இடுகைகள்

குழந்தைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு - ஜீன் பியாஜெட்டின் ஆய்வு

படம்
  காலத்திற்கேற்ப குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி மாறுகிறது, குறிப்பிட்ட வயது வரும்போது ஏற்படும் மாற்றங்கள் என்ன, மனநிலை மேம்பாடு ஆகியவற்றை பற்றி உளவியலாளர் ஜீன் பியாஜெட் ஆராய்ச்சி செய்தார். குழந்தைகள் இயல்பாகவே சுதந்திரமாக இயங்கி வேண்டும் விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்கள் என ஜீன் நம்பினார். அவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் குறிப்பிட்ட சூழலை அமைத்துக்கொண்டு வழிகாட்டினால் போதுமானது என கருதினார். கல்வி என்பது ஆண், பெண் என இருபாலினத்தவருக்கும் புதிய விஷயங்களை செய்வதற்கான திறனை தருவதே ஆகும் என்று கூறினார்.  குழந்தைகள் தங்களுக்கு இயற்கையாக உள்ள ஐம்புலன்கள் மூலம் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதில் படைப்புத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் உள்ளடங்கும். ஒன்றை உணர்வது, அதை தேடுவது, மேம்பாடு அடைவது, தேர்ச்சி பெறுவது என குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்கிறது. 1920ஆம் ஆண்டு, ஆல்பிரட் பைனட், குழந்தைகளின் அறிவுத்திறனுக்கான அளவீட்டை உருவாக்கினார். இவர் கேள்விகளுக்கான பதிலை மட்டுமே எதிர்பார்த்தார். அதை அடிப்படையாக நினைத்தார். ஆனால், அந்த பதில்கள் குழந்தைகளைப் பொறுத்த

தனது நட்சத்திரங்களை நமது வானத்திற்கும் இடமாற்றும் கவிதைகள் - யூமா வாசுகி கவிதைகள் - யூமா வாசுகி

படம்
  யூமா வாசுகி யூமா வாசுகி கவிதைகள் தன்னறம் வெளியீடு  விலை 300 யூமா வாசுகியின் கவிதைகள் ஆறு நூல்களிலிருந்து பெறப்பட்டு தொகுத்து தனி நூலாக்கப்பட்டிருக்கிறது. நூலின் அட்டைப்படம் வினோத் பாலுச்சாமியின் ஒளிப்படக்கலை மூலம் கண்ணைக் கவருகிறது. ஆலமரத்தின் கீழ் கவிஞர் யூமா வாசுகி நிற்கிறார்.   வேலைவாய்ப்பின்மை, இயலாமை , பசி, மரணம், நோய் பற்றியெல்லாம் எழுதும்போது கவிதைகளில் தனிக்கூர்மை தெரிகிறது. இதெல்லாம் கவிஞரை கடுமையாக பாதித்திருக்கிறதா என்று தெரியவில்லை. தனது மனதில் உள்ள வருத்தங்களை தமிழ்மொழியில் சாணை பிடித்து எழுதியிருக்கிறார். படிக்க படிக்க மனங்களில் ரத்தம் தெறிக்கிறது. வழிகிறது. இந்த நூல் தொகுப்பில் முக்கியமானது என நினைப்பது குழந்தைகள் பற்றிய கவிதைகள்தான். முயலை வீட்டில் வளர்ப்பதாக பொய் சொல்வது, பெண்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் இருந்து   மகளைப் பெற்றவுடன் கடவுளாக மாறுவது, குழந்தையை ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றும்போதுகூட பயந்துவிடாதே   என்று ஆறுதல் கூறுவது, ஓவியங்களை தீட்டும் குழந்தைகளை மலர்க்கூட்டம் என வர்ணிப்பது, பேருந்தில் கையில் கிடைக்கும் குழந்தையை ஆசிர்வாதமாக   நி

