இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்திய கல்விமுறையின் தோல்வி - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  எது கல்வி ? ஜே. கிருஷ்ணமூர்த்தி சரியான கல்வி என்பது முறையான திறனோடும் நுட்பங்களோடும் கற்பிக்கப்படுவது அவசியம். இப்படிப்பட்ட கல்வியை ஒருவர் கற்கும்போது தனது வாழ்க்கையை அவர் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். இன்று அறிவியல் தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் மக்களுக்கு அடிப்படை விஷயங்களான உணவு, உடை, வீடு ஆகியவை கிடைப்பது வேகமாகியுள்ளது. ஆனால் இன்னும் மக்களுக்கு அவை முழுமையாக கிடைத்துவிடவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று உலகிலுள்ள அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்ன நினைக்கிறார்கள், அனைத்து மக்களும் கல்வியறிவு பெற்றுவிட்டதாகத்தானே. உண்மையில் மாணவர்கள் பட்டங்கள், பட்டயங்கள், சான்றிதழ்கள், உதவித்தொகைகள் என பெற்று வருகின்றனர். கல்வி முடிந்தபிறகு மாணவர்கள் மருத்துவர்களாக பொறியாளர்களாக பணியாற்றுகின்றனர். ஆனாலும் கூட இவர்களது பணிகளால், மக்கள் இந்த உலகில் அமைதியாக வாழ முடியவில்லை. இங்கு இன்னும் போர்களும் சண்டைகளும் வன்முறைகளும் குறையவில்லை. மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை. அப்படியெனில் நவீன கல்விமுறை தோல்வியடைந்துவிட்டதாகத்தானே அர்த்தம்? பழைய முறைப்படி கல்

மீண்டும் முதலில் இருந்து.....

படம்
  மீண்டும் முதலில் இருந்து... லினக்ஸ் மின்ட் இயக்க முறைமையை கணியம் சீனிவாசன் அவர்கள் உள்ளிட்டதோடு ஏராளமான மென்பொருட்களையும் பதிவிட்டு கொடுத்தார். அதனால்தான் நிறைய மின்நூல்களை உருவாக்கவும், வலைப்பூவில் எழுதவும் முடிந்தது. ஆனால் பெருநகரில் இருந்தபோது கிடைத்த வாய்ப்புகள் கிராமத்தில் கிடைப்பதில்லை. எனவே வேறுவழியின்றி லினக்ஸ் இயக்கமுறையை கைவிட்டு விண்டோசுக்கு மாற வேண்டிய நெருக்கடி... இதனால் இதுவரை சேர்த்திருந்த தமிழ் எழுத்துருக்கள், பாடல்கள், அனிமேஷன் படங்கள், ஆங்கில, சீன, கொரிய திரைப்படங்கள் என அனைத்தும் அழித்து விண்டோஸ் 10 இயக்கமுறையை பதிவிட்டுள்ளேன். வேறு வழியில்லை. கொடுமுடியில் லினக்ஸ் தெரிந்த நுட்ப வல்லுநர்கள் பற்றி எனக்கு தெரியாது. கணியம் சீனிவாசன் சாரும் விரைவில் வெளிநாடு செல்லவிருக்கிறார். இந்த நேரத்தில் கணினிக்கான உதவியை நாட ஈரோடுதான் செல்லவேண்டும். ஈரோட்டை அடைய போக்குவரத்து வசதி இருக்கிறது. ஆனால் அங்கு சென்று லினக்ஸை புதுப்பிக்க ஆட்களை தேடுவது கடினம். அங்கு கடைகளை வைத்திருக்கும் பலரும் விண்டோஸ் சார்ந்த சேவைகளை செய்துகொடுத்து பணம் சம்பாதிப்பவர்கள். எனவே கடையில் ஏறி இறங்கி கணியை சரி

லினக்ஸ் ஓஎஸ் செயலிழந்தது

படம்
   அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம். நான் பயன்படுத்தி வந்த லினக்ஸ் மின்ட் 19.1 டெஸா ஓஎஸ் செயலிழந்துவிட்டது. கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சேஃப் மோடில்தான் இயக்கி வந்தேன். எனவே, இனி கணினியை பழுது பார்க்கும் வரை புதிய பதிவுகளை இட முடியாது. பொறுத்தருள்க....நன்றி!       லெனோவா 

காதலி மீது அவளது அப்பா வைத்துள்ள அதீத பாசத்தை தடுக்க முடியாத காதலனின் கதை - நுவ்வே நுவ்வே - திரிவிக்ரம் சீனிவாஸ்

படம்
  நுவ்வே நுவ்வே  இயக்குநர் திரிவிக்ரம்  தருண், ஸ்ரேயா சரண் அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தில் மகளின் காதலன் சிக்கிக்கொண்டால் என்னவாகும்?  படத்தில் நாயகன் என்பது பிரகாஷ்ராஜ்தான். படம் தொடங்கி இறுதிக்காட்சி வரை உறுதியாக நின்று நடித்திருக்கிறார். இது திரிவிக்ரம் சீனிவாசின் முதல் படம்.  படத்தில் முரணான பாத்திரங்களுக்கு இடையில் வரும் வசனங்கள் கச்சிதமானவை. அச்சூழலுக்கு மிகவும் பொருத்தமானவை. கதையைப் பார்ப்போம்.  அஞ்சலி, கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறாள். இவளது அப்பா தொழிலதிபர். அதைத்தாண்டி மகள் மீது பாச வெறி கொண்டவர். மகளுக்கு கொடுக்கும் பரிசு கூட பாசத்தைப் போல ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. மகளுக்கும் அம்மாவை விட அப்பாவே ஆதர்சம். மகளுக்கு, தனது குடும்பத்தினர் ஏன் அவரது மூத்த பையன் பரிசு கொடுக்கும் முன்னரே பரிசு கொடுத்து திகைப்பு ஏற்படுத்துகிறார். இப்படி இருப்பவர், அதீத பாசத்தால் திருமணம் என்று வரும்போது என்ன முடிவு செ்யகிறார் என்பதே கதை.  படத்தின் தொடக்க காட்சியே மது அருந்தியபடி பிரகாஷ் தனது நண்பரிடம் பேசும் காட்சிதான்.  அதில் தனது மகளைப் பற்றி பாசத்தோடு பேசுகிறார். மனம் கனிந்த பேச்சில் ந

பிராமணர்களை நிராகரித்து வேதங்களை புறக்கணித்து புத்தர் காட்டும் தம்ம நெறி - புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்

படம்
 புத்தரும் அவர் தம்மமும் - அம்பேத்கர்  தமிழில் பெரியார் தாசன் வெளியீடு பெரியார் தாசன்  புத்தரின் வாழ்க்கை, அவரது கொள்கைகள் பற்றிய நூல். இதை அம்பேத்கரே ஆராய்ந்து எழுதியிருக்கிறார். அம்பேத்கர் எழுதிய நூல்களில் புத்தரும் அவர் தம்மமும் நூல் முக்கியமானது. இந்தியாவில் உள்ள மதங்களில் பௌத்தம் முக்கியமானது. நிர்வாக ரீதியாக இந்து மதத்தில் பௌத்தம் சீக்கியம் உள்ளடங்கியது என தேசியவாதிகள் கூறுகின்றனர்.  பௌத்தம் எவ்வாறு வேதங்களிலிருந்த மாறுபட்டுள்ளது என்பதை உயர்வெய்திய புத்தர் விளக்குகிறார். நூலின் பக்கங்கள் ஐநூறுக்கும் அதிகமானவை. அவை அனைத்திலும் கூறப்படும் விஷயங்களைப் படித்தால் மதம் என்பது என்ன, அது மனிதர்களுக்கு பயன்படும் விதம் ஆகியவற்றை தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.  பௌத்தத்திலுள்ள பல்வேறு கொள்கைகளை திருடி தன்னை சற்றே மாற்றிக்கொண்டாலும் பிராமணத்துவம் மனிதர்களின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை. ஒட்டுமொத்த சமூக அமைப்பும் சுரண்டலுக்கானதாகவே இருக்கிறது. மனிதகுல முன்னேற்றத்திற்கானதாகவே மதம் அமையவேண்டும். அவ்வாறு அமையாதபோது, அதன் தேவையே இல்லை என புத்தர் பிராமணத்துவத்தை, வேத மதங்களை தவிர்க்கிறார். 

பூமியை விதம் விதமான கணித வடிவங்களால் வரைந்த புவியியல் வல்லுநர்கள் - புவியியல் அறிமுகம்

படம்
  டோலமி - தொன்மையான புவியியல் ஆராய்ச்சியாளர்  கிளாடியஸ் டோலமி. தொன்மையான கிரேக்க நாட்டின் எகிப்தில் பிறந்தவர். கிரிகோ ரோமன் புவியியல் தகவல்களை உருவாக்கினார். கூடுதலாக கணிதம், வானியல் ஆகியவற்றிலும் திறமையானவராக இருந்தார். புவியியல் என்ற பெயரில் எட்டு பாகங்களைக் கொண்ட நூலொன்றை உருவாக்கினார். அதிலுள்ள தகவல்களைக் கொண்டுதான் உலக நாடுகளின் வரைபடம் வரையப்பட்டது. இதில் 26 உள்ளூர் பிரதேசங்களும் அடையாளம் காணப்பட்டன. அப்படியானால் அந்த நூலில் எவ்வளவு தகவல்கள் சேகரித்து எழுதப்பட்டிருக்கும் பாருங்கள்....  நூலில் எட்டாயிரம் இடங்களின் பெயர்களையும் குறித்து வைத்திருந்தார்.  13 பாகங்களாக எழுதப்பட்ட அல்மாகெஸ்ட் என்ற நூலில் சூரிய குடும்பம் பற்றிய ஏராளமான தகவல்களை பதிவு செய்திருந்தார். நான்கு பாகங்களாக வெளிவந்த டெட்ராபிபிலோஸ் என்ற நூலில் ஜோதிடத்தை அறிவியல் பூர்வமாக விளக்கியிருந்தார். டோலமியின் அறிவும், அவரது படைப்புகளும்தான் உலக நாடுகளின் வரைபடங்களை ஆய்வாளர்கள், வல்லுநர்கள் உருவாக்கவும் புவியியல் துறையை பின்னாளைய தலைமுறையினர் புரிந்துகொள்ளவும் உதவியது.  2 கிளாடியஸ் டோலமி பூமி என்ன வடிவில் இருக்கிறது என்பது

சீனாவின் கலைப்பொக்கிஷங்களை விற்கும் தொழிலதிபர் குழுவோடு மோதும் தடய அறிவியல் துறை - ட்ரூத் - சீன டிவி தொடர்

படம்
  ட்ரூத் - சீன  டிவி தொடர்  யூட்யூப்  தடய அறிவியல் பற்றிய நிறைய தொலைக்காட்சி தொடர்களை உலகமெங்கும் எடுத்து வருகிறார்கள். ட்ரூத் சீனாவில் ஒளிபரப்பாகிய டிவி தொடர்.  பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் லின் என்பவர், வழக்கு ஒன்றை விசாரித்துக்கொண்டிருக்கும் நிலையில் மரணமடைகிறார். அவர் மரணமடைவது காரோடு நீருக்குள் மூழ்கி என்பது அப்போதைக்கு பரபரப்பான குற்றச்செய்தியாகிறது. அதற்குப் பிறகு அப்பாவை வழிகாட்டியாக கொண்ட லின்னின் மகள், காவல்துறையில் சேர்ந்து தடய அறிவியல் துறையில் வேலை செய்கிறாள். பின்னாளில் அவர்கள் ஒரு வழக்கை துப்பறிய அதில் அவளது அப்பாவின் மரணமும் இடையில் ஒன்றையொன்று சந்திக்க கடந்தகால குற்றங்களை எப்படி தேடித்துருவி குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார்கள் என்பதே மையக் கதை.  பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவு சார்ந்த கதை கிடையாது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே, சண்டைக்காட்சிகளை எதிர்பார்க்க வேண்டியிருக்காது. அப்படி பார்த்தாலும் இதில் சண்டைகள் ஏதும் கிடையாது. எப்படி தடய அறிவியல் மூலம் அரசு வழக்குரைஞர்க்கு வழக்கின் சாட்சியங்களை உறுதிப்படுத்துகிறார்கள் என்பதே முக்

