இடுகைகள்

காலச்சுவடு 200 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலச்சுவடு 200ஆவது இதழில் உள்ள சிறுகதைகள் பற்றி...! கடிதங்கள்

படம்
  இனிய தோழர் முருகுவிற்கு, நலமா? காலச்சுவடு 200 ஆவது இதழ் வாசித்தேன். அரவிந்தன் அனுபவங்களைப் படித்தேன். ஸ்ரீராமின் கால வியூகம் குரு சிஷ்ய கதையில்  இது மற்றொரு கதை. எழுத்தாளர் மனம் செல்கிற பாதையைக் காட்டுவதாகவே உள்ளது. ஆசை, அகங்காரம் என பல விஷயங்களையும் , உறவு தந்திரங்களையும் வகுக்கிற வியூகம் இது.  போக்கிடம் - கே.என். செந்தில் எழுதியது.  சசி, மதி, லட்சுமணன், ஆறுமுகம் உள்ளிட்டோரின் வாழ்க்கை பந்தாடப்படும் சூழ்நிலை  மற்றும் சிக்கல்கள் பற்றிய கதை இது.  எங்கு கெட்டவார்த்தை பேசப்படவேண்டுமோ அங்கு கடும் வெறுப்புடன் வார்த்தைகளை பாத்திரங்கள் பேசுகிறார்கள். ஜே.பி. சாணக்யாவின் பெருமைக்குரிய கடிகாரம் நெடுங்கதையாக அமைந்திருக்கிறது. ஏமாற்றுகிறவன் புத்திசாலியா, ஏமாறுகிறவன் புத்திசாலியா என்பதை பேசி, நேசிக்கிற விஷயங்களாலேயே ஒருவன் வேட்டையாடப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை அங்குலம் அங்குலமாக விவரித்திருக்கிறது கதை.  போலியாக இருந்தாலும் அதனை கலாபூர்வமாக பிலிப்ஸ் உருவாக்குவது ஆச்சரியமாக உள்ளது. கதையை படிக்கிற வாசகனே அதில் பங்கேற்பது போன்ற தன்மை நெடுங்கதையை படிக்கும்போது உருவாகிறது. இருநூறாவது இதழ் பற்றி மு