இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐரோப்பாவில் பட்டு சாலை வணிகத்தடம் உருவானதா? - உண்மையா? உடான்ஸா?

படம்
  விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்ப ராக்கெட்டிற்கு மாற்று ஏதுமில்லை                                                     உண்மை. இப்போதைய தொழில்நுட்பப்படி ராக்கெட்தான் விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை அனுப்ப உதவும் ஒரே சாதனம். இதற்கு மாற்றாக வளரக்கூடிய விதமாக வர்ஜின் நிறுவனத்தின் ஸ்பேஸ்ஷிப் 2 விண்வெளி விமானம் உள்ளது. இதே நிறுவனத்தின் லான்ஞ்சர் ஒன் செயற்கைக்கோள்  லான்ஞ்சரையும் இதேபோல குறிப்பிடலாம். ஆனாலும் விண்வெளிக்கு செல்ல ராக்கெட்டின் உதவி உறுதியாக தேவை.  நெகட்டிவ் கலோரி கொண்ட உணவு வகைகள் உண்டு! இல்லை. குறிப்பிட்ட வகை உணவை செரிக்க உடல் செலவழிக்கும் ஆற்றலை கலோரி அளவை, நெகட்டிவ் கலோரி என குறிப்பிடுகின்றனர். அதிக நீர்ச்சத்து கொண்ட உணவு வகைகளை  இந்த வரையறைக்குள் பொருத்தலாம். இப்படி உணவு இருப்பதாக தெரியவில்லை என ஆராய்ந்த உணவு வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். செரிக்க தாமதமாகும் செலரி (celery) என்ற தாவர உணவு கூட நெகட்டிவ் கலோரி உணவு பட்டியலில் வராது.  சில்க்ரோடு எனும் வணிகத்தடம் ஐரோப்பாவில் உருவானது!                          இல்லை. பட்டு எனும் வணிக வழித்தடம் சீனாவின் ஷியான் எனும் இடத்தில் தான் த

இரண்டாம் உலகப்போரில் உருவான சிண்ட்ரோம் கே! - உண்மையா, உடான்ஸா

படம்
  இரண்டாம் உலகப்போரில் கண்டறியப்பட்ட சிண்ட்ரோம் கே என்பது நோயல்ல! உண்மை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் இத்தாலி மருத்துவர்களால், சிண்ட்ரோம் கே என்ற நரம்பியல் சார்ந்த தொற்றுநோய் செய்தி உருவாக்கப்பட்டது. உண்மையில் மருத்துவர்கள்  யூதர்களை காப்பாற்ற  முயன்றே இப்படி நோய் பரவி வருவதாக பொய் சொன்னார்கள். இதன்மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யூதர்களை தற்காலிகமாக பாதுகாக்க முடிந்தது.  9 நானாஸ் (The 9 Nanas) என்பது அமெரிக்க பெண்களின் ரகசியக் குழு! உண்மை.  இக்குழுவினர் கெடுதலான செயல்களை ஏதும் செய்யவில்லை. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்த 9 பெண்கள்தான் 9 நானாஸ் என்ற ரகசியக்குழு. இவர்கள், தினமும் அதிகாலை 4 மணிக்கு பொதுவான இடத்தில் சந்தித்து, குறிப்பிட்ட அளவு காசு சேர்த்து உணவு, உடைகளை ஏழைகளுக்கு வழங்கி வந்திருக்கின்றனர். இக்குழுவினர், 30 ஆண்டுகளுக்கு மேலாக தங்களது கணவர்களுக்குக் கூட தெரியாமல் தங்களது அறச்செயல்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  பாலின சமநிலை கொண்ட நாடு, ஐஸ்லாந்து! உண்மை. உலகளவில் எடுக்கப்பட்ட பாலின சமநிலை அறிக்கையில், ஐஸ்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து, நார்வ

வினிகர் தயாரிக்க உதவும் கசப்புச்சுவை கொண்ட ஆப்பிள் !

படம்
  ஜெர்மன் சாக்லெட் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது! உண்மை. ஜெர்மன் சாக்லெட் என்பதிலுள்ள ஜெர்மன் என்பது நாடல்ல. 1852ஆம் ஆண்டு சாக்லெட் கேக்கை கண்டுபிடித்த சாம் ஜெர்மன் என்பவரைக் குறிக்கிறது. இவர், பேக்கர் என்ற நிறுவனத்திற்காக சாக்லெட் கேக் ரெசிபியை உருவாக்கினார். இதனை ஜெர்மன் ஸ்வீட் சாக்லெட் என்ற பெயரில் விற்பனை செய்தனர்.  ஜப்பானில் வெண்டிங் இயந்திரங்கள் அதிகம்! உண்மை. தோராயமாக அங்கு வாழும் மக்களில் 40 பேருக்கு, ஒரு வென்டிங் இயந்திரத்தை தெருக்களில் அமைத்திருக்கின்றனர். இதில் குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், நூடுல்ஸ், ஒருமுறை பயன்படுத்தும் கேமரா ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. மக்கள் காசு கொடுத்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.   பூஞ்சைகள் தாக்கும் உயிரினங்களின் மூளையைக் கட்டுப்படுத்தும்1 உண்மை. ஓபியோகார்டிசெப்ஸ் (Ophiocordyceps) என்ற பூஞ்சை , எறும்புகளைத் தாக்குகிறது. 9 நாட்களில் அதன் மூளையைக் கட்டுப்படுத்தும் திறனைப் பெறுகிறது. இப்பூஞ்சை, எறும்பைக் கட்டுப்படுத்தி, தான் வாழ்வதற்கான பணிகளை செய்ய வைக்கிறது. 1931ஆம் ஆண்டு ஓபியோகார்டிசெப்ஸ் பூஞ்சை பற்றிய தகவலை முதன்முதலில் கண்டறிந்தவர், இங்கிலாந்து ஆய்வாள

தலைகீழாக வளரும் வாழைப்பழம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  அமெரிக்க கொடியை  பள்ளி மாணவர் உருவாக்கினார்! உண்மை. 1958ஆம் ஆண்டு பாப் ஹெஃப்ட் ( Bob Heft) என்ற மாணவர், பள்ளியில் புராஜெக்ட் வேலையாக இதனைச் செய்தார். பாப், தேசியக்கொடியில் 50 மாகாணங்களை நட்சத்திரங்களாக உருவாக்கியிருந்தார். இதனை ஆசிரியர் ஏற்கவில்லை என்பதால், அவருடைய திட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாணவர், மனம் தளராமல் பாப் ஹெஃப்ட் அமெரிக்க அதிபரான   ட்வைட் டி ஐசன்ஹோவர் ( Dwight D. Eisenhower)தனது தேசியக்கொடி வடிவமைப்பை அனுப்பினார். இரண்டு மாகாணங்களை இதில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். அதிபர், அந்த வடிவமைப்பை ஏற்றுக்கொண்டார்.  வாழைப்பழம் தலைகீழாக வளருகிறது! உண்மை. நாம் வாழைப்பழத்தை தலைகீழாகவே பிரித்து உண்கிறோம். அவை வளரும் விதத்தில், பின்புறப்பகுதி வானைப் பார்த்து அமைந்திருக்கிறது. இவை பெரிதாக வளரும்போது சூரியனைப் பார்த்து வளர்ந்து வளைவான வடிவத்தைப் பெறுகிறது.  நாய் தனது இடது மூக்கில், நறுமணத்தை முகர்கிறது!  உண்மை. நாய், முகரும்போது வலது மூக்கில் வாசனைகளை முகரும். பிறகு, அதில் ஆபத்தான சமிக்ஞைகள் தெரிந்தால், அதிலேயே நுகர்ந்து உண்மையா என ஆராயும். நறுமணம், ஆபத்தில்லாத விஷயங்கள், இணை சேர

டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்ட வரலாறு! - உண்மையா, உடான்ஸா