குழந்தைகளை கொன்றொழித்த கர்ப்பிணி மையங்கள் - விக்டோரியா கால கொடுமை

படம்
  பேபி ஃபார்மிங் என்றொரு காலம் மேற்குலகில் இருந்தது. தமிழில் குழந்தை விவசாயம் என்று சொன்னால் கண்றாவியாக இருப்பதால், குழந்தை உற்பத்தி அல்லது உருவாக்கம் என சொல்லலாம். தருமொழி, பெறுமொழி பிரச்னையால் இப்படி மாற்றிக்கொள்வோம்.   மேற்கு நாடுகளில் டீன் ஏஜ் காலங்களில் பெண்கள் தனியாக சுற்றத் தொடங்குவார்கள். தனக்கான இணையைத் தேர்ந்தெடுப்பார்கள், செக்ஸ் வைத்துக்கொள்வதும் கூட சகஜமானது. செக்ஸ் இயற்கையானதும்தானே? செக்ஸ் வைத்துக்கொண்டு குழந்தை உருவாகி அதை வளர்த்தெடுக்கும் திடமான மனம் கொண்ட பெண்கள் மேற்குலகில் உண்டு. பொதுவான இந்தியச் சமூகத்தில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றெடுத்தால் தே*** என்று கூறுவார்கள். இங்கு நான் தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். அதே சூழல் மேற்கு நாடுகளிலும் அப்போது இருந்தது. இப்படி ஒரு அவமானம் நமக்கும் குடும்பத்திற்கும் வரக்கூடாது என விக்டோரியா கால ஆட்கள் நினைத்தனர். எனவே, கல்யாணம் ஆகும் முன்னரே வயிற்றை தள்ளிக்கொண்டு வாந்தி எடுத்த வாரிசுகளை தனியாக இருக்கும் கர்ப்பிணி இல்லங்களில் சேர்த்து பராமரித்தனர். இதற்கு அந்த இல்லங்களுக்கு குறிப்பிட்ட அளவில் காசு

ஏழை மக்களின் நோய்களைத் தீர்க்க உதவும் ஃபெமா! - மோகன் முத்துசாமி, உதயகுமாரின் புதிய முயற்சி

படம்
  சென்னை வியாசர்பாடியைச்சேர்ந்தவர் மோகன் முத்துசாமி. இவர், தனது வீட்டருகே வாழ்ந்து வந்த சிறுமி, டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தார். அச்சிறுமியை மருத்துவம் செய்து காப்பாற்றும் அளவுக்கு அவளது தந்தையிடம் பணமில்லை. இது மோகனை யோசிக்க வைத்தது. பின்னாளில் ஃபெமா எனும் அமைப்பை தனது நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து தொடங்க வைத்தது. ஃபெமா என்ற தன்னார்வ அமைப்பு, ஏழை மக்களுக்கான மருத்துவ உதவிகளை, நோய்களை கண்டறியும் ஆய்வகத்தை நடத்தி வருகிறது. இங்கு 30 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொண்டால் போதும். ஆலோசனை, மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்த சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஃபெமா செயல்படுகிறது.   ஏழை, வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கான இலவச மருத்துவ சேவைகளை முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. நோய்களைப் பற்றிய விழிப்புணர்வுக்கு தெரு நாடகங்களை நடத்துகிறார்கள். கிளினிக்கிற்கு வரும் நோயாளிகள் தவிர, படுக்கையில் படுத்துவிட்ட நீண்டகால நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சை, மருந்துகளை வழங்குகிறார்கள். வீட்ட

குழந்தைகளுக்கான வாசிக்க அற்புதமான மர்ம நூல்கள் !

