இடுகைகள்

பணமதிப்புநீக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அபிஜித் கருத்து என்ன?

படம்
ஷங்கர் படத்தில் தொடங்கிய பழக்கம் இது. யாராக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு கருத்து மனதில் இருக்கும். அதனைச் சொல்லியே ஆக வேண்டும் என வற்புறுத்துவது. விளைவு, படுமோசமாகத்தான் இருக்கும். கேள்வி கேட்டவருக்கு அல்ல, பதில் சொன்னவருக்கு. இம்முறையில் அபிஜித்திடம் பல்வேறு விவகாரங்களில் கருத்துக்களை கேட்டுள்ளனர். இதில் அவர் என்ன நினைக்கிறார் என்பது படித்தால் உங்களுக்கே புரிந்துவிடும். பணமதிப்பு நீக்கம்! இந்த நடவடிக்கையின் பின்னுள்ள லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. எதற்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட வேண்டும்? இதனால் ஏழைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்பது அதிகமாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். தன்னைவிட கருப்புபணம் வைத்திருப்பவர்கள் அதிகம் கஷ்டப்படுவார்கள் என்று மக்கள் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால் வெளியிட்ட பணத்தில் 97 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கே திரும்பிவிட்டது. இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். பணக்காரர்களுக்கு அல்லது கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களுக்கு  என்ன கஷ்டம் நேர்ந்திருக்குமென்று.... பொருளாதாரரீதியில் அரசு செய்த முட்டாள்தனங்களில் ஒன்று பணமதிப்பு நீக்கம். உண்மையில் இந்

பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!

படம்
better india பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்! பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது. ரூ.5