இடுகைகள்

ஆம்புலன்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர்!

படம்
              ஆம்புலன்ஸ் வாகனத்தை வேகமாக இயக்க உதவியவர் ! கடந்த ஆண்டு மார்ச் 28 அன்று , சிவ்பால் சிங் , தனது இரண்டரை வயது மகனை விபத்தில் இறந்தார் . விபத்து நடந்து அந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை என்பதால் , மகனைக் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவரது மனதில் இப்போதும் உள்ளது . இதற்காகவே 31 வயதான சிவ்பால்சிங் , ஆம்புலன்ஸில் பணியாற்றுவதற்காக 350 ஊழியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கியுள்ளார் . மகன் இறந்துபோன பதினைந்து நாட்களுக்குள்ளாகவே கோவிட் தொடர்பான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்கான பணியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் . சேவ் லைஃப் எனும் நிறுவனத்தில் இணைந்து அவசரகால உதவிகளை விபத்துக்குள்ளானவர்களுக்கு வழங்குவது பற்றி பயிற்சி அளித்து வருகிறார் . இவரது குழுவினர் ஆயிரம் பேர்களுக்கும் , இவர் மட்டுமே 350 பேர்களுக்கும் அவசரகால உதவிகளைக் கற்றுக்கொடுத்துள்ளனர் . ஆம்புலன்ஸ் தாமதமின்றி செயல்பட்டால் மட்டுமே நோயாளிகளை நாம் காப்பாற்றமுடியும் . ஒருமணிநேரத்திற்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு செல்லாதபோது நாம் உயிரை காப்பாற்றுவது கடினம் என்றார் சிவ்பால்