இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்கள் இல்லாத சூழலில் உயிர்பிழைத்து வாழுமா நாய்கள்?

படம்
  மனிதர்கள் இல்லாத உலகம் ஓடிடிகளில், இணையத்தில் உள்ள மனிதர்கள் பலரும், உலகம் அழியும் சூழலில் மனிதர்கள் எப்படி பிழைப்பது என யோசித்து வருகிறார்கள். இதைப்பற்றி நாவல், சிறுகதை, குறும்படம், வெப்தொடர், திரைப்படம் என படைப்புகளை   எடுத்துவருகிறார்கள். நோயோ அல்லது அணு ஆயுதங்கள் கொண்ட போராலோ மக்கள் பேரழிவை சந்தித்து மீண்டும் உலகில் வாழத் தொடங்குவதுதான் கதை. இந்த மையப்பொருளை அப்படியே மனிதர்கள் இல்லாத உலகில் விலங்குகள் குறிப்பாக நாய்களை வைத்து யோசித்துப் பார்த்தால் எப்படியிருக்கும்? பல்லாண்டுகளுக்கு முன்னரே வீட்டு விலங்கான நாய், மீண்டும் காட்டுக்குத் திரும்பி உணவுக்காக வேட்டையாட முடியுமா, மனிதர்கள் துணையில்லாமல் தன்னைக் காத்துக்கொள்ளுமா என்ற கேள்வி முக்கியமானது. இதே கேள்வியை பூங்காக்களில் உள்ள மனிதர்களைக் கேட்டால், அது சாத்தியமே இல்லை என்று கூறி காரணங்களை அடுக்குவார்கள். ஆனால், அது அவர்கள் பார்வைக் கோணத்தில் சரியாக இருக்கலாம். முழுக்க உண்மையல்ல.   தொடக்கத்தில் சில நாய் இனங்கள் இப்படி தடுமாறினாலும், விரைவில் சூழலுக்கு ஏற்ப தன்னை பொருத்திக்கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். காட்டுக்குள

ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

படம்
  பார்டர் கோலி நாய் இனம் டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.   இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம். டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது. உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித இனமே தேர்

காம்பியா நாட்டில் மலேரியாவைக் கண்டறிந்த நாய்!

படம்
  நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.அதனுடன் மனிதர்களை ஒப்பிடக்கூட முடியாது. அந்தளவு தொலைவில் வாசனையைக் கண்டறியும் மோப்ப சக்தியின் இடைவெளி உள்ளது. இரட்டையர்களாக பிறந்தாலும் கூட ஒருவரின் உடல்மணம் வேறுபட்டிருக்கும். நாயால் அதை உடனடியாக கண்டறிய முடியும். ஒருவர் வீட்டுக்கு வரும் வழியில் குப்தா பவனில் சாப்பிட்ட குலோப்ஜாமூன், நண்பரின் செல்ல பூனையைத் தூக்கி கொஞ்சியது. யார்லி சென்ட் மணக்கும் காதலியை கட்டி அணைத்தது, பூங்கொத்துகளை பாராட்டாக நண்பரிடம் பெற்றது என மோப்பம் பிடித்தே நாயால் அனைத்தையும் அறிய முடியும். நான் லீனியராக இருந்தாலும் உண்மையை அறிந்துவிட முடியும். போதைப்பொருட்கள், வெடிகுண்டுகள், கொலை தடயங்கள் ஆகியவற்றைக் கண்டறிய அதற்கென பயிற்சி அளிக்கப்பட்ட நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் உள்ள மனநிலையை, அவரது உடலில் சுரக்கும் வேதிப்பொருட்களை வாசனையை முகர்ந்தே நாயால் உணர முடியும். தற்போது, அறிவியலாளர்கள் நாயின் மோப்பம் பிடிக்கும் திறனை அடிப்படையாக கொண்டு வேபர் டிடெக்டர் எனும் கருவியை உருவாக்கியுள்ளனர். இப்போதைக்கு அதன் செயல்திறன் நாயின் மோப்பத் திறனை விஞ்சும் அளவுக்கு இல்லை. ஆனால் எதிர்கா

