இடுகைகள்

எம்.டி. வாசுதேவன் நாயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர்

படம்
  அஞ்சலி - எம்டி வாசுதேவன் நாயர் மாத்ருபூமி வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் மறைந்திருக்கிறார். இவரது முழுப்பெயர் மாதத் தேக்கப்பட் வாசுதேவன் நாயர். சுருக்கமாக எம்டி வாசுதேவன் நாயர். மலபார் மாவட்டத்திலுள்ள பொன்னானி தாலுக்காவின் கூடலூர் கிராமத்தில் 1933ஆம் ஆண்டு ஜூலை பதிமூன்றாம் தேதி பிறந்தார். தந்தை நாராயணன் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்தார். எம்டி, மலபார் மாவட்ட கல்வி வாரியம் நடத்திய பள்ளிகளில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். பாலக்காட்டிலுள்ள எம்பி டுட்டோரியலிலும் கூட வேலை செய்திருக்கிறார். 1956ஆம் ஆண்டு கோழிக்கோட்டிலுள்ள மாத்ருபூமி வார இதழில் உதவி ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார். இங்கு ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். எம்டி மூலமாக அடையாளம் காணப்பட்ட எழுத்தாளர்களில் புன்னத்தில் குஞ்சப்துல்லா, என்எஸ் மாதவன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். எம்டி வாசுதேவன் நாயர், தீவிரமான இலக்கிய எழுத்துக்கு சொந்தக்காரர். வளர்த்துமிருகங்கள் என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அடுத்து வெளியானதுதான் நாலுகெட்டு என்ற நாவல். இந்த நாவலில் நாயர் குடும்பம் ...

இறுதியாத்திரை அனுபவத்தில் அப்பாவின் நினைவுகள்! - கடிதங்கள்

படம்
  எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் அன்புள்ள முருகு அவர்களுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? இன்றுதான் இங்கு வெயில் லேசாக அடிக்கிறது. விரைவில் சென்னை ஆபீசுக்கு வேலைக்கு வரச்சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.  அறையில் தங்கவில்லை என்றாலும் வாடகையை மாதம்தோறும் கொடுத்து வருகிறேன். அறையைத் தக்க வைக்க வேறு வழியில்லை. எம்.டி. வாசுதேவன் நாயரின் இறுதி யாத்திரை நாவலைப் படித்தேன். 130 பக்கம் கொண்ட நாவல் இது. புற்றுநோயால் இறந்துபோன அப்பாவின் இறுதிச்சடங்கிற்கு வரும் நான்கு மகன்களைப் பற்றிய கதை. நான்கு மகன்களின் வாழ்க்கையில் அப்பாவின் பங்கு, அப்படி எப்படி இருந்தார் என்பதை விவரிக்கிறார் ஆசிரியர்.  கேரளம், இலங்கை என பயணிக்கும் கதையில் அனைத்து இடங்களையும் சிறப்பாக அனுபவித்து உணரும்படி எழுதியிருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், மொழிபெயர்ப்பாளரான சைலஜாதான். பொருளாதாரத்தில் முக்கியமான வார்த்தைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதுதொடர்பான நூலில் இன்னும் நூறு பக்கங்கள் மிச்சமுள்ளன.  அம்பேத்கரின் இந்துமத தத்துவம் என்ற நூலை எடிட்டர் கே.என்.சிவராமன் பரிசாக வழங்கினார். அதன் இரு பகுத...