இடுகைகள்

கலாசாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

படம்
  அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார். அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டு

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!

படம்
  செக்ஸ் பிரச்னை பெண்களுக்கும் உண்டு! எம்எக்ஸ் பிளேயரில் இந்தி வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அதில் விந்து முந்தும் பிரச்னை கொண்ட இளைஞன் ஒருவன் இருப்பான். அவனுடன் உறவு கொண்ட பெண்தோழி,அவனை ஒடைஞ்ச குழாய் என கிண்டல் செய்வாள். இணையத்தில் அவளின் உடலுறவு பற்றிய கிண்டல் பதிவு பகிரப்பட்டு விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞனே, அதைப் பார்த்து பதறுவான். இந்த தொடரில் இளைஞனின் பிரச்னையை   காமெடியாக சொல்ல முயன்றாலும், இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம். உண்மையில் அது தீவிரமான பிரச்னை. உயிரியல் ரீதியாக ஆணும், பெண்ணும் இணைந்திருக்க உடலுறவு முக்கியமான காரணம். உடலுறவு கொண்ட பெண் எந்த மனநிலையில் ஒடைஞ்ச குழாய் என்று இளைஞனை பலரும் பார்க்கும் இணையத்தில் பதிவிட்டு திட்டியிருப்பாள்? உண்மையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் ஈடுபட்ட உடலுறவில் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ‘’ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’’ என யூட்யூப்பில் ஆபாசப்பட நடிகர்   ஜானி சின்ஸ் கூறியிருக்கிறார். வெப் சீரிஸில் கூட ஆணை விந்து முந்துதலுக்கு கிண்டல் செய்பவர்கள்,அந்த பெண் இணையத்த

பிடிஎஸ்எம் வாழ்க்கை முறையும், கலாசாரமும்!

படம்
  பிடிஎஸ்எம் முறையைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. அதைப் பிடித்தால் அவர்கள் கம்யூன் போல வாழும் குழுக்களோடு சேர்ந்து அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இணையத்தில் இப்படி இயங்குபவர்கள் ஏராளமான ஆட்கள் உண்டு. எந்த உறவிலும் நம்பிக்கை முக்கியமானது. அந்த நம்பிக்கையை யார் மீது வைக்கிறீர்கள் என்பது தனிநபர்களைப் பொறுத்தது. தவறான தகுதியில்லாத நபர்கள் மீது அன்பை செலுத்தி திரும்ப அன்பு கிடைக்காதபோது யாருக்குமே விரக்தியாகும். பிடிஎஸ்எம் முறையிலும் இந்த ஆபத்து உண்டு. எனவே நீங்கள் ஒருவரை நம்பினால் பிடிஎஸ்எம் முறையை பின்பற்றுங்கள். இல்லாதபோது அது சுரண்டல் என்பதாகவே மனதில் கருத்து உருவாகும். ஒருவர் நம்பும் கலாசாரப்படி பிடிஎஸ்எம் முறை இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்க முடியும். இந்த முறையை நீங்கள் கையாள்கிறீர்கள், கடைபிடிக்கிறீர்கள் என்றால் முழுமையாக அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்வது அவசியம். அப்படியல்லாதபோது பிரச்னை ஏற்படவே வாய்ப்பபு அதிகம். இன்றைக்கு தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஓரினச்சேர்க்கையாளர்கள் மணம் செய்வது, தன்னை குறிப்பிட்ட பாலினமாக வெளிப்படுத்துவது என்பது

அரசு, அதிகாரம் கட்டுப்படுத்த முடியாத மனத்தை அடைவது சாத்தியம்தான்! ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  சரியான கல்வி ஜே கே கிருஷ்ணமூர்த்தி பெரும்பாலான மாணவர்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்கிறார்கள். ஒரு விஷயத்தை ஆராய்ந்து விசாரணை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கேள்வி  கேட்பதை பெற்றோர் ஆசிரியர் ஆகியோர் ஊக்குவிப்பதில்லை. பிள்ளைகள் கேள்வி கேட்கும் இயல்பு கொண்டவர்களாக அதிருப்தி கொண்டவர்களாக இருப்பது பெற்றோர்களுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பிள்ளைகள் இனி எப்போதும் கேள்வி கேட்காத முறையில் யோசிக்க தெரியாத அளவில் அவர்களை மாற்ற முயல்கிறார்கள். கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் புறக்கணித்து அவர்களை மந்தமான மனிதர்களாக மாற்றுகிறார்கள். தங்களது வாதங்களை பெற்றோர், ஆசிரியர் ஆகியோர் முன்வைக்க கலாசாரம். தொன்மையான பாரம்பரியம், சமூக மதிப்பு ஆகியவற்றை ஆதாரமாக காட்டுகிறார்கள். இதில் வயதானவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிள்ளைகளை மந்தமானவர்களாக மாற்றுகிறார்கள். பெற்றோர், ஆசிரியர் மேற்சொன்ன முறைகளை கைவிட்டு பிள்ளைகளை, மாணவர்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்ற வேண்டும். சிறுபிள்ளைகள் உயிருடன் வாழ்கிறார்கள் என்றால் அதிருப்தி கொண்டவர்களாக அதேநேரம் நம்பிக்கையுடன்தான் இருக்கமுட

