இடுகைகள்

முத்தாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிலவொளிரும் மலைகள் - முத்தாரம் கடைசிபக்க நேர்காணல்கள் - மின்னூல் வெளியீடு

படம்
  முத்தாரம் இதழ் தொடக்கத்தில் பொது அறிவுக் களஞ்சியமாக மாற்றப்படாதபோது, கிளுகிளுப்பான தொடர்களைக் கொண்டு சற்று ஜனரஞ்சமாக இருந்தது. வயதான அதன் வாசகர்கள அதில் நிறைய சரித்திரக் கதைகளைப் படித்திருப்பார்கள். எனது பணிக்காலத்த்தில் பொது அறிவுக் களஞ்சியம் என்ற வகையில் அதன் கேப்ஷனுக்கு ஏற்ப ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டும் என முயன்றேன்  தடைகள் இருந்தாலும் விடாப்பிடியாக நின்று பக்க எண்கள் வடிவமைப்பு, தொடருக்கான லோகோ ஆகியவற்றை தனியாக வரைந்து வாங்கி பயன்படுத்தினோம் இந்தியா டுடேவின் சில நேர்காணல்களை படித்தேன். அதில் கடைசிபக்க நேர்காணல் நன்றாக இருக்கும். குறைந்த கேள்விகள், வடிவமைப்பு நுட்பமாக இருக்கும். இன்று வரைக்கும் அந்த இதழில் அப்பகுதி தடைபடாமல் வருகிறது. பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் வருவார்கள். அந்த ஐடியாவை உருவி, வடிவத்தை மாற்றி முத்தாரத்தில் பயன்படுத்தியதுதான் கடைசிபக்க நேர்காணல், இதை முத்தாரம் மினி என்று பெயர்வைத்து செய்தோம்.  அப்போது குங்குமம் முதன்மை ஆசிரியர் கே.என். சிவராமன் புதிதாக வந்திருந்தார். பத்திரிகையாளர் தி.முருகன் வேறு இதழுக்கு சென்றிருந்தார். திரு.கே.என்.சிவராமன் அவர்கள் குங்கும

பதில் சொல்லுங்க ப்ளீஸ் - மிஸ்டர் ரோனி - மின்னூல் வெளியீடு

படம்
  பதில் சொல்லுங்க ப்ளீஸ்... அட்டைப்படம் தினகரன் குழுமத்தில் இருந்து வெளிவந்த வார இதழ், முத்தாரம். அந்த  இதழில் வெளியான ஏன்? எதற்கு? எப்படி? தொடரின் செழுமைபடுத்தப்பட்ட வடிவம்தான் இந்த நூல்.  பதில் சொல்லுங்க ப்ளீஸ் நூலில் என்ன எதிர்பார்க்கலாம்? தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் சந்தேகங்கள், படிக்கும் நாளிதழில் உள்ள அறிவியல் தொடர்பான கேள்விகள் ஆகியவைதான் நூலில் இடம்பெற்றுள்ளன.  நூலின் தலைப்பை எழுத்தாளர் சுஜாதா தனது நூல்களுக்கு ஏற்கெனவே வைத்துவிட்டார் என பின்னர்தான் தெரிந்த்து. ஆனால் அதற்குள்  தலைப்பு வைத்து தொடரை தொடங்கியாயிற்று. ஆனாலும் தலைப்பு தொடருக்கு சரியாக இருந்த காரணத்தால் அதை மாற்றவில்லை. இந்த நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்கு, அவரின் தலைப்புக்காக நன்றி கூறிக்கொள்கிறேன்.  நூலின் அட்டைப்படம், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது. ஃபோடார் வலைத்தளத்தில் படத்திற்கான குறிப்புகளைக் கொடுத்து உருவாக்கியது. அறிவியல் தொடருக்கு, அட்டைப்படமும் சாதாரணமாக இருந்தால் எப்படி? அறிவியல் என்பது காலம்தோறும் மாறிக்கொண்டே இருப்பது, நிறைய தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்தான். அதை மறுக்கவில்லை.

