இடுகைகள்

நம்பிக்கை பெண்கள் 2018 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2018 மறக்க முடியாத பெண் போராளிகள்

படம்
சக்தி 2018 நிர்ப்ரீத் கவுர்(50) 1984 சீக்கியர்கள் படுகொலை யாராலும் அந்த களங்கங்களை மறைக்க முடியாது. காங்கிரஸ் தொண்டர்கள் செய்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு போராடிய பெண்மணி வீடு, வாசல், நிலம், நகை என அனைத்தையும் விற்று காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் குமாருக்கு தண்டனை பெற்று கொடுத்திருக்கிறார். கவுரின் பதினாறு வயதில் அக்கொடூரம் நிகழ்ந்தது. அவரின் தந்தையை கட்டிப்போட்டு அடித்து சித்திரவதை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி கொன்றனர். “நிச்சயம் என் தந்தையை நான் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் அவரை எரித்துக்கொன்றுவிட்டு அவர் துடித்து சாவதை பக்கத்திலேயே நின்று ரசித்தனர்” என்று கூறுவதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. அந்நிகழ்விற்கு பிறகு கவுர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்து உயிர்பிழைத்திருக்கிறார். காங்கிரஸூக்கு எதிராக வழக்கு போட்டு வெல்வது சாத்தியமா? காலிஸ்தான் ஆதரவாளர் என பதினொரு ஆண்டுகள் சிறையில் தள்ளி சித்திரவதை செய்தது அரசு. ஆனால் கவுர் தளரவில்லை. சிபிஐ, நானாவதி கமிஷன் மீது நம்பிக்கை வைத்து குறைந்தபட்சம் சஜ்ஜன்குமாருக்கு தண்டனை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் நீதிக்கான