படம்
  குழந்தைகளுக்கான நூல்கள்  பேட் கய்ஸ் ஆரோன் பிளாபே ஸ்காலஸ்டிக் பிரஸ் பதினைந்து புத்தகங்களைக் கொண்ட தொகுப்பு. அனைத்திலும் சுறா தான், குற்றங்களைக் கண்டுபிடிக்கிறது. மனிதர்களைப் போல பேசி பல்வேறு குற்றங்களை கண்டறிந்து தவறை ஏற்க வைக்கிறது.  ஃபிரம் தி டெஸ்க் ஆஃப் ஜோ வாஷிங்டன்  ஜேன் மார்க்ஸ்  காத்தரின் டேகன் புக்ஸ்  12 வயது சிறுமி தன் தந்தை குற்றம் செய்யாதவர் என்பதை நிரூபிக்க என்னென்ன விஷயங்களை செய்கிறாள் என்பதே கதை. உணர்ச்சிகரமான சம்பவங்கள் நூலில் நிறையவே உள்ளன.  தி மேஜிக் மிஸ்ஃபிட்ஸ் நீல் பேட்ரிக் ஹாரிஸ்  ஓவியம் - லிஸி மர்லின், கைல் ஹில்டன் லிட்டில் ப்ரௌன் புக்ஸ் கார்டர் மற்றும் ஐந்த டீனேஜ் மந்திரவித்தை கலைஞர்கள் சேர்ந்து உலகின் பெரிய வைரத்தை கொள்ளையிலிருந்து எப்படி தப்புவிக்கிறார்கள் என்பதே கதை. நிறைய ஜோக்குகள், மந்திர வித்தைகள் என படிக்க சுவாரசியமான கதைகளைக் கொண்டுள்ள நூல் இது.  தி மிஸ்டீரியஸ் பெனடிக்ட் சொசைட்டி டிரென்டன் லீ ஸ்டீவர்ட் ஓவியம் - கார்சன் எல்ஸ்  லிட்டில் ப்ரௌன் புக்ஸ் ஆதரவற்ற சிறுவர்கள், தங்கள் பள்ளியில் முதல்வராக உள்ள தீய சக்தியை எப்படி துப்பறிகிறார்கள், அவர் செய்யும் செயல்க

ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் இனவெறி காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்! - லிண்டா வில்லாரோஸா

படம்
  லிண்டா வில்லாரோசா எழுத்தாளர் பல ஆண்டுகளா கருப்பின மக்களின் உடல், மன ஆரோக்கியம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பெண்மணி. அண்மையில் அண்டர் தி ஸ்கின் - தி ஹைடன் டோல் ஆஃப் ரேசிசம் ஆன் அமெரிக்கன் லைவ்ஸ் அண்ட் ஆன் தி ஹெல்த் ஆஃப் அவர் நேஷன் என்ற நூலை எழுதியுள்ளார்.  இனவெறி என்பது கருப்பின மக்கள் கடந்த எப்படி நாட்டின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உருவாகியுள்ளது என நினைக்கிறீர்கள்? அமெரிக்காவின் நிலையை நீங்கள் பிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளின் இறப்பு அதிகரிப்பதோடு, மக்களின் ஆயுளும் குறைந்து வருகிறது. கர்ப்பிணிகளின் இறப்பும் கூடி வருகிறது. இதனை பிற வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டுத்தான் கூறுகிறேன். இப்படி நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே கருப்பின மக்கள் மட்டும் சார்ந்தது கிடையாது. நாடு முழுக்க இந்த பிரச்னை உள்ளது.  அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு உடல் மனரீதியான பிரச்னைகள் உள்ளன. அவர்கள் குழந்தை பெறுவதே சிக்கலானது என கூறுவது ஏன்? பெருந்தொற்று காலத்தில் பிறரை விட அதாவது வெள்ளையரை விட பத்து வயது இளமையானவர்கள் கூட இறந்துபோனார்கள். கோவிட் காலத்தில் ஏராளமான கருப்ப

மரப்பாச்சி சொன்ன ரகசியம் நாவல் - இனி இலவசமாக யாரும் அச்சிட்டு விற்கலாம்!

படம்
  பல்வேறு ஊடகங்களில் வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர் திரு.பாலபாரதி அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை பேட்டி இது. இந்த பேட்டிக்கு முன்னரே, தனது வலைத்தளத்தில் மரப்பாச்சி சொன்ன ரகசியம் நூலை யார் வேண்டுமானாலும் அச்சிட்டு விற்றுக்கொள்ளலாம் என அனுமதியை வழங்கிவிட்டார்.  மின்னூல், ஊடக படைப்பாக்கங்களுக்கு அனுமதி தேவை என கூறியிருப்பது பொதுவுடமை ஆட்களுக்கு சற்றே கஷ்டமாக இருக்கலாம்.  குழந்தைகள் மீதான  பாலியல் வல்லுறவு பற்றிய கதையைப் பேசும் நூல்  மரப்பாச்சி சொன்ன ரகசியம். இலவசமாக, எழுதிய ஆசிரியருக்கு ராயல்டி தராமல் அச்சிட்டுக்கொள்ளலாம் என்று கூறிய முயற்சிக்கு எந்தளவு ஆதரவு இருக்கும் என்று தெரியவில்லை. ஏதாகிலும் இப்படி வெளிப்படையாக அறிவித்த திரு. பாலபாரதி அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.  எழுத்தை வாழ்க்கையாக வாழ்வாதாரமாக கொண்ட எழுத்தாளர்கள் இப்படி துணிச்சலாக அறிவிப்பை வெளியிட நிறைய நெஞ்சுரம், விட்டுக்கொடுத்தல் தேவை. செல்லுமிடமெங்கும் தன்னை இடதுசாரி சிந்தனையாளர் என தைரியமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் திரு. பாலபாரதி அவர்களுக்கு வாழ்த்துகள்.   நூல், பாலபாரதி டாட் நெட் வலைத்தளத்தில்

