கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர்!
கிராமத்தை உயர்த்திய பல் டாக்டர் !- ச . அன்பரசு டாக்டர் , எஞ்சினியர் என உயர்கல்வி கற்றவர்கள் அடுத்த அப்டேட்டாக என்ன செய்வார்கள் ? ஏதேனும் எம்பஸி வாசலில் தேவுடு காத்து உடனே பாரீன் நிலத்தில் லைஃப் போட்டை நங்கூரம் பாய்ச்சி நிறுத்துவதுதான் கனவாக இருக்கும் . மகாராஷ்டிராவிலுள்ள பல் டாக்டர் , தன் கிளினிக்கிலேயே போன் மூலம் மக்களோடு மீட்டிங் போட்டு 70 கிராமங்களுக்கு மேல் சுகாதாரம் , குடிநீர் வசதி ஆகியவற்றை அவர்களோடு இணைந்து பெற்றுத்தந்துள்ளார் . மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்திலுள்ள சதாரா நகரில் வாழும் பல்மருத்துவர் அவினாஷ் பொல்தான் அந்த உதாரண மனிதர் . அப்போது புனேவில் பாரதீய வித்யா பவன் பல்மருத்துவ கல்லூரியில் அவினாஷ் படித்துக்கொண்டிருந்தார் . இலவச சிகிச்சைக்காக கிராமங்களிலிருந்து அதிகாலையிலிருந்து காத்திருக்கும் மக்களைச் சந்தித்த அந்த நொடிதான் அவினாஷின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றியது . " என்னிடம் பேசிய விதவைப் பாட்டிக்கு ஈறுகள் பெரிதாக வீங்கியிருந்தன . இலவச சிகிச்சைக்காக மருத்துவமனை வரவே தன் வீட்டிலுள்ள பாத்திரங்களை அடகு வைத்துவிட்டு வந்திருந்தாள் என்பதை சொ