இடுகைகள்

உற்பத்தி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிளாஸ்டிக்குகளின் உற்பத்தியை குறைக்காமல் மறுசுழற்சி செய்வதில் பயன் உண்டா?

படம்
  விஷமாக பரவும் பிளாஸ்டிக்குகள்! இன்று உள்ளூர் தொடங்கி புகழ்பெற்ற ஆற்றுக்கரையோரங்களில் சென்று பார்த்தால் எங்கும் நிறைந்துள்ளது பரந்தாமன் மட்டுமல்ல பிளாஸ்டிக்கும் கூடத்தான் என்று தெரிந்துகொள்வீர்கள். அந்தளவுக்கு ஷாஷேக்கள், குழந்தைகளின் பொம்மைகள், பாலிதீன் கவர்கள், சோப்பு உறைகள், எண்ணெய் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், அலுமினிய பாயில்கள் ஏராளமாக கிடைக்கும். உள்ளூர் நிர்வாகங்களும் இவற்றை அள்ளுகின்றன. ஆனாலும் இதன் எண்ணிக்கை குறைவதாக இல்லை. மறுசுழற்சி செய்யும்படியான பிளாஸ்டிக்கை தயாரிக்காதபோது தொழிற்சாலைகளை மூடச்சொல்லி உத்திரவிடும் தைரியமும் நெஞ்சுரமும் அரசுக்கு இல்லை. எனவே, பிளாஸ்டிக்குகள் இன்று குடிநீரில், உணவில், காய்கறிகளில் கூட கலக்கத் தொடங்கிவிட்டன. அதைபற்றிய விரிவான கட்டுரையைப் பார்ப்போம்.  மூன்றாம் உலக நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கூட பிளாஸ்டிக் மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இன்றுவரையில் மனிதர்கள் உருவாக்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளின் எண்ணிக்கை பதினொரு பில்லியன் மெட்ரிக் டன் என நேச்சர் ஆய்விதழ் தகவல் கூறுகிறது. தற்போது உலகம் முழுவதும் ஆண்டுக்கு 30

தொழிற்சாலை வேலை என்பது மத்தியதர வர்க்க மக்களைக் காப்பாற்றாது!

படம்
  தொழிற்சாலை வேலை எனும் மாயத்திரை தொழிற்சாலையில் வேலை எனும் மூடநம்பிக்கை தொழிற்சாலையில் வேலை என்பது உலகம் முழுக்க உள்ள அரசியல்வாதிகளால் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்படுகிறது. உண்மையில் இன்று தொழிற்சாலைகள் எப்படி இயங்குகின்றன என்ற குறைந்தபட்ச புரிதல் உள்ளவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். பேசுவதுதான் முக்கியம். பேசுவதை செயல்படுத்தினால்தானே பிரச்னை என அரசியல் தலைவர்கள் நினைக்கலாம். அப்படித்தான உலகம் முழுக்க நடப்பு இருக்கிறது. ‘’தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும்போது சமூகத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், அடிமை முறை ஆகிய சமூக தீமைகள் ஒழியும்’’ என ஃபெர்னான்டோ கலியானி என்ற சிந்தனையாளர் கூறினார். அவர் இந்தக் கருத்தைக் கூறி 250 ஆண்டுகள் ஆகியும் அரசியல்வாதிகள் இதே கருத்தில் கடந்த காலத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். சிந்தனையாளர் கூறிய கருத்தில் பெரிய தவறு இல்லை. ஆனால், அது இன்றைய காலத்திற்கு பொருந்தாது. காலநிலை மாற்றம், மத்தியவர்க்கத்தின் வேலை, பொருளாதார வளர்ச்சி சுணக்கம், புவியியல் ரீதியாக அரசியல் நெருக்கடி என அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக தொழிற்சாலைகளைத் தொடங்குவதை அரசியல் தலைவர்கள் முன்வைக்க

கிராஃப்ட் முறையில் தாவரங்களை மேம்படுத்தலாம்!