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே ச

கம்யூனிச சர்வாதிகாரத்தை எதிர்த்த எழுத்தாளர் மிலன் குண்டெரா! - அஞ்சலி

படம்
  எழுத்தாளர் மிலன் குண்டெரா -படம் லே மாண்டே எழுத்தாளர் மிலன் குண்டெரா படம்-பாரிஸ் ரிவ்யூ சர்வாதிகாரத்தை எதிர்த்த சுதந்திர எழுத்தாளர்! மிலன் குண்டெரா, தனது நாவல்களை பாலிபோனிக் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகிறார். இவரது அப்பா, இசைக்கலைஞர். இசைக்குறிப்புகளை அப்படியே வாசிக்காமல் இதயத்தில் உள்ள உணர்வுகளை இசையாக மக்களுக்கு கொடுத்தவர். தனது நாவலில் மனிதர்கள், வாழ்க்கை, அவர்களின் குரல்களை ஒன்றாக கொடுப்பதால் அதை இசைக்கோவையாக மிலன் நினைக்கிறார். 1968ஆம் ஆண்டு மிலன் தி ஜோக் என்ற நாவலை எழுதினார். இந்த நூல் செக் நாட்டில் நன்றாக விற்றது. ஏராளமான மக்கள் அதை வாங்கி படித்தனர். அப்போது கம்யூனிஸ்ட்   கட்சி ஆட்சியில் இருந்தது. பின்னாளில், செக் நாட்டிற்குள் ரஷ்யா நுழைந்த பிறகு நிலைமை மாறியது. அவரின் நாவல் விற்பனை தடை செய்யப்பட்டது. அவர் கவின்கலைக் கல்லூரியில் செய்த ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். பிழைக்கும் சில வேலைகளை செய்தாலும் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கப்படக்கூடாது என அரசு பலரையும் மிரட்டியது. எனவே, மிலன் ஃபிரான்ஸ் நாட்டுக்குச்   சென்றார். கூடவே அவரது மனைவி வெரா இருந்தார். ‘’நேர்மறை

விண்வெளியில் பேரரசு - அமெரிக்காவை முந்தும் சீனா -இரண்டாவது அத்தியாயம்

படம்
  தியான்காங் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் விண்வெளியில் பேரரசு – சீனாவின் மகத்தான கனவு சீனாவில் ஏராளமான ராக்கெட் ஏவுதளங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சீன தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு, நிர்வாகம் மேற்பார்வை செய்துவருகிறது. சீனாவில் உள்ள முக்கியமான ராக்கெட் ஏவுதளங்களைப் பார்ப்போம். கோபி பாலைவனத்தில் உள்ள விண்வெளி மையத்தின் பெயர், தையுவான். இங்கிருந்து வானிலைக்கான செயற்கைக்கோள்கள ஏவப்படுகின்றன. கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இங்கு சோதனை செய்திருக்கிறார்கள். சிச்சுவான் பகுதியில் ஷிசாங் செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு சீன கடல் தீவில் வென்சாங் விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ளது. இங்கு, விண்வெளிக்கு சென்று வரும் வீரர்கள் திரும்ப வந்திறங்குகிறார்கள். கூடவே, மனிதர்கள் இடம்பெறாத விண்கலன்களை அனுப்பி வைக்க இந்த ஏவுதளம் பயன்படுகிறது.   ஷாங்காய் நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் பயணித்தால், நிங்க்போ என்ற துறைமுகப் பகுதி வரும். இங்கு ராக்கெட்டுகளை ஏவும் தளம் உருவாக்கப்பட்டு வருகிறது. வணிக ரீதியான செயல்பாடுகளை செய்வதற்கான இடம். இங்கு ஆண்டுக்கு நூறு வணிக ராக்கெட்டுகளை ஏ

புற்றுநோயால் அவதிப்படும் ஹோட்டல் அதிபரின் பேரனாக நடிக்கும் நாடக நடிகர்! - கர்டைன் கால்

