இடுகைகள்

அரசுப்பள்ளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாணவர்களை விஞ்ஞானிகளாக்க புதுமையான முறைகளைக் கையாளும் அறிவியல் ஆசிரியர் - மைதிலி

படம்
  மாணவர்களை விஞ்ஞானிகளாக்க முயலும் ஆசிரியர் – மைதிலி புதுக்கோட்டையில் உள்ள கம்மங்காட்டில் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, அறிவியல் ஈடுபாட்டில் தலைசிறந்த பள்ளி என பெயர் பெற்றுவருகிறது. மாநில அளவில் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான பரிசுகளை,  இந்த அரசு பள்ளி மாணவர்கள் பெற்று வருகிறார்கள். இதெல்லாம் கடந்து மத்திய அரசின் உதவித்தொகைக்கான தேர்வுகளை எழுதியதில் 14 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இத்தனைக்கும் என்ன காரணம் என்று கேட்டால், மைதிலி டீச்சர் என கோரசாக சொல்லுகிறார்கள் மாணவர்கள். ‘’எனக்கு மாணவர்களின் ஒழுக்கம் என்பது முக்கியம். பாடங்களை சாதாரணமாக சொல்லித் தந்தபிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுத்தான் மாணவர்கள் நான் கற்றுத்தரும் வழிகளை ஏற்கத் தொடங்கினார்கள்’’ என்று பேசும் மைதிலி, வேதியியல் பட்டதாரி. இவர் அறிவியல் பாடங்களின் முக்கியமான அம்சங்களை சினிமா பாடலாக மாற்றிப்பாடுகிறார். பிறகு, பாடங்களை எப்போதும் போல நடத்துகிறார். இதனால் மாணவர்களுக்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக புரிகிறது. அறிவியல் கண்காட்சிகளில் கம்மங்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கோள் மண்டலம், பிளாஸ்டிக்கில் இருந்து ப்ளூடூ

மாணவர்களுக்கு கல்வெட்டுகளைப் படிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

படம்
  ராமநாதபுரத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜகுரு. ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். அதோடு நிற்கவில்லை என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுவதன் காரணமே… கொஞ்சம் எக்ஸ்ட்ரா விஷயங்களை செய்தார். என்ன செய்தார்? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளை படிப்பதில், ராஜகுரு அதிக ஆர்வம் காட்டுகிற ஆள். இதை பிறருக்கும் சொல்லித் தந்து வருகிறார். ஹெரிடேஜ் கிளப்பில் செயலாளராக இருப்பவர், ராமனாதபுரம் தொல்பொருள் ஆராய்ச்சி பவுண்டேஷனின்   தலைவராகவும் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். இந்த பவுண்டேஷன், சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. திருப்புல்லானியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி பதிமூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் கட்டுமானம், அவர்களின் மொழி, ஆகியவற்றை காக்கும் நோக்கத்தில்   கிளப் பேரார்வம் காண்பித்து வருகிறது. தொல்பொருள் சான்றுகளைப் பற்றி அறிவதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களை ராஜகுரு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். இதன்மூலம், ஆண்டுக்கு 25 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். அதாவது, ஆண்டுக்க

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்த களத்தில் குதிக்கும் தன்னார்வ அமைப்பு - பால் உத்சவின் பணிகளை அறிவோமா?

படம்
  அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் பால் உத்சவ் அமைப்பு!  2009ஆம் ஆண்டு தொடங்கி, கர்நாடகத்தின் பெங்களூருவில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்பு, பால் உத்சவ். இந்த அமைப்பு அரசு பள்ளிகளின் கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவர்களுக்கான சுகாதார மேம்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதனை பினு வர்மா மற்றும் ரமேஷ் பாலசுந்தரம் ஆகியோர் தொடங்கி நடத்தி வருகின்றனர். ரமேஷ் பாலசுந்தரம், கர்நாடக அறிவு ஆணையத்தில் முன்னாள் ஆலோசகராக செயல்பட்டுள்ளார்.  பால் உத்சவ் , அரசு பள்ளிகளுக்காக இரு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல் திட்டம் ஐஷாலா (ishaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகப்பை, எழுது பொருட்கள், காலணிகள், சானிடரி நாப்கின், குடிநீர் பாட்டில்களை வழங்குகிறார்கள். மாணவர்கள் கல்வியை சுமையின்றி கற்க உதவும் திட்டமிது.  பள்ளியில் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் டிவி, இணையம், மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கின்றனர். இரண்டாவது திட்டம், சம்பூர்ண ஷாலா (Sampoorna Shaala). இதில் மாணவர்களின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாக உ

அரசுபள்ளி மாணவர்களை வாசிக்க ஊக்கப்படுத்தும் நடமாடும் நூலகம்!

படம்
  வாசிப்பை வளர்க்கும் நூலகம்!  திருவண்ணாமலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, ஆடையூர் பஞ்சாயத்து பள்ளி. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், குறிப்பிட்ட நேரம் ஆனதும் ஜன்னலுக்கு வெளியே பார்க்கத் தொடங்கிவிடுகின்றனர்.  பைக்கில் வரும் நூலகருக்காகத்தான் மாணவர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். நூலகர்,நடமாடும் நூலகம் என எழுதப்பட்ட பெட்டியிலிருந்து நூல்களை எடுத்து மாணவர்களுக்குக் கொடுக்கிறார். 15 நாட்களுக்குள்  நூல்களை படித்துவிட்டு திரும்ப கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.  மாணவர்களுக்கு, இதற்கென தனி அடையாள அட்டை உண்டு.  குறிப்பிட்ட கால அளவில் பத்து நூல்களை படிக்கும் மாணவர்களுக்கு, இலவசமாக ஒரு நூலை வழங்குகிறார் நூலகர்.  இந்த நடமாடும் நூலக திட்டத்தை அரசுப்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தி வருவது, ரெஜன்பூக் இந்தியா பௌண்டேஷன் (Regenboog India Foundation). இதனை நிறுவி நடத்தி வருபவர், மதன் மோகன்.  2006ஆம் ஆண்டு மதன் மோகன், ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பணியில், மனநிறைவு கிடைக்காததால் , வேலையை விட்டுவிலகி சமூகப் பணிகளைச் செய்ய நினைத்தார்.   அப்போது திருவண்ணாமலையில் இடைநிற்கும் கிராம மாணவர்களின் எண்ணிக்

வாசிப்பு பழக்கத்தை மாணவர்களின் மனதில் விதைக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்!

படம்
  ஆசிரியர் உமா மகேஸ்வரி வாசிக்கும் பழக்கம் என்பது மாணவர்களுக்கு இன்று அவசியமானது. அதிலும் மதிப்பெண்கள் மட்டுமே முக்கியமாகிக்கொண்டு இருக்கும் நிலையில், அவர்களது கற்பனைத் திறனை வளர்க்க வாசிப்பு உதவுகிறது. இதற்கு சில ஆசிரியர்கள் எப்போதும் உதவி வருகின்றனர். கூடவே அதனை வளர்க்கவும் மாணவர்களுக்கு ஆதரவை வழங்குகின்றனர். அப்படி ஒருவர்தான் ஆசிரியர் உமா மகேஸ்வரி. இவர் குரோம்பேட்டை அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இங்கு வகுப்பில் மாணவர்களுக்கென தனி நூலகத்தை உருவாக்கியிருக்கிறார்.  மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களை விட அவர்கள் நூல்களை வாசிப்பது, அதை பற்றி மதிப்பீடுகளை முன் வைப்பதற்கும் கூடுதல் மதிப்பெண்களை வழங்குகிறார். இது மாணவர்களுக்கு நூல்களின் மீது அக்கறை செலுத்த வழிவகுத்தது. இதன் விளைவாக, அரசுப் பள்ளி மாணவி விமானத்தில் செல்லும் வாய்ப்பையும் நூல் வாசிப்பு வழங்கியிருக்கிறது. திரைப்பட நிறுவனம் ஒன்று உங்கள் கனவு பற்றி கட்டுரை எழுதுங்கள் என்று சொல்லி நடத்திய போட்டியில் மாணவி வெற்றி பெற்று முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்து திரும்பியிருக்கிறார்.  2005ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் ஜன்ச

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆங்கிலம் அவசியம்!

படம்
  ராதா கோயங்கா மும்பையிலுள்ள அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆர்பிஜி நிறுவனம் முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. தாய்மொழிக்கல்வியை பலரும் வலிமையாக பேசினாலும் வணிக மொழியாக வெற்றி பெற்றுள்ளது ஆங்கிலம்தான். அதனுடைய இடத்தை பிராந்திய மொழியோ, தேசியமொழியோ கூட பெறவில்லை என்பது நடைமுறை யதார்த்தம்.  அந்த வகையில் மும்பையிலுள்ள அரசுப்பள்ளிகளில் பெஹ்லாய் அக்சார் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை ராதா கோயங்கா என்ற பெண்மணி திட்டம் தீட்டி அரசு ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறார்.  கட்டாய கல்விச்சட்டத்தை மதிய உணவுத்திட்டத்துடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தியது அதன் வெற்றிக்கு உதவியது. அதைப்போலத்தான், நான் ஆங்கிலத்தில் பேசும் வகுப்பையும் கருதுகிறேன். இது அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தடையை நீக்கும் என நம்புகிறேன் என்கிறார் ராதா.  பெஹ்லாய் அக்சார் குழுவினர் இவர் இப்பணிக்காக, தனது வேலையைக் கூட கைவிட்டுவிட்டு முழுமையாக இதனைச் செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஆங்கில கல்வித் திட்டம் இது. ஆனால் அப்போது வெறும் தன்னார்வலர்களின் உதவியை மட்டுமே பெற்றார். ஆனால் திட்டத்தை நடைமுறைப்

அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

படம்
உடனே தலைப்பை படித்தவுடனே சந்தோஷப்படவேண்டாம். இதற்கு காரணம், பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்புதான். பலருக்கும் சம்பள வெட்டு, வேலையிழப்பு, தொழில் பாதிப்பு என அனைத்தும் இந்த தலைப்பின் பின்னால் