மின்னலால் ஏற்படும் ஆபத்து! - காடுகளிலுள்ள தொன்மை மரங்கள் வேகமாக அழிந்து வரும் ஆபத்து!
cc மின்னலால் ஏற்படும் ஆபத்து ! உலக நாடுகளில் மின்னல் தாக்குதலால் ஏராளமான தொன்மை மரங்கள் அழிந்து வருகின்றன . காடுகளிலுள்ள மரங்கள் மக்களின் பரவலால் அழிக்கப்படுவதை அறிந்திருப்பீர்கள் . அதைப்போலவே பல்லாயிரம் மரங்கள் இயற்கையாகத் தோன்றும் மின்னலால் அழிந்துவரும் செய்தி உங்களுக்குத் தெரியுமா ? அமெரிக்காவின் கென்டக்கி நகரைச் சேர்ந்த சூழலியலாளர் ஸ்டீவ் யானோவியாக் இதுபற்றி ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டுபிடித்துள்ளார் . ஆண்டுதோறும் நடைபெறும் ஏராளமான மின்னல் தாக்குதல்களால் உலகமெங்கும் உள்ள பருவக்காடுகளிலுள்ள தொன்மையான மரங்கள் அழிந்து வருகின்றன . அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீவுடன் இணைந்து , உலகமெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் மின்னல் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர் . காட்டுத்தீ , பசுமை இல்ல வாயு , மரங்களின் அழிவு என நிறைய பாதிப்புகள் இதனால் உண்டாகிறது . மின்னல் எப்படி உருவாகிறது ? வெப்பமான பரப்பிலிருந்து ஈரப்பதம் நிரம்பிய காற்று உருவாகிறது . இக்காற்று குளிர்ந்து தூசி , உப்பு , புகை ஆகியவற்றை உள்ளடக்கி மேகங்