இடுகைகள்

உப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உப்பு தின்றால்....

தூத்துக்குடி யில் தயாரித்து வரும் ****ன் என்ற பிராண்டில் சிறு கற்கள் எப்போதும் காண கிடைக்கின்றன. கமிஷன் கொடுத்து கடையில் பொருட்களை சரியாக தரமாக கொடுக்க முடியவில்லை. இனி உப்புக்காக வேறொரு பிராண்டை தேடிப்பிடிக்க வேண்டும். நிறுவனங்கள் லாபத்தை பற்றி மட்டுமேயும் மக்கள் ஏமாற்றப்பட்டு காசுக்கான மதிப்பு குறையாத பொருட்களை தேட வேண்டியுள்ளது. உப்பை தூய்மை செய்யக்கூட கருவிகள் இல்லையா? எப்போதும் போல உள்ள இந்திய அலட்சியமா என்று தெரியவில்லை.

வங்கிக் கணக்கும், உப்பு வழக்கும்!

படம்
  1 ஒரு வங்கிக்கணக்கை மூடுவது எப்படி? இதை நீங்கள் எளிதாக மின்னஞ்சல் அனுப்பி செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை. அந்தளவு எளிதாகவெல்லாம் காரியம் நடக்காது. கும்பகோணத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள வங்கியில் எனக்கு கணக்குள்ளது. அந்த கணக்கை மூட விரும்பினேன். இணையத்தில் அதற்கான வழியைத் தேடினால், நேரடியான வழிகள் ஏதுமில்லை. ஏஐ உதவியாளரிடம் கேள்வி கேட்டால் அதற்கான பதில் கிடைக்கிறது. அதாவது, வங்கி வழங்கிய ஏடிஎம் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், இதோடு கணக்கை மூடிவிடுங்கள் என கோரிக்கை கடிதம் ஒன்றை எழுதி கணக்கு வைத்துள்ள கிளைக்கு கொடுக்கவேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் கணக்கு மூட முடியும்.  கும்பகோணம் வங்கியின் கொள்கைப்படி வங்கிக்கணக்கில் ஐயாயிரம் ரூபாய்க்கு கீழே குறையக்கூடாது. குறைந்தால் அபராதம் உண்டு. மற்றபடி காசு நிறைய கணக்கில் இருக்கும்வரை பெரிய சிக்கல் ஏதுமில்லை. அட்டை, வங்கியின் ஆப் என அனைத்துமே சிறப்பாகவே இயங்குகிறது. கணக்கு தொடங்கியபோது போனில் வீடியோ கால் செய்து அதன்வழியாக தொடங்க நிர்பந்தம் செய்தனர். என்னுடைய ஊரில் உள்ள இணைய வேகத்திற்கு கூகுள் தேடல் பக்கமே பத்து நிமிடம் ஆகும் திறப்ப...

பெரிய வணிகம் செய்வதிலுள்ள லாபம் - பாயும் பொருளாதாரம்!

படம்
  5 பாயும் பொருளாதாரம் பெரிய தொழில் பெத்த லாபம் இந்தியாவில் சாதி இருக்கிறதோ இல்லையோ, சிறுகுறு தொழில்கள் நிறைய அழிந்துவிட்டன. வரி தீவிரவாதம் ஒருபுறம், பெருவணிகர்களின் எல்லைமீறிய வணிகம், அரசின் ஆதரவின்மை எல்லாமே முக்கிய காரணம். பெரிய வணிகம் எப்படியோ கடன் பெற்று அதை அரசே ஏற்றுக்கொள்ள பிழைத்துவிடுகிறது. பொதுவாக நிறைய பொருட்களை வாங்குபவர்களுக்கு அதன் விலை இயல்பாகவே குறைவாக வருகிறது. அவர் அதை விற்று வரி தீவிரவாதத்தை சமாளித்து தேர்தல் பத்திரத்தை வாங்கிவிட்டால் போதும். வணிகத்தை காப்பாற்றிவிடலாம். தொழில் தடுமாறுகிறதா, பாரத்தை தள்ளும்போது ஐலேசா சொல்வது போல பாரத் மாதா என அலறி அழுதால் போதும். தொழில் நன்னிலைக்கு மீண்டும் விடும். பெரிய தொழிலோ, சிறு தொழிலோ திறமையான தொழிலாளர்கள் முக்கியம். பொருட்களை நவீனமான செயல்முறையில் உற்பத்தி செய்வதில் சமரசம் செய்யக்கூடாது. பெரிய தொழில் பார்க்க பிரமாண்டமாக தெரிந்தாலும் அதில் மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். நிறைய பிரிவுகள் இருப்பதால், பிறர் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமாட்டார்கள். செக்குமாடு போல மாதசம்பளத்திற்காக ஓடிக்கொண்டிருப்பார்கள். உழைத்தாலும் பாராட்...

உப்புச்சுவையை உணரும் நாக்கு - எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி

படம்
      அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி நாக்கில் எந்த பகுதி உப்புச்சுவையை அறிகிறது? அனைத்து பகுதிகளுமேதான். சிலர் நாக்கில் குறிப்பிட்ட பகுதி உணவில் உள்ள சில சுவைகளை அறிகிறது என வதந்திகளை கிளப்பி வருகிறார்கள். போலிச்செய்திகள் என்பதை உருவாக்க இன்று ஏஐயைக் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். உண்மைக்கு நிரூபணம் தேவை. பொய்க்கு குழப்பமே போதும் அல்லவா? எனவே வதந்திகளை நம்பாதீர்கள். நாக்கில் குழுவாக, குறிப்பிட பகுதியில் சுவையை தனியாக உணரும் சுவை மொட்டுகள் ஏதுமில்லை. அறுசுவைகளை நாக்கில் உள்ள அனைத்து சுவை மொட்டுகளுமே அறிய முடியும். குறிப்பிட்ட பகுதியில் அந்த சுவை தெரிகிறது என நீங்கள் உணர்ந்தால், அது உங்கள் ஹல்லுசினேஷன்தான். உடனே சென்று டாக்டர் தசாவதாரத்தைப் பாருங்கள். 2 எலிக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்ன? மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள், பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள் ஆகியோர் ஒரே உயிரினத்திலிருந்து மனிதன், எலி, சி்ம்பன்சி ஆகியோர் உருவாகி பரிணாம வளர்ச்சிப்படி வளர்ந்திருக்க வேண்டும் என முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மனிதர்களோடு எலி எழுபது தொடங்கி எண்பது மில்லியன் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கலாம் என ஆ...

நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

படம்
  தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா? நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம். இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது? உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து   கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்...

பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

படம்
  கோபத்தின் பிரயோஜனம் ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது. ‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார். ‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன். ‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார். சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்க...

அகோர பசியை எதிர்கொள்ளும் வழிமுறை!

படம்
  எப்போதும் பசி அமெரிக்காவில் உள்ள மக்களில் 61ச தவீதம் பேர் சர்க்கரை, மாவுச்சத்து கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுகிறார்கள். அவை ஆரோக்கியமானவை அல்ல. ஆனால் சர்க்கரை, கொழுப்பு கொண்ட உணவுகளை மனத்தூண்டல் பெற்றதால் எடுத்து சாப்பிட்டு உடல் எடை அதிகரித்து நீரிழிவு,இதயநோய் பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு, இலைக்காய்கறிகளை, புரதம் கொண்ட தானிய வகைகளை மெல்ல உண்ணக் கற்பதுதான். உடலுக்கு உணவை சரியான முறையில் பழக்கப்படுத்துவது அவசியம். ஒருவர் காலை எட்டு மணிக்கு இட்லியும் வடகறியும் சாப்பிடுவது வழக்கம் என்றால் அதை அவர் செய்தே தீர வேண்டும். இல்லையெனில் வயிற்றில் கர முர என மாவு மில் சத்தம் கேட்கும். உடல் அந்த நேரத்தில் உணவு கிடைக்கும் என பழகிவிட்டது. அப்போது, உங்களுக்கு உணவு உண்ணும் தேவை இல்லாதபட்சத்தில் கூட பசி எடுக்கும்.  சிலர் தங்க கிளி கடலை மிட்டாய், கங்கோத்திர பால் பொருட்கள் சார்ந்த இனிப்புகள், ஏ1 சிப்ஸ் என சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உணவு உண்டபிறகும் கூட இடைவெளியில் இப்படி குப்பை உணவுகளை உண்பது உடலை பாதிக்கும். உடலுக்கு இதுபோன்ற உணவுகள் குழப்பத்தை ஏற்படுத்துகின...

சங்க காலம் முதல் இன்றுவரை உப்பின் சமூக, பொருளாதார முக்கியத்துவத்தைப் பேசும் நூல்- உப்பிட்டவரை

படம்
  உப்பிட்டவரை ஆ.சிவசுப்பிரமணியன் காலச்சுவடு பதிப்பகம் பக்கம் 164   உப்பு என்றால் உங்களுக்கு என்னென்ன விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன? பழமொழிகள், உப்பு குறைந்து சாப்பிடாமல் போல உணவு, ஊறுகாய், அப்பளம், நன்றி என ஏதேதோ நினைவுக்கு வரும். ஆனால் இந்த அனைத்திலும் உப்பு மையமாக உள்ளதுதானே? இந்த நூல் முழுக்க உப்பு அதன் வணிக, சமூக, பொருளாதார முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. சங்க காலம் தொடங்கி இப்போது வரை உப்பின் முக்கியத்துவம் என்ன, அதனை உற்பத்தி செய்யும் உப்பள தொழிலாளர்கள் நிலை, அவர்கள் பயன்படுத்தும் தொழில்சார்ந்த வாழ்க்கை, உப்பளத்தை மையப்படுத்திய நாவல்கள் என நிறைய விஷயங்களை உப்பிட்டவரை நூலில் தோழர் ஆ சிவசுப்பிரமணியன் பேசியிருக்கிறார். இதுபோன்ற ஆய்வுகளை செய்து நூல்களை தேர்ந்து படித்து அதனை வாசகர்களுக்கு எழுதி தொகுத்து அளிப்பது சாதாரண காரியமில்லை. இதை நீங்கள் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள மேற்கோள் நூல்களின் வரிசைப்பட்டியலை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு நூலாசிரியர் உழைத்துள்ளார். சமூகம் சார்ந்த விஷயங்களில் முக்கியமானது திருநெல்வேலி பகுதியில் உள்ள திருடர்கள் பி...

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்...

கேன் உணவுகள் - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  கேன் உணவுகள் நெப்போலியன் காலத்தில் உருவானது கேன் உணவுகள். அப்போது கடலில் நிறைய பயணம் செய்யவேண்டியிருந்ததால், படை வீர ர்களுக்கு சுடச்சுட சமைத்து கொடுப்பது கடினம். எனவே கேன்களில் உணவுகளை பதப்படுத்தி அடைத்து கொடுத்தனர். இன்று அப்படி தொடங்கிய உணவுத்துறை உலக நாடுகளில் அனைத்திலும் சிறப்பாக விற்று வருகிறது.  குழந்தைகள் உணவு, சூப், ஊறுகாய், பழச்சாறு என பல்வேறு வகைகளில் கேன்உணவுகள் வெற்றிகரமாக விற்று வருகின்றன. கொரோனா நேரம் கூட பலருக்கும் கைகொடுத்தது கேன் உணவுகள்தான் என கேம்பெல் சூப் கம்பெனி எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் கம்பெனியின் விற்பனை 34 சதவீதம் உயர்ந்துள்ளதாம். அமெரிக்காவில் இதற்கு முன்னர் கேன் உணவுகளின் விற்பனை 1-2 என ஐசியூவில் வைக்கும் நிலைமைதான் இப்போது கொரோனா வந்ததால் பலரும் உணவுக்கு என்ன செய்வது என கேன் உணவுகளை வாங்கியதால், 12 சதவீதம் விற்பனை ரேட் வந்துள்ளது. என்ன காரணம்?  மக்கள் பலரும் சுவை என்பதோடு அது ஆரோக்கியத்தையும் காக்கவேண்டும் என நினைக்கத் தொடங்கிவிட்டனர். எனவே பலரும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கேன் உணவுகள் உள்ள பகுதிக்கு அதிகம் செ...

உப்புக்கு மாற்று உப்பு இருக்கிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  பதில் சொல்லுங்க ப்ரோ? மிஸ்டர் ரோனி சாண்ட்விச்சை எப்படி எடுத்துசெல்வது? கையில்தான் என்று சொல்லுவது அரசு பதில்கள் போல சிம்பிளாக ஆகிவிடும். இருந்தாலும் சூழல் முக்கியம் அல்லவா? அலுமினியம் பாயில்தான் எளிதாக கிடைக்கும். ஆனால் இதனை திரும்ப திரும்ப பயன்படுத்த முடியுமா என்று பாருங்கள். இல்லையெனில் பாதிப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெறும் காகிதம் என்பதை உடனே சாப்பிடுவதற்காக கொடுப்பார்கள். அதனை பார்சல் பெற்று கொண்டு செல்ல அந்த காகிதம் தாங்காது. காகிதத்தில் சுற்றி  உங்கள் கேர்ள் பெஸ்டியின் பையில் வைத்துவிடுங்கள்.  உப்புக்கு மாற்றாக வேறு உப்புகள் ஏதேனும் உண்டா? ஏன் இல்லாமல்? பொட்டாசியம் குளோரைடை நீங்கள் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஒரே பாதிப்பு, நீங்கள் நோய்க்கு மருந்து எடுத்துக்கொண்டிருந்தால்  இதைப்பற்றி அவருக்கு கூறவேண்டும். சிறுநீரக பிரச்னை இருந்து பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்தினால் ஆபத்து அதிகம். உப்பாக நாம் பயன்படுத்தும் சோடியம் குளோரைடிற்கும் பொட்டாசியம் குளோரைடிற்கும் ருசியில் பெரிய வேறுபாடு கிடையாது.  சயின்ஸ்போகஸ் 

குப்பை உணவுகளை அடையாளப்படுத்தும் இந்திய அரசு!

படம்
  குப்பை உணவுகளுக்கு ரெட் சிக்னல்  உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகம் கொண்ட பொருட்களை சிவப்பு நிற லேபிளில் அடையாளப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.  இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம்(FSSAI), கடைகளில் விற்கும் உணவுப்பொருட்களுக்கான புதிய விதிகளை அறிமுகப்படுத்த உள்ளது. உணவு குறித்த கருத்தரங்கில் புதிய உணவுப்பொருட்களுக்கான விதிகளை எஃப்எஸ்எஸ்ஏஐ ஆலோசகர் அனில் அறிவித்தார்.  விதிகள் புதிது இதன்படி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்கள் சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படும். இவ்விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரவிருக்கின்றன.  தற்போது சந்தையில், விற்கப்படும் உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இனி கூடுதலாக அவற்றில் இடம்பெற்றுள்ள பகுதிப்பொருட்களைப் பொறுத்து அவற்றின் நிறமும் மாறுபடும்.  உடல்பருமன், வேதிப்பொருட்கள் ஆகியவை கொண்ட உணவுப்பொருட்களால் மக்களின் உடல்நலன் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த கலோரிஅட்டவணை கூட உணவுப்பொருள், மக்கள் உடல்நலனுக்கு ஏற்றதா என்று அடையாளம் காண உதவவில்லை. புதிய முறை, மோசமான உணவுப்பொருட்க...

மம்மியின் வகைகள்

படம்
    மம்மியின் வகைகள் கி.பி 5 ஆம் நூற்றாண்டு ம ம்மிகள் இவை. இவற்றை ஐஸ் ம ம்மிகள் என்று அழைக்கலாம். ஐஸ்பெட்டியில் வைத்து புதைக்கப்ட்ட ம ம்மிகள் இவை. மறு உலகில் பசிக்கும் என்பதால், ஆறு குதிரைகளையும் கூடவே புதைத்த கருணை உலகம் எதிர்பார்க்காத ஒன்று. புதைத்த உடல் பெண்மணியினுடையது. அதில் ஏராளமான டாட்டூக்கள் புராண கால விலங்குகளில் உருவத்தில் இருந்தன. கானரி தீவு மம்மிகள் இ்வை ஸ்பானியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள். இவற்றின் காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த ம ம்மிகளின் உடல் விலங்கு தோலினால் போர்த்தப்பட்டு மணலைப் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தனர். இன்கா மம்மிகள் பெரு மற்றும் சிலி நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ம ம்மிகள் இவை. கடவுளுக்காக தங்களை தியாகம் செ்யத குழந்தைகளின் உடல்கள்தான் ம ம்மிகள். 500 ஆண்டுகள் பழமையானவை. சாசபோயா என்று அழைக்கப்பட்ட மம்மிகள், வடக்கு பெருநாட்டின் பகுதியில் கிடைத்தன. இவை காட்டின் வறண்ட பகுதியில் இருந்தன. காபுசின் காடகாம்ப்ஸ் 16ஆம் நூற்றாண்டுக்கும் இருபதாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட மம்மிகள் இவை. உடலை எப்படி பதப்படுத்தவேண்டும் என்பதற்கு இவை சிறந்த உதாரணம். உடலிலுள்ள...

வீரர்களுக்கு உதவும் NH3!

படம்
giphy மிஸ்டர் ரோனி ஸ்மெல்லிங் சால்ட்ஸ் என்பதன் பயன் என்ன? இந்த ஸ்மெல்லிங் சால்ட் என்பது விளையாட்டில் கீழே விழுந்து நினைவு தப்பும் வீரர்களுக்கு சுயநினைவு வருவதற்காக அளிக்கப்படுகிறது. அம்மோனியா, ஆல்கஹால், நீர்சேர்மானம் கொண்டது பொருள் இது. இதனை நுகரும்போது, மூக்கு, நுரையீரல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படும். ஆனால் உடலுக்கு பெரியளவு ஆபத்து கிடையாது. சிலர் இதனை தங்களின் ஊக்கசக்தியாக கருதி நுகர்கிறார்கள். அமெரிக்க கால்பந்து வீர ர்கள் இம்முறையில் ஸ்மெல்லிங் சால்ட்டை பயன்படுத்துகின்றனர். 2006ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் இதுபற்றி ஆராய்ச்சி செய்தது. இதில் ஸ்மெல்லிங் சால்ட் எரிச்சல் ஏற்படுத்துவதன் மூலம் சுயநினைவை மனிதர்களுக்கு ஏற்படுத்துகிறது. அதைத்தாண்டிய வேறு பயன் இல்லை என்று கூறியது. நன்றி - பிபிசி 

கடலிலுள்ள உப்பு குறைந்தால், காணாமல் போனால் என்னாகும்?

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி திடீரென கடலிலுள்ள டன் கணக்கிலான உப்பும் காணாமல் போனால் என்னாகும்? உடனே நடக்கும் ரியாக்ஷன், நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புதான். அடுத்து பிற இடங்களிலுள்ள நீர், கடல் நீரின் அடர்த்திக்குறைவால் சவ்வூடு பரவல் முறையில் உள்ளே வர முயற்சிக்கும். ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் சிறிது உருகும். ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்வி நிஜமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு எந் பிரச்னையும் இல்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்

கேரமல் சாக்லெட்டுகளை அதிகம் சாப்பிடுகிறீர்களா?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி உப்பும், சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகளை அதிகமாக சாப்பிடுவது ஏன்? காரணம், உப்பும் சர்க்கரையும் கலந்த சாக்லெட்டுகள் மூளையில் ஏற்படுத்தும் மகிழ்ச்சிகர உணர்வுதான். வட இந்திய உணவு, தென்னிந்திய உணவு என சாப்பிட்டு சோர்ந்த வயோதிக அன்பர்கள்,  கேரமல் சாக்லெட்டுகள், அதே டேஸ்டில் அமைந்த ஐஸ்க்ரீம்களில் சொக்கிப்போவது இதனால்தான். இதனை ரோனி, சேட்டா கடையில் காபி பைட் வாங்கி சாப்பிட்டுவிட்டு சொல்லவில்லை. 2016 ஆம் ஆண்டு ஃப்ளோரிடா பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. செய்தியும் படமும்  - பிபிசி -லூயிஸ் விலாஸன்

அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!

படம்
cheryl masterson/pinterest  உடல்பருமன் ஆபத்து! உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது. பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).  உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளி...