இடுகைகள்

கிராமம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனது குற்றவுணர்ச்சியைத் தீர்க்க மகளை மணம்செய்து கொடுக்க முயலும் அப்பா!

படம்
  பிரேமண்டா இதேரா  வெங்கடேஷ், ப்ரீத்தி ஜிந்தா மோதல், காதல் டெ்ம்பிளேட்டில் கிராமத்து காதல் கதை.  வெங்கடேஷ் ஹைதராபாத்தில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர். தனது சக நண்பனின் திருமணத்திற்கு கிராமத்திற்கு வருகிறார். அங்கு கிராமத்து பெரிய புள்ளி ஒருவரின் மகளைப் பார்க்கிறார். அவர்தான் ஷைலஜா. எப்போதும் பட்டு உடையில் சுற்றிவருகிற அழகானபெண். ப்ரீத்தி ஜிந்தாவுக்காகவே இந்த படத்தைப் பார்க்கலாம். அந்தப்பெண்ணுக்கும் வெங்கடேஷூக்கும் மோதல் உருவாகி பிறகு காதல் வளர்கிறது.  கல்யாண சமையல் அறையில் ஷைலுவின் துப்பட்டா மீது தீப்பிடிக்க அதை ஓடிச்சென்று தூக்கி எறிந்து காக்கிறார் நாயகன். உடனே நாயகிக்கு வெட்கம் பூக்க, காதல் மெல்ல அரும்புவிடுகிறது. தொடக்க காட்சி தொடங்கி வெங்கடேஷ் ரயிலில் கிளம்பும்வரை இருவரும் பேசிக்கொள்வதே இல்லை. காட்சி ரீதியாகவே இருவரும் ஆசையாக வேட்கையுடன் பார்த்துக்கொள்கிறார்கள். வெட்கப்படுகிறார்கள். ஏக்கப்படுகிறார்கள்.  ஷைலுவின் அப்பா தனது நண்பன் தனக்கு செய்த நன்றிக்கடனுக்காக அவனது மகனை படிக்கவைக்கிறார். அப்படியும் குற்றவுணர்ச்சி தாளாமல் மகளை மணம் செய்துகொடுக்க நினைக்கிறார்.இங்கு

தனது குடும்பத்தை அழித்த பணக்காரரை பழிவாங்க அலையும் கல்லூரி மாணவன்!

படம்
  கைதி சிரஞ்சீவி, மாதவி ஊரில் பணக்காரரின் மகளை காதலித்து,அதன் விளைவாக அப்பா, அக்கா, இறுதியாக தனது உயிரையே இழப்பவனின் கதை.  இந்த கதை ஒருவகையில் ஆந்திரத்தில் உள்ள சாதிக்கட்டமைப்பை மறைமுகமாக வெளிக்காட்டுகிறது. சிரஞ்சீவியும், மாதவியும் ஒரே கிராமத்தை்ச சேர்ந்தவர்கள். இருவரும் நகரில் சென்று ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நடனம்,நாடகம் ஆகியவற்றில் சேர்ந்து நடித்து இருவருக்கும் காதல் நெருப்பு பற்றிக்கொள்கிறது. மாதவிக்கு பெரியளவில் பணம் இருக்கிறது. படிப்பு முடிந்தால் கல்யாணம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கவேண்டியதுதான் பாக்கி. ஆனால் சிரஞ்சீவிக்கோ, மாதவியின் அப்பா வீரபத்திரனிடம் அடமானம் வைத்த வீட்டை மீட்க வேண்டும். விதவை அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என நிறைய கடமைகள் உள்ளன. இதனால் படிப்பில் கவனமாக இருக்கவேண்டியுள்ளது. மாதவிக்கு அவனை காதலிப்பது தவிர வேறு வேலையில்லை.  இந்த நிலையில் தேர்வு எழுதியபிறகு சிரஞ்சீவி தனது கிராமத்திற்கு வருகிறான். அப்படி வரும்போது பேருந்தில் வருவதாக கூறுபவனை, மாதவி தனது காரில் கிராமத்திற்கு கூட்டி வருகிறாள். இதைப் பார்த்து கிராம முன்சீப், வீரபத்திரத்திடம் தகவல் கூற அவர் சி

வில்லியிடம் இருந்து காதலியை மீட்கும் நாயகனின் போராட்டம்!