விவாகரத்து வழக்குரைஞருக்கும் காதலர்களை சேர்த்து வைக்கும் பெண்ணுக்குமான மோதல் - பிளான் ஏ, பிளான் பி

படம்
  பிளான் ஏ, பிளான் பி நெட்பிளிக்ஸ் - இந்தி  திருமணமானவர்களுக்கு வேகமாக விவாகரத்து பெற்றுத்தரும் வழக்குரைஞருக்கும், காதலர்களை அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து ஒன்றாக சேர்த்து வைக்கும் இளம்பெண்ணுக்கும் ஏற்படும் மோதல் காதல் இன்னபிற சம்பவங்களே கதை.  ஷேர்ட் ஸ்பேஸ் எனும் ஒரே இடத்தில் பல்வேறு நிறுவனங்கள், பொதுவான கிச்சன் என உள்ள இடத்திற்கு இருவர் வாடகைக்கு வருகிறார்கள். ஒருவர், சுக்லா எனும் விவாகரத்து பெற்றுத் தரும் வழக்குரைஞர் - ரிதேஷ் தேஷ்முக். இன்னொருவர் தமன்னா. இருவரின் கொள்கைகளே வேறுபாடனவை என்பதால், இருவருக்கும் அடிக்கடி முட்டிக்கொள்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் தனிப்பட்ட பிரச்னைகள் உள்ளன. சுக்லா அவரது மனைவியுடன் வாழாமல் தனியாக வாழ்கிறார். அவரது மனைவி அவரது முதலாளியுடன் பாலுறவு கொண்டுவிடுகிறார். இதை சுக்லா அறிந்துகொண்டுவிடுகிறார். இதனால் மனைவியை விட்டு பிரிந்துவிடுகிறார். ஆனால் மனைவிக்கு     குற்ற உணர்ச்சியை உருவாக்கும்படி    விவாகரத்து தருவதில்லை. இதேபோல தமன்னாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. ரிதேஷ், தமன்னா என இருவரும் தங்கள் தனிப்பட்ட பிரச்னை கடந்து எப்படி வாழ்க்கையில் ஒன்றாக சேருகிறார்கள்

குருதத் ரசிகனை சினிமா விமர்சகர்கள் கோபப்படுத்தினால்... சுப் - துல்கர்சல்மான், ஸ்ரேயா - ஆர்.பால்கி

படம்
  சுப்  மொழி - இந்தி  இயக்குநர் - பால்கி  துல்கர் சல்மான், சன்னி தியோல், ஸ்ரேயா தன்வந்திரி  சீரியல் கொலைகாரர்கள் அனைத்துவிதமாகவும் வந்துவிட்டார்கள். அப்படி கொலைகாரன் சினிமா வழியாக வந்தால்... அதுதான் படத்தின் மையம். இந்தி சினிமா இயக்குநரான குருதத்தின் ரசிகன், மோசமாக விமர்சனங்கள் எழுதும் பத்திரிகை, டிவி, வெப் என ஆட்களை போட்டுத் தள்ளினால்... அதை பிடிக்க முடியாமல் காவல்துறை தடுமாறினால் என்னாகும் என்பதே கதை.  முதல் காட்சியே பெண்மணி ஒருவர் வேலை முடிந்து தனது அபார்ட்மெண்டிற்கு வருகிறார். வீட்டில் அழைப்புமணியை அழுத்துகிறார். ஆனால் கதவு திறக்கவில்லை. தனது சாவியைப் போட்டு திறந்து உள்ளே செல்கிறார். பாத்ரூமில் தனது கணவரின் செல்போன் ஒலி கேட்டு சென்றால், அவர் மீனை வகுந்து வைப்பார்களே அப்படி ரத்த விளாராக கொல்லப்பட்டு கிடக்கிறார். நெற்றியில் முக்கோணச்சின்னம் இருக்கிறது.  இது ஒரு கதை. அடுத்த கதை. பூ விற்பவரான டேனியின் கதை. டேனி காலையில் எழுந்து பூ கொண்டு வருபவர்களிடம் பூ வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்கிறார். பிறகு தனது பூத்தோட்டத்தில் அமர்ந்து இரண்டு டம்ளர்களில் டீயைப் போட்டுக்கொண்டு அமர்ந்து குடிக்கிறார்

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்மைக் காலத்தில்

சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!

