இடுகைகள்

பிரதிநிதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!

படம்
                நேர்மை, திறமை கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் தேவை!  அன்னா ஹசாரே உலகில் அணுக முடியாத அரசுகளின் அணுகுமுறையின்மீது  நேர்மறையான தனது நடவடிக்கைகளின் மூலம் மாற்றத்தை தூண்டியுள்ளார். இளைய தலைமுறை மூலம் மாற்றத்திற்கான வழியைக் கண்டறியும் ஆர்வத்திற்கு ஒளிபாய்ச்சியுள்ளார். இந்தியாவின் தரமான மதிப்புகளை மீண்டும் புதுப்பிக்க முயற்சித்துள்ளார். ஆம், நம்மில் பலரும் ஊழலை அமைப்பு (அ) வேறு வகையில் தூண்டப்பட்டு செய்தாலும் நம்மில் ஒரு பாகம் சரியானதாகவே இன்றும் மாறாமல் இருக்கிறது. அதை வலுபெறச் செய்தல் வேண்டும். ஜன்லோக்பால் மசோதா என்பதைத்தாண்டி அன்னா குழுவினரது நீதிக்கான போராட்டம் என்பதை சமூகத்திற்கான முக்கியமான பங்களிப்பு என்று கூறமுடியும்.  இந்த சாதனைகளுக்கும் விலை உண்டு. நீண்டகாலமாக தீர்க்கப்படாத பல்வேறு குழப்பங்களைப் பார்க்கிறோம். அழகற்ற, மகிழ்ச்சியற்ற விஷயங்கள் பிடிவாதம், கர்வம், விட்டுக்கொடுக்காதவை என பொதுமக்களுக்கான பார்வையில் இவை தெரிகிறது. கருத்தியல் உலகில் மக்களுக்கு பொருத்தமான காரணத்தோடு தனது பதவி (அ) அதிகாரம் கொண்டு சரியானதை செய்ய...

முதலமைச்சரை பணயக்கைதியாக்கி சாமானியனின் இறப்புக்கு நீதி கேட்கும் பத்திரிகையாளர்! - பிரதிநிதி - தெலுங்கு - நர ரோகித்

படம்
  பிரதிநிதி தெலுங்கு  இயக்கம் பிரசாந்த் மந்தரா நர ரோகித்தின் படம் என்றாலே எதிர்பார்ப்பு ஒன்றுண்டு. கதை என்பது வித்தியாசமாக வினோதமாக இருக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த படமும் விதிவிலக்காக அல்ல.  முதலமைச்சர், முதியோர் இல்லம் ஒன்றை திறந்து வைக்க போகிறார். அங்கு அவரை கடத்தி பணயக் கைதியாக்கி விடுகிறார்கள். அவரை கடத்தியவர் தான் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர் கேட்கும் கோரிக்கைகள் என்ன, ஏன் அந்த கோரிக்கைகளை முன் வைக்கிறார் என்பதே திரைப்படத்தின் கதை.  நர ரோகித் யார் என்பதை ஸ்ரீவிஷ்ணு போலீஸ் விசாரணையில் தான் சொல்லுகிறார். அவர் இப்படி இருப்பார் என்பதை நாம் அவரது நினைவுக்குறிப்பில்தான் அறிகிறோம். இதன்படி, அவரது பாத்திரம் வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, சாலையில் கோக் டின்னை எறியும் ஸ்ரீவிஷ்ணுவை துரத்தி வந்து... எப்படி பைக்கில் தான்.  கேனை திரும்ப காருக்குள் எறிகிறார். குப்பைத்தொட்டியில் போட வேண்டும் என்ற நற்கருத்தை அமைச்சர் மகனின் மனதில் விதைக்கிறார் நர ரோகித். கூடவே, ஸ்ரீவிஷ்ணுவின் உயிரையும் அதே இடத்தில் காப்பாற்றி அவரின் நட்புக்கு பாத்...

ட்விட்டரை பணிய வைக்க படாதபாடு படும் மத்திய அரசு!

படம்
                 சில நாட்களுக்கு முன்னர் நைஜீரியாவின் குடியரசுத் தலைவர் முகமது புகாரி, தனது கருத்தை வெளியிட மறுத்து நீக்கிய ட்விட்டருக்கு தடை விதித்தார். அரசின் தணிக்கை முறைக்கு ஆதரவான கூ செயலிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு புதிய தகவல்பாதுகாப்புக்கொள்கையை உருவாக்கி அதற்கு ஏற்பட சமூக வலைத்தள நிறுவனங்கள் கட்டுப்பட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றன. ட்விட்டர் மட்டும் முரண்டு பண்ண அதனை பின்விளைவுகளை எ ண்ணிப் பாருங்கள் என மத்திய அரசு மிரட்டி வருகிறது. பாஜக வைச் சேர்ந்த சம்பித் பத்ரா காங்கிரஸ் கட்சி கோவிட்டைப் பயன்படுத்தி டூல்கிட் பிரசாரங்களை, திட்டங்களை வகுக்கிறது என குற்றம் சாட்டினார். ட்விட்டரையும் கூட போகிற போக்கில் செய்திகளை மாற்றி வெளியிடுகிற ஊடகம் என்று திட்டினார். இதற்கு தகவல் தொடர்புத்துறை அமைச்சகமும் முட்டுக்கொடுத்தது. குருகிராமில் இருந்த ட்விட்டர் நிறுவனமும் மிரட்டப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரியாக ட்விட்டர் நியமிக்கவேண்டும் என்பதுதான் அரசின் சட்டம் சொல்லும் நியதி. மே 27இல் , அரசின் சட்டங்களைப் படித்த ...