பெண்கள் அழகுக்காக மட்டும்தான்-

படம்
  பெண்கள் அழகுக்காக மட்டும்தான்- திட்டமிட்டு பொதுபுத்தியை உருவாக்கும் ஜப்பான் பல்கலைக்கழகங்கள்   கல்லூரிகளில் மாணவர் தேர்தல் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர் பின்னாளில் மாநில அரசியல் கட்சியில் ஏதாவதொரு பதவியில் உயர்வார். அடுத்தடுத்த இடங்களுக்கு நகர்வார். இது பொதுவான காட்சி. ஆனால் ஜப்பானைப் பொறுத்தவரை அங்கு பெண்கள் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதை படிக்கும்போதே மனதில் உறுதிபடுத்திவிடுகிறார்கள். ஜப்பான் வளர்ச்சி பெற்ற நாடு. பொருளாதார அளவில் இதைக் கூறுகிறேன். அதேசமயம் கலாசாரம் சார்ந்தும் அந்த நாடு உலகிற்கு கொடுத்த கொடைகள் அதிகம். ஆனால் பெண்களை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதே அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. இளம்பெண்ணின் வனப்பு, ஆனால் சிறுமியின் உடல் என்பது ஃபேஷன் உலகில் எதிர்பார்க்கப்படும் உடல் தகுதி. இதனால் நிறைய பெண்கள் வாழ்க்கை ஊட்டச்சத்து பற்றாக்குறையாகி நோய்வாய்ப்படுவதையெல்லாம் கட்டுரைகளில் வாசித்திருப்பீர்கள். ஆனால் இப்படி பெண்கள் இருப்பதை ஒரு சமூகமே விரும்பினால், அப்படித்தான் இருக்கவேண்டுமென சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துக்களை தெரிவித்தால் எப்படியிருக்கும்? இதுபோ

பார்க்க வேண்டிய இடம் - மான்ட் செயின்ட் மிச்செல் , பசிபிக் கடலில் ஏற்படும் மாசுபாடு

படம்
  மான்ட் செயின்ட் மிச்செல் பிரான்ஸ் நாட்டில் நார்மாண்டியில் அமைந்துள்ள தீவு. மத்திய காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தீவுக்கு அழகு சேர்க்கின்றன. பெரும்பாலான கட்டிடங்கள் எல்லாமே கிரானைட்டில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் மலைமீது அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஜாலி சுற்றுலா செல்ல நினைத்தால் காலையில் நேரமே எழுந்தால் சூரியக் கதிர்கள் உங்கள் மீது படும்போது புகைப்படம் எடுக்கலாம். அதை இன்ஸ்டாகிராமில் பதியலாம். நேரம் ஆனால் நீங்கள் மட்டுமல்ல, பிறருக்கும் தூக்கம் கலைந்துவிடும். எனவே நிறைய பேர் வந்துவிடுவார்கள். நெரிசலில் புகைப்படம் எடுத்து நமது வரலாற்றை நிரப்பவேண்டியிருக்கும். கார்களை இரண்டு கி.மீ. தூரத்தில் நிறுத்திவிடவேண்டிய நிபந்தனை உண்டு. தொன்மை கட்டுமானங்களை மக்களின் புகைப்பட பரவசத்திலிருந்து காப்பாற்றவே இந்த ஏற்பாடு. ஆண்டுக்கு 3 மில்லியன் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து போகிறார்கள். மான்ச் செயின்ட் மிச்செலில் அற்புதமாக கட்டப்பட்ட தேவாலயம் உண்டு. அடுத்து, இங்கு பாறைகளை பிளந்து உருவாக்கப்பட்ட இடம், போர்க்காலத்தில் மக்கள் ஒளிந்துகொள்ள பயன்பட்டது. பிறகு மக்களை சிறை வைக்கும் சிறையாகவும் பயன்பட

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர

சீன வாத்து எப்படி வீட்டு விலங்காக மாறியது?