படம்
  விவசாய வளர்ச்சிக்கு உதவும் நுட்பம்! குறிப்பிட்ட முறையில் தாவரங்களை வளர்த்தெடுத்தால் அதிக விளைச்சல் பெறலாம் என கண்டறியப்பட்டுள்ளது. விளைச்சலோடு , பூச்சிகளையும் கட்டுப்படுத்த முடிகிறது. இந்த வகையில் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகியவற்றை சிறந்த முறையில் விளைவிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். கிராஃப்ட்  எனும் முறையில், ஒரு தாவரத்தின் வேரை இன்னொன்றோடு இணைக்கிறார்கள். இதனை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்துறையில் செய்து வருகிறார்கள். இதனை புதிய முறை என்று கூற முடியாது. இந்த வகையில் ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை கொடி ஆகியவை நட்டு வளர்க்கப்படுகின்றன.  கிராஃப்ட் முறையில் கோதுமை, ஓட்ஸ், வாழை, பேரீச்ச பனை ஆகிய பயிர்களை நட்டு வளர்ப்பது கடினம். இவற்றை மோனோகாட்ஸ் என்று கூறலாம். இவற்றுக்கு திசுக்கள் குறைவு என்பதால் இதனை கிராஃப்ட் முறையில் இணைத்து வளர்ப்பது சிறப்பான பயன்களை தராது. குறிப்பிட்ட தாவர இனங்களில் திசுக்கள் குறைவாக இருப்பதற்கு வஸ்குலர் காம்பியம் என்று பெயர்.   மோனோகாட்ஸ் தாவரங்களிலும் கிராஃப்ட்ஸ் முறையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வுகுழு  முயன்றுள்ளது. ஆய்வாளர் ஜூலியன் ஹிப்பர்ட் தலை

ஆறு மாநிலங்களில் மிளகாய் உற்பத்தியை தாக்கி அழிக்கும் பூச்சி!

படம்
  தெலுங்கானாவில் உள்ள விவசாயிகள், மிளகாயை அதிகம் பயிரிட்டு வருகின்றனர். அந்த மாநிலத்திலுள்ள சுபக்காபலி கிராமம் . இங்கு, திரிப்ஸ் பர்விஸ்பினஸ் எனும் பூச்சி மிளகாய் செடிகளில் மீது நடத்திய தாக்குதலில் நாற்பது ஏக்கரிலுள்ள பயிர்கள் நாசமாயின.  கடந்த ஆண்டு சித்தூரி ரவீந்திர ராவ் பண்ணையில் பூச்சி தாக்கியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லியைக் கூட ராவ் பயன்படுத்தினார். ஆனால் எந்த பயனும் இல்லை. பிரச்னையை சொல்லி, அதற்கான தீர்வைத் தேடுவதற்குள் காரியம் கைமீறிவிட்டது. ஒரே வாரத்தில் அத்தனை பயிர்களும் நாசமாகிவிட்டன. இதனால் மனமுடைந்த ராவ் தற்கொலை செய்துகொண்டார்.  மிளகாயை பயிரிட அவர் 20 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். பயிர்கள் பூச்சியால் வீணாகிவிட்டதால், கடனைக் கட்டமுடியாத விரக்தி அவரை பாதித்து வீழ்த்திவிட்டது.  மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் திரிப்ஸ் பூச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்கள் ஆகும்.   இந்தியாவில் திரிப்ஸ் பூச்சி, கர்நாடகத்தில் பப்பாளித் தோட்டத்தில் முதன்முறையாக கண்டறியப்பட்டது.  2018-19 ஆம் ஆண்டுகளில் அலங்காரச் செடிகளில் தி