படம்
  சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார்.  கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் ப

பஷீர் -தனிவழியிலோர் ஞானி! வாழ்க்கை முழுவதும் கனிவும் முரட்டுத்தனமுமாக வாழ்ந்த எழுத்தாளனின் கதை - யூமா வாசுகி

படம்
  வைக்கம் முகமது பஷீர் தனி வழியிலொரு ஞானி - வைக்கம் முகமது பஷீர் ஸாநு மாஸ்டர் தமிழில் - யூமா வாசுகி பாரதி புத்தகாலயம்  தலையோலபரம்பில் பஷீராக பிறந்தவர், எப்படி புகழ்பெற்ற வைக்கம் முகமது பஷீராக மாறினார் என்பதைச் சொல்லும் சுயசரிதை நூல்தான் தனி வழியிலொரு ஞானி. பஷீர் எழுதியதை விட அவரைப் பற்றிய இட்டுக்கட்டிய கதைகள் கொண்ட நூல்கள் அதிகம் என கூறப்படுகிறது. அந்தக் கூற்றை இந்த நூலின் இறுதிப்பகுதியிலும் கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் புறந்தள்ளினாலும் தனி வழியிலொரு ஞானி நூல் அதன் எழுத்து சிறப்புக்காக முக்கியத்துவம் பெறுகிறது.  தொடக்கத்தில் நூல் பஷீரைப் பற்றிய தகவல்களை அவரது சிறுகதைகள், நாவல்களிலிருந்து திரட்டுவது சற்று சோர்வு அளிப்பது உண்மை. ஆனால் அவையெல்லாம் பஷீரின் பிறந்த நாள் எது என்பதைக் கண்டுபிடிக்கும் வேகம்தான். அதைத் தாண்டி விட்டால் பஷீர் என்ற மனிதரின் பிம்பத்தை நாம் பிரமாண்டமான வடிவில் காண்கிறோம்.  இந்த நூல் படைப்பு சார்ந்து பஷீரின் சிறப்புகளைக் கூறுவதோடு அவருக்கு ஏற்பட்ட மனநோய் அதன் பாதிப்புகளையும் வெளிப்படையாக விவரிக்கிறது. இதனால் நூல் எழுத்தாளரை புனிதப்படுத்தி, படைப்புகளை உயர்வாக பேசுவது

பொங்கல் மலருக்கான எடிட்டிங் ஜரூர்!

படம்
பொங்கல் மலருக்கு வேலை செய்வது என்றால், என்னைப் பொறுத்தவரை கட்டுரை எழுதுவதுதான். ஆனால், சண்முகம் சார் வேலைப்பளுவினாலா அல்லது வேறு சிக்கலாலா என்று தெரியவில்லை. என்னை ராவான கட்டுரைகளை படித்து பார்த்து செம்மை செய்யச் சொன்னார். ஆனால் மறுக்கும் நிலையில் இல்லை. கட்டுரைகளை ஃபோல்டரில் போட்டுக்கொண்டே இருந்தார் சண்முகம் சார். நான் அவற்றை திருத்தி தலைப்புகளை மாற்றினேன்.  பெரும்பாலான தினசரி செய்தியாளர்களுக்கு செய்தி எழுதுவது தெரியும். ஆனால் பொங்கல், தீபாவளி மேட்டருக்கான ஐடியாக்களைக் கொடுத்து அதை செவ்வனே எழுதுவது என்றால் எழுதிவிடுவார்கள். ஆனால் அதில் எது முக்கியமோ அதை முன்னிலைப்படுத்தி எழுத வராது. அனைத்தையுமே எழுதியிருப்பார்கள். அதில் நாம் எது முக்கியமோ அதை சற்று முக்கியப்படுத்தி எடுத்து சற்று மாற்றியமைக்க வேண்டும். அப்படித்தான் நான் புரிந்துகொண்டு எழுதினேன். நன்றாக செய்தேனா என்று தெரியவில்லை. ஆனால் சண்முகம் சார் புகார் ஏதும் சொல்லவில்லை. ''நான் பார்த்துக்கொள்கிறேன். நீங்கள் ரவ் டிராஃப்ட் போல வரும் அதை சற்று திருத்தி எழுதிக்கொடுங்கள்'’ என்றார். முடிந்தவரை அவர் சொன்ன விதிகளை மனதில் கொண்டி

