இடுகைகள்

தாய்மாமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிதையும் தாய்மாமன் வழி உறவு! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்.  நலமாக இருக்கிறீர்களா? தேர்தலுக்கான இரைச்சல் சென்னையில் அதிகமாகிவிட்டது. 6 மணிக்கு மேல் சாலையில் தேர்தல் இரைச்சல் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது.  இன்று தகைமை சான்ற கோ ஆர்டினேட்டர் வரவில்லை. எனவே, இதழ் வேலைகளைப் பார்க்கத் சொல்லிவிட்டார் பொறுப்பாசிரியர். எனவே, எழுத நினைத்த கட்டுரைகளை எழுத முடியவில்லை. சனி என்றால் அலுவலக சகாக்கள் நிறையப் பேர் விடுமுறை எடுத்துவிடுவார்கள். ஆறுநாட்கள் அலுவலகம் என்பது மிக நீண்டதுதானே? இன்று தாய்மாமா மகன் தனது திருமணத்திற்காக அழைத்தார். நான் அழைப்பை ஏற்கவில்லை. அவரது திருமணத்திற்கான வாழ்த்துச் செய்தியை அனுப்பினேன். அவரும் அதற்குமேல் வற்புறுத்தவில்லை. எல்லாமே சடங்கு, சாங்கியம் என ஆகிவிட்டது. நமக்கு பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் கிடையாது. செய்யவேண்டும் அவ்வளவுதான். தாய்மாமன் வழி உறவு இதோடு முடிவுக்கு வருகிறது.  ரஷ்மி பன்சலின் தொழில் சம்பந்தமான நூலைப் படித்து வருகிறேன். இன்னும் 70 பக்கங்கள் மிச்சமிருக்கிறது. எம்பிஏ படிக்காத தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்து பேட்டிகளை எடுத்து நூலாக்கி இருக்கிறார் ஆசிரியர். இந்த

மாரடைப்பில் இறந்துபோன பேசாத தாய்மாமன்! - கடிதங்கள்

படம்
நூலகத்திற்கு நூல்களை வழங்குதல் அன்பு நண்பர் இரா. முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். நலமா? அண்மையில் எனது தாய்மாமன்களில் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். பெரிய காரியம் காரணமாக அலைந்துகொண்டிருக்கிறேன். இருபத்தைந்து ஆண்டுகளாக எங்கள் வீட்டோடு பேச்சுவார்த்தையே இல்லாதவர், கந்தசாமி மாமா.  கடந்த மூன்று ஆண்டுகளாக அம்மாவோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். இதெல்லாம் அவரது இறந்து கிடந்த உடலைப் பார்க்கும்போது நினைவுக்கு வந்தது. அம்மா கண் ஜாடை காட்ட, அவரது உடலை தொட்டுக் கும்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். விரைவில் ஆபீஸ் செல்லவேண்டும். வரச்சொல்லி அழைப்பு வந்துவிட்டது. கொரோனா காரணமாக சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள். இருக்கும் வேலையைக் காப்பாற்றிக்கொள்ள சம்பள வெட்டையும் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.   வீட்டிலிருந்து வேலைபார்க்கும் போது தஞ்சை ப்ரகாஷ், தி.ஜானகிராமன், வர்க்கீஸ் குரியன் ஆகியோரின் நூல்களைப் படித்தேன். அதுவே மகிழ்ச்சி. திருவண்ணாமலையில் கிடைத்த நம்மாழ்வார் நூல்கள், எனது படிப்பிற்காக வாங்கிய அனிமேஷன் நூல்களை வடக்குப்புதுப்பாளையும் ஊர்ப்புற நூலகத்திற்கு கொடுத்துவிட்டேன். நிறைய நூல்களை வைத்துக