தேவைக்கும் உற்பத்திக்குமான தடுமாற்றமான உறவு! - டேட்டா ஜங்க்ஷன்

படம்
  சைக்கிள், கழிவறை நாப்கின் தாள்கள், செமி கண்டக்டர்கள் ஆகியவை இப்போது தட்டுப்பாடாக உள்ளன. இதற்கு காரணம், பெருந்தொற்று எனலாம். உண்மையில், விற்பனைக்கும் , உற்பத்திக்கும், தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளிதான் இதற்கு காரணம். இதனை புல்விப் விளைவு என்கிறார்கள் . இப்போது அதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  செமி கண்டக்டர்கள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் துறைகளின் எண்ணிக்கை 169. இதனை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.  சிப் தட்டுப்பாட்டில் அமெரிக்காவில் 1 சதவீத ஜிடிபி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 78 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் சைக்கிள் விற்பனை 38 சதவீதமாக மட்டுமே  இருந்தது.  பெருந்தொற்று ஏற்பட்டு பொதுமுடக்கம் அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த்து. அப்போது மட்டும் அமெரிக்காவில் கழிவறை நாப்கின்களை வாங்க 1.4 பில்லியன் டாலர்களை செலவழித்திருந்தனர்.  சூப்பர் மார்க்கெட்டின் மேனேஜருக்கு கடையில் விற்பனையாகும் பொருள் பற்றித்தான் தெரியும். அவருக்கு, குறிப்பிட்ட பொருள் தொழிற்சாலையில் எந்தளவு விற்பனையாகிறது என்று தெரியாது. தொழிற்சாலையில் உள்ள

பசுக்களுக்கு ஆதார் அட்டை வழங்கி அதன் உற்பத்தித்திறனை அதிகரிக்கவிருக்கிறோம்! - அதுல் சதுர்வேதி

படம்
        அதுல் சதுர்வேதி         விலங்குகள் நலத்துறை செயலர் அதுல் சதுர்வேதி விலங்குகள் மேம்பாட்டு நிதியகத்தை தொடங்கியிருக்கிறீர்களே ? இந்த அமைப்பு தனியார் துறையினர் பால் , இறைச்சிக்காக முதலீடு செய்வதற்கானது . இந்த அமைப்பு மூலம் திட்டங்களை மேம்படுத்துவதால் இறைச்சிகளை பதப்படுத்துவது எளிதாகும் . இதன் மூலம் பண்ணை விலங்குகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் . வாடிக்கையாளர்களுக்கு தரமான இறைச்சி கிடைக்கும் . உற்பத்திதிறன் பால் உற்பத்தி ஆகியவற்றுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் ? நீங்கள் கூறும் உற்பத்தித்திறன் , பால் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன . நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பசு ஆதார் மூலம் பசுக்களின் எண்ணிக்கை அவற்றின் உற்பத்தித்திறன் ஆகியவற்றை எளிதாக கண்டுபிடிக்க முடியும் , பால் உற்பத்தி என்பது கால்நடைகளுக்கு நோய் வராமல் இருப்பது மூலம்தான் சாத்தியம் . அதற்காக அனைத்து பசுக்களுக்கும் அதாவது 4 முதல் எட்டு வயதானவற்றுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் . இதன்மூலம் அவற்றின் நோய் கட்டுப்படுத்தப்படும்

பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் அபாயகரமான அளவில் அதிகரித்து வருகிறது!

படம்
        பெருந்தொற்று காலத்தில் பிளாஸ்டிக் எந்தளவு அதிகரித்துள்ளது என்பதை டேட்டா மூலம் பார்ப்போம். ஆண்டுதோறும் மாநகராட்சி மூலம் உருவாகும் திடக்கழிவு அளவு 55-65 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவு 3.3 மில்லியன் டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 43% தனிநபர் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளின் அளவு 11கி.கி. தினசரி இந்தியாவில் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 609 டன்கள் கோவிட் -19 பாதிப்பில் உருவாகும் கூடுதல் மருத்துவக் கழிவு 101 டன்கள்(தினசரி) நாடுதோறும் உருவாகும் மருத்துவக்கழிவுகளின் அளவு 840 டன் (தினசரி)   உலகம் முழுவதும் 1950-2015 வரையில் உருவான பிளாஸ்டிக் உற்பத்தியின் அளவு 8.3 பில்லியன் டன் 1950-2015 காலகட்டத்தில் உருவான பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு 6.3 பில்லியன் டன். பிளாஸ்டிக் கழிவுகளில் 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.  79 சதவீத பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் கழிவாக கொட்டப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா  

சீனாவிடம் கற்போம் - விவசாயத்தில் சிறக்கும் டிராகன் தேசம்!

