இடுகைகள்

வல்லரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த

சீனா, வளர்ச்சிக்கு கொடுத்த விலை என்ன? சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன்

              சீனா வல்லரசு ஆனது எப்படி? ரமணன் அனைவரும் தெற்கு சீன கடல், பிற நாடுகளுக்கு வழங்கும் கடன் என பல விஷயங்களிலும் சீனாவை கவலையுடன் பயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த நாட்டு எப்படி முன்னேறியது என்பதை சொல்லும் ஏராளமான நூல்கள் இன்று வெளிவந்துகொண்டிருக்கின்றன. ரமணன் எழுதியுள்ள இந்த நூல் அந்த வகையில் ஏராளமான தகவல்கள், ஆராய்ச்சிகள் என சீனாவின் வளர்ந்த கதையை எளிமையாக முன்வைக்கிறது. சீனாவின் வளர்ச்சி, உள்நாட்டில் எதிர்கொண்ட சவால்கள், கிராமங்களை அழித்து அதனை நகரங்களாக்கி குறைந்த கூலிக்கு தொழிலாளர்களை தயாரிப்பு என பல்வேறு சர்ச்சைக்குள்ளான சமாச்சாரங்களையும் நூலில் சொல்லியிருக்கிறார்கள். மாசேதுங் காலத்தில் சீனாவில் தொடங்கிய கலாசார, சமூக பொருளாதார மாற்றங்கள், டொங்பிங், ஜின்பிங் வரை அப்படியே தொடர்வதையும் சிறப்பாக விவரித்துள்ளார் ரமணன். குறிப்பாக நிலச்சீர்திருத்தங்கள். இந்த விஷயத்தில் இந்தியா கற்றுக்கொள்ள நிறைய சமாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு சீர்த்திருத்தங்களாக முயன்று பொருளாதாரத்தில் முன்னுக்கு வந்த நாடு சீனா. இவற்றை ஒரே நேரத்தில் முயல்வதால் இந்தியா முன்னேற முடியவில்லை என்ற கருத்தைய