இடுகைகள்

குடியுரிமை சட்டம். அசாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடியுரிமை சட்டத்தின் அவலத்தை புகைப்படமாக்கியவருக்கு விருது!- ஜிஸான் ஏ லத்தீப்புக்கு ராம்நாத் கோயங்கா விருது

படம்
கேரவன் மாத இதழில் என்ஆர்சி பற்றிய புகைப்படத்தை வெளியிட்ட ஜிஸான் ஏ லத்தீப் என்ற புகைப்படக்காரருக்கு ராம்நாத் கோயங்கா விருது வழங்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான புகைப்பட கட்டுரை அது. என்ஆர்சி பட்டியல் வெளியாகி ஒரு மாதம் ஆகியிருந்தபோது அசாமில் நான்கு மாவட்டங்களில் லத்தீப் புகைப்படங்களை எடுத்தார். இதில் ஏழை, வறுமை நிலையில் உள்ள முஸ்லீம்கள் இரண்டு பட்டியல்களிலும் இல்லை என்று தகவல் வர துயரமுற்றனர். என்ஆர்சி என்றால் என்னவென்றே தெரியாமல் பயந்துபோனார்கள். அரசின் விடுபட்டோர் அறிக்கை 2017, 2018 என இரண்டு ஆண்டுகளில் வெளியானது. இதில் ஆதாரங்களைக் காட்டி தங்களது முன்னோர் இந்தியர் என நிரூபிக்காதபோது அவர்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது ஏறத்தாழ நாஜி ஜெர்மனியின் கெட்டோ எனும் வதை முகாம்களை ஒத்தது. 2015ஆம் ஆண்டிலிருந்து லத்தீப் அசாமில் பயணித்து வருகிறார். அங்கு மண் அரிப்பு தொடர்பான பணிக்கு முதலில் சென்றார். பிறகு 2019இல் அங்கு நிறைவேற்றப்பட்ட என்ஆர்சி சட்டம் பற்றி அறிந்ததும் அதனை பதிவு செய்திருக்கிறார். நான் முஸ்லீம் என்பதால் எனக்கும் குடியுரிமை தொடர்பான பிரச்னை