போக்சோ சட்டத்திற்கு வயது 10!

படம்
  1 வரும் நவம்பர் மாதம் வந்தால் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல், குற்றங்கள் தொடர்பான போக்சோ சட்டத்திற்கு வயது 10 ஆகப்போகிறது.  2012ஆம் ஆண்டு மே 22 அன்று போக்சோ சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது. உறுப்பினர்கள் வாக்களித்து ஏற்கப்பட்டு நவம்பர் 14 அன்று நடைமுறைக்கு வந்தது. இதில் ஆபாசப்படும், பாலியல் சுரண்டல், வல்லுறவு செய்யப்படும், சீண்டப்படும் குழந்தைகளை பாதுகாக்க முடியும். இதற்கான விசாரணைகள் அனைத்துமே பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுசரணையான வழியில் இருக்கும். இதுதான் சட்டத்தின் சிறப்பம்சம்.  நகரங்களில் பதிவாகும் போக்சோ வழக்குகள்  திருச்சி - 177 சென்னை - 1404 கோவை - 284 சேலம் - 361  மதுரை -440 திருநெல்வேலி - 198  திருப்பூர் - 187 2012ஆம் ஆண்டு போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -43 2020ஆம் ஆண்டு பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை -3,187 2 கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு முதல்வர் ஸ்டாலின், பள்ளி வளாகத்தில் நடக்கும் பாலியல் குற்றங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த வழக்குகளை வேகமாக பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் பேசினார்

காலநிலை பற்றிய குழந்தைகளுக்கான புனைவுக் கதைகள்!

படம்
  காலநிலை பற்றிய நூல்கள் ரெயின்போ கிரே - ஐ ஆப் தி ஸ்டோர்ம் லாரா எல்லன் ஆண்டர்சன் பார்ஷோர் சீரிசின் இரண்டாவது நூல். ரெயின்போ கிரே தனது காலநிலை பற்றி ஆற்றலை மெல்ல கற்றுக்கொள்ளத் தொடங்குகிறாள். இதன் பின் நடக்கும் சம்பவங்கள், அவளின் ஆற்றல் என்னவானது என்பதை பற்றி பேசுகிறது நூல்.  தி லைட்னிங் கேட்சர்  கிளார் வேஸ் ப்ளூம்ஸ்பரி ஃபோல்டிங் ஃபோர்ட் என்ற கிராமத்தில் நடக்கும் வினோதமான நிகழ்ச்சிகளைப் பற்றி எப்படி விசாரணை செய்து பல்வேறு உண்மைகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை. ஆல்ஃபி, சாம் ஆகிய இருவரும் தான் நாயகர்கள். இவர்களிடம் உள்ள ஆயுதம் பைக், நோட்பேட் அல்ல. கூர்மையான புத்திதான். அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே நாவலின் மையம்.  எ கேதரிங் ஸ்ட்ரோம் தம்சின் மோரி யுகிளான் பப்ளிஷிங் இதுவும் கூட சீரிசின் தொடர் நாவல்தான். ஸ்டெல்லா, நிம்பஸ் என இருவரும்தான் நாவலை நடத்திச் செல்கிறார்கள். இருவரும் முக்கியமான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மந்திர தந்திர வியாபாரங்கள் நடைபெறும் நிகழ்ச்சி அது. அங்கு நேரம் சில சிக்கல்களை எப்படி எதிர்கொண்டு மீள்கிறார்கள் என்பதை நாவல் விவரிக்கிறது.  தி ஸ்ட்ரோம

குழந்தைகளின் தத்தெடுப்பு குறைந்துவருகிறது!