படம்
giphy.com விவசாயத்தில் சீனாவிடம் இருந்து என்ன கற்கலாம்? இனி இந்தியாவுக்கு பாகிஸ்தான் பொருட்டில்லை. பாகிஸ்தான் பொருளாதார சிக்கலில் மூழ்கிவிட்டது. அதன் பட்ஜெட்டை விட இந்தியாவின் பட்ஜெட் அதிகம், வளர்ச்சிக்கான வேகமும் அதிகம். சீனாவைப் பார்ப்போம். சீனா, இந்தியர்களை விட குறைவான நிலத்தில அதிகளவு விவசாயம் செய்து உற்பத்தியை பெருக்கியிருக்கிறார்கள். நாம் 407 பில்லியன் உற்பத்தி என்றால் சீனர்கள் 1367 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உற்பத்தி செய்து வருகிறார்கள். சீனர்கள் 41 சதவீத நிலத்திலும், இந்தியர்கள் 48 சதவீத நிலத்திலும் விவசாயம் செய்து வருகிறார்கள். காரணம் சீனர்கள் ஆராய்ச்சிக்கு மட்டும் 7.8 பில்லியன் டாலர்களை செலவு செய்கின்றனர்.இந்தியாவில் இதன் அளவு 1.4 பில்லியன் டாலர்களாக உள்ளது. அப்புறம் எப்படி முன்னேற்றம் சாத்தியமாகும்? இந்தியாவில் இதுதொடர்பாக நடந்த ஆய்வில் விவசாயத்துறையில் செய்யும் 11.2 ரூபாய், முன்னூறுக்கும் மேற்பட்டவர்களை வறுமையிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று கூறுகிறது. 1990களில் நடந்த தாராயமயமாக்கள் அந்நிய முதலீடுகளை அதிகரித்தது. வியட்நாம் ரேஷரை நாம் பயன்படுத்த வைத்தத

காணாமல் போன பெண் தொழிலாளர்கள்! - ஜிடிபி சரிவுக்கு முக்கியக் காரணம்!

படம்
foreign relation council மாருதி, ஹோண்டா, பஜாஜ் கம்பெனிகள் பற்றி கவலைப்பட்ட அளவுக்கு நாம் பெண் தொழிலாளர்கள் பற்றி கவலைப்படவில்லை. காரணம், பெண்களுக்கான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்துவரும் காலகட்டம் இது. பெண் தொழிலாளர்களை பார்ப்பது அரிதாகி வருகிறது. என்ன காரணம்? பெண்கள் பெருமளவு கல்வி அறிவு பெற்றுள்ளார்கள். இதனால் பாமர பெண்கள் பார்க்கும் வேலைகளைச் செய்யத் தயங்குகிறார்கள். கிராமத்து பெண்கள் கூட சற்றே ரிஸ்க் எடுத்து நகருக்கு வந்தால், அவர்கள் நல்ல வேலையில் சேருவார்களே தவிர காட்டு வேலைக்கோ, கட்டட வேலைக்கோ போவது சாத்தியமில்லை. கிராம ப்புறத்தில் கூட குறைந்தபட்சம் பிஹெச்டி வரை படித்து விடுகிறார்கள் பெண்கள். காரணம், கல்விக்கட்டணம் குறைவு. மற்றொன்று கருத்தாகப் படிப்பதும்தான். பெண்கள் வேலைக்குச்சென்றாலும் கல்வித்தகுதி சார்ந்தே யோசிக்கிறார்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது, பெரும்பாலும் வேலையைக் கைவிடும் முடிவை அவர்களே எடுக்கிறார்கள். காரணம், குடும்பத்திற்கான நேரத்தை  செலவிடுவதுதான். சென்னை போன்ற மாநகரங்களில் இருவரும் வேலைக்கு செல்வது அவசியம். பெரும்பாலும் அதனை புகாரின்