படம்
  வீட்டு விலங்கான சீன வாத்து! வீட்டு விலங்காக வளர்க்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் வாத்தும் இடம்பிடித்துள்ளது. இந்த வாத்து, சீனாவில் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு வளர்க்கப்பட்ட சீன வாத்து ( ), வீட்டு விலங்கு என ஜப்பான் சப்போரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இத்தகவலைக் கூறியுள்ளனர். இந்த வகையில் வாத்துகள் பண்ணையில் வளர்க்கப்பட்டது என்ற செய்தி உறுதியாகியுள்ளது.  சீனாவில் தியான்லுவோசன் எனும் அகழ்வராய்ச்சி இடம் உள்ளது. கற்காலகட்ட கிராமப் பகுதியான இதன் வயது 7000 - 5500  காலகட்டம் என அறியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் 232 வாத்துகளின் எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், வாத்துகள் பண்ணை விலங்காக வளர்க்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது என ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதில் நான்கு வாத்துகளின் எலும்புகள், முதிர்ச்சியடையாதவை என கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் வயது 18 வாரங்கள் ஆகும். கார்பன் வயதுக் கணிப்பு மூலம், வாத்துகள் உள்ளூரைச் சேர்ந்தவை என  மதிப்பிடப்பட்டுள்ளன.  ”பண்ணை விலங்காக வாத்துகளை மனிதர்கள் வளர்த்திருப்பது இதன் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இது முக்கியமான ஆய்வு” என பி

இந்திய கலாசார இயல்பில் சமூக அவலங்களைத் தட்டிக்கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்!

படம்
  சமூக அவலங்களைத் தட்டிக் கேட்கும் காமிக்ஸ் நாயகிகள்! டில்லியைச் சேர்ந்த சௌரப் அகர்வால், அரசுப் பள்ளியில் வாழ்க்கைத் திறன் வகுப்புகளை நடத்தி வந்தார். வகுப்பில் ஒருமுறை, "உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ யார் ?" என  பள்ளி மாணவர்களிடம் கேட்டார். அப்போது மாணவர்கள் உடனே ஸ்பைடர் பேன், சோட்டா பீம் என பதில் சொன்னார்கள். ஆனால் மாணவிகள் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தனர். 2019ஆம் ஆண்டு மாணவிகளுக்கான பதிலாகவே, பெண் நாயகிகளைக் கொண்ட காமிக்ஸ் நூல்களை சௌரப் உருவாக்கினார். இவர், அமெரிக்காவின் ஹார்வர்ட், ஐஐடி (காரக்பூர்)  ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்றவர். கேல் பிளானட்(Khel planet) பௌண்டேஷன் தன்னார்வ அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு  திறன்களைக் கற்றுத்தந்து வருகிறார்.  தபங் கேர்ள், சூப்பர்கேர்ள் அவ்னி, பர்பிள் ஃபிளேம் ஆகிய காமிக்ஸ் நாயகிகள், அனைவருமே சமூக பிரச்னைகளைப் பேசுபவர்கள் என்பதே முக்கியமானது.    தபங் கேர்ள் (தாரா), பள்ளி மாணவர்களுக்கு உதவும் பாத்திரம். சூப்பர்கேர்ள் அவ்னி (மாயா), டிஜிட்டல் குற்றங்களைத் தடுப்பவர். இதில் மாறுபட்டது, பர்பிள் ஃபிளேம்தான். இந்த பாத்திரம், டி

பத்து வளையங்களின் சக்தி கொண்ட அப்பாவை எதிர்க்கும் மகன்! சாங் சி- மார்வெல்

படம்
  சாங் சி மார்வெல் அமெரிக்காவில் ஹோட்டல் ஒன்றில் வரும் வாடிக்கையாளர்களின் கார்களை பார்க்கிங் செய்து வரும் வேலையை நாயகனும் நாயகியும் செய்து வருகிறார்கள். இதில் நாயகனுக்கு கடந்த காலம் ஒன்றுண்டு. அதனை அவன் தனது தோழி பிளஸ் காதலியிடமும் சொல்லவில்லை. பேருந்து ஒன்றில் பயணிக்கும் போது நடைபெறும் மோதல், அவனை யாரென்று காதலிக்கு புரிய வைக்கிறது. நாயகனின் கழுத்தில் உள்ள டாலரை மட்டும் அந்த கும்பல் பிடிங்கிக்கொண்டு செல்கிறது. அதனைத் திரும்ப பெறுவதோடு, தனது தங்கையையும் காப்பாற்ற சாங் சி சீனா செல்கிறான். அங்கு என்ன நடந்தது? தங்கையின் உயிருக்கு வந்த ஆபத்தை தவிர்க்க முடிந்ததா? கொள்ளையடித்த கும்பலின் நோக்கம் என்ன என்பதுதான் கதை.  ஆசிய கலாசாரம், குடும்ப உறவு என ஹாலிவுட் திரும்பிவிட்டது படத்தில் தெரிகிறது. படம் நெடுக குடும்ப உறவுகள், கலாசாரம், தனது வேர் என்ன என்பதை நோக்கியே படம் செல்லுகிறது.  சாங் சியின் அப்பா, சாங் சியின் காதலியிடம் அவளது குடும்பம் மற்றும் சீனப் பெயரைக் கேட்கும் காட்சி இதற்கு உதாரணம். பேருந்தில் நடக்கும் சண்டைக்காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டுள்ளது. அதுதான் கதைக்கான முக்கியமான திருப்புமுனை.

பெருந்தொற்று கால எழுத்தாளர்கள்! - குதிரை சவாரி, முன்னோர்களின் கதை, கலாசாரம் சார்ந்த கேள்வி, குறைந்த கழிவுகள்

படம்
  எழுத்தாளர் சஹர் மன்சூர் தரிபா லிண்டெம் எழுத்தாளர், நேம் பிளேஸ் அனிமல் திங் - ஜூபான் புக்ஸ் தரிபா, மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது மும்பையில் சுங்கத்துறையில் கூடுதல் கமிஷனராக பணியாற்றுகிறார். தனது முன்னோர்களைப் பற்றிய கதை மனதில் சுனை நீராக பெருக எழுத தொடங்கியிருக்கிறார். இந்த வேலை தொடர்ச்சியாக நடைபெறவில்லை. ஆனாலும் கிடைத்த நேரத்தில் நூலை எழுதிக்கொண்டே வந்திருக்கிறார். அப்படித்தால் இவரது புதிய நூல் பிரசுரமாகியிருக்கிறது. 34 வயதாகும் தரிபா, எனக்கு நூல் பிரசுரமாவது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. புதிய எழுத்தாளர்களுக்கு இப்போது பிரசுரங்கள் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்கிறார்.  தரிபா லிண்டெம் இப்போது நம்மிடம் பேசும்போது கூட நான் தனியாக அமர்ந்து நூலை எழுதுவேன். அது நூலாக வெளியாகும் என்பதை யோசிக்கவே முடியவில்லை என்கிறார்.  யஷாஸ்வினி சந்திரா எழுத்தாளர், எ டேல்  ஆப் தி ஹார்சஸ் கலை வரலாற்று ஆய்வாளர், குதிரை சவாரிக்காரர் என்றுதான் சந்திராவைச் சொல்ல முடியும். இவர் தனது குதிரை தொடர்பான ஆர்வத்தை முன்வைத்து வரலாற்று பின்னணியில் நாவலை எழுதி பான் மெக்மில்லனில் வெளியிட்டிருக்கிறார். பெருந்தொற்று

இந்தியாவில் மவுசு பெறும் ராம்யுன் உணவு! - கொரிய தொடர்களின் விளைவு

படம்
  பாய்ஸ் ஓவர் ஃபிளவர்ஸ் கொரிய தொடர் இந்தியாவிற்குள் கொரிய தொடர்கள் ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம், காதலும் அதனை வண்ணமயமாக படமாக்கும் விதம்தான். டிவி தொடர் என்றாலும் கூட நிறைய செலவு செய்து அதனை எடுக்கிறார்கள். இவையெல்லாம்தான் ஆங்கிலம், இந்திய நிகழ்ச்சிகளின் மீது ஆர்வம் குறைந்து கொரிய தொடர்கள் பக்கம் மக்கள் செல்வதற்கு காரணமாக உள்ளது. கொரிய மற்றும் சீன தொடர்களில் முக்கியமான விஷயம், அவர்களின் உணவு கலாசாரம். தொடர்களில் சாப்பிடும் கிம்ச்சி, ராம்யுன், ஸ்டீக் போர்க், வறுத்த கோழி என அனைத்து விஷயங்களையும் இந்திய மக்கள் வாங்கி  சாப்பிடத் தொடங்கியுள்ளனர்.  சூப்பர் மார்க்கெட் முதல் ஹைப்பர் மார்க்கெட் வரை இவற்றை தேடி வாங்கி வருகின்றனர். 2021ஆம் ஆண்டு லாக்டௌனில்தான் சிம்ரன் டாண்டன் கொரிய தொடர்களை பார்க்க தொடங்கினார். அதுவும் கூட இந்திய மற்றும் ஆங்கிலத் தொடர்களில் சலிப்பு ஏற்பட்டுத்தான் ஓடிடி தளங்களை நாடினார். தொடர்களின் கதைகளும் கூடவே அதில் காட்டப்பட்ட உணவுகளும் அவரை ஈர்த்தன. கொரிய வறுத்த கோழி, கிம்ச்சி ஃபிரைட் ரைஸ், டம்ப்ளிங்க்ஸ், ட்டியோக் போக்கி, வேக வைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை

இளம் வயதினருக்கான சிறந்த நூல்கள் - 2018- 2021

படம்
  2018 சில்ட்ரன் ஆப் பிளட் அண்ட் போன் டாமி அடியெமி மேற்கு ஆப்பிரிக்க புனைவை அடிப்படையாக கொண்ட நூல். ஸெலி அடிபோலா என்ற இளம் வயது பாத்திரம்தான் நாயகன். தனது நாட்டிலுள்ள அழிந்துபோன மாயமந்திர சமாச்சாரங்களை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை.  2018  டாரியஸ் தி கிரேட் ஈஸ் நாட் ஓகே அடிப் கொர்ரம் இரானுக்கு செல்லும் டாரியஸ் கெல்னர், தனது பயணத்தின் வழியே வாழ்க்கையை உணர்வதுதான் கதை. பதற்றம், தனிமைப்படுத்தல், இனக்குழு உணர்வு, அடையாளம் என பல்வேறு உணர்ச்சிகள் நாவலில் உள்ளன.  2019 ஃபிராங்லி இன் லவ் கொரிய அமெரிக்க மாணவன் ஃபிராங்க் லீ, பள்ளியில் படித்து வருகிறான். அங்கு அவன் வெள்ளை இனப் பெண்ணை காதலிக்கிறான். அவனது பெற்றோர் அவன் கொரியப் பெண்ணை காதலித்து மணக்கவேண்டுமென விரும்புகின்றனர். ஃபிராங்க் இரண்டு கலாசாரங்களுக்கு இடையில் அல்லாடி வாழ்க்கையை தேடி உணர்வதுதான் கதை.  லாரா டீன் கீப் பிரேக்கிங் அப் வித் மீ மாரிகோ டமாகி  ரோஸ்மேரி வலேரோ ஒ கானல் பள்ளியில் மிக அழகான பெண் லாரான் டீன்தான். அவள் ஃபிரெடி என்பவனின் பெண் தோழியாகிறாள். அந்த நாள் ஃபிரெடிக்கு முக்கியமானது. ஆனால் லாரா டீனின் மோசமான குணம் அதற்குப் பிறகுதா

பெருந்தொற்று காலத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் பாப்புலிச தலைவர்கள்! - புதிய நூல்கள் அறிமுகம்

படம்
                          புத்தகம் புதுசு ! லாங்குவேஜஸ் ஆப் ட்ரூத் சல்மான் ருஷ்டி பெங்குவின் 2003 இல் இருந்து 2020 ஆம் ஆண்டு வரையில் எழுதப்பட்ட பல்வேறு விஷயங்களை நூல் கொண்டுள்ளது . இந்த காலகட்டங்களி்ல் நடைபெற்ற கலாசார மாற்றங்களை பேசுகிறது . கதை சொல்லுவதை இயல்பாக தனது எழுத்தில் இயல்பாக கொண்டிருப்பதால் இந்நூலை படிக்கும் அனுபவம் சிறப்பாக உள்ளது . டூம் நியால் ஃபெர்குஷன் பெங்குவின் உலகம் முழுக்க செயல்படும் பாப்புலிச தலைவர்கள் , பெருந்தொற்று காலத்தில் பல்வேறு திட்டங்களை உருவாக்கி மக்களை காக்கமுடியாமல் தடுமாறி வருகின்றனர் . இந்த நிலை ஏற்பட்டது எப்படி ? சில நாடுகள் மட்டும் சார்ஸ் , மெர்ஸ் ஆகியவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டது எப்படி என இந்த நூல் பேசுகிறது . டெவலப்மென்ட் , டிஸ்ட்ரியூபூஷன் அண்ட் மார்க்கெட்ஸ் கௌசிக் பாசு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்த நூல் எப்படி மேம்பாட்டு பொருளாதார கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை விளக்குகிறது . இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நேரடியாக பணத்தை பயனாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எப