர்த்தியாக வினய் சீத்தாபதி பதிவு செய்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் ராவ் நேர்மையானவர். ஆனால், நேர்மையாக அரசியல் செய்தவரல்ல என்ற வரி போதும். ராவ் அரசியலில் குதிரை பேரங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலில் சூட்கேஸ் வாங்கிய குற்றச்சாட்டு ராவ் மீது களங்கத்