கோவிட் -19, வெறுப்பு பேச்சு, இனவெறியை ஜவாகர்லால் நேரு சமாளித்திருப்பாரா? 132ஆவது நேரு பிறந்த தினம் (14.11.2020)
நேருவின் 132 ஆவது பிறந்ததினம் , இந்த ஆண்டு கடந்திருக்கிறோம் . நவீன சிற்பிகளில் ஒருவரான நேருவைப் போல நடப்பு ஆண்டில் தூற்றப்பட்டவர் யாரும் கிடையாது . இந்த நேரத்தில் அவரின் செயல்பாடுகளை நினைவுகூர்வோம் . நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் மறைந்தார் . அவரது பல்வேறு நடவடிக்கைகளை இன்று கடுமையாக விமர்சிக்கும் புருஷோத்தம் அகர்வால் அன்று சிறுபையனாக இருந்தவர் . நேருவின் பல்வேறு செயல்பாடுகளை நான் கடுமையாக விமர்சித்து இருக்கிறேன் . ஆனால் இந்திய நாட்டிற்காக தன்னையே வைத்துக்கொண்ட அந்த மனிதனின் நாட்டுப்பற்றை நான் மறக்கவே முடியாத . சீனா செய்த நம்பிக்கை துரோகம் நேருவின் இழப்பிற்கு காரணமாகியது . என்று பேசுகிறார் . அகர்வால் ஹூ இஸ் பாரத்மாதா என்று நூலை எழுதியுள்ளார் . இதில் நேரு , வல்லபாய் படேல் , வாஜ்பாய் ஆகியோரைப் பற்றிய தகவல்களை எழுதியுள்ளார் . உண்மையில் சிறந்த தலைவராக செயல்பட்ட மனிதரை இழந்துள்ளோம் . திறந்த புத்தகமாக இருந்து செயல்பட்டவரும் நானும் பல்வேறு விஷயங்களை கலந்தாலோசித்து இருக்கிறோம் . நேர்மையாக செயல்பட்ட தலைவர் அவர் என வல்லபாய் படேல் நேருவின் 60 ஆவது பிறந்தநாளில் ஆற்றிய உர