இடுகைகள்

இளமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோலோவாக வாழ்பவனின் வாழ்வை மடக்கி சுருட்டும் காதல் சுனாமி! -

படம்
          சோலோ பிரதிக்கே சோ பெட்டர்  Director: Subbu Writer: Subbu Stars: Ajay , Vennela Kishore , Kalyani N     இருபது வயதில் கொடி ஏந்தி போராடும் மாணவர்கள் சாய் தரம் தேஜின் உருவப்படத்தை தீ வைத்து எரிக்கின்றனர். அதனை வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் சாய் தனது கதையை நமக்கு சொல்லுகிறார்.  காதலும், கல்யாணமும் நமது சுதந்திரத்தை நம்மிடம் இருந்து பறித்துவிடும் என்று நினைக்கும் சாய் தரம் தேஜ், அதனை புத்தகமாக எழுதி கல்லூரியில் விற்பனை செய்து தனக்கு பின்னால் மாணவர்களை திரட்டுகிறார். இதற்கு காரணம் அவருக்கு அவருடைய வேணு மாமா சொல்லும் விஷயங்கள்தான் உந்துதலாக உள்ளன. திருமணம் செய்யாதவர்களை ஆதர்சமாக வைத்துள்ளவர் தன் பெற்றோரிடம் கூட ஒட்டுதலாக நடந்துகொள்வதில்லை. வேலை கிடைத்ததை கூட சொல்லாமல் ஹைதரபாத்திற்கு செல்கிறார். அங்கு சென்று ஈவன்ட் மேனேஜ்மெண்ட் வேலையை ஏற்கிறார். அந்நகரில் அவர் நினைத்த கொள்கைக்கு மாறான விஷயங்கள் நடக்கின்றன. அவரது நண்பர்கள் மெல்ல திருமண வாழ்க்கை செய்து செட்டிலாகின்றனர். மெல்ல வாழ்க்கை யதார்த்தம் புரிந்து சாய் வாழத் தொடங்கினாரா அ

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

திகில் படங்களின் மீது ஏன் ஆசை வருகிறது? உளவியல் பார்வை இதோ!

படம்
டாக்டர் எக்ஸ் சிலர் திகில் படம் பார்க்க ஏன் ஆசைப்படுகிறார்கள்? சாகச அனுபவ விரும்பிகளாக இருப்பார்கள். வேறென்ன, இப்போது பாருங்கள். என் அருகில் அமர்ந்துள்ள ஓவியர், எப்போதும் போகும் டீக்கடைக்கு போகாமல் தூரமாக போய் டீ குடித்துவிட்டு வேறு வழியாக ஆபீசுக்கு வருகிறார். என்ன ஆச்சுங்க சார் என்றால், போரடிக்குது ப்ரோ என்றார். ஆம். அதுதான். காரமான உணவு சாப்பிடுவது, ஸ்கை டைவிங் செய்வது, மலையில் கயிறு கட்டி மிஷன் இம்பாசிபிள் படம் காட்டுவது எல்லாமே இதையொட்டி ஏற்படுவதுதான். ஆபீஸ் வாழ்க்கையில் நீங்கள் என்ன சாகசத்தை அனுபவிக்க முடியும். அப்படி சாதிக்கும் வெறியில் தட்டினாலும் தலைமுறைக்கே உழைக்கும் டிவிஎஸ் பாரத் கீபோர்டைக் கொடுத்துவிடுவார்கள். ஒன்றும் செய்யமுடியாது. பொதுவாக ஆண்கள் பெண்களைத் தவிர வேறு யாருக்கும் பயப்படுவது கிடையாது. எனவே திகில் படங்களான ஈவில் டெட், கான்ஜூரிங் வகையறாக்களை ஊதித்தள்ளுவார்கள். ஆனால் டேட்டிங்கில் பெண்கள் பயத்தில் கட்டிப்பிடிக்க ஆள் வேண்டுமே? அதற்கு ஆண்கள் உதவுகிறார்கள். ஆண்கள் தம்மை பாதுகாவலராக காட்டிக்கொள்ளவும் இந்த சந்தர்ப்பங்கள் உதவுகின்றன என்கிறார் உளவியலாளரா