படம்
ஆர்மாடில்லோ என்ற விலங்கின் ஓட்டை, துப்பாக்கித் தோட்டா கூட துளைக்காது!  உண்மையல்ல. சிலர், அதனை உயர்த்திக் கூற தோட்டா கூட துளைக்க முடியாது என கூறியிருப்பார்கள். ஆர்மாடில்லோ என்ற பாலூட்டி விலங்கின் ஓடு, கடினமானது தான். இதன் ஓடு, ஆஸ்டியோடெர்ம்ஸ் (Osteoderms) என்ற வேதிப்பொருளால் உருவாகிறது.  ஆர்மாடில்லோ, எறும்புகள், கரையான்கள் ஆகியவற்றை உணவாக உட்கொள்கிறது.  ஸ்காட்லாந்தின் பனியைக் குறிப்பிட நிறைய வார்த்தைகள் உண்டு! உண்மை. அந்நாட்டில் பனியைக் குறிப்பிட மொத்தம் 421 வார்த்தைகள் உள்ளன. அதில் சிலவற்றைப் பார்ப்போம். ஸ்னீஸ்ல் (sneesl), ஃபீஃபில் (feefle), ஃபிலின்க்டிரின்கின் (flinkdrinkin).  ஆக்டோபஸ் ஒரு முறையில் 56 ஆயிரம் முட்டைகளை இடும்! உண்மை. தோராயமாக பசிஃபிக் ஆக்டோபஸ்  கருவுற்று 56 ஆயிரம் முட்டைகளை இடுகிறது. முட்டைகள் நீரின் தன்மையால் அதன் தாயிடமிருந்து பிரிக்கப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போதும், தாய் ஆக்டோபஸ் முட்டைகளை தன்னை விட்டு பிரியாமல் பார்த்துக்கொள்கிறது.  விஷவாயு முகமூடிகளுக்காகவே டிஷ்யூ தாள்கள் உருவாக்கப்பட்டன! முதல் உலகப்போரின்போது, அமெரிக்க நிறுவனமான கிம்பர்லி கிளார்க் மெல்லிய

பஞ்சத்தை ஊக்குவிக்கும் வெப்ப அலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  பஞ்சத்திற்கும் வெப்ப அலைக்கும் வேறுபாடு உண்டு! உண்மை. மழைப்பொழிவு குறைவால் ஏற்படும் அதீத உணவு, குடிநீர் தட்டுப்பாட்டை பஞ்சம் என்று கூறலாம்.இப்படி ஏற்படும் பஞ்சம் மாதங்கள், ஆண்டுகள் என நீடிக்கலாம். நாட்டின் பல்வேறு இடங்களில் கூடுதலான அளவில் வெப்பநிலை நிலவுவது, வெப்ப அலை ஆகும். வெப்பஅலை பாதிப்பு, பஞ்சத்தையும் காட்டுத்தீயையும் ஊக்குவிக்கிறது. பஞ்சம், வெப்ப அலை என  இரண்டாலும் மக்களின் இறப்பு கூடும், பயிர் விளைச்சல் பாதிக்கப்படும்.  நிலவு அழிந்தால் பூமி பாதிக்கப்படும்! உண்மை. நிலவின் ஈர்ப்புவிசையால் தான் கடல் அலைகள் உருவாகின்றன என்பது அறிவியல் உண்மை. நிலவு இல்லாத சூழலில், உலகம் முழுவதும் பருவகாலங்களில் குளறுபடி உருவாகும்.  நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் சுழற்சியைக்  கட்டுப்படுத்துகிறது. எனவே, நிலவு இல்லாதபோது, பூமி சுற்றும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பகல், இரவு ஆகிய காலவேளையின் நீளம் மாறும்.  https://www.syfy.com/syfy-wire/if-the-moon-were-destroyed-what-would-it-mean-for-earth

பேக் டூ பேக் - உண்மையா? உடான்ஸா?

படம்
  சலிப்பு அல்லது பதற்றம் ஏற்படும்போது சில பழக்கங்கள் உருவாகின்றன! உண்மை.  இதனை மருத்துவத்தில் பிஹேவியரல் ரெஸ்பான்ஸ் என்று பெயர். ஒருவர் பதற்றமாக இருக்கும்போது அல்லது சலித்துப்போகும்போது தலைமுடியில் பிடித்து விளையாடுவது, விரல்களை மேசையில் தட்டுவது, கால்களை ஆட்டுவது என செய்துகொண்டிருப்பார்கள். இதை பெரும்பாலான மக்கள் செய்கிறார்கள். எனவே, இதுபற்றி பதற்றப்பட அவசியமில்லை.  காலையில் இயல்பாக தூக்கம் கலைந்து எழுவது சிறந்தது! உண்மைதான். தூக்கத்தின் ஆழத்தைக் குறிக்க  ஐந்து நிலைகள் வரை உண்டு என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஒருவரின் தூக்கம் இயல்பாக கலைந்து எழுவதே உடலுக்கும் மனதுக்கும் சிறப்பானது. ஆனால் இன்றைய சூழலில் அலாரம் வைத்து எழுவது அவசியமாகிவிட்டது. முடிந்தவரை இதை தவிர்க்கும் வகையில் சூழலை மாற்றிக்கொள்வது நல்லது.  நமது முடியின் வளர்ச்சி வயதாகும்போது மாறுபடும்! உண்மையல்ல. உடல்பாகங்களில்  உள்ள முடியின் (Hair follicles) வளர்ச்சி வேகத்தை ஒருவரின் மரபணுக்களே தீர்மானிக்கின்றன. இவற்றை அனைத்தையும் ஒன்றுடன் மற்றொன்றை ஒப்பிடமுடியாது. தலையில் வளரும் முடியை விட அக்குளில் வளரும் ரோமக்கற்றைகளின் வளர்ச்சி கு

பறவைகளின் உடலிலுள்ள தற்காப்பு ஆயுதங்கள், சிம்பன்சிகளுக்கும் கொரில்லாக்களுக்குமான போர்! -

படம்
  பறவைகளின் உடலில் தற்காப்பு ஆயுதங்கள் குறைவு உண்மை. பறவைகள் பறக்கவே அதிக ஆற்றலை செலவழிக்கின்றன. கூடுதலாக, அதன் உடலில் ஆயுதங்கள் இருந்தால்,அவற்றுக்கு அது கூடுதல் சுமைதான். எனவே பெரும்பாலான பறவைகளின் உடலில் அதிக ஆயுதங்கள் இருக்காது. அதற்கு பதிலாக உடல் நிறமும், அவை எழுப்பும் ஒலியும் அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க உதவுகின்றன. கூடுதலாக அலகு, கால்களிலுள்ள விரல் நகங்கள்  பறவைகளுக்கு சண்டையிடும்போது உதவுகிறது.  சிம்பன்சிகளும் கொரில்லாக்களும் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடாது! உண்மையல்ல. 2019ஆம் ஆண்டு, லோவாங்கோ தேசிய பூங்காவில் (Loango national park) வாழ்ந்த 18 சிம்பன்சிகள் திடீரென  5 கொரில்லாக்களைத் தாக்கின. 79 நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலில், 2 கொரில்லா குட்டிகள் கொல்லப்பட்டன.  அதே  ஆண்டில், ஆஸ்னாப்ரூக் பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் பரிணாம மானுடவியல் கழகம் ஆகிய இரு அமைப்புகளும் இதுபற்றிய ஆராய்ச்சியை வெளியிட்டன.  https://edition.cnn.com/2021/07/22/africa/chimpanzee-gorilla-attacks-scn-scli-intl/index.html https://nypost.com/2021/07/22/chimps-are-killing-gorillas-unprovoked-for-the

வினோதரச மஞ்சரி - ஜாலி தகவல்கள்

படம்
  ஒரு நொடிக்கு நமது மூளை ஆராயும் தகவல்களின் எண்ணிக்கை , 1 கோடியே 10 லட்சம் திட, திரவ நிலையில் ஆக்சிஜனின் நிறம், வெளுத்த நீலநிறம் உலகில் முதன்முதலில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டஆண்டு 1828. ஆம்னிபஸ்(Omnibus) என்ற பெயரில் பிரான்சின் நான்டெஸ் நகரில் போக்குவரத்து சேவை தொடங்கியது. மனிதர்களின் எச்சிலில் உள்ள வலிமையான வலிநிவாரணி வேதிப்பொருள், ஒபியர்பின் (Opiorphin)  ஒருவர் ஒருமுறை இருமும்போது,  அவரின் எச்சிலில் இருந்து வெளியே பரவும்  வைரஸ்களின் எண்ணிக்கை, 20 கோடி   டால்பின், தன்னை கண்ணாடியில் பார்த்தால் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் https://transportgeography.org/contents/chapter8/urban-mobility/omnibus-london-19th-century/

நாயின் கண்களிலுள்ள சோக உணர்வு, நீலநிறக்கண்களைக் கொண்ட குழந்தைகள்! உண்மையா? உடான்ஸா?