பங்குனி விழாவில் விழி பிதுங்கும் மயிலாப்பூர்!

படம்
  மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித்திருவிழா பற்றி தனியாக சொல்லவேண்டியதில்லை. கபாலீஸ்வரரின் விழாக்களில் பிரபலமானது. பல லட்சம் பேர் வந்து ஊரை இறைவனின் சிலையுருவங்களோடு சுற்றி வருவார்கள். கூடவே பக்தர்களுக்கு தண்ணீர் கலக்கிய மோர், சாச்சி, முக்தி மசாலாக்களால் மணக்கும் தக்காளிச்சோறு என நிறைய  சோறு போடும் வணிக நிறுவனங்கள் வருவார்கள். மயிலாப்பூரில் உள்ள பெரும்பாலான நிறுவனங்கள் அன்று தங்களை அன்ன தாதாவாக கருதிக்கொண்டு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். பாலகுமாரன் சொல்லுவது போல, இப்படி அன்னம் வழங்குவதும் ஒருவித வேண்டுதல்தான். வயிற்றுப்பசியை  அணைத்து தனது நலம் நாடுவதுதான். புண்ணியம் தேடுவதுதான்.  அன்னதானம் நடந்தபிறகு மத்தள நாராயணன் தெரு, கடைவீதி, கச்சேரி சாலை என அனைத்து இடங்களிலும் சாலை எண்ணெய்யில் நனைந்து கிடக்கும். சோற்று பருக்கைகள், இன்ஸ்டன்ட் சோற்றுத் தட்டுகள், பாக்குத் தட்டைகள் என ஏராளமாக நிரம்பிவிடும். எனக்கு இதைப் பார்ப்பது பிடிக்கும். நகரை பகலிலும் இரவிலும் பார்க்கவேண்டும் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு வேளையிலும் நகரம் தனித்தன்மையான இயல்பில் இருக்கும். பகலில் பார்க்கும் நகரம் இரவில் காணக்

அவதாரம் - ஆளுமை பிறழ்வு ஓர் அறிமுகம் - புதிய மின்னூல் வெளியீடு - கூகுள் பிளே புக்ஸ்

படம்
  இந்த நூலுக்கு முன்னதாக உடல் மனம் உள்ளே என்ற உளவியல் தொடர்பான நூலை ஆராபிரஸ் - கோமாளிமேடை வெளியிட்டுள்ளது. அந்த நூல் ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்தில் உள்ளது. அதில் உளவியல் குறைபாடு, அதன் அறிகுறி, அதற்கான சிகிச்சைகள் ஆகியவை குறிப்பிட்டப்பட்டுள்ளன. அந்த நூலை தரவிறக்கி படித்துவிட்டால் அவதாரம் என்ற சிறுநூலை படிக்க ஏதுவாக இருக்கும். இதில் ஆளுமை பிறழ்வுகள் அதை நோக்கி ஒருவரை செலுத்தும் காரணங்கள் ஆகியவை சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன. உளவியல் தன்மையில் அளிக்கும் சிகிச்சைகள் இன்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அந்தளவு மனிதர்களுக்குள் கசப்பும், அழுத்தமும் பெருகியுள்ளன. அதனை எப்படி சீர் செய்வது அடையாளங்களை கண்டறிவது என்பதோடு இதுதொடர்பான ஆராய்ச்சிகளையும் நாம் அவதாரம் நூலில் வாசித்து அறியலாம்.  இந்த மின்னூலை இன்னும் சில நாட்களில் நீங்கள் கூகுள் பிளே புக்ஸில் வாசிக்கலாம்....

நூறு நிலங்களின் மலை - மனதில் கற்பனைகளை பெருகச் செய்யும் நிலவெளியின் வரலாறு! - ஜெயமோகன் - கிழக்குப் பதிப்பகம்

படம்
  நூறு நிலங்களின் மலை ஜெயமோகன் கிழக்கு பதிப்பகம் மின்னூல் எழுத்தாளர் ஜெயமோகன் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு தனது நண்பர்களுடன் சென்ற பயண அனுபவமே நூறு நிலங்களின் மலை என்ற நூலாக மாறியிருக்கிறது.  இமயமலையில் பொதுவாக மலையேற்ற வீரர்கள் அல்லது டிடிஎஃப் வாசன் போன்றோர் சென்று தங்கள் அனுபவத்தை பதிவு செய்வார்கள். ஆனால் எழுத்தாளர் சென்றால், அந்த அனுபவத்தை சேற்றுப்படிவ பாறைகளை, ஆற்றின் கடும் குளிரை, அறையில் வீசும் தழைமணம் கொண்ட ஆப்பிள் மணத்தை பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்பதுதான் இங்கு வேறுபடுகிறது.  ஐந்து மாநிலங்களின் வழியாக காரில் சமண மடாலயங்களுக்கு சென்று வந்த அனுபவங்களை ஜெயமோகன் முன்றே எழுதியிருக்கிறார். இந்த நூலிலும் அப்படியொரு இலக்கை எட்டியிருக்கிறார். இமயமலை பகுதிகளில் உள்ள ஏராளமான புத்த மடாலயங்களுக்கு சென்று அங்குள்ள விதவிதமான வடிவங்களில் பெயர்களில் உள்ள புத்தர் சிலைகளைப் பற்றி நமக்கு விளக்குகிறார். கூடவே அந்த நிலப்பரப்புகளில் வாழும் மக்கள், அங்கு நிலவும் அரசியல் ஆகியவை பற்றியும் எழுதுகிறார். இது, நூலுக்கு தனிப்பட்ட ஈர்ப்பை வழங்கியுள்ளது.  ஷியா,சுன்னி முஸ்லீம் அரசியலை விட அங்

தனது மகனைப்போன்ற சிறுவனுக்காக தனது ஆன்மாவை வாளாக மாற்றும் கரடி! தி பாய் அண்ட் தி பீஸ்ட் - அனிமேஷன்

படம்
  தி பாய் அண்ட் தி பீஸ்ட்  இயக்கம் - மமோரு ஹோசோடா அப்பா, அம்மாவை விட்டு பிரிந்துவிட குடும்பம் சிதைகிறது. அம்மா இறந்துவிடுகிறார். கடனுக்காக உறவினர்கள் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் க்யூட்டா என்ற சிறுவன் ஆதரவற்று தெருவில் திரியும் நிலை. இந்த நேரத்தில் அவனுக்கு சில விலங்குகள் கண்ணில் படுகின்றன. அவற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். அது ஒரு விலங்குகள் உலகம். அங்குள்ள கரடி ஒன்று அவனுக்கு ஆதரவளிக்கிறது. அதற்கு வலிமை இருக்குமளவு தற்காப்புக் கலையில் நுட்பம் இருப்பதில்லை. அந்த நுட்பத்தை சிறுவன் எப்படி கற்றுக்கொடுக்கிறான், தற்காப்பு போட்டியில் வெல்ல உதவுகிறான் என்பதே கதை.  இரண்டு உலகம் சார்ந்த கதை. ஜப்பானில் உள்ள தெருக்களில் உணவுக்கு பிறரிடமிருந்து திருடி சாப்பிடும் நிலையில் வாழும் சிறுவன், க்யூட்டா. அவனுக்கு அந்த நேரத்தில் எலி ஒன்று நட்பாகிறது. அவனது துன்பம், துயரம் என அனைத்திலும் உணர்ச்சி ரீதியான ஆதரவாக இருக்கிறது. பிறகுதான் விலங்குகள் உலகத்தில் கரடியை சந்திக்கிறான். அங்குதான், தனது உடலை வலிமையாக்கிக்கொண்டு கரடிக்கும் தற்காப்புக் கலையின் நுட்பங்களை கற்றுத் தருக

குடும்ப பாசத்தால் வெட்டியாக சுற்றும் நாயகன் காட்டும் வீரம்! ஆறடி புல்லட் - கோபிசந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ்

படம்
  ஆறடி புல்லட்  இயக்கம் பி கோபால் இசை மணி சர்மா  கோபி சந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், அபிமன்யூசிங் கட்டுமானத் தொழிலை சொந்தமாக தொடங்க நினைக்கும் இளைஞன், கோபி சந்த். ஆனால் அப்பா அவன் மீது நம்பிக்கை கொள்வதில்லை. இதனால் அவன் கட்டுமான நிறுவனத்தில் வேலைக்குப் போகிறான். அதுவும் கூட அப்பாவின் சிபாரிசில்தான். அங்கு சென்றாலும் கூட தவறாக வேலை செய்பவர்களை வாயால் திட்டி கையால் அடித்து காலால் உதைக்கிறான். இதனால் வேலை போகிறது. என் குடும்பம்தான் எனக்கு முக்கியம் என வந்துவிடுகிறான். இப்படி இருக்கும் சூழலில் விஜயவாடாவில்  உள்ள காசி என்ற ரவுடியை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் அவனுக்கும் அவன் நேசிக்கும் குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதுதான் படத்தின் கதை.  படத்தில் காமெடி என்பது பிரம்மானந்தம் வரும்போதுதான். அதுவரை நாயகனே சிறியதாக காமெடி செய்ய முயல்கிறார். அதெல்லாம் பெரிதாக எடுபடவில்லை.  குடும்பத்தோடு இருக்கவேண்டும் என்பதுதான் நாயகனின் லட்சியம். அதற்காக சுய தொழில் செய்ய நினைக்கிறான். ஆனால் குடும்பத்திடம் அவனுக்கான பாசம் எப்படி உள்ளது என்பதைக் காட்ட ஆக்சன் காட்சிகள்தான் ஒரே சாட்சி. மற்றபடி வேற

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவாத கல்வி ஏற்படுத்தும் பாதிப்பு - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  பல்வேறு இடங்களில் ஏற்படும் பேரழிவுக்கு காரணம், கல்வியாகவே இருக்கிறது. நாம் கல்வி என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம். பள்ளிக்கு குழந்தைகளை அனுப்புவது எதற்கு? அவர்களை கற்றவர்களாக மாற்றுவதற்காகவா? பள்ளியில் குறிப்பிட்ட தொழில் திறன்களைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.  அது அவர்களுக்கு லாபம் தரும் வேலையைப் பெற்றுத் தருகிறது. இப்படி கல்வி கற்று கிளர்க்காக திறன் பெற்றவர்கள் நிர்வாக ஏணிப்படிகளில் ஏறி திறன் பெற்றுவிட முடியுமா? ஏழாவது பாகம், தி கலெக்டட் வொர்க்ஸ் தொகுப்பு. தொழில்நுட்ப வளர்ச்சி மக்களின் சில பகுதியினருக்கு பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால் அதேசமயம் ஆழமான பிரச்னைகளையும் உருவாக்குகிறது. வளர்ந்துவரும் பல்வேறு சவால்களை சந்திக்கும் வகையில் ஒருவரின் வாழ்க்கை இருக்கவேண்டும். தனிப்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சிக்கல் இதுதான்.  தொழில்நுட்ப ரீதியாக நாம் பெறும் அறிவு, நமது மனதிற்குள் ஏற்படும் பல்வேறு முரண்பாடுகளை, தர்க்க ரீதியான அழுத்தங்களை தீர்க்க உதவாது. வாழ்க்கையின் செயல்பாட்டை புரிந்துகொள்ளாமல் நாம் பெறும் தொழில்நுட்ப அறிவு மெல்ல நம்மையே அழிக்கத்தொடங்குகிறது. அணுவை எளிதாக பிளக்