படம்
  சகியா தெலுங்கு தருண், நவ்ஹீத் சைருஷி   கிராமத்தில் உள்ள சக்திவாய்ந்த பெண்மணியின் மகளை கூட்டி வர ஸ்விட்சர்லாந்து செல்லும் நாயகன், காதலில் விழுகிறார். பெண்மணி கூறியபடி அவரது மகளை கூட்டி வந்தபிறகுதான் தெரிகிறது. அந்தபெண்மணி, அவரது அம்மா கிடையாது. எதிரி குடும்பத்து பெண். பழிவாங்குதலுக்காக அவரை ஏமாற்றி தனது மகளென கூறி வரவைத்திருக்கிறார் என்று. இப்போது நாயகன் எப்படி அவரிடமிருந்து அந்த அப்பாவி பெண்ணை மீட்டு திருமணம் செய்கிறார் என்பதே கதை. படத்தில் ஒரே ஒரு உருப்படியான விஷயம் ஆங்கில நடிகையான நவ்ஹீத் சைருஷிதான். அவரை படத்தில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மற்றபடி படத்தில் பாத்திரமாக சந்தனா என்று வருகிறார். அதில் பெரிய மாற்றமோ, ஆச்சரியமோ இல்லை. லூசுப்பெண் போல காட்டுகிறார்கள். துயரம். அதிலும் அவர் ஒரே மாதிரியான உடையில் படத்தில் பெரும்பாலான நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறார். எதற்கு என அவருக்கும் தெரிவதில்லை. நமக்கும் தெரியவில்லை. ஹரி பாத்திரத்தில் தருண் நடித்திருக்கிறார். முதல் காட்சியில் தனது அண்ணன் பற்றி மாற்றிப் பேசி அவர் காதலித்த பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள உதவுகிறார். ஆனால் அதற்குப் ப

நாங்கள் மக்களிடம் முதலீடு செய்கிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, இயக்குநர், ஜோஹோ

படம்
  ஶ்ரீதர்வேம்பு, ஜோஹோ நிறுவன இயக்குநர் ஶ்ரீதர் வேம்பு படம் - மனிகண்ட்ரோல் ஶ்ரீதர் வேம்பு நேர்காணல்   உங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பலரும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டங்களைப் பெற்றவர்கள் அல்ல. தொழில்நுட்பத் துறையில் வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகளைப் பார்க்க முடிகிறது. ஒருவர், இரண்டு வேலைகள் செய்து வாழவேண்டியிருக்கிறது. திறமையானவர்களுக்கு தட்டுப்பாடு ஏறபட்டிருக்கிறதா? இந்த பிரச்னையை எப்படி பார்க்கிறீர்கள்? சந்தையில் நிறைய நிறுவனங்கள் திறமைசாலிகளை தேடுகிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை திறமைசாலிகள் இருந்தாலும் அவர்களை வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல யாரும் முயல்வது இல்லை. நாங்கள் அந்த பணியை செய்கிறோம். இதன் மூலம் ஊழியர்களின் திறன் உயர்கிறது. அவர்கள் எங்களோடு விசுவாசமாக பணியாற்றுகிறார்கள். இவர்கள் மூலமே எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியும் உயர்கிறது. நாங்கள் தொழிலில் முதலீடு செய்வதை விட மக்களின் மீது முதலீடு   செய்கிறோம். மூன்லைட்டிங் (இரு நிறுவனங்களில் பணிகளை செய்வது) பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பொறியாளர் ஒருவர் ஒரு நிறுவனத்தில் இருந்துகொண்டு

கைநடுக்கத்தை குறைக்க காலத்தை புதிதாக மீண்டும் தொடங்கினால்... வேலி ஆஃப் லாண்டெர்ன்

படம்
  வேலி ஆஃப் லாண்டெர்ன் அனிமேஷன் ஒரு கிராமம். அந்த கிராமத்தின் சிறப்பு, உயரமாக அமைக்கப்பட்ட இடிபாடுகளைக் கொண்ட கோட்டை. கோட்டை அமைந்துள்ள கிராமத்தில் ஆலிஸ்டைன் என்ற வயதான பெண்மணி, அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் வசிக்கிறாள். வயதான பாட்டிக்கு பார்க்கின்சன் நோய் வந்துவிடுகிறது. அது பாரம்பரியமாக வரும் குடும்ப நோய். தான் ஆரோக்கியமாக பிறருக்கு பயனுள்ளவளாக இருக்கவேண்டுமென நினைக்கிறாள். எனவே, ஊரில் உள்ள பழங்கதையில் சொல்லும் விஷயத்தை செய்கிறாள். ஆண்டை மாற்றி வைப்பது. இதன்மூலம் மக்களுக்கு ஒரே ஆண்டு திரும்பத் திரும்ப வருகிறது. ஆலிஸ்டைன் பாட்டி, ஆண்டுதோறும் வரும் விளக்கு திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த பணத்திற்கு காகித விளக்குகளை செய்து கொடுக்கிறாள். அதை மனதிருப்திக்காக செய்கிறாள். கிடைக்கும் பணம் என்பது செய்யும் உழைப்பிற்கு போதுமானதல்ல. அவளது குடும்பம் பாரம்பரியமாக செய்யும் வேலை அது. ஆனால் பார்க்கின்சனால் ஏற்படும் கைநடுக்கம், விளக்கை ஏற்றுவதற்கு கூட விடுவதில்லை. தடுமாறுகிறாள். ஆலிஸ்டைன் எதற்கு இதை திரும்ப திரும்பச் செய்கிறாள் என்றால், அவளுக்கு கைநடுக்க நோய் திரும்பத்

