தன்னம்பிக்கை இல்லாதவர்களை தாக்கும் சைக்கோபாத்கள்!
அசுரகுலம் 5 மனமென்னும் இருட்குகை 1.0 சைக்கோபாத்களுக்கு சொற்கள், வாக்கியங்கள் தெரியுமே ஒழிய அதன் அர்த்தம் தெரியாது. அவர்கள் முன் மரணம் என்று எழுதி வைத்தாலும் அதன் உணர்வுகளைப் புரிந்துகொள்ளத் தெரியாது. நாம் கண் மருத்துவமனையில் பல்வேறு வேறுபட்ட எழுத்துகளை பார்த்து ஒவ்வொன்றாக சொல்லுகிறோம். அதன் அடிப்படையில் கண் பார்வை மங்கலை அறிகிறார்கள். ஆனால் சொல்லும் வார்த்தையில் ஒருவருக்கு அதன் பொருளே தெரியாது என்றால் என்ன செய்வது? இப்படி குற்றங்களைச் செய்துவிட்டு அது ஒன்றும் குற்றமல்ல என்று சொல்லும் ஆட்களை எப்படி பெண்கள் காதலிக்கிறார்கள், நிறையப் பேர் காதல் கடிதங்களை எழுதுகிறார்கள். பொதுவாக உலகமெங்கும் தீவிரவாத செயல்கள், கொலைகளைச் செய்பவர்களை அந்த காரணங்களுக்காக நிறையப் பேர் விரும்புகிறார்கள். அதாவது, அதன் மூலம் தங்களை வேறுபடுத்திக் கொள்ள நினைக்கிறார்கள். இல்லாதபோது நிஜத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். சிலர், தங்கள் மனதில் ஆண் என்றால் இப்படித்தான் எதற்கும் பயப்படாமல் இருக்கவேண்டும். அவன்தான் ஆண்மகன் என் நினைக்கிறார்கள். அதாவது, முத்துவீரன் நண்பர்களைக் காப்பாற்ற துப்பாக