இடுகைகள்

தென்னாப்பிரிக்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாகிரக நெருப்புப் பொறி! - 131 ஆண்டுகள்

படம்
          131 ஆண்டுகள் - சத்தியாகிரக நெருப்பு பொறி! தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம், இந்தியாவின் சுதந்திரத்திற்கு உதவும் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், வரலாற்று நிஜம் அப்படித்தான் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் பீட்டர்மரிட்ஸ்பர்க் ரயில் நிலையம். அங்குள்ள ரயிலின் முதல் வகுப்பு வெள்ளையர்களுக்கானது. முறையாக முதல் வகுப்பு டிக்கெட் வாங்கி அமர்ந்த இளம் வழக்குரைஞர், வெள்ளையர்களால் ரயில் பெட்டியிலிருந்து வெளியே இழுத்து வீசப்பட்டார். அவர் பெயரை தனியாக நான் கூறவேண்டியதில்லை. அவர்தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. ஆம் தேசத்தந்தையான மகாத்மா காந்திதான். அந்த சம்பவமே காந்தியை சட்டமறுப்பு அதாவது சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுக்க வைத்தது. அப்போராட்டம் தொடங்கி இந்த ஆண்டோடு 131 ஆண்டுகள் ஆகிறது. 1893ஆம் ஆண்டு, ஜூன் ஏழாம் தேதி மகாத்மா காந்தி ரயிலில் டர்பனிலிருந்து பிரிடோரியா சென்றுகொண்டிருந்தார். அப்போதுதான், ரயில் நிலைய அதிகாரி அவரிடம் தகராறு செய்தார். காந்தி, முதல் வகுப்பிலிருந்து எழுந்து மூன்றாம் வகுப்புக்கு செல்லவேண்டும் என மிரட்டினார். காந்தி மறுக்கவே காவலர் ஒர...

இனவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டம்! - மாந்தருள் தெய்வம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

படம்
                  மாந்தருள் தெய்வம் கல்கி கிருஷ்ணமூர்த்தி காந்தியின் வாழ்க்கையை அவர் பிறந்தது முதல் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெல்வது வரையிலான அவரது வாழ்க்கையைப் பேசுகிறது நூல் இது . நூலின் சிறப்பு என்னவென்றால் , இது பள்ளிக்குழ்ந்தைகளுக்கு காந்தியை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் . பனியா என்ற இனத்தில் பிறப்பது , அவரது குடும்ப வாழ்க்கை . தொழில்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . சமூக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கும் யாவரும் புரிந்துகொள்ளமுடியும் . இதனால் கஸ்தூரிபாய் காந்தி , மணிலால் காந்தி , ஹரிலால் காந்தி ஆகியோர் பற்றிய பகுதிகள் இதில் குறைவாகவே உள்ளன . அதனால் நூலைப் படிக்கும் எவருக்கும் பெரிய குறைபாடாக தோன்றாது . அந்தளவுக்கு பொதுநலனுக்கு காந்தி என்னென்ன விஷயங்களை யோசித்துள்ளார் என்பது வாசகர்களை ரசிக்க வைக்கிறது . லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்கும் பகுதி காந்தியின் வாழ்க்கையில் முக்கியமானது ....

அகிம்சைச் சுடர் காந்தி! - காந்தி 150

படம்
pinterest காந்தி! காந்தி படிப்பில் சுமாரான மாணவர்தான். கணக்கில் நன்றாகப் படித்தவர். புவியியல் பாடத்தில் தடுமாறினார். காந்திக்கு பதிமூன்று வயதில் திருமணமானது. இவர்களுக்குப் பிறந்த முதல் குழந்தை இறந்துபோக, அதிலிருந்து குழந்தை திருமணங்களை தீவிரமாக எதிர்த்து வந்தார் காந்தி. காந்தியின் ஆங்கில ஆசிரியர் அயர்லாந்துக்காரர். எனவே அவரின் ஆங்கிலம், ஐரிஷ் தன்மை கொண்டிருக்கும். காந்தியின் சட்டமறுப்பு இயக்கத்திற்கு அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹென்றி டேவிட் டோரியு முன்மாதிரி. இவரைப் பற்றிய போராட்டச் செய்திகளை காந்தி சிறையில் படித்து அறிந்தார். 1930 ஆம் ஆண்டு காந்தி முதல் இந்தியராக டைம் பத்திரிகையில் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தி அமைதிக்கான நோபலுக்கு ஐந்துமுறை (1937,1938,1939,1947,1948) பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் பரிசு வழங்கப்படவில்லை. 2006 ஆம் ஆண்டு நோபல் பரிசு கமிட்டி, காந்திக்கு நோபல் பரிசு வழங்காததற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தது. தன்னை பிறர் புகைப்படம் எடுப்பதை கடுமையாக வெறுத்தவர் காந்தி. ஆனால், அவரது காலத்தில் அதிகம் புகைப்படம் எடுக...