கிராமத்து நினைவுகளை உயிர்ப்புடன் நினைவுகூர உதவும் கதைகள் - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - கி.ரா

படம்
  கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் நூல் தொகுப்பு மா ஞானபாரதி ( பாரதி மார்க்ஸ்) கி ரா அவர்களின் 98 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு. டிஸ்கவரி ப ப்ளிகேஷன்ஸ்   கரிசல் எழுத்தாளர் என அன்புடன் அழைக்கப்படும் கி ராவின் நூல்தொகுப்பு. மொத்தம் 23 கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கதைகள் எவையும் வாசிப்பதற்கு சலிப்போ, அயர்வோ ஊட்டுவன அல்ல. அனைத்து கதைகளும் அதற்கேயான இயல்பில் ஆற்றொழுக்கு போன்ற போக்கில் செல்கின்றன. சொந்த சீப்பு, ஜடாயு, சுப்பன்னா, கோடாங்கிப் பேய், அங்கணம், சாவஞ்செத்த சாதிகள் ஆகிய கதைகள் எனக்கு பிடித்தமானவையாக தோன்றின. சொந்த சீப்பு என்பது, ஒரு பொருளை வாங்கி அதன் மீது வளர்த்துக் கொள்ளும் பற்று பற்றியது. ஒரே அறையில் தங்கும் நண்பர்கள் இருந்தால், அங்குள்ள அனைத்து பொருட்களுமே எந்த கேள்வி பதிலுமின்றி பகிரப்படும். அப்படி பகீரப்படும் சீப்பு காரணமாக அதை வாங்கியவர் மனதில் ஏற்படும் கோபமும், அலுப்பும்தான் கதை. நகர வாழ்க்கையில் முதலில் நாம் வாங்கும் பொருள் பெரிய ஈர்ப்பு கொண்டிருக்கும். அதாவது, அதற்கு மனதில் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூறலாம். பிறகு, நிறை

விண்கல் மோதும் கிராம மக்களின் நிலை! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  18.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? இன்று அதிகாலை முதல் மழை பெய்துகொண்டே இருக்கிறது. சூரியனைப் பார்க்கவே முடியவில்லை. டீ குடிக்க வெளியே போனால் மழை விடவில்லை. அதற்கும் போட்டி போட்டு ர.ரக்கள் அதிமுக ஆபீசுக்கு வந்துவிட்டார்கள். சாலை முழுக்க ஆம்புலன்ஸ் நீளத்திற்கு வண்டிகளைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டனர். போக்குவரத்து நெரிசலுக்கு வேறு என்ன காரணங்கள் வேண்டும்?  ஸ்கைலேப் என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். ஆந்திராவில் உள்ள ஏழைமக்கள் வாழும் ஊர். அந்த ஊரின்மீது விண்கல் வந்து மோதப்போவதாக செய்தி. அது மக்களை எப்படி பாதிக்கிறது என்பதே படக்கதை. இதனூடே ஜமீன்தார் மகள் கௌரி எப்படி உண்மையான பத்திரிகையாளராகிறாள், மருத்துவ உரிமம் தடைபட்ட ஆனந்த் எப்படி தனது முதல் கிளினிக்கை கிராமத்தில் தொடங்கி வெல்கிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.  இன்று ஆபீசில் ஒரு கட்டுரை மட்டுமே எழுதினேன். மழை பெய்தால் மனம் வேலையில் குவிய மாட்டேன்கிறது. படிக்கவேண்டிய அறிவியல் இதழ்கள் நிறைய உள்ளன. அவற்றையும் இனி படிக்க வேண்டும்.  துப்பறியும் சாம்பு - 2 200 பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவனுடைய

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்!

படம்
  இயற்கை பற்றி வாசிக்க வேண்டிய நூல்கள்! தி சீக்ரெட் லைஃப் ஆஃப் தி அட்டர் நிகோலஸ் மில்டன் பென் அண்ட் ஸ்வோர்ட் புக்ஸ் அட்டர் என்ற விஷப்பாம்பு உலகம் முழுக்கவே அழிந்துவரும் நிலையில் உள்ளது. அதனைப் பற்றி நாம் தவறாக அறிந்துள்ள விஷயங்கள் எவை என நூல் ஆசிரியர் விளக்கியுள்ளார். இங்கிலாந்தில் அதிகளவு இப்பாம்பு இனம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த நூல் ஏற்படுத்தும் ஊக்கத்தால் அட்டர் காப்பாற்றப்பட்டால் நல்லது.  ஃபிளெட்ஜிலி ங் ஹன்னா போர்ன் டெய்லர் ஆரம் பிரஸ்  கானா நாட்டின் கிராமப்புற  பகுதியில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்களை ஹன்னா நினைவுகூர்ந்து எழுதியுள்ளார். அவர் வளர்த்த உழவாரன் குருவி, மன்னிக்கின் என்ற சிறு பறவை ஆகியவற்றையும் வளர்த்து வந்ததைப் பற்றி படிக்க சுவாரசியமாக உள்ளது.  தி பேரட் இன் தி மிரர் ஆண்டன் மார்ட்டின்ஹோ டிரஸ்வெல் ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூலில் ஆசிரியர், பறவைகள், விலங்குகள் ஆகியவற்றுக்கும் மனிதர்களுக்கும் உள்ள ஒத்த குணங்கள், பழக்கங்கள் பற்றி விவரிக்கிறார்.  தி கார்ன்கிரேக் ஃபிராங்க்ரென்னி வொயிட்லெஸ் பப்ளிசிங் வடக்கு ஐரோப்பாவில் அதிகம் காணப்பட்ட பறவைதான் கார்ன்கிரேக். ஆனால் இ

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என

பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
                          புத்தகம் புதுசு ! லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத் சல்மான் ருஷ்டி பெங்குவின் 2003 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது . இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது . கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது . டூம் நியால் ஃபெர்குஷன் பெங்குவின் உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள் , பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர் . இந்த நிலை ஏற்பட்டது எப்படி ? சில நாடுகள் மட்டும் சார்ஸ் , மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது . டெவலப்மென்ட் , டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ் கௌசிக் பாசு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது . இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப

பேஸ்புக் வணிக பயன்களுக்காக, மக்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிக்காது! - ஸ்ரீதர் வேம்பு, ஜோஹோ

படம்
  ஜோஹோ நிறுவனர், இயக்குநர் ஸ்ரீதர் வேம்பு பத்ம ஸ்ரீயை வென்றிருக்கிறார். தென்காசியில் 2019ஆம் ஆண்டே கிளம்பி வந்து கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிக்கொண்டிருக்கும் புரட்சியாளர் இவர். அவரிடம் பேசினோம்.  பத்ம ஸ்ரீ விருது பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படியிருந்தது? இதனை விளக்குவது கடினம். கலவையான உணர்வுகளால் பீடிக்கப்பட்டேன். எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. இதன் காரணமாக விருது என்பது எனக்கு பெரிய விஷயமாக பட்டது. பொதுவாக இந்த விருதுகளை சமூகத்திற்கு சுயநலமின்றி உழைப்பவர்களுக்குத்தான் கொடுக்கவேண்டும் . நான் வணிகம் செய்யும் தொழிலதிபர். எனக்கு கொடுக்கப்பட்டதை, இந்தியாவிற்கு வேறுவழிகளில் திரும்பக் கொடுக்கவேண்டும் என்றே நினைக்கிறேன்.  வாட்ஸ் அப்பின் கொள்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் இப்போது அரட்டை என்ற மென்பொருளை தயாரித்து வருகிறோம். அது இன்னும் சோதனை முறையில்தான் உள்ளது. இந்தியாவிற்கென செய்திகளை அனுப்புவதற்கு தனி மென்பொருள் தேவை என நினைத்து மென்பொருளை உருவாக்கினோம். இதுபோலவே இன்னும் பல்வேறு பொருட்களை உருவாக்கவேண்டும் என நினைக்கிறேன். பேஸ்புக் தான் கூறியபடி

கிராமத்திலுள்ளவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வருகிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, ஜோகோ

