இடுகைகள்

மேய்ச்சல்காரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன்?

படம்
      திசை கண்டறிவதில் தடுமாற்றம் ஏன் ? ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சமூகமாக இருந்தபோது உணவுக்கான தேடுதலை முடித்துவிட்டு குகைக்கு திரும்பி வரு வதில் பிரச்னைகள் எழவில்லை . அப்போது , மக்கள் தாம் கடந்து சென்ற வழித்தடத்தை மறந்துவிடவில்லை . அப்படி மறந்தால் உயிரை இழக்க வேண்டி வரும் . இன்று முன்பை விட வசதிகள் கூடி யுள்ளது . புதிய இடங்களுக்கு சென்று வர , செயற்கைக்கோளோடு இணைந்த வரைபட வசதிகள் உள்ளன . அவற்றைப் பயன்படுத்தியும் கூட மக்கள் வழிதவறி விபத்துகளை சந்தித்து வருகிறார்கள் . கிராமங்களில் வாயிருக்க வழி கிடைக்காமலா போகப்போகிறது என்பார்கள் . ஆனால் இன்று , மக்கள் பிறருடன் உரையாடுவதை விட தொழில்நுட்பத்துடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கிறார்கள் . புதிய இடங்களுக்கு செல்வது என்றால் காரிலோ , இருசக்கர வாகனங்களோ உடனே அலைபேசியில் உள்ள வரைபட வசதியை சொடுக்கி இயக்குகிறார்கள் . அதில் கூறும் பரிந்துரைகளை மாறாமல் பின்பற்றுகிறார்கள் . இந்த வசதி பெரும்பாலான நேரம் சரியாக வழி காட்டுகிறதுதான் . மறுக்க முடியாது . ஆனால் சில சமயங்களில் தவறாக வழிகாட்டி விபத்து ஏ...