படம்
  கர்டைன் கால் - கே டிராமா   கர்டைன் கால் கே டிராமா பதினாறு எபிசோடுகள் ராக்குட்டன் விக்கி ஆப்   நாக்வோன் ஹோட்டல் தலைவரான ஜேயும் என்ற பெண்மணி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூன்று மாத கெடு விதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அவர் வடகொரியாவில் இருந்து தென்கொரியாவுக்கு வந்து ஹோட்டல் வைத்து வெற்றிபெற்று பணக்காரர் ஆனவர். வடகொரியாவில் அவருக்கு கணவரும், யுன் ஜூன் என்ற ஆண் குழந்தையும் உண்டு. அவர்களை தென்கொரியாவுக்கு கூட்டி வர நினைக்கிறார். ஆனால் அது சாத்தியமாகவில்லை. பேரன் முன் சாங்கையேனும் கூட்டி வந்து நல்ல முறையில் வாழவைக்க நினைக்கிறார். இதற்காக அவரது மேனேஜர் முன் சாங்கை தேடுகிறார். முன் ஜாங் கிடைக்கிறார். ஆனால்,   அவர் வன்முறையான பணத்திற்கு எதையும் செய்யும் அடியாளாக இருக்கிறார்.   இதனால் மிரண்ட மேனேஜர் நாடக நடிகர் ஜேனை காசு கொடுத்து பேரனாக நடிக்க ஏற்பாடு செய்கிறார். அவரும் காசுக்காக நடிக்க ஒப்புக்கொள்கிறார். அவரது நாடகஅரங்கு தோழியான யுன் ஹூய்யும் சேர்ந்து கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். இவர்கள் போலியானவர்கள் என ஹோட்டல் தலைவர் பெண்மணி, அவரது பேரன், பேத்திகள் கண்டுபிடித்தார்களா என்ப

நாயின் உளவியல் பற்றி அறிய விருப்பமா? - சப்ஸ்டாக் தளத்தில் இணையுங்கள்!

படம்
  நாம் வீட்டில் வளர்க்கும் விலங்குதான் நாய். பெரும்பாலானவர்கள் நாயை தங்கள் துணையாக வைத்துக்கொண்டு வாழ்க்கையை வாழ்கிறார்கள். குறிப்பாக வயதானவர்கள். இந்த சூழலில், நாயின் உளவியல் பற்றி அறிவது அவசியம். என்னதான் இருந்தாலும் உயிருள்ள பிராணி அல்லவா?  இதைப்பற்றிய தகவல்களை நீங்கள் சப்ஸ்டாக் தளத்தில் வாரம்தோறும் வியாழனில் வாசிக்கலாம். தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் செய்தி மடல் உங்களுக்கு கிடைக்கும். நன்றி! anbarasushanmugam.substack.com

நாய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும், கிடைத்த தகவல்களும்

படம்
  நாய் மனிதனுக்கு மிக நெருக்கமான வீட்டு விலங்கு. வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டுபிடித்து தருவதோடு, அகழாய்வு பணிகளிலும் கூட பயன்படுகிறது. இதுபற்றி நார்த் கரோலினாவைச் சேர்ந்த மருத்துவர் பிரையன் ஹரே, அனிமல் காக்னிஷன் என்ற இதழில் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். மனிதர்களைப் போலவே நாய்களும் பரிணாம வளர்ச்சி பெற்று சமூகத்தைப் புரிந்துகொள்கின்றன என்பதே ஆய்வின் மையப்பொருள். அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் 9,200 நோய் மாதிரிகளை அடையாளம் கண்டு சோதிக்க பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் உதவின. இதுபற்றிய சோதனையை கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செய்தனர். பெருந்தொற்றில் மிகச்சிலர் மட்டுமே நண்பர்கள் சகிதம் இருந்தனர். பலரும் தனிமையில் இருந்தனர். சூழல் நெருக்கடியால் பல்வேறு மனநல சிக்கல்களை எதிர்கொண்டனர். ஆனால், நாய்களை வளர்த்தவர்களுக்கு அதிக பிரச்னையில்லை. பிற மனிதர்கள் இல்லாத நிலையில் பேச்சுத்துணையாகவும் விளையாடுவதற்கான இணையாகவும் இருந்தது. அறிவியலாளர்கள், நாய்களின் மூளையை ஸ்கேன் செய்து ஆராய்ச்சி செய்தனர். அதற்கு நன்கு அறிந்த மனிதர்களின் முகங்கள் கண்ணில் தெரிந்தபோது மூளையில் மி

நாய் எழுப்பும் ஒலிக்கு என்ன அர்த்தம்?