படம்
            ஶ்ரீதர்வேம்பு ஜோகோ கிராமத்தில் நிறுவனத்தை தொடங்கி நடத்தும்போது எது சரியாக இருக்கும் , எது வேலைக்கு ஆகாது என நினைக்கிறீர்கள் ? பைபர் ஆப்டிக் வயர்கள் இணையத்தை இணைப்பதால் வீடியோ தரம் சிறப்பாக உள்ளது . அதேசமயம் ஆங்கிலம் சிறப்பாக பேசும் ஆட்களை கிராமத்தில் தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது . நிறைய ஜெர்மன் , ஜப்பானிய நிறுவனங்கள் எப்படி ஆங்கிலம் இல்லாமல் கூட உலக சந்தையை அணுகுகிறார்களோ அதேவழியில் நாமும் இந்திய தொழில்வளத்தை உயர்த்தவேண்டும் .    ஸ்டார்ட்அப் என்றாலே நிறைய போட்டிகள் உள்ளன . ஒப்பீடுகள் வருகின்றன . எப்படி சமாளிக்கிறீர்கள் ? நான் நேற்று கூட என் கிராமத்தினருடன் சேர்ந்து 12 கி . மீ . தூரம் நடந்து சென்றேன் . இப்போது என்னை பில்கேட்ஸூடன் ஒப்பிடுவீர்களா ? இந்த எலிப்பந்தயம் மீது எனக்கு விருப்பமில்லை . உங்களுக்கு மிகப்பெரும் ஆதாயம் தரும் விஷயம் இதிலிருந்து நீங்கள் விலகி வாழ்வதுதான் . உங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் உண்டா ? நான் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நினைக்கவில்லை . ஜோகோவில் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன . இதற

விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் - ஒரு பார்வை!

படம்
செல்வக்குமார் வரதராஜன்- இடதிலிருந்து இரண்டாவதாக.. விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொன்மையான விதை, பூச்சிக்கொல்லி நிறுவனங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறுபடுவது, மக்களின் தேவைகளை எளிதாக தீர்த்து வைப்பதில்தான். இதனால் அவை வெற்றிகரமான நிறுவனங்களாக மாறுகின்றன.  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும் விவசாய நிறுவனங்கள் இதோ... VilFresh 2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்வக்குமார் வரதராஜன் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கிராம மக்களிடம் இருந்து பால் பொருட்களைப் பெற்று நகரங்களில் விற்று, அம்மக்களுக்கு உதவுகிறது. இம்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தனது சிறப்பான செயற்பாடு காரணமாக, அண்மையில் 1.15 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.  விவசாயிகளை மேம்படுத்துவதும், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும், நகரத்தினரை எங்களது பொருட்களின் மூலம் ஆச்சரியப்படுத்துவதும்தான் எங்கள் நோக்கம் என்றார் செல்வக்குமார்.

நம்பிக்கை மனிதர்கள் - நீர், சுகாதாரம், கிராம நலவாழ்வு

படம்
நம்பிக்கை மனிதர்கள் டாக்டர் வினோத் டாரே கழிவறை சுத்தம் ஜீரோ கழிவுகள் கொண்ட கழிவறைகளை நீங்கள் 2006க்கு முன்னர் யோசித்திருக்கிறீர்களா? கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த வினோத் டாரே அதன் பனிரெண்டு பேர்  கொண்ட குழு மூலம் சாத்தியம் ஆக்கியிருக்கிறார். மத்திய அரசின் மனிதவளத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து  கான்பூர்  ஐஐடியிடம் கழிவற்ற கழிவறை உருவாக்கும் பணியை அளித்தன. வினோத் டாரேவின் சீரிய பணியால் இன்று காஷ்மீர் முதல் கோவை தொடக்க பள்ளி வரை கழிவற்ற கழிவறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கடந்த 2013ஆம் ஆண்டு நீரற்ற சிறுநீர்கழிப்பிடம், கழிவற்ற கழிவறை ஆகியவை புகழ்பெற்றன. இதில் மனிதர்களின் கழிவுகள் அங்குள்ள மண் மூலம் உரமாக மாற்றப்படுகிறது. இதற்கு நீர் தேவையில்லை. “இந்த தொழில்நுட்பத்தை பல்வேறு வணிக நிறுவனங்கள் விற்கச்சொல்லி கேட்டனர். ஆனால் நான் இது மக்களுக்குச்சென்று சேரவேண்டும் என்பதால் அதற்கு சம்மதிக்ககவில்லை ” என்கிறார் டாக்டர் வினோத் டாரே. 2 தண்ணீர் காந்தி கர்நாடகத்தைச் சேர்ந்தவர்தான் தண்ணீர் காந்தியான அய்யப்ப மசாகி. கர்நாடகத்தின் கடக் மாவட்டத்தைச் சேர்ந்த மசாகிக்

காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!

படம்
foreign relation council மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது. பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்? பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான். பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை  செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்