இடுகைகள்

ஶ்ரீகாந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் அழுக்குகளை அகற்ற தனிமனிதனாக நாயகன் செய்யும் கோணங்கித்தனமான வீரசாகசங்கள்!

படம்
      துச்சாசனா ஶ்ரீகாந்த், சஞ்சனா கல்ராணி இயக்கம் பொசனி கிருஷ்ண முரளி பொதுஜனம் என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வயசான மீசை வைத்த கோட்டு போட்ட உயர் நடுத்தரவர்க்க மனிதரை லக்‌ஷ்மண் வரைந்திருப்பார் அல்லவா? அதேபோல ஒரு பாத்திரம் உருவாகி வந்து, அரசியலை சீர்படுத்த த த்துபித்து கருத்துகளை கூறுவதுதான் படம். தலையில் தொப்பி, கருப்பு கோட், கருப்பு பேன்ட். இதுதான் நாயகனுடைய ஒரே உடை. நாயகன் பெயர் மகேஷ். இந்தப் பெயர் கூட படத்தில் இரண்டாவது மணிநேரத்தில் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. முதல் காட்சியைப் பார்ப்போம். காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். அடுத்து, மருத்துவமனை சென்று கர்ப்பிணிகளை குழந்தைகளை கருக்கலைப்பு செய்யக்கூறுகிறார். அடுத்து அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இறந்துபோன அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப சொல்கிறார். இதனால் காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மனநல பிரச்னை என தீர்மானித்து நாயகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு நாயகன், மருத்துவர், செவிலியர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார். முதல்வரின் மகளைக் கடத்துகிறார். ...