இடுகைகள்

மனைவி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூன்றாவது பிறப்பில் எதிரிகளை நாயகன் எதிர்கொண்டு வெல்வானா?

படம்
  அகெய்ன்ஸ் காட்ஸ்  மாங்கா காமிக்ஸ்  மான்வா.காம்.  இதில் நாயகன் பலவீனமானவன். அவனுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமணம் கூட ஒரு நன்றிக்கடனை கழிக்கவே செய்யப்படுகிறது. திருமணத்திற்கு மாப்பிள்ளை கழுதையில் உட்கார வைத்து அழைத்து வரப்படுகிறான். அவனது சொந்தக்காரர்கள் இப்படி அவமானப்படுத்துகிறார்கள். மாப்பிள்ளை பலவீனமான உதவாக்கரை என ஊருக்கே தெரிகிறது. அதாவது அவன் தற்காப்புக்கலை கற்க முடியாதபடி உடலில் பிரச்னை இருக்கிறது. மேலும் அவனது அண்ணணுக்கே, தம்பி கட்டிக்கொள்ளும் பெண் மீது பொறாமை உள்ளது. எனவே,  தம்பிக்கு விஷத்தை டானிக் என கொடுத்து குடிக்கச் செய்கிறான். அப்போது அவனது உடலில் வேறு ஆன்மா ஒன்று குடியேறுகிறது.  அந்த ஆன்மாவினுள்ளே பொக்கிஷமாக கருதப்படும் விஷம் உள்ளது. அந்த விஷம் டானிக்கிலுள்ள விஷத்தை முறிக்கிறது. புதிய உடலில் குடியேறிய ஆன்மாவுக்கு இது மூன்றாவது வாழ்க்கை. ஏற்கெனவே இரண்டு வாழ்க்கை வாழ்ந்து இரண்டிலும் தற்கொலை செய்துகொண்டு இறந்த வரலாறு கொண்டிருக்கிறது. இந்த பிறவியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களை கவனிக்கத் தொடங்குகிறது. இதில் ஆறுதல், அவனுக்கு அத்தை முறை வரும் அவனது வயதுள்ள பெண்ணும்,

உறுப்புதான குற்ற கும்பலால் மனைவி, மகளை இழக்கும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வாழ்க்கைக் கதை!

படம்
  ஜோசப்  மலையாளம்  இயக்குநர் - பத்மகுமார் இசை -ரஞ்ஜின் ராஜ்  வேலையில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜோசப். கொலைகளை எளிதாக துப்பறிந்து கண்டுபிடிக்கும் திறமை கொண்டவர். இவருக்கு ஒரு மகள் உண்டு. மனைவி விவாகரத்து செய்துவிட்டு இன்னொருவரை மணந்துகொள்கிறார்.  ஜோசப்பிற்கு ஐந்து விசுவாச நண்பர்கள் உண்டு. அவர்களுக்கு ஓய்வு கிடைக்கும்போது மது அருந்திவிட்டு மலை உச்சியில் பாட்டு பாடிக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். இங்கு ஒரு திருப்புமுனையாக ஜோசப்பின் மனைவி விபத்தில் சிக்குகிறார். மூளைச்சாவு அடைந்ததாக சொல்லி உறுப்பு தானம் செய்ய மருத்துவமனையில் கேட்கிறார்கள். முன்னாள், இந்நாள் கணவர்கள் இருவரும் ஒப்புதல் தருகின்றனர். ஆனால் முன்னாள் கணவரான ஜோசப்பிற்கு, ஸ்டெல்லா இறந்துபோனது வருத்தம் தருகிறது. அவர் இறந்துபோன இடத்திற்கு சென்று பார்த்து அது விபத்தல்ல கொலை என்று நண்பர்களுக்கு கூறுகிறார். யார் கொலையாளி,என்ன காரணம் என்பதை படம் நிதானமாக பேசுகிறது. இறுதியாக வரும் காட்சிகள் நெகிழ்ச்சியானவை. மனதை ரணப்படுத்துபவை.  படத்தின் தொடக்கத்தில் திலீஸ் போத்தன், அரசு அதிகாரி கொடுக்கும் மெடல் ஒன்றை வாங்குகிறார். அவர் நினைவுகளின்

மதுவில் கலக்கப்பட்ட விஷம் - மனைவியா, தோழியா -யார் கொலையாளி?

படம்
  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்தவர் கேசி மெக்பெர்சன் பொமெராய். இவரை சுருக்கமாக கேசி என அழைக்கலாம். மருந்துகள் விற்கும் விற்பனைப் பிரதிநிதி. இவர் செய்யும் வேலையை அவரே சொன்னால்தான் தெரியும். ஏனெனில் பார்க்க திரைப்பட நடிகர் போல தோற்றம் கொண்டவர். அதனால் சில ஆண்டுகள் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறார். அவர் பார்பரா என்ற பெண்ணை மணந்துகொண்டார். உண்மையில் கேசிக்கும், பார்பராவுக்கும் எந்தவிதத்திலும் கணவன் மனைவி   என்ற பொருத்தமே கிடையாது. பார்க்கும் யாரும் மனதில்   நொடியில் இந்த உண்மையை உணர்வார்கள். ஆனால் சட்டப்பூர்வமாக தம்பதிகளாக வாழ்ந்தனர். கேசிக்கு கடல் நீரில் சர்ஃபிங் செய்வதில் நிறைய ஆர்வம் உண்டு. எனவே, தனது மனைவியுடன் அங்குலியாவில் தனியாக வீடு வாடகைக்குப் பார்த்துக்கொண்டு சென்றுவிட்டார். அருகிலேயே கடலும் இருக்கையில் அவருக்கு மகிழ்ச்சி எல்லையற்றதாக இருந்தது. ஆனால் எல்லாமே டிசம்பர் 2018ஆம் ஆண்டோடு சரி. அதில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் குடித்த மதுவில் விஷம் கலக்கப்பட்டு இருக்க கேசியும், அவரது பள்ளி   கால நண்பர் காலெப் கில்லெரியும் இறந்து போனார்கள்.

சீரியல் கொலைகாரரின் மகன் தனது கணவனா என சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி - ஃபிளவர் ஆப் ஈவில்

படம்
  ஃபிளவர் ஆஃப் ஈவில் - கே டிராமா லீ காங் ஜி - மூன் சே வோன் - ஃபிளவர் ஆஃப் ஈவில் பிளவர் ஆஃப் ஈவில் கே டிராமா லீ காங் ஜி, மூன் சே வோன்   பே சியாங் என்பவர் தனது டிடெக்டிவ் மனைவி, மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பே சியாங்கிற்கு இரும்பு கைவினைப்பொருட்களை செய்வதுதான் வேலை. இந்த நேரத்தில், அவரை சந்திக்க டிவி நிருபர் வருகிறார். அவருக்கு பே சியாங்கின் கடந்த காலம் தெரியும். அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்குற்றம் பற்றி.. இதனால் நிருபவரை பே சியாங் தனது வீட்டில் கீழறையில் கட்டிப்போடுகிறார். இந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர், சீரியல் கொலைகாரர் டியோன் சிக் என்பவரின் முறையில் கொலையாகிறார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் இப்போது கொலைகளை செய்தவர், அவரின் மகன் டூ சூ என ஊடகம், காவல்துறை முடிவு செய்கிறது. பழைய வழக்குகளை கையில் எடுத்து குற்றவாளி டூவை தேடத் தொடங்குகிறது. உண்மையில் டூ சூ வழக்கை ஆராயும் டிடெக்டிவ் மனைவிற்கு, கொலைகளை செய்வது தனது கணவரோ என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவர் நள்ளிரவில் வெளியே சென்று வரும் நாளில்தான் கணவர் அணிந்துள்ள உடைபோல அணிந

கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி

படம்
  இங்கிலாந்தில் நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர். வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில் பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக் கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால் அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து. ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது. சமூக செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள் நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்த

காதலித்த வெளிநாட்டு காதலன் அக்காவின் கணவரா? - பாவாகாரு பாகுன்னாரா - சிரஞ்சீவி, ரம்பா

படம்
                  பாவகாரு பாகுன்னாரா சிரஞ்சீவி, ரம்பா, பிரம்மானந்தம், பரேஷ் ராவல் இயக்குநர் ஜெயந்த் பானர்ஜி இசை மணி சர்மா வாக்கிங் இன் தி க்ளவுட்ஸ் கதையை எடுத்து தட்டி டிங்கரிங் பார்த்து நம்மூருக்கான மசாலாக்களை சற்று ஜாஸ்தியாக சேர்த்தால் பாவா பாகுன்னாரா படம் தயார். கதை தொடங்குவது வெளிநாடு ஒன்றில்தான். அதாவது நியூசிலாந்து. அங்குதான் ரம்பா படித்துக்கொண்டிருக்கிறார். சிரஞ்சீவி ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டார் என அவரது தோழன் புகார் செய்ய, அப்படியா என எதைப்பற்றியும் யோசிக்காமல் அடித்து உதைக்க கிளம்புகிறார் ரம்பா. அதாவது சொப்னா. அவர் அடித்து கை, காலை முறிக்க வேண்டுமென கூறியது ராஜூ என்ற மெகா ஸ்டார் சிரஞ்சீவிதான். அவர் அங்கு ஹோட்டல் ஒன்றை நடத்தி வரு 1,280 × 720 கிறார் கூடவே இந்தியாவில் அனாதை ஆசிரம் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கி அவர்களுக்கு உதவி வருகிறார். அறம் செய்யவும் பொருள் வேண்டுமே? அதற்குத்தான் ஹோட்டல் தொழில்..  இந்த சூழலில் சொப்னாவுக்கு ராஜூவுக்கும் காதல் வருகிறது. ராஜூ நான் இந்தியாவுக்கு போய்விட்டு வருகிறேன் என கிளம்பிவிடுகிறார். அங்கு வந்து அனாதை ஆசிரம வேலைகளை முடித்துவிட்டு பார்த்த

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான

வெளிநாட்டு பெண்களை இணைக்கும் கிளப்புகள்! - சமூக, கலாசார உறவுகளை பெண்கள் எப்படி பேணுகிறார்கள்?

படம்
              பெண்களை இணைக்கும் சமூக கிளப்புகள் டெல்லியில் வாழும் எழுத்தாளர்கள் நாவலில் பலரும் படித்திருக்கும் விஷயம்தான் . மேல்தட்டு வர்க்க குடும்ப பெண்கள் கிளப்புகளில் வந்து உட்கார்ந்துகொண்டு பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள் . இந்த கிளப்புகள் குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் பேசுதவதற்கென உருவாக்கப்படுகின்றன . இவற்றில் சேருவதற்கு 4,500 முதல் ரூ .25 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள் . இதன் பிரயோஜனம் என்னவென்று சிலர் யோசிக்கலாம் . கிராமங்களில் உள்ள கல்லுக்கட்டு , சாவடி எதற்கு கட்டி வைக்கிறார்கள் . நாயம் பேசுவதறகும் , ஓய்வு எடுப்பதற்கும் , மக்கள் ஒன்றாக கூடும் ஓர் இடமாக இருக்கும் . அதேதான் இங்கும் . அமெரிக்காவில் பணிபுரிந்துவிட்டு டெல்லி , மும்பை , சென்னை என திரும்பி வந்துவிட்ட பெண்களுக்கு இங்கு இந்தியர்கள் வாழும் வாழ்க்கை புரிபடாது . வெகு ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தவர்களுக்கு திடீரென வாழ்க்கையை வேரோடு பிடுங்கி கொண்டு வந்து வைத்தால் எப்படியிருக்கும் ? கடினமாக இருக்கும் . யாரோடும் நம்பி ஒரு வார்த்தை பேசிவிட முடியாது . வெளியில் செல்லவே தயக்க

வாழ்க்கையை கணக்கு சூத்திரங்களாக அணுகும் பேராசிரியர் வாழ்க்கையில் உணர்ச்சிகளை முக்கியமாக கருதும் மனைவி வந்தால்... பர்பெக்ட் அண்ட் கேஸூவல் 2020

படம்
            பர்பெக்ட் அண்ட் கேஸூவல் சீன டிவி தொடர் 24 எபிசோடுகள் Title: Perfect and Casual Chinese Title: 完美先生和差不多小姐 / Wan Mei Xian Sheng He Cha Bu Duo Xiao Jie Broadcast Website: MGTV Broadcast Date: September 28, 2020 Air Time: Monday, Tuesday 20:00 (2 eps) on first week, Sunday-Monday subsequent weeks, 4 eps released early for VIP (See Viewing Calendar ) Genre: Romance Language: Mandarin Episodes: 24 Director: Li Shuang Origin: China உலகில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் கணித சூத்திரங்களாக பார்க்கும் புள்ளியியல் பேராசிரியர் ஒருவரும் , மனிதர்கள் மோசமானவர்களாக இருந்தாலும் அவர்களை நம்பும் கல்லூரி மாணவியும் ஒன்றாக இணைகிறார்கள் . அதற்கு பேராசிரியரின் தாத்தாவுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பு முக்கியமான காரணம் , புள்ளியல் துறையில் படிக்கும் யுன் ஷூ என்ற மாணவியை , பேராசிரியர் ஸாங் ஒப்பந்தம் போட்டு திருமணம் செய்துகொள்கிறார் . அந்த உறவு ஒப்பந்தம் என்ற எல்லையைக் கடந்து காதல் சாலையில் பயணித்ததா , இல்லையா என்பதுதான் டிவி தொடரின் மையப்புள்ளி பேரா

கேஸ்லைட் எனும் உளவியல் பதம் எப்படி உருவானது?

படம்
pixabay டாக்டர் எக்ஸ். ஏன், திரும்ப திரும்ப இதே தவறைச் செய்கிறார்? நான் முதலிலேயே சொன்னேன். நீ கேட்கவில்லை. இது நிச்சயம் உன்னுடைய தவறுதான். இதுபோன்ற பேச்சுகள் காதல், திருமணம் என இரண்டு கட்டங்களிலும் வருவது உண்டு. இதன் தொடர்ச்சியாக உளவியல் ரீதியாக ஒருவரைக் குற்றம் சாட்டும் தன்மையை கேஸ்லைட்டிங் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த உளவியல் பிரச்னை, சர்வாதிகாரிகள், நார்சிஸ்டுகள் என பலரிடமும் ஆராய்ந்ததில்  காணப்பட்டது. அதாவது, இயல்பாக நடக்கும் நிகழ்ச்சியை திரித்து மாயத்தோற்றமாக்கி காட்டுவது. தம்பதிகளிடையே சிலர் தன் மனைவியை அல்லது கணவரைக் கூட அடிக்கடி குற்றம் சாட்டுவார்கள். அதாவது சரியான நேரத்திற்கு பஸ் வரவில்லை, நீ தான் லேட்டானதற்கு காரணம் என நீளும் விவாதங்கள் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. கேஸ்லைட்டிங் ஆட்கள் திட்டமிட்டு குறை சொல்வதற்கான சூழலை உருவாக்கி மக்களை அல்லது தங்களது மனைவி, நட்பை சிக்கலுக்குள் சிக்க வைப்பார்கள். இதன்மூலம் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கிறது. ஆனால் பலருக்கும் இது மனநல பாதிப்பு என்றே தெரியாது. இதனை அறிந்து சிகிச்சை எடுப்பது அவசியம். வீட்டுக்கு