படம்
  இந்தியா போன்ற பல்வேறு மக்கள், இனக்குழுக்கள், சமயங்கள், கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் த த்தெடுப்பது என்பது எளிதாக நடக்க கூடியது அல்ல. சொந்த ரத்த த்தில் குழந்தை உருவாக வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் த த்தெடுப்பதை எளிதாக செய்துவிட இந்தியர்கள் இதனை ஏற்பதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். தத்தெடுப்பதை முறைப்படி செய்ய அரசு அமைப்பு காரா உள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்தால் உடனே குழந்தை கிடைத்துவிடாது. அதற்கென நீங்கள் தவமே செய்யவேண்டும்.  ஏன் என்று கேட்டால், அரசு அமைப்பில் உள்ள நடைமுறை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் பத்து முதல்  ஐந்து மணிக்குள் தான் செய்வார்கள். எனவேதான் இந்த தாமதம் நேருகிறது. இன்னொரு சிக்கல், அரசு அமைப்பு செய்வதால் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அதிகாரிகளை உலுக்குகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையில் இந்தியாவில்  குழந்தைகளை த த்தெடுப்பது சற்றே வளர்ந்து மிகவும் தேய்ந்த தொனியில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் த த்தெடுப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது.

ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!

படம்
  சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.  சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.  சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்

குழந்தைகளுக்கான எளிமையான கவிதைகளை இயற்றிய அமெரிக்க கவி!

படம்
  ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெல்லோ எளிமையான உணர்ச்சிகளை படைப்பாக்கியவர்! இவர் காலத்தில் பலரும் முக்கியமான இலக்கியப் படைப்புகளை உருவாக்க மெனக்கெட்டனர். ஆனால் வேட்ஸ்வொர்த் நேர்மையான மனிதர்களைக் கொண்ட சிறு உணர்ச்சிகளைப் பேசும் கவிதைகளை எழுதினார்.  இதன் காரணமாக இவரின் படைப்புகளை பலரும் குழந்தைத்தனமாக இருக்கிறது என விமர்சித்தனர். ஆனால் அன்றைய காலத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளுக்கு படித்துக் காட்ட எளிதான கவிதை என்று இருந்தது ஹென்றியினுடையது மட்டும்தான்.  1807ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பிறந்தவர் ஹென்றி. அமெரிக்காவின் போர்லேண்டில் பிறந்தவர், தனது இளமைக் காலத்திலேயே இலக்கியத்திற்காக உழைப்பது என முடிவு செய்துவிட்டார்.  ஹென்றியின் பெற்றோர் அவரை ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா அனுப்பினார்கள். பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலி, போர்ச்சுக்கீஷ், ஜெர்மன் ஆகிய மொழிகளை கற்றுக்கொள்வான் என நம்பினார்கள். மைக்கேல் ஏஞ்சலோவின் கவிதையை சிறப்பாக மொழிபெயர்த்தார். பிறகு, டண்டே அலிகியரின் டிவைன் காமெடியை மொழிபெயர்ப்பு  செய்ததை இலக்கிய வட்டாரம் முக்கியமானது என குறிப்பிடுகிறது.  ஹென்றிக்கு இருமுறை திருமணம் ஆனது. முதல் மனை

அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

படம்
  காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்! மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார்.  மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை.

பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்! - பேராசிரியர் மைக்கல் அப்பன்ஹெய்மர்

படம்
  மைக்கேல் அப்பன்ஹெய்மர் பருவநிலை மாற்றம் உலகில் பருவநிலை மாற்றத்திற்கு அதிக விலை கொடுக்கவேண்டியிருப்பவர்கள், குழந்தைகள்தான். இப்போது அவர்களே பிறருக்கும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார்கள். யுனிசெப்பின் கணக்கீடுப்படி, ஒரு பில்லியன் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பஞ்சம், வெப்ப அலைகள், வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.  1960ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, எதிர்வரும் ஆண்டுகளில்  குழந்தையின் பிறப்பு கூட மேற்சொன்ன சிக்கல்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. காற்று மாசுபாட்டால் குழந்தைகள் 90  சதவீதம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதில் ஏழைக்குழந்தைகள் அதிக விலையைக் கொடுக்கவேண்டும். 2030ஆம் ஆண்டில் 132 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 82.4 மில்லியன் மக்கள் வேறுவழியின்றி பிற இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை ஏற்படும். உணவு, நீர் பற்றாக்குறை காரணமாக குழந்தைகளின் வீடுகள் இல்லாமல் போகும். கூடவே இயற்கை பேரிடர்களாக பஞ்சம், வறட்சி, வெப்ப அலைகளின் தாக்கமும் இருக்கும். 2 மைக்கேல் அப்பன்ஹெய்மர் மைக்கேல் அப்பன்

காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிந்துகொள்ளலாம்! - ஆச்சரியப்படுத்தும் அறிவியல் காமிக்ஸ்கள்

படம்
  sample image காமிக்ஸ் மூலம் அறிவியலைப் புரிஞ்சுக்கலாம்!  உலகம் முழுக்க வெளியாகும் காமிக்ஸ் நூல்களின் மூலம் மாணவர்களுக்கு எளிதாக அறிவியலைப் புரிய வைக்க முடியும் என கல்வி வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.  மார்வெல், டிசி, லயன் முத்து காமிக்ஸ் உள்ளிட்ட காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பது  பொழுதுபோக்கிற்காக என்று தான் பலரும் நினைப்பார்கள். ஆனாலும் இதில் உருவாக்கப்படும் பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள், கதையின் மையம் என பலவும் அறிவியல் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. எனவே, இதனை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டு வருகி்ன்றன.  படக்கதைகளில் வரும் ஸ்பைடர்மேன், ஆன்ட்மேன், பாய்சன் ஐவி ஆகிய பாத்திரங்கள் உயிரியல், தாவரவியல் சார்ந்த பல்வேறு சமாச்சாரங்களை நமக்கு சுவாரசியமான வழியில் கற்றுக்கொடுக்கின்றன. அறிவியலில் ஈர்ப்பில்லாத மாணவர்களையும் காமிக்ஸ் புத்தகங்கள் உள்ளே இழுத்து வருகின்றன.  காமிக்ஸ்களை படிப்பதால் ஆழமான அறிவியலை கற்க முடியும் என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை. ஆனால் மொழியறிவு, எழுத்துகள், கணிதம் ஆகியவற்றை கற்பதற்கான தூண்டுகளை உருவாக்குவதோடு, புதுமைத்திறனும் கூடுதலாக

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல

குழந்தைகளின் உளவியலை சிதைக்கும் பாலியல் சீண்டல், வல்லுறவு!

படம்
                பாலியல் சீண்டல் இதில் வயது வந்தோர்களை உள்ளடக்கவில்லை . முழுக்க குழந்தைகளை எப்படி வயது வந்தோர் பயன்படுத்தி காம வெறியை , ஆசையை தீர்த்துக்கொள்கிறார்கள் . அதனால் அவர்களின் பின்னாளைய வாழ்க்கை உளவி்யல் குறைபாடுகளோடும் தீர்க்க முடியாத சிக்கல்களோடும் அமைவதை பார்க்கலாம் . குழந்தை ஆரோக்கியமாக வளர நல்ல உணவு மட்டும் அளித்தால் போதாது . குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும் . பெற்றோர்களுக்கு நல்ல மனநிலை வாய்த்திருப்பதோடு பக்கத்தில் இருக்கும் ஆட்களும் ஒழுங்கானவர்களாக அமையவேண்டும் . அப்படி சரியான விஷயங்களை அமையவில்லை . நல்லதும் அல்லதும் பெற்றோர்களால் சொல்லித் தரப்படவில்லை என்றால் குழந்தை வளர்ந்தபிறகு உலகை விரோதமாகவே பார்க்கும் . நட்பை , உறவை அனைத்தையுமே சந்தேகமாக பார்க்கும் . அனைத்து உறவுகளுமே அன்பினால் , மரியாதையால் , நட்பால் உருவாக்கப்படுவதில்லை . சில உறவுகள் அதிகாரத்தால் , வலியால் , அவமானப்படுத்துதல்களாலும் உருவாகும் . வலியை மகிழ்ச்சியாக ஒருவர் உணரத் தொடங்கும்போதுதான் அவருக்குள் உளவியல் குறைபாடுகள் மெல்ல முளைவிடத் தொடங்குகிறது . சிறுவயதில் பெற்றோர