இடுகைகள்

காந்தியும் ஜெர்மன் பசுமைக்கட்சியும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை அரசியல்1

பசுமை அரசியல் காந்தியும் பசுமைக் கட்சியும் இந்திய சுயராஜ்யமும் பசுமை இயக்கமும்    பசுமை அரசியலுக்கான செயல்திட்டம்    பசுமை அரசியல் போராளிக்கான அகிம்சைப் பாதை இயற்கையைக் காக்கும் பத்துக் கட்டளைகள் அணுமின்சக்தி ஆபத்தானது பசுமை மின்சக்தியே தீர்வு பசுமை இயக்க முன்னோடிகள் காந்தியும் ஜெர்மன் பசுமைக்கட்சியும் ஆங்கிலத்தில்: பெல்ரா கே கெல்லி தமிழில்: ஜீவா நாம் நம்மை காந்தியர்கள் என்று சொல்லிக்கொள்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென முதலிலேயே எச்சரிக்க விரும்புகிறேன். அப்படிச் சொல்லிக்கொண்ட சிலரை நான் வன்முறையற்ற இயக்கத்தில் சந்தித்தேன். 1936 மார்ச் 28 அன்று மகாத்மா காந்தியே ‘காந்தியம்’ என்று ஒன்று இருக்கக் கூடாது என்று சொன்னார். தான் எந்த ஒரு குழுவையோ, புதிய கோட்பாட்டையோ, புதிய போதனைகளையோ விட்டுச் செல்ல விரும்பவில்லை என்றார். அவர் தனது சத்தியத்துடனான எண்ணற்ற பரிசோதனைகளை சொல்லவே விரும்புவதாகவும், தனது வாழ்வு அத்தகைய பரிசோதனைகளின் திரட்சியே என்றும் கூறுகிறார். அவரது சுயசரிதையில், ‘’எனது அரசியல் தளத்திலான பரிசோதனைகள் பற்றி இந்தியாவில் மட்டுமல்ல, நாகரிக உலகில் பல பகுதிகளிலும் அறிவ