இடுகைகள்

காடுகள் அழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மின்னலால் ஏற்படும் ஆபத்து! - காடுகளிலுள்ள தொன்மை மரங்கள் வேகமாக அழிந்து வரும் ஆபத்து!

படம்
  cc       மின்னலால் ஏற்படும் ஆபத்து ! உலக நாடுகளில் மின்னல் தாக்குதலால் ஏராளமான தொன்மை மரங்கள் அழிந்து வருகின்றன . காடுகளிலுள்ள மரங்கள் மக்களின் பரவலால் அழிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள் . அதைப்போலவே பல்லாயிரம் மரங்கள் இயற்கையாகத் தோன்றும் மின்னலால் அழிந்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா ? அமெரிக்காவின் கென்டக்கி நகரைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டீவ் யானோவியாக் இதுபற்றி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் . ஆண்டுதோறும் நடைபெறும் ஏராளமான மின்னல் தாக்குதல்களால் உலகமெங்கும் உள்ள பருவக்காடுகளிலுள்ள தொன்மையான மரங்கள் அழிந்து வருகின்றன . அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவுடன் இணைந்து , உலகமெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் . காட்டுத்தீ , பசுமை இல்ல வாயு , மரங்களின் அழிவு என நிறைய பாதிப்புகள் இதனால் உண்டாகிறது . மின்னல் எப்படி உருவாகிறது ? வெப்பமான பரப்பிலிருந்து ஈரப்பதம் நிரம்பிய காற்று உருவாகிறது . இக்காற்று குளிர்ந்து தூசி , உப்பு , புகை ஆகியவற்றை உள்ளடக்கி மேகங்

இடம்பெயரும் யானைகள்!

படம்
இடம்பெயரும் யானைகள்! நகர்ப்புற வளர்ச்சி மற்றும் விவசாய நிலங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் யானைகளின் வாழிடம் சுருங்கிவருகிறது. இதன் விளைவாக ஆசிய யானைகள் (Elephas maximus), இமாலய மலைகளுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என அறிவியல் இதழ் டைவர்சிட்டி அண்ட் டிஸ்ட்ரிபூஷன்  தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்தில் ஆசிய யானைகளில் 60 சதவீதம் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 26,330 முதல் 37,770 வரையிலான யானைகள் இந்தியாவில் காணப்படுகின்றன. இந்தியாவில் யானைகள் வாழ்ந்து வந்த 2,56,518 ச.கி.மீ வனப் பரப்பு (41.8%) அழிக்கப்பட்டுவிட்டது. மனிதர்களுக்கும் யானைகளுக்குமான மோதல் அதிகரித்துவருவதோடு, பஞ்சமும் அடுத்த சவாலாக எதிரே நிற்கிறது. எனவே, யானைகள் நீர், உணவுக்கு பிரச்னை இல்லாத மலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. யானைகள் நடமாடும் 101 பகுதிகளிலுள்ள மனிதர்கள், உணவு தேடிவரும் யானைகளை கண்டு திகிலில் உள்ளனர். தகவல்: DowntoEarth படம் - ஆன்டிக் இமேஜஸ்!

உணவு உற்பத்தி சரியக் காரணம் என்ன?

படம்
Sadhguru உணவு உற்பத்தி குறைகிறதா? பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகள் அழிவால், உணவு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக ஐ.நா அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.  உலகிலுள்ள பல்லுயிர்த்தன்மையை பாதுகாக்கும் காடுகள் அழிந்துவருவதால், ஆண்டுதோறும் உற்பத்தியாகும் உணவின் அளவு குறைந்து வருவதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது.  தற்போது, பயிர்கள் பயிரிடும் பரப்பு 20 சதவீதம் அழிவைச் சந்தித்துள்ளது. இருபதே ஆண்டுகளில் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அழுத்தமாக கூறியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும். காடுகள், பவளப்பாறைகள், சதுப்புநிலக்காடுகள், புல்வெளி நிலங்கள் ஆகியவை அழிவையும் ஐ.நா அறிக்கை கவனத்தில் கொண்டுள்ளது. உணவுச்சங்கிலியில் எவையும் விதிவிலக்கானவை அல்ல. பறவைகள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்கின்றன. சதுப்புநிலக் காடுகள் நீரினை சுத்திகரிக்கின்றன.  உலகிலுள்ள 91 நாடுகள் இணைந்து செய்த ஆராய்ச்சி அறிக்கைகள் மூலம் இயற்கைச்சூழலின் பாதிப்புகள் மக்களுக்கு தெரிய வந்துள்ளன. அழிந்த பரப்பில் 63 சதவீத தாவரங்கள், 11 சதவீத பறவைகள், 5% சதவீத மீன்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை உள்ளடங்கும்.  இதில்