படம்
  நாய் எழுப்பும் குரைப்பொலி பற்றிய விளக்கங்கள் இதோ….. தொந்தரவு செய்யாதே வீட்டுக்கு முன் செல்பவர், காலிங்பெல்லை அழுத்துபவர், சைக்கிளில் செல்பவர் என யார் சென்றாலும் ஒலி, ஒளி தென்பட்டாலும் நாய் உடனே குரைக்கத் தொடங்கும். குரைக்கும் தொனி, எதிராளி வீட்டின் கதவுக்கு அண்மையில் இருக்கிறாரா, தூரத்தில் இருக்கிறாரா என்பதைப் பொறுத்து மாறுபடும். கதவை ஒருவர் தட்டி திறக்க முயல்கிறார் என்றால் நாயின் குரைப்பொலி கடுமையாக மாறும். உரிமையாளரை தீர்க்கமாக எச்சரிக்கும் ஒலி இதுவே. வேட்டை மன்னன் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார் அல்லது நாயின் சக நாயினங்கள் ஒன்றாக இணைந்து மகிழ்ந்து ஒலி எழுப்புகின்றன என்றால் நாய் , இவ்வகையிலான ஒலியை எழுப்புகிறது. குரைப்புக்கும்,, ஊளைக்கும் இடையில் அமைந்த ஒலி. முனகல் ஒலி அப்பப்பா என முனகிக்கொண்டே வயதானவர்கள் கீழே உட்காருகிறார்கள் அல்லவா? அதுபோலவே அமைந்த முனகல் ஒலி. வயதான நாய், ஏதாவது இடத்திற்கு சென்றுவிட்டு வந்து சோபாவில் ஏறி உட்காரும்போது இப்படி முனகும். நீங்கள் நாய் தள்ளிவிட்ட பந்தை எடுக்காமல் கணினியைப் பார்க்கும்போது அல்லது அதற்கு போதிய கவனம் கொடுக்காதபோது சற்று வேறு

நாயின் குண இயல்புகள்!

படம்
  ஒரு விலங்கு இருக்கிறது என்றால் அதன் அடிப்படையான பண்பை மாற்ற முடியாது எலி வளை தோண்டுவதையோ, பாம்பு எலியை பிடித்து உண்ண வேட்டைக்கு செல்வதையோ, தவளை, நிலம் நீர் என இடம் மாறி செல்வதையோ தடுக்க முடியாது. இதைப்போலவே நாய் வாசனைகளை முகர்ந்து பார்ப்பது, புதிய இடங்களை அடையாளம் அறிவதில் ஆர்வம் காட்டுவது   ஆகியவற்றை எப்போதும் செய்துகொண்டே இருக்கும். ஆனால், இன்று தனது நாய் தனக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டுமென நாயை கட்டுப்படுத்தும் உரிமையாளர்கள் அதிகரித்துவிட்டனர். இதனால், நாய் தனது சுதந்திரமும் இயல்பும் பறிபோனதால் சாப்பிடாமல் மனச்சோர்வுக்கு உள்ளாகும். மெல்ல உரிமையாளரின் உத்தரவுக்கு கட்டுப்பட மறுக்கும். அதன் அடிப்படை குண இயல்புகளே மாறும்.   எனவே, நாயை அதன் இயல்புக்கு மோப்பம் பிடிக்கவோ தரையை பிறாண்டவோ அனுமதிக்கலாம். குழி தோண்டுவதை வீட்டில் தோட்டம் இருந்தால் செய்யவிடலாம். பிறரின் இடத்தில் செய்தால் நிலைமை களேபரமாகும். பொது பூங்காக்களில் நாயை சற்று சுதந்திரமாக இருக்குமாறு விடலாம். கழுத்தில் காலர் மாட்டில் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை. பிறரை கடிக்கும் குணம் கொண்ட நாய்கள் என்றால் அதை பூங்காக்களுக்கு அ

விண்வெளியில் பேரரசைக் கட்டும் சீனா! - விண்வெளியில் சாதித்தது எப்படி?

படம்
    இடதுபுறத்தில் விஞ்ஞானி ஸூசென்   விண்வெளியில் பேரரசு – சீனாவின் லட்சியத்திட்டம்   2019 ஆம் ஆண்டு, சீனாவில் “வாண்டரிங் எர்த்” என்ற திரைப்படம் வெளியானது. உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும், இணையத்தில் நெட்பிளிக்சிலும் கூட வெளியாகி மகத்தான வெற்றி பெற்றது. படத்தின் கதை இதுதான். பூமியை சூரியக்குடும்பத்தில் இருந்து பிரித்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல அறிவியலாளர்கள் நினைக்கிறார்கள். அப்படி கொண்டு சென்றால்தான், அழிந்த மக்கள் போக மீதியுள்ளவர்கள் உயிர்பிழைக்கமுடியும். இப்படி கொண்டு செல்ல பூமியை நகர்த்த வேண்டும். இதற்கென ஏராளமான எந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அவை பழுதடையும் சூழலில், அதை சரிசெய்ய போராடும் அறிவியலாளர்களின் போராட்டத்தையும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பற்றி சீனப்படம் பேசுகிறது. அடிப்படையில் விண்வெளி சார்ந்த படம் என்றாலும், இதிலுள்ள முக்கிய நோக்கம் சீன அரசின் லட்சியத்தை உலகிற்கு கடத்துவதுதான். எனவேதான், சீன அரசின் சீனா ஃபிலிம் குரூப் கார்ப்பரேஷன் படத்தை தயாரித்துள்ளது. சீன கல்வித்துறை வாண்டரிங் எர்த் படத்தை அனைத்து அரசு பள்ளிகளிலும் திரையிட்டுக் காட்டுவதற்கு உத்த

வாழ்க்கையின் நம்பிக்கையின்மை, உலகின் கொடூர முகத்தை பேசும் கவிதைகள் - கோ யுன் - கவிதை நூல்

படம்
  தென்கொரிய கவிஞர் கோ யுன் 24  சிறிய பாடல்கள் கோ யுன் கவிதை நூல் காவிரி சிற்றிதழ் தமிழ் மொழிபெயர்ப்பு விவேக் ஆனந்தன்  சிறுநூல்வரிசை இணையத்தில் கொரிய நாட்டு கவிஞர்களைப் பற்றி தேடியபோது காவிரி சிற்றிதழ் வலைத்தளம் கண்ணில் பட்டது. உள்ளே சென்று பார்த்ததில் கொரிய நாட்டு கவிஞர் கோ யுன் எழுதிய சிறு நூலை தரவிறக்கம் செய்து வாசிக்க முடிந்தது. கோ யுன் எழுதியுள்ள கவிதைகள் அனைத்துமே வாழ்க்கை சார்ந்த சலிப்பு, வேதனை, வலி, அரசியலின் கீழ்மை, போரால் அழியும் மக்களின் வாழ்க்கை என சற்று தீவிரமான தன்மை கொண்டவை. இதனால், இவை கவித்துவ அழகை இழந்துவிட்டன என்று கூற முடியாது. கவிதைகள் அனைத்துமே மறக்க முடியாத அனுபவங்களை தருவனவாக உள்ளன. இதற்கு காரணம், தனது கருத்தை சொல்ல அவர் பயன்படுத்தும் சொற்கள் துல்லியமாக அமைந்ததே காரணம். கூடவே எளிமையான வடிவமும் முக்கியமான அம்சம் எனலாம். விவேக் ஆனந்தனின் மொழிபெயர்ப்பில் கவிதைகள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. ‘ஃபர்ஸ்ட் பர்சன்’ என்ற கவிதை நூலில் இருந்து   கவிதைகள் எடுக்கப்பட்டுள்ளன. மரத்தில் இருந்து இலைகள் கீழே விழுவதை ஒரு கவிதையாக கோ யுன் எழுதியுள்ளார். இந்த கவிதை, வாழ்