படம்
  நாயின் கண்கள் சோக உணர்ச்சி கொண்டது! உண்மையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஓநாய்களிலிருந்து உருவாக்கப்பட்ட நாய்கள் மெல்ல வீட்டு விலங்காக மாறின. பரிணாம வளர்ச்சிப்படி,நாய்களுக்கு கண்களின் அருகில் தசைகள் உருவாகின. இதன் மூலம், நாய் மனிதர்களோடு எளிதாக தொடர்புகொள்ள முடிந்தது. மனிதர்களைப் பார்த்து புருவத்தை தூக்கும்போது, தசைகள் காரணமாக அதன் முகம் சோகமாக தெரிகிறது என 2019ஆம் ஆண்டு வெளியான புரோசீடிங் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸ்(Proceedings of the National Academy of Sciences)  ஆய்வு கூறியது.  பிறக்கும்போது, அனைத்து குழந்தைகளும் நீலநிற கண்களைக் கொண்டுள்ளனர்  உண்மையல்ல. ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கண்கள் பழுப்பு நிறமாகவே இருக்கும். காகசியன் நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் பிறக்கும்போதே கண்கள் நீலநிறமாக இருக்கும். தோல், முடி ஆகியவற்றின் நிறத்தைத் தீர்மானிக்கும் மெலனின் என்ற நிறமியே கண்களின் நிறத்திற்கும் காரணம். இதை மெலனோசைட்ஸ் (melanocytes) என்ற செல்கள் உற்பத்தி செய்கின்றன. மெலனின் மற்றும் மரபணுக்களின் பங்கு கண்களின் நிறத்தை தீர்மானிக்கின்றன.   https://www.allabout

விண்வெளி வீரர்கள் பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  விண்வெளியில் உள்ள குறைந்த ஈர்ப்பு விசையை, மைக்ரோகிராவிட்டி(Micro Gravity) என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  விண்வெளியில் ஆறுமாதம் பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, உடலில் 20 சதவீத எலும்பு அடர்த்தி குறைகிறது.  விண்வெளியில் முதன்முறையாக உணவு உண்டவர் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான யூரி ககாரின் (Yuri Gagarin). வோஸ்டாக் 1 (Vostok 1)விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றவர், அங்கு மாட்டிறைச்சியும் ஈரலும் கலந்த பாஸ்தா உணவை உண்டார்.   உலர வைக்கப்பட்ட இறைச்சி, பால் பொருட்கள், பருப்புகள், ஈரப்பதம் குறைந்த பிஸ்கெட்டுகள், சாக்லெட், நூடுல்ஸ்,பாஸ்தா  ஆகிய உணவுப் பொருட்களை விண்வெளி வீரர்களுக்கு, ஆராய்ச்சி அமைப்புகள் வழங்குகின்றன. வழங்கப்படும் உப்பும், மிளகும்  நீர்ம வடிவில் இருக்கும். தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வீரர்களுக்கென 100க்கும் மேற்பட்ட உணவுப்பொருட்கள் கொண்ட பட்டியல் உள்ளது.  சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கப்படும் உணவுகள் (3 வேளை) வழியாக வீரர்களுக்கு 3,300 கலோரிகள் கிடைக்கின்றன. சாப்பிட்டபிறகு மீதமாகும் உணவுக்கழிவுகளை அதற்கென சிறப்பாக அமைக்கப்பட்ட க

நத்தையின் உணர்கொம்புகள், கோல்ப் பந்துகளிலுள்ள பள்ளங்கள்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  நத்தையின் உணர்கொம்புகளே அதன் மூக்கு! உண்மை. நத்தையின் (Slug)  உணர்கொம்புகளை (Tentacles) மனிதர்களின் மூக்கு போல என்று கூறலாம். நத்தையின் உடலில் இரண்டு ஜோடி உணர்கொம்புகள் உள்ளன. முதல் ஜோடி உணர்கொம்புகள் தலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சூழலில் உள்ள ஒளி, ஒலியை உணர உதவுகின்றன. தலையின் கீழ்ப்பகுதியில் உள்ள  இரண்டாவது ஜோடி உணர்கொம்புகள், வேதிப்பொருட்களை அறியவும், மனிதர்களின் மூக்கைப் போல சுவாசிக்கவும் உதவுகின்றன.  கோல்ஃப் பந்துகளில் உள்ள பள்ளங்கள் அழகுக்கானவை! உண்மையல்ல. கோல்ஃப் பந்துகளில் அதன் வடிவத்தைப் பொறுத்து 300 முதல் 500 வரையிலான  பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. பள்ளங்களின் வடிவமைப்பு, மட்டையால் அடிக்கப்பட்டவுடன் பந்து செல்லும் தொலைவை அதிகரிக்க உதவுகிறது. தொடக்கத்தில் கோல்ஃப் பந்து, பள்ளங்கள் இல்லாமல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பந்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது செல்லும் தொலைவு குறைந்தது.எனவே, இதற்கான தீர்வாக காற்றில் அதிக உராய்வின்றி பயணிக்க ஏதுவாக பந்தில் பள்ளங்களை உருவாக்கினர்.  https://www.womansday.com/life/entertainment/a37170576/fun-facts/ https://www.thedodo.

பல்வேறு சோதனைகளுக்குப் பயன்படும் அறிவியல் மாதிரிகள்!

படம்
  டிஸ்க்ரிப்டிவ் மாடல்களுக்கு எடுத்துக்காட்டு அறிவியல் மாதிரிகள்  அறிவியல் துறைகளில் பேசப்படும் சிக்கலான கருத்துகளை பிறருக்கு விளக்க உதவுபவை, அறிவியல் மாதிரிகள் (Science models) ஆகும். இவற்றில் ஐந்து வகைகள் உண்டு. அவை,   ரெபிரசன்டேஷனல் மாடல்ஸ் (Representational models) உடலிலுள்ள என்சைம்கள் எப்படி செயல்படுகின்றன, வேதிப்பொருட்கள் எப்படி சுரக்கின்றன  என்பதை எளிமையாக விளக்க ரெபிரசன்டேஷனல் மாடல்கள் உதவுகின்றன.  ஸ்பாஷியல் மாடல்ஸ் (Spatial models) கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களின் அணுக்களை முப்பரிமாண வடிவில் பார்த்து செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள, ஸ்பாஷியல் மாடல்கள் உதவுகின்றன.   டிஸ்க்ரிப்டிவ் மாடல்ஸ் (Descriptive models) உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சி நிலைகளை விளக்கப் பயன்படும் வடிவம். இதில் படம், வார்த்தைகள் என இரண்டுமே பயன்படுகிறது.  கம்ப்யூடேஷனல் மாடல்ஸ் (Computational models) மாறிவரும் பூமியின் தட்பவெப்பநிலையைப் புரிந்துகொள்ள பயன்படும் மாதிரி  வடிவம். இதை உருவாக்க கணினி உதவுகிறது. எ.டு. குறிப்பிட்ட இடத்தின் வெப்பநிலை,  வெப்பநிலை பற்றிய முன்கூட்டிய கணிப்பு.  மேத்தமேட்டிகல் மா

நின்றுகொண்டே தூங்கும் விலங்குகள், கோலா கரடிகளின் கைரேகை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா? விலங்குகள் நின்றுகொண்டே ஆழ்நிலை தூக்கத்திற்கு செல்கின்றன! உண்மையல்ல. குதிரை, பசு,வரிக்குதிரை, யானை ஆகிய விலங்குகள் நின்றுகொண்டே தூங்குவது நிஜம். இப்படி தூங்குவது மெல்லிய தூக்கம்தான். முழங்காலை நேராக்கி நின்றுகொண்டே தூங்குவது, திடீரென எதிரிகளால் ஆபத்து ஏற்படும்போது அதை எதிர்கொள்ளத்தான். படுத்துள்ள நிலையில்தான் பசு, குதிரை ஆகிய விலங்குகள் ஆழமான உறக்கத்தைப் பெறுகின்றன.   கோலா கரடிகளின் கைரேகை மனிதர்களைப் போன்றது! உண்மை.  1996ஆம் ஆண்டு தடவியல் வல்லுநர் மாசிஜ் ஹென்னபெர்க், கோலா கரடியின் கைரேகைகள் மனிதர்களைப் போலவே உள்ளது என்று இண்டிபென்டன்ட் நாளிதழில் கூறினார். 12 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் பாலூட்டி இனங்களும்(Mammals), உடலில் பைகொண்ட பாலூட்டி இனங்களும் (Marsupials) பிரிந்துவிட்டன. இப்படி பிரிந்துவிட்ட இனங்களில் காணப்படும் ஒத்த பரிணாம வளர்ச்சி அம்சங்களுக்கு, ஒன்றிணைந்த பரிணாம வளர்ச்சி  (Convergent Evolution)என்று பெயர்.   https://www.sciencefocus.com/nature/how-many-animals-can-sleep-standing-up/ https://wildlifeinformer.com/animals-that-sleep-standing-up/ http

ஆய்வகத்தில் பாதுகாப்பாக ஆய்வுகளை செய்வதற்கான முன்னெச்சரிக்கை முறை!

படம்
  ஆய்வகத்தில் பாதுகாப்பு! மாணவர்கள் ஆய்வகத்தில் அறிவியல் சோதனைகளை செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க உதவும் முன்னெச்சரிக்கை குறிப்புகள்தான் இவை.  பாதுகாப்பு கண்ணாடிகள் (Safety Googles) திரவ வடிவில் உள்ள  வேதிப்பொருட்களைக் கையாளும்போது, அவை குழாய்களிலிருந்து வெளியே சிதறும் வாய்ப்புகள் அதிகம். இச்சூழலில், மாணவர் பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்திருப்பது அவசியம்.  பன்சன் பர்னர்ஸ் (Bunsen burners) பன்சன் பர்னரைப் பயன்படுத்தும்போது, அருகில் நிறைய பொருட்களை வைக்கக் கூடாது. நெருப்பு சுடரில், மாணவரின்  தலைமுடி படாமல் கவனித்துக் கொள்வது முக்கியம். தீச்சுடரில் எத்தனால், ஆல்கஹாலை எப்போதும் சூடு செய்யக்கூடாது.  சோதனைக்குழாய் (Test tube) சோதனைக் குழாய்களை சூடுபடுத்தும்போது, அவற்றை கிளாம்ப் கருவி (Clamp) கொண்டு பிடிக்கவேண்டும். மேலும் சூடு தாங்கும் கையுறைகளையும் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளை எப்போதும் மேசையின் மையப்பகுதியில் வைத்திருப்பது அவசியம்.  கெமிக்கல் ஃப்யூம் ஹூட் (Chemical Fume Hood) ஆபத்தான வேதிப்பொருட்களை சோதனைக் குழாய்களில் வைத்து சோதிக்கும்போது, எழும் புகை வெளியே செல்ல கெமிக்கல் ஃப்யூம்

எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

படம்
  மறுசுழற்சி  பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.  பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல்.  இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள்ரேப், நெகிழ்வுத் த

தன்னை பசுவாக உணரும் மனநிலை! - உண்மையா? உடான்ஸா?

படம்
  கொரில்லா மகிழ்ச்சியாக இருந்தால் ஏப்பம் விடும்! உண்மை. இரையாக கிடைத்த உணவில் அதிக பங்கு கிடைத்தால் கொரில்லா குழுவில் உள்ள  கொரில்லாக்கள் ஏப்பம் விடுகின்றன. ஏப்பம் விடுவது நாம் தொண்டையை சரி செய்துகொள்வது போலவே இருக்கும். ஏப்பம் விடும்போது, உம்..உம் என்ற ஒலிதான் வரும். கூட்டத்தலைவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபிறகு, மற்ற கொரில்லாக்களும் அதை அப்படியே பின்பற்றும். மனிதர் தன்னை பசுவாக கருதுவது மனநல குறைபாடு! உண்மை. மனிதர் தன்னை பசு அல்லது எருதாக கருதுவதை போன்த்ரோபி (Boanthropy) என்ற மனநல குறைபாடாக உளவியலாளர்கள் கூறுகின்றனர். கல்லீரலில் ஏற்படும் போர்பைரியா(Porphyria),சைபிளிஸ் ( syphilis) ஆகிய நோய்கள் போன்த்ரோபி குறைபாட்டை ஊக்குவிப்பதாக மருத்துவர்கள் விளக்கம் தருகின்றனர். போன்த்ரோபி குறைபாடு ஒருவருக்கு ஏற்படுவது மிகவும் அரிதானது.  https://thedailywildlife.com/do-gorillas-burp-when-they-are-happy/  https://www.thefactsite.com/100-strange-but-true-facts/

தனிநபர்களை தாக்கும் வன்முறைக்கு பெயர் என்ன? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ரன்னிங் அமோக் (Running amok) என்பது உடல்நலக்குறைபாடா?  மலாய் வார்த்தையான மெங் அமுக் (Meng amuk)என்பதிலிருந்து ரன்னிங் அமோக் என்ற வார்த்தை உருவானது. சமூகத்தை புறக்கணித்த மனிதர், பெருந்திரளான அல்லது தனிநபர்களை தீவிரமாக தாக்கும் குறைபாடு என ரன்னிங் அமோக்கை வரையறை செய்யலாம். 1770ஆம் ஆண்டு கடல் பயணம் செய்த கேப்டன் குக் என்பவர், மலேஷிய பழங்குடிகளிடையே ரன்னிங் அமோக் மனநல குறைபாடு இருப்பதை பதிவு செய்துள்ளார்.  ஜீன்ஸ் பேண்டிலிலுள்ள சிறிய பாக்கெட் எதற்கு?  1879ஆம் ஆண்டு, லீவிஸ் ஸ்ட்ராஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜீன்ஸ் பேண்டில் நான்கு பாக்கெட்டுகள் இருந்தன. இதில் ஒரு சிறிய பாக்கெட்டும் உள்ளடங்கும். அன்றைய காலத்தில், ஆண்கள் தங்களின் பாக்கெட் வாட்சுகளை ஜீன்ஸில் வைத்துக்கொள்ளத்தான் இந்த வசதி. ஆனால் பின்னாளில் சிறிய பாக்கெட்டின் பயன்பாடு மாறி பயணச்சீட்டு, நாணயங்களை வைத்துக்கொள்வதாக மாறிவிட்டது.  https://www.rd.com/article/tiny-pocket-in-jeans/  https://www.rd.com/list/interesting-facts/ https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC181064/

ஒருவரின் கன்னம் சிவக்க என்ன காரணம்? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  ஒருவரின் கன்னம் சிவப்பது என்ன காரணத்தால்?  உண்மை. பொதுவாக ஒருவருக்கு கூச்சம், வெட்கம், அவமானம், திகைப்பு ஆகிய சூழ்நிலைகளில் முகம் சிவந்துபோகும் என புரிந்துகொண்டிருக்கிறோம். அறிவியல்பூர்வமாக பார்த்தால்,  உபரியாக உள்ள ரத்தம் தோலின் கீழுள்ள ரத்த நாளங்களில் வேகமாக பாய்வதால் தான் கன்னம் சிவக்கிறது.  கன்னத்தில் ஏற்படும் சிவப்பு நிறத்திற்கு வெப்பம், நோய், மருத்துகள், மது, காரசார உணவுகள், ஒவ்வாமை, உணர்ச்சிகள் ஆகியவையும் காரணங்களாக அமைகின்றன. கன்னத்தில் உள்ள தசைகளை, நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது.  மைக்ரோவேவ் ஓவனில் உலோக பாத்திரங்களை வைப்பது சரியானதா? உண்மை. பிளாஸ்டிக், கண்ணாடி பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். மாறாக, உலோக பாத்திரங்களைப் பயன்படுத்தினால் மைக்ரோவேவ் ஓவன் விரைவில் பழுதடையும். ஓவனில் உணவை சமைக்க பயன்படும் குற்றலைகள், மின்காந்த அலைகளாகும்.  ஓவனில் உருவாகும் குற்றலைகள், உணவுப்பொருளால் ஈர்க்கப்படுவதன் காரணமாகவே உணவு வேகிறது. ஆனால், உலோகப்பாத்திரத்தைப் பயன்படுத்தும்போது உணவு சீராக வேகாது. உலோகம் சிறந்த மின்கடத்தி என்பதால், குற்றலைகளை  உடனே பிரதிபலிக்கும். இதனால், உலோகமும், ஓவனும் கட

பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பட்டாசுகளை மறுசுழற்சி செய்ய முடியுமா? உண்மை. பட்டாசுகளில் உலோகத்துடன் கலந்த வேதிப்பொருட்கள் (Aluminium, Iron,Sodium Salicylate, potassium perchlorate) ஏராளமாக உள்ளன. வெடிக்காத பட்டாசுகளை நீரில் நனைத்து பிறகே அப்புறப்படுத்தவேண்டும். பட்டாசுகளில் உள்ள உலோகங்கள், வேதிப்பொருட்கள் தனியாக இருந்தால் அதனை மறுசுழற்சி செய்யலாம். இப்பொருட்கள், பட்டாசில் வெடிமருந்தாக ஒன்றாக கலந்துவிட்டால், அதனை மறுசுழற்சி செய்வது கடினம்.   நீர்யானைய விட மனிதரால் வேகமாக ஓட முடியுமா?  உண்மை. யானைக்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் உள்ள பெரிய விலங்கு, நீர்யானை. இதன் எடை 1,800 கி.கி. எடை அதிகமிருந்தாலும், நீர்யானை காட்டில் மணிக்கு 48 கி.மீ. வேகத்தில் ஓடும் திறன் பெற்றது. இதோடு ஒப்பிடும்போது மனிதனால் மணிக்கு 37 கி.மீ. வேகத்தில்தான்  ஓட முடிகிறது.  https://www.fswaste.co.uk/can-you-recycle-fireworks/ https://www.smithsonianmag.com/arts-culture/14-fun-facts-about-fireworks-180951957/ https://www.britannica.com/story/how-fast-is-the-worlds-fastest-human#:~:text=Since%20many%20people%20are%20more,%3A%2037.58%20or%2023.35%2C

தம்பிக்காக தியாக மெழுகுவத்தியாகும் அண்ணன்! - கிருஷ்ணபாபு - பாலைய்யா, மீனா, மந்த்ரா

படம்
  கிருஷ்ணபாபு பாலைய்யா, மந்த்ரா, அப்பாஸ்  இயக்கம் - முத்தியாலா சுப்பையா வசனம் - தொட்டபள்ளி மது  கதை - சாந்தி அட்டாலா பாலைய்யா பெரிய ஜமீன்தாரின் மகன், அவரின் அப்பா பெண்களின் சபலமான ஆள். இப்படி இருக்கும்போது அவர் இன்னொரு பெண்ணை மணந்துகொள்கிறார். அந்த பெண்ணின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து ஜமீன்தாரின் அதிகாரப்பூர்வ முதல் மனைவியைக் கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் தவறுதலாக மனைவிக்கு கொடுத்த விஷப்பாலை ஜமீன்தார் எடுத்து குடித்துவிட அவர் ரத்தவாந்தி எடுத்து பரலோக பிரவேசமாகிறார். இந்தப்பழி சிறுவனின் மீது சித்தியும் அவரது உறவினர்களும் போட சிறுவன் கிருஷ்ணபாபு சிறைக்கு செல்கிறான். அவனது அம்மா இந்த சோகம் தாங்காமல் இறந்துபோகிறார். இந்த நேரத்தில் கிருஷ்ணபாபுவின் தாய்மாமா தான் அனைத்து விஷயங்களையும் பார்த்து சொத்துக்களைப் பராமரிக்கிறார். கிருஷ்ணபாபு சிறையில் இருந்து வந்து என்ன செய்கிறார், தந்தை, தாய் இறப்புக்கு காரணமான சித்தி வகையறாக்களை பழிவாங்கினாரா இல்லையா என்பதே கதை.  படம் முழுக்க புத்திசாலித்தனமாக விஷயங்கள் என்பது கிளைமேக்ஸில் வரும் தம்பியைக் காப்பாற்றுவது மட்டுமே. வேறு எதுவும் கிடையாது. மற்றபடி தியாகம்

குரோசோம்களின் எண்ணிக்கை உயிரினங்களைப் பொறுத்து மாறுபடும்! ஜே.வி. சமாரி

படம்
  பரிணாம வளர்ச்சி உயிரியலாளர்  ஜேவி சமாரி ( JV Chamary ) அனைத்து உயிரினங்களும் குரோமோசோம்கள் கொண்டிருக்குமா? ஆம். எளிமையான செல் அமைப்பைக் கொண்ட பாக்டீரியா, வட்ட வடிவிலான குரோமோசோம் அமைப்பைக் கொண்டிருக்கிறது. சிக்கலான செல் அமைப்பைக் கொண்டுள்ள உயிரினங்கள் அதிக குரோமோசோம்களைக் கொண்டுள்ளன என்று கூறமுடியாது. ஜேக் ஜம்பர் என்ற ஆண் எறும்பு, ஒரே ஒரு குரோமோசோமைக் கொண்டுள்ளது. ஆனால், ஒற்றைச் செல்லைக் கொண்டுள்ள அமீபா போன்ற ஸ்டெர்கீலா (sterkiella) என்ற உயிரி 16 ஆயிரம் குரோமோசோம்களை கொண்டுள்ளது.  உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை  மாறுபடுவது ஏன்? உயிரினங்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை அதன் பரிணாம வளர்ச்சியைப் பொறுத்தது. மனிதக்குரங்குகளின் உடலில் 48 குரோமோசோம்கள் என்றால் அதிலிருந்து வளர்ச்சி பெற்ற மனிதர்களின் உடலில் மொத்தம் 46 குரோமோசோம்கள்தான் உள்ளன. நமது உடலில் தேவையான குரோமோசோம்கள் கூடுதலாக இருந்தால் அல்லது  இல்லாமல் போனால் புற்றுநோய் ஏற்படும். டவுன்  சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டவர்களின் உடலில், 21 குரோமோசோம்கள் மூன்று நகல் பிரதிகளாக இருக்கும்.  அனைத்து உயிரினங்களிலும் குரோமோசோம்கள

சட்டவிரோத வணிகம் சமூகத்தைக் கடுமையாக பாதிக்கிறது! வூ ஹோவாய் நாம் டங்

  வூ ஹோவாய் நாம் டங் ஆராய்ச்சியாளர்,கோபன்ஹேகன் பல்கலைக்கழகம், டென்மார்க் நாம் டங், காண்டாமிருக கொம்புகளை வணிகம் செய்வது பற்றிய வாடிக்கையாளரின் மனநிலை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  சட்டவிரோத வணிகம் சமூகத்தை பாதிப்பதாக நினைக்கிறீர்களா? அரசின் சட்டப்பூர்வமான வணிகத்தில் போதுமான கொம்புகள் கிடைக்காதபோது, வாடிக்கையாளர்கள் சட்டவிரோத வணிகர்களை நாடிச்செல்கிறார்கள். இப்படி சட்டவிரோதமாக காண்டாமிருக கொம்புகளை வாங்குவது காட்டின் பல்லுயிர்த்தன்மையை அழிக்கிறது. காடுகளில் கிடைக்கும் சாதாரணமான பொருட்களை குறைந்த வருமானமுள்ள குழுவினர் பெறுகிறார்கள். மிகச்சிலர் மட்டுமே அதிக மதிப்பான பொருட்களைத் தேடுவதை நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்.  எப்படி விலங்குகளிலிருந்து பெறும் பொருட்கள் பற்றிய தகவல்களை சேகரித்தீர்கள்? சட்டவிரோத வியாபாரச் சங்கிலி அமைப்பில் உள்ள வேட்டைக்காரர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பலரிடமும் பேசியிருக்கிறேன். வியட்நாமில் உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் வயதானவர்களாக, வசதியானவர்களாக இருந்தனர்.  சட்டப்படி விலங்குகளிடமிருந்து பொருட்களை பெற்றுவிற்பது பயன் தருமா? மருத்துவக்

கிரிஸ்பிஆர் முறையை வணிகப்படுத்த முடியும் - ஜெனிஃபர் டவுட்னா

படம்
  அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளர், ஜெனிஃபர் டவுட்னா. 2020ஆம் ஆண்டு மரபணு செம்மைப்படுத்தல் மேம்பாட்டிற்காக (Genome Editing) இம்மானுவேல் சார்பென்டியருடன்  சேர்ந்து நோபல் பரிசு பெற்றார்.    வால்ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த சிக்ஸ்த் ஸ்ட்ரீட் என்ற நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். இப்பணியை நீங்கள் ஏற்றது ஏன்? சிக்ஸ்த் ஸ்ட்ரீட் நிறுவனத்தில், சரியான குழுவை அடையாளம் கண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இந்த நிறுவனத்தின் எந்திரக் கற்றல் நுட்பம் மூலம் கிரிஸ்பிஆர் தகவல்களை ஆராய முடியும். எந்திரக்கற்றலும், கிரிஸ்பிஆர் முறையும் ஒன்றாக சேரும்போது ஆற்றல் கொண்டதாக மாறும். இதன் மூலம் மரபணு நோய்களை அறிந்து சிகிச்சை செய்யலாம்.  பெண்களின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 2.3 சதவீத அளவுக்கு முதலீடு (Harvard Business Review)  கிடைப்பது பற்றி தங்களது கருத்து?  இந்த ஆய்வுத்தகவல் எனக்கு ஏமாற்றம் தந்தது. நான் ஆய்வுத்துறையில் பல்லாண்டு காலமாக  இருப்பதால் அதிர்ச்சி ஏற்படவில்லை.   கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்த முடியுமா? 10 ஆண்டுகளுக்கு மேலாக கிரிஸ்பிஆர் முறையை வணிக ரீதியாக பயன்படுத்

அன்டார்டிகாவின் வெடால் கடலில் வாழும் மீன்கள்!

படம்
  லட்சக்கணக்கான   மீன்கள் வாழும் காலனி! அன்டார்டிகாவில் வெடால் கடல் அமைந்துள்ளது. இங்கு, 500 மீட்டருக்கு கீழே தான் ஏராளமான மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 240 சதுர கி.மீ. தொலைவில் லட்சக்கணக்கான மீன்களின் வளை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை கரன்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலில் வாழும் ஐஸ் மீன்கள் இங்குள்ள சூழலுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆடுன் பர்சர், ஐஸ் மீன்களைப் பற்றிய தகவல்களை கண்டறிந்தார். இவர் ஜெர்மனியின் ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஐஸ்கட்டிகளை துளைத்துச் செல்லும் வாகனத்துடன் சென்றவர், ஆராய்ச்சியை பதிவு செய்துள்ளார். கடல் படுகையை ஒலி மூலம் வரைபடமாக்கியுள்ளார்.  ஆய்வாளர்கள், நீருக்குள் சென்று ஆய்வு செய்தபோது, வட்டவடிவிலான வளையைக் கண்டனர். அங்கு, சிறுகற்களை அடுக்கி அதில் ஐஸ்ஃபிஷ் தனது முட்டைகளை இட்டிருந்தது. இந்த மீன் இனம், அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிரையும் சமாளித்து மீன் வாழப்பழகிவிட்ட

பிட்ஸ் - தேனீக்கள்

படம்
  பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ.  தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன.  அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன.  9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம்.  National geographic kids Mar.2022

விலங்குகளின் உணவு சேகரிக்கும் வேறுபட்ட பழக்கம்!

படம்
  உணவு சேகரிக்கும் விலங்குகள்! நீர்நாய் (The Beaver) விலங்குகள் உலகில் அதிகளவு உணவு சேகரிப்பவை, நீர்நாய் தான். 200 முதல் 2 ஆயிரம் கி.கி. அளவுக்கு சாப்பிடத்தேவையான கிளைகளை சேகரித்து வைக்கிறது.  அகோர்ன் மரங்கொத்தி (Acorn woodpecker) 150 முதல் 200 கி.கி. வரையிலான ஓக் மரக்கொட்டையை சேகரித்து வைக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அகோர்ன் மரங்கொத்தி வாழ்கிறது. இவை, ஓக் மரங்களில் வசிக்கிறது. ஓக் மரக்கொட்டைகளைப் பாதுகாத்து வைக்க, பட்டுப்போன மரங்களின் அடிப்புறத்தை தேர்ந்தெடுக்கிறது. இவைதான் பனிக்கால உணவுக்கான சேமிப்பு கிடங்கு.  அணில் (Squirrel) காட்டுக்குள் அணில் கொட்டைகள், பருப்பு, பூஞ்சை என சேகரித்து சேமிக்கிறது. இப்படி சேமிக்கும் இடங்களை அணில் மறந்துவிடும்போது, அவை மண்ணில் முளைவிட்டு செடியாகி மரமாவதும் உண்டு. அணில் இந்த வகையில், 20-50 கி.கி. அளவுக்கு உணவு சேகரிப்பை செய்கிறது.   யூரேசியன் ஜே (Eurasian jay) இலையுதிர்காலத்தில் கொட்டைகளை தேடி சேகரிக்கத் தொடங்கும் பறவை. நிலத்தில் கொஞ்சமும், பட்டுப்போன மரங்களில் கொஞ்சமும் கொட்டைகளை சேமித்து வைக்கிறது. 20-30 கி.கி. வரையிலான கொட்டைகளை சேமித்த

மூளையில் ஏற்படும் வினோதமான பிரச்னைகள்!

படம்
  லெதோலாஜிகா (Lethologica) நண்பரை சந்தித்து ஏதாவது பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென இடையில் உங்களால் தொடங்கிய வாக்கியத்தை முடிக்க முடியவில்லை. பேச நினைக்கும் வார்த்தை உங்களுக்கு நினைவுக்கு வரமாட்டேன்கிறது. நாக்கில் இருக்கிறது ஆனால் வெளியே வரமாட்டேன்கிறது என்பார்களே அந்த நிலை இதுதான். வார்த்தைகளை சரியாக நினைவுகூர முடியாத நிலைக்கு லெதோலாஜிகா. வயது வந்த ஒருவர் தோராயமாக 50 ஆயிரம் வார்த்தைகளை நினைவுகூர முடியும் என மூளை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  தேஜா வூ (Deja Vu)  தேஜா வூ  என்பதற்கு, பிரெஞ்சு மொழியில் ஏற்கெனவே பார்த்தது என்று பொருள். நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவத்தை ஏற்கெனவே அறிந்தது போலவே தோன்றும் நினைவு தான் தேஜா வூ. உலகிலுள்ள மூன்றில் இருபங்கு ஆட்களுக்கு தேஜா வூ என்ற நிகழ்ச்சி நடந்திருக்கும். மனநிலைக் குறைபாடு கொண்டவர்களுக்கு தேஜா வூ என்பது பதற்றமான சூழலில் ஏற்படுகிறது. புதிய சூழலில் மூளையில் ஏற்படும் தூண்டல் செயல்பாடுகளால் தேஜா வூ ஏற்படுகிறது. இதனால் செயற்கையான நினைவு மூளையில் உருவாகிறது. பொதுவாக தேஜா வூ என்பது புதிய இடங்களுக்குச் செல்லும்போதும் புதிய அனுபவங்களை எதிர்கொள்ளும்போ

இலவச விண்டோஸ் மென்பொருட்கள்!

படம்
  இலவச மென்பொருள்  வினேரோ ட்வீக்கர் (winaero tweaker 1.4) இந்த மென்பொருள் விண்டோசிற்கானது. அதில் நிறுவி பயன்படுத்தும்போது பல்வேறு புதிய பயன்பாடுகளை செயல்படுத்த முடியும். உதாரணமாக தேவையில்லாத கோப்புகளை அழிப்பதோடு, பென் ட்ரைவ்களுக்கு கூட தனி ரீசைக்கிள் பின்னை உருவாக்கிக்கொள்ளலாம். இதனால் அந்த கோப்புகளை அழியாமல் காக்கலாம்.  வின்ஜெட் யூஐ 1.1 (WingetUI 1.1) விண்டோஸ் 10,11 இல் பயன்படுத்தும் புரோகிராம். ஏட் ஆர் ரிமூவ் புரோகிராம் இருக்குமல்லவா? அதேதான். புரோகிராம்களை சேர்த்து நீக்கலாம்.  நிறைய புரோகிராம்களை அப்டேட் செய்வது எளிது. இதில் உள்ள டிஸ்கவர் டேபை அழுத்தினால்,  பிரபலமான மென்பொருட்களை எளிதாக அடையாளம் காணலாம்.  ஃபாஸ்ட்ஸ்டோன் போட்டோ ரீசைசர் 4.4 (Faststone photo resizer) மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அப்டேட் ஆகியுள்ளது. இதில் கூகுளின் வெப்பி முறையிலிருந்து ஹெச்இஐசி முறைக்கு எளிதாக மாற்றலாம். இப்படி மாறிய படங்களை ஆப்பிள் கணினிகளில் பயன்படுத்தலாம். கோப்புகளை தேர்வு செய்து அவற்றை ஒரே கிளிக்கில் வேறு கோப்பு முறைக்கு மாற்றலாம்.  இந்த மென்பொருளும் விண்டோசிற்கானது தான்.  Computeractive

ஏழே நிமிடங்களில் உறங்குவது நல்லதா - உண்மையா, உடான்ஸா?

படம்
  உண்மையா? உடான்ஸா?  படுக்கையில் படுத்து ஏழே நிமிடங்களில் உறங்குவது இயல்பானது! ரியல் உண்மையல்ல. ஒருவர் இரவில் படுக்கையில் படுத்து 20 நிமிடங்கள் கழித்து உறக்கம் வருவது இயல்பானது. ஏழே நிமிடங்களில் தூக்கம் வரும் நிலையை, ஆல்பா ஸ்டேஜ் (Alpha Stage) என  மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த ஆல்பா நிலையில் தான் பெருமளவு தியானம் செய்பவர்கள் இருப்பார்கள். படுக்கையில், 20 நிமிடங்களைக் கடந்தும் ஒருவருக்கு தூக்கம் வரவில்லை என்றால், அவர் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது அவசியம்.    நெருப்புக்கோழியின் மூளையை விட அதன் கண்கள் பெரியவை! ரியல் உண்மை. பொதுவாகவே, பாலூட்டிகளை விட பறவைகளின் மூளை அளவு சிறியதுதான். பறவைகளில் பெரியது, நெருப்புக்கோழி. அதன் கண்களின் விட்ட அளவு,  5 செ.மீ.  ஏறத்தாழ பில்லியர்ட்ஸ் பந்தை ஒத்தது. நீளமான கண் இமைகளால் பாதுகாக்கப்படும் கண்களால்,  3 கி.மீ. தூரத்தில் உள்ள இரையை எளிதாக பார்க்க முடியும். இரவில், 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை அடையாளம் காண்கிறது.  https://www.sleepadvisor.org/how-long-to-fall-asleep/ https://www.scifacts.net/animals/ostrich-eye-brain/ https://www.jagranjosh.

லிப்ஸ்டிக்கில் மீனின் உடல் பாகங்கள் பயன்படுத்தப்படுகிறதா? - உண்மையா, உடான்ஸா

படம்
  உண்மையா, உடான்ஸா? லிப்ஸ்டிக்கில் மீனின் உடல்பாகங்கள் பயன்படுகிறது! ரியல் உண்மை. லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், சோப்பு, ஷாம்பு ஆகியவற்றிலும் மீனின் செதில்கள் பயன்படுத்தப்படுகின்றன. மீன் செதில்கள் ப்யூரின் (Purine) என்ற வேதிப்பொருளால் உருவானவை. ப்யூரின், ஒளியை பிரதிபலிக்கும் தன்மை கொண்டது. இதனால்தான், மீன் செதில்களைக் கொண்ட லிப்ஸ்டிக்கைப் பூசும்போது பளீரென்ற பிரகாச தன்மை கிடைக்கிறது. இதுபோலவே பிரகாசம் தரும் செயற்கை வேதிப்பொருட்களும் உள்ளன. ஆனால் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை.  நவீன கத்தரிக்கோலின் தந்தை, லியனார்டோ டாவின்சி! ரியல் உண்மையல்ல. டாவின்சி, தனது ஓவிய கேன்வாஸை வெட்டுவதற்கு கத்தரிக்கோலை பயன்படுத்தினார். இதனால் அவர்தான் கத்தரிக்கோலை உருவாக்கினார் என கூறுகின்றனர். ஆனால், கி.மு. 1500களில் தொன்மை எகிப்தியர்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியுள்ளனர். 1761ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஷெஃபீல்டைச் சேர்ந்த ராபர்ட் ஹின்ச்லிஃப் (Robert Hinchliffe) ஸ்டீலைப் பயன்படுத்தி கத்தரிக்கோல்களை உற்பத்தி செய்தார். இவரே நவீன கத்தரிக்கோலின் தந்தை ஆவார்.  https://www.huffpost.com/entry/fish-scales-lipstick_n_

செவ்வாயில் கேட்ட ஒலியை பதிவு செய்யும் நாசாவின் முயற்சி

படம்
  செவ்வாயில் கேட்ட ஒலி! பல்லாண்டுகளாக செவ்வாய் கோளின் தரையில் என்ன ஒலி கேட்கும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வந்தனர். அமெரிக்காவின் நாசா அமைப்பு, இதை ஆராய மார்ஸ் போலார் லேண்டர், பீனிக்ஸ் ஆகிய திட்டங்களை உருவாக்கியது. ஆனால் இவை ஒலியை பதிவு செய்யமுடியாமல் தோல்வியுற்றன. 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நாசாவின் பர்சீவரன்ஸ் ரோவர் (Perseverance Rover), செவ்வாயில் தரையிறங்கியது.  ரோவரில் உள்ள 2 மைக்ரோபோன்களின் மூலம் செவ்வாயின் தரைப்பரப்பு ஒலி, பதிவு செய்யப்பட்டது. 4 மணி நேரத்திற்கும் கூடுதலாக பதிவான ஒலிக்கோப்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். இதன்மூலம், செவ்வாய் கோளில் காற்றில் ஒலி எப்படி பரவுகிறது என்ற தகவல்களை அறிந்துகொண்டனர்.  செவ்வாயில் காற்றின் அழுத்தம் 0.6 கிலோ பாஸ்கல் ஆகும். பூமியை விட செவ்வாயில் காற்றின் அழுத்தம் 200 மடங்கு குறைவு. கரியமில வாயு நிறைந்துள்ள சூழலில் வெப்பநிலை - 63 டிகிரி செல்சியஸாக உள்ளது. செவ்வாயில் குளிர் அதிகம் என்பதால், ஒலி நொடிக்கு 240 மீட்டர் வேகத்தில் செல்கிறது.  பூமியில், ஒலி நொடிக்கு 340 மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. செவ்வாயில் கேட்கும் ஒலி பற்றி

முக்கியமான சூழல் வலைத்தளங்கள்!

படம்
  சூழல் வலைத்தளங்கள்! www.afforestt.com 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம். பெங்களூரு மற்றும் நியூ டில்லியில் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 12. இயற்கையான சூழலை மீட்டெடுக்க மண்ணுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை பரப்பை உருவாக்கிவருகின்றனர். இதன் நிறுவனர் , சுபேந்து ஷர்மா. Greenyatra.org இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில்மரக்கன்றுகளை நடும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மியாவகி காடுகளை, நிலப்பரப்பிற்கான ஆய்வுகளைசெய்து மரக்கன்றுகளை, தாவரங்களை நட்டு பராமரிக்கிறது. இதன் நிறுவனர், பிரதீப் திரிபாதி.  Careearthtrust.org 2000ஆம் ஆண்டு தொடங்கி செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு. பள்ளிக்கரணை சதுப்புநிலம், நன்மங்கலம் காடுகளை பாதுகாத்து மேம்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளது.  இப்பணிக்காக , மத்திய அரசின் சூழல், வனத்துறை அமைச்சகத்தில் இந்திராகாந்தி பார்யவரனன் விருது (The Indira Gandhi Paryavaran Puraskar) பெற்றுள்ளது. கேர்எர்த்ட்ரஸ்ட் அமைப்பு, பல்லுயிர்த்தன்மை கொண்ட காடுகளை வளர்ப்பது பற்றிய கொள்கைகளை உருவாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு

கட்டுமானங்களுக்கு குப்பைகேள போதும்!

படம்
  கட்டுமானங்களுக்கு குப்பைகளே போதும்!  கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சூளகிரியில் சூழலுக்கு உகந்த வகையில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்கள். இந்த வீட்டை அங்குள்ள மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். இதில் பயன்படுத்தும் பொருட்கள் , பலவும் குப்பைக்கிடங்கில் இருந்து பெறப்பட்டவை.  இந்த வீட்டுக்கு உரிமையாளர் அபிஷேக், பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இவருக்கு சூழலை மாசுபடுத்தாதபடி வீட்டைக் கட்டும் ஐடியாவைக் கூறியது பொறியாளர் வினு கோபால்.  அதனை வடிவமைத்தவர் கேரளத்தைச் சேர்ந்த பவாஸ் தென்கிலன். வினு கோபால், குப்பைச் சுவர் (Debris wall ) என்ற நுட்பத்தை காப்புரிமை செய்து வைத்துள்ளார். இதன்படி, 2007ஆம் ஆண்டு முதல் கட்டடங்களை வடிவமைத்து வருகிறார். இவர், உருவாக்கும் கட்டடங்கள் அனைத்துமே பிறர் தூக்கியெறிந்த குப்பைகளாலானவை.   கட்டுமானப் பொருட்களை 5 கி.மீ. தொலைவுக்குள் உள்ள குவாரி, கட்டுமான இடங்கள் ஆகியவற்றிலிருந்து கழிவுப்பொருட்களிலிருந்து பெறுகிறார்.  அதை சேகரித்து வீடுகளை கட்டிவருகிறது வினுவின் குழு. இந்த வகையில்  தூக்கியெறியப்பட்ட கம்பிகள், டயர்கள் என எதையும் விடுவதில்லை.  ”

இந்திய கடல் ஆமைகள்!

படம்
  இந்திய கடல் ஆமைகள்! தோணியாமை  (Leatherback turtle) அறிவியல் பெயர்: டெர்மோசிலிஸ் கோரியாசியா (Dermochelys coriacea) நீளம்: 170 செ.மீ  எடை: 500 கி.கி உணவு : ஜெல்லி மீன் வாழுமிடம் : அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா?:  கடல் ஆமைகளில் மிகப்பெரியது தோணியாமை இனம்தான்.  சித்தாமை அல்லது பங்குனி ஆமை (Olive ridley turtle) அறிவியல் பெயர் லெபிடோசெல்ஸ் ஆலிவாசியா (Lepidochelys olivacea) நீளம்:  62-70 செ.மீ. எடை:  45 கி.கி உணவு: இறால், நண்டு, சிப்பி, ட்யூனிகேட், பிற மீன்கள் வாழிடம்: இந்திய கடல்பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் தெரியுமா? மெக்ஸிகோ, இந்தியா, நிகரகுவா, கோஸ்டா ரிகா நாட்டு கடற்புரங்களில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பேராமை (Green Turtle) அறிவியல் பெயர்: செலோனியா மைடாஸ் (Chelonia mydas) நீளம்: 120 செ.மீ. எடை: 159 கி.கி. உணவு: கடல் புற்கள், பாசி, ஜெல்லி மீன் வாழிடம்: லட்சத்தீவுகள் தெரியுமா? பச்சை ஆமை, பிற ஆமைகளைப் போலன்றி தாவரங்களை முதன்மையாக உண்டு (Herbivorous) வாழ்கிற உயிரினம் அழுங்கு ஆமை (Hawksbill turtle) அறிவியல் பெயர் எரெட்மோசெலிஸ் இம்பிரிகாடா (Eretmoche

வெப்பநிலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பவளப்பாறை!

படம்
வெப்பநிலையைத் தாங்கும் பவளப்பாறை! உலகில் உள்ள உயிரினங்களில் மூன்றில் ஒருபகுதி, பவளப் பாறைகளை வாழிடமாக கொண்டுள்ளன. 2100ஆம் ஆண்டு உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் என உயரும்போது பவளப்பாறைகள் முழுவதுமாக அழிந்துவிடும் வாய்ப்புள்ளது. இதிலிருந்து பவளப் பாறைகளை காக்கும் முயற்சிதான் சூப்பர் பவளப் பாறைகளை (super coral)வளர்ப்பது.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேராசிரியர் மெடலின் வான் ஆப்பென், பவளப்பாறை வளர்ப்பு  முயற்சியை, சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். அப்போது இவரின் முயற்சிகளுக்கு உயிரியலாளர் ரூத் கேட்ஸ் துணையாக இருந்தார். 2018இல் ரூத் காலமாகிவிட, மெடலின் தனது ஐடியாவை  பிற ஆராய்ச்சிக் குழுவினரோடு பகிர்ந்துகொண்டு இயங்கி வருகிறார். பவளப்பாறைகளில் சிலவற்றை எடுத்து அதில் மரபணு மாற்றம் செய்கிறார்கள்.  மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சில பவளப்பாறை இனங்களைத் தேர்ந்தெடுத்து அதனை வெப்பநிலையை தாங்கிக்கொள்ளும்படி மாறுதல்களை செய்ய முயன்று வருகிறார்கள். இந்த வகையில் சில இனங்களை கலப்பின முறையில் உருவாக்குகிறார்கள். ”பத்தாண்டுகளுக்கு மேல் ஆராய்ச்சி செய்ய நமக்கு நேரம் கிடையாது என்பதால், பவளப்பாறைகளை வேகமாக உருவ

மண்ணிலுள்ள நச்சு உலோகங்களை சுத்திகரிக்கும் தாவர இனங்கள்!

படம்
  நச்சு உலோகங்களை உறிஞ்சும் தாவரம்! பெருநகரங்களில் எலெக்ட்ரானிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் நடைமுறையில் உள்ளது. ஆனால், கழிவுகளிலிருந்து நிலம், நீரில் தேங்கும் நச்சு உலோகங்களை மறுசுழற்சி செய்வது கடினமானது. இதன் விளைவாக, நிலமும், நீரும் மாசுபடுகிறது. இதற்கு அறிவியலாளர்கள், தனித்துவமான தாவரங்களை வளர்த்து, நச்சு உலோக பாதிப்பை குறைக்கத் திட்டமிட்டு வருகின்றனர்.  உலோகங்கள் மாசுபடுத்தியுள்ள மண்ணைத் தூய்மைப்படுத்தும் ஆற்றல் கொண்ட 700க்கும் அதிகமான  தாவரங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக தாவரவியலாளர் ஆன்டனி வான்டர் என்ட் இதுபற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  அவர், புதிய கடலோனியா தீவிலுள்ள மழைக்காட்டிற்கு சென்றது கூட உலோகத்தை உறிஞ்சுகிற  தாவரங்களைத்  தேடித்தான். அவர் கண்டறிந்த தாவரத்தின் பெயர் பைக்னாண்ட்ரா அக்குமினாட்டா (Pycnandra acuminata).  இதன் தாவர சாற்றில், 25 சதவீத நிக்கலைக் கொண்டிருந்தது.  இப்படி மண்ணிலுள்ள உலோகங்களை உறிஞ்சக்கூடிய தாவர இனங்களுக்கு,  ஹைபர்அக்குமுலேட்டர் (Hyperaccumulator)என்று பெயர்.  எதிர்காலத்தில் உலோகச் சுரங்கங