இடுகைகள்

இந்தியா - 1947 பிரிவினை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவினை நினைவுகளை மீட்கும் மியூசியம்!

படம்
பிரிவினை மியூசியம் ! பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் தன் பாட்டியிடம் பேசியபோதுதான் 1947 ஆம் ஆண்டு பிரிவினை பற்றிய வேதனை நிரம்பிய வரலாறு மல்லிகா அலுவாலியாவுக்கு தெரிய வந்திருக்கிறது . பஞ்சாபில் அமிர்தசரசில் பிரிவினை நினைவுகளுக்கான அருங்காட்சியகத்தை மல்லிகா அலுவாலியா அமைத்து வேதனை நினைவுகளை அடுத்த தலைமுறை அறிய உதவியிருக்கிறார் . 1947 ஆம் ஆண்டு நூல்கள் , திரைப்படங்களில் பிரிவினைக்கால கற்பழிப்புகள் , படுகொலைகள் ஆகியவை பற்றிய சம்பவங்கள் இடம்பெற்று நம்மை இன்றுவரையும் குற்றவுணர்வுக்கு உள்ளாக்கி வருகின்றன . " எந்த பதிலும் அளிக்கப்படாத சம்பவம் அது " எனும் மல்லிகா , கேட்ஸ் பவுண்டேஷனில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் . அருங்காட்சியகத்தில் உடைந்த பெட்டிகள் , சமையல் பாத்திரங்கள் , திருமண சேலை , டைரி ஆகியவற்றை சேகரித்து அதன்மூலம் சொல்ல மறந்த கதைகளை மக்களின் மனதோடு பேசுகிற மல்லிகா , அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலையில் இயற்பியல் பட்டதாரி . ஹார்வர்டில் எம்பிஏ பட்டம் வென்ற மல்லிகா , அக்டோபர் 2016 அன்று மியூசியத்தை தொடங்கியுள்ளார் . இதனை பார்வையிட்ட பிரிவினை அகதிகளில் ஒருவரான முன்