இடுகைகள்

மாசான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

படம்
              நீரஜ் கெய்வான் இந்தி திரைப்பட இயக்குநர் கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான் . அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது ? வருண் குரோவரோடு கதையை எழுதும்போது , மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது . தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம் . இதில் நாயகர்கள் , எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது . ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும் . சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை , வாழ்க்கைக்காக போராடி வருகிறது . இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும் . சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள் ? இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை . இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும் , பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட . இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம் . மெனோ

நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களை நடிப்பில் பிரதிபலிக்கிறேன்! - ரிச்சா சதா

படம்
        ரிச்சா சதா தனது அரசியல் நிலைப்பாடுகளை கூட வெளிப்படையாக கூறும் தைரியம் பெற்ற இந்தி நடிகை . நாடகங்கள் , சினிமா , ஓடிடி தளம் என இயங்கி வருகிறார் . மேடம் சீஃப் மினிஸ்டர் படம் வெளியாகியுள்ளது . இதுபோன்ற படத்தின் கதாபாத்திரங்கள் உங்களை புரட்சிகரமான நடிகராக காட்டுகிறதேழ மாசான் படத்திலும் , கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் , பக்ரி ஆகிய படங்களிலும் நான் நடித்த கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கின்றன . நான் நடிக்கும் பாத்திரங்கள் என்னோடு உரையாடும்படி பார்த்துக்கொள்கிறேன் . இந்த படத்தில் நடித்துள்ள தாரா என்ற பாத்திரமும் அப்படித்தான் . முதல்வராவது இவளின் ஆசை .    இவர் எந்த அரசியல்வாதியை மையமாக கொண்டுள்ளவர் என்று கூட சர்ச்சை எழுகிறதே ? நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்தில் நுணுக்கமாக இருக்கும் . இயக்குநர் எட்டு ஆண் , பெண் அரசியல்வாதிகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் . நான் மக்கள் ஒருவரின் பாத்திரத்தை இன்னொருவருடன் ஒப்பிட்டு புரிந்துகொள்வதை ஏற்கிறேன் . ஆனால் இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியது அல்ல . சமூ