நிலவொளிரும் மலைகள் - புதிய மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு

படம்
 

யாருடைய சிபாரிசு நீங்க? - அன்புள்ள அப்பாவுக்கு...

படம்
3 அன்புள்ள அப்பாவுக்கு, வணக்கம். நலந்தானே? தினகரனில் இணைந்துவிட்டேன். இங்கு சம்பளக்கணக்கு தொடங்குவதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்துவிட்டன. தலித் முரசு இதழில் வரவேண்டிய பாக்கி 2.796 ரூபாய் உள்ளது. இதற்காக அவர்களது அலுவலகம் சென்றேன். நீங்கள் எங்கள் கணினிகளை உங்களது உபயோகத்திற்காக தவறாக பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்றார் தலித் முரசு புனித பாண்டியன். இதைக் கண்டுபிடித்து சொன்னதற்காக நெடுஞ்செழியன் பெண் உட்பட பலரது பெயரையும் சொன்னார். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னேன். கொடுத்த  பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டேன். இவர்களுக்கு வேலை ஆகவேண்டுமென்றால், என்ன சாதி என்பது வரை கேட்டுக்கொண்டு இளிப்பார்கள். தேவையில்லை என்றால் மயிரே என்று மதித்துப் பேசுவது. சமூகநீதியே இவர்களின் கரங்களில்தான் இருக்கிறது. என்னை கோபப்படுத்திப் பார்க்க முயன்றார்கள். நான் எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த வில்லை. இந்த யுக்தியை எல்லாம் வேலை செய்த காலத்திலேயே பார்த்தாகிவிட்டது. முத்தாரத்தில் என்னைப் பார்த்து பேசுகிற பலரும், யாருடைய சிபாரிசு என குறுஞ்சிரிப்புடன் கேட்கிறார

ஆசிரியர் கே.என்.சிவராமன் தந்த சுதந்திரம்! - மனமறிய ஆவல்!

படம்
ஆசிரியர் கே.என்.சிவராமன் முத்தாரம் அறிவியல் இதழ் என்பதால் முடிந்தவரை அரசியல் குறுக்கீடுகள் இருக்கவில்லை. ஆசிரியர் கே.என்.எஸ் கொடுத்த சுதந்திரம் இல்லையென்றால் அதில் உருப்படியான எந்த விஷயங்களும் வந்திருக்காது. நான் அங்கு பணிசெய்யும்போது, காலை எட்டு மணியென்றால் இருவரும் வந்து உட்கார்ந்து வேலை செய்துகொண்டிருப்போம். காலையில் நேரத்திலேயே வந்து பணிசெய்வதை விரும்புபவர், காலை 8.30 க்குள் அன்றைக்கான ஃபார்மை எழுதி முடித்துவிடுவார். லே அவுட் ஆட்கள் வந்ததும் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்துவிட்டு டீ குடிக்கச் சென்றுவிடுவார். அப்புறம் என்ன பரபரவேலைகள்தான். மேட்டர் சொல்லிவிட்டு சால்ஜாப்பு சொல்லித் தப்பிக்க முடியாது. நான் அப்படித்தான் என்பார் கே.என்.எஸ். மாலனிடம் பத்திரிகைத் தொழில் கற்றவர். ஜனரஞ்சகம் முதல் தீவிர இலக்கிய இதழ்கள் வரை படிக்கும் வித்தியாசமான அறிவுஜீவி அவர். நிறைய நூல்களைப் பார்த்தால் போதும். உடனே படிங்க என்று வைத்துக்கொள்ளவே கொடுத்திருக்கிறார். அவரும் லக்கி - யுவகிருஷ்ணா சாரும் கொடுத்த நிறைய புத்தகங்களை வாங்கிப் படித்திருக்கிறேன். 11 27.11.2018 அன்புள்ள நண்பர் முருகு

ஆபீஸ் அரசியலை சமாளித்தால் உனக்கு வேலை! - இதழியல் பணி!

படம்
நீ எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யுடா தம்பி. ஆனா அங்கிருக்கிற அரசியலைச் சமாளிக்கத் தெரிஞ்சாத்தான் அங்க வேலை பார்க்க முடியும். பாத்துக்க என்றார் வடிவமைப்பாளரும் நண்பருமான மெய்யருள். விரைவிலேயே அலுவலகத்தில் அப்படியான சூழ்நிலை உருவானது. நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் நான் வேலை செய்த இதழ் முழுக்க நானே தயாரிப்பதுதான். இதில் மற்றவர்களுடன் கலந்து செய்யும் பிரச்னை ஏதுமில்லை. தி.முருகன் குழும ஆசிரியராக இருக்கும்போது, அவரும் முத்தாரத்தில் கட்டுரைகளை எழுதி வந்தார். நான் பொதுவான செய்திகளை இணையம், நாளிதழில் பார்த்து தேடி எழுதுவேன். அவர் தேவையானால் அதனை எடுத்து பயன்படுத்திக்கொள்வது வழக்கம். குங்குமத்திற்கென நான் வேலைக்கு எடுக்கப்படவில்லை. எனவே, அதில் கடிதங்களை மட்டும் எழுதிக் கொடுத்து வந்தேன். ஆனால் அங்கிருந்த குங்குமம் இதழில் சீனியர், ஜூனியர் மோதல்கள் சகஜமானது. பெரும்பாலான ஆட்கள் விகடனிலிருந்து வந்தவர்கள். ஈகோ மோதல்கள் இருக்காதா என்ன? முத்தாரம், சூரியன் பதிப்பகம், பொங்கல் மலர், கல்வி வேலை வழிகாட்டி, கல்விமலர்  என வேலைகள் டைம்டேபிள் போட்டது போல இருக்கும். இந்த லட்சணத்தில்

ஒரு படம் ஒரு ஆளுமை மின்னூல் வெளியீடு!

படம்
இனிய நண்பர்களுக்கு, குங்குமம் சப் எடிட்டர் த. சக்திவேல்(லிஜி) எழுதிய ஒரு படம் ஒரு ஆளுமை புகழ்பெற்ற தொடர். குழந்தைகள் தொடர்பான ஒரு சினிமா, அதுபோல குழந்தைகளை கவர்ந்த கலைஞர் ஒருவர் என தேடி எழுதினார். இதில் ஐடியா மட்டும் என்னுடையது. மற்றதெல்லாம் சக்திவேல் பார்த்துக்கொண்டார். ஒவ்வொரு வாரமும் அக்கறையுடன் என்ன எழுதலாம் என்பதை ஆலோசித்துகொண்டே இருப்பார். அவருக்கு என் நன்றி. https://tamil.pratilipi.com/read/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-Rsa9thlhUlQO-45k75167n04271s

அக்கறை கொள்ளாதவர்களின் வாழ்க்கை!

படம்
ஒருபடம் ஒரு ஆளுமை - லிஜி இறுதி அத்தியாயம்! விமானத்தை விட   வேகமாக பறந்துகொண்டிருக்கும் நம் வாழ்க்கைப் பயணத்தில் திசைகளின்றி, மொழிகளின்றி, நம்பிக்கையின்றி, உணர்வுகளின் வழியாக மென்மையாக... மிகவும் மெதுவாக நம்முடன் சிலரும் பயணிக்கின்றனர். அவர்களின் இருளும், மௌனங்களும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில் வெளிச்சமாக இருக்க வேண்டியவர்கள் அவர்களைச் சுற்றியிருக்கும் நாம் தான். ஆனால், நம் பயணமே சரியான இலக்கின்றி பல நெருக்கடிகளுக்குள் சுழன்று கொண்டிருக்கும்போது எதிரே வருபவரையே நம்மால் கண்டுகொள்ள இயலாமல் போய்விடுகிறது. ஆனால், ஒரு கலைஞன் அதைக் கண்டுகொள்கிறான். நாம் கண்டுகொள்ளாத, தவறவிட்ட, அக்கறை காட்டாத ,இழந்து விட்ட வாழ்க்கையை தன் கலையினூடாக நமக்கு ஞாபகபடுத்துகிறான். நாம் கண்டுகொள்ளாமல், அக்கறை காட்டாமல் விட்டவர்களின் வாழ்க்கையைப் போல நமக்கும் கிடைத்திருந்தால் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வெளிச்சத்தின் முன்னால் நம்மையெல்லாம் குற்றவாளியாக நிறுத்த வைக்கிறான் ஒரு சிறந்த கலைஞன். இந்த மாதிரி நாம் கண்டுகொள்ளாமல் விட பட்ட பலரில்

கல்விசெயல்பாட்டை வாழ்க்கையாக்கிக் கொண்ட பெண்மணி!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி கெஸ் சிறுவன் பில்லியும் , அவனது அண்ணனும் வீட்டில் சந்தித்தாலே தீராத லடாய்தான் . பில்லியின் அப்பா வீட்டைவிட்டு வெளியேறிவிட , அம்மா கிடைத்த வேலையை செய்துகொண்டு குடும்பத்தை நடத்துகிறாள் . பார்ட்வேலை  செய்துகொண்டே பள்ளியில் படிக்கும் பில்லி ஒருநாள் காட்டுக்குள் பயணிக்கும்போது சிறிய பருந்து உறவாகிறது . நட்பாகும் பருந்தைக் மறைவான இடத்தில் வைத்து பாதுகாப்பதோடு , பருந்து வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறான் . இந்த விஷயம் அவனைச் சுற்றியிருப்பவர்களும் தெரிய வர , எல்லோரும் அவனை மெச்சுகிறார்கள் .  அச்சமயம் பில்லிக்கும் அவனது சகோதரனுக்கும் இடையே வாக்குவாதம் எழ , பருந்தைக் கொன்று குப்பைத் தொட்டியில் வீசி பழிவாங்குகிறான் பில்லியின் அண்ணன் . செல்லப்பருந்து இறந்த சோகத்தில் பில்லி தவிப்பதோடு திரை இருள்கிறது . தொழிலாளர் வர்க்க ஏழைச்சிறுவர்களின் வாழ்க்கையை , அவர்களின் மென்மையான உணர்வுகளை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் கென் லோச் . தன் செல்லப் பருந்துக்கு பில்லி சூட்டும் பெயர்தான் படத்தின் தலைப்பும் கூட .

"குழந்தைகள் எதையும் தூக்கி எறிவதில்லை"

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! - லிஜி ‘ சூடானி ஃப்ரம் நைஜீரியா ’ வறுமையில் தடுமாறும் நைஜீரிய அகதி கால்பந்து வீரர் சாமுவேலுக்கு  கேரளாவின் மலப்புரத்தில் பிரபல கால்பந்து அணியில் விளையாட சாமுவேலுக்கு ஸ்பான்சர்ஷிப் கிடைக்கிறது . போலி பாஸ்போர்ட்டுடன் கேரளத்துக்கு வந்து தனது கால்பந்தாட்ட திறமையின் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து சூடானி என செல்லப்பெயரைப் பெறுகிறார் . சாமுவேல் அணியின் மேனேஜர் மஜீத் . திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் அலைபாய்கிறார் . தாயின் இரண்டாவது மணத்தில் கிடைக்கும் தந்தைக்கும் மஜீத்துக்கும் சுமூக சூழல் இல்லை . இச்சூழலில் எதிர்பாராத விபத்தில் சாமுவேலின் கால் உடைந்துவிடுகிறது .  சாமுவேலைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு மஜீத்தின் தலையில் விழுகிறது . மஜீத் என்ன செய்தார் ? என்பதை நகைச்சுவையான திரைக்கதையோடு மனித நேயம் மிளிர கவித்துவமாகச் சொல்கிறது இந்த மலையாளப் படம் . இயக்கம் சக்காரியா . அரவிந்த் குப்தா கான்பூர் ஐ . ஐ . டியில் பொறியியல் பட்டதாரி அரவிந்த் குப்தா , குழந்தைகளிடம் அறிவியலைக் கொண்டு செல்ல உயர்பதவிகளைத் த

நார்னியாவின் கதவைத் திறந்த எழுத்தாளர்!

படம்
ஒரு படம் ஒரு ஆளுமை ! லிஜி Ready Player one புதிய உலகத்தில் வாழ்ந்த அற்புத அனுபவத்தை அள்ளித் தருகிறது ‘ ரெடி பிளேயர் ஒன் ’. 2045 ம் ஆண்டு . நிஜ உலகின் சலிப்பிலிருந்து விடுபட , மக்கள் தேர்ந்தேடுக்கும் மாய உலகம் ஒயாசிஸ் . விர்ச்சுவல் ரியாலிட்டி கேமின் மூலமாக இதனுள் நுழையலாம் . ஓயாசிஸை உருவாக்கிய ஹேலிடே மூன்று புதிர்களை இந்த விளையாட்டில் வைத்திருக்கிறார் . ‘ புதிர்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஓயாசிஸ் சொந்தம் ’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார் . பல்லாண்டுகளாக விடுவிக்கமுடியாத புதிரை கண்டுபிடுத்து டெக் உலகின் கவனத்தை ஈர்க்கிறது ஹீரோவின் அணி . ஹீரோவுக்குப் போட்டியாக  ஐஒஐ நிறுவனம் ஆயிரக்கணக்கான நபர்களைக் களத்தில் இறக்குகிறது . யாருக்கு ஓயாசிஸ் கிடைத்தது என்பதே மீதிக்கதை   . எர்னஸ்ட் கிளைனின் நாவலைத் தழுவிய இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்தி , உச்சம் . தான் நேசிக்கின்ற படங்களின் காட்சிகளை ஆங்காங்கே கோர்த்து திரைக்கதையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் . சி . எஸ் . லீவிஸ் குழந்தைகளுக்கான கதை எழுதுவதில் தனித்துவம் கொண்

ஒரு படம் ஒரு ஆளுமை

படம்
  ஒரு படம் ஒரு ஆளுமை - லிஜி மான்செயூர் இப்ராஹிம் பிரான்ஸில் பாலியல்தொழில் நடைபெறுமிடத்தில் தந்தையுடன் வசித்து வருகிறான் மோசஸ் . தாயற்றவனுக்கு தந்தையும் வழிகாட்டாததால் பொய் , களவு , சூது , மாது என மோசஸ் அலைபாய்கிறான் . அப்போது மளிகை கடைக்காரர் இப்ராஹிம் அறிமுகமாகிறார் . இப்ராஹிமின் கடையில் புகுந்து பொருட்களை திருடுவது மோசஸின் வழக்கம் . மோசஸின் திருட்டை அறிந்தாலும் அவனை மகன் போல கருதி கண்டும் காணாமல் இருக்கிறார் . இச்சூழலில் திடீரென மோசஸின் தந்தை தற்கொலை செய்துகொள்ள , அனாதையாகும் மோசஸிடம் அளவற்ற அன்பு காட்டுகிறார் இப்ராஹிம் . புதிய கார் வாங்கி மோசஸூடன் அதில பயணிக்கிறார் . வழியில் நேரும் விபத்தில் இப்ராஹிம் மரணிக்கிறார் . உயிர்பிழைத்த மோசஸ் மளிகைக்கடையை எடுத்து நடத்துவதோடு படம் முடிகிறது . ஒரு சிறுவனுக்கும் முதியவருக்குமான ஆழமான நட்பை அழகாகச் செல்லுலாய்டில் சொன்ன இப்படத்தின் இயக்குநர் பிராங்காய்ஸ் டுபெய்ரான் . சலிமா பேகம் (Salima Begum) பள்ளிப்பருவத்தை கடந்து வந்த அனைத்து மாணவர்களின் வாழ்விலும் ரோல்மாடலாக சில தனித்துவமான ஆசிரியர்கள் இருப்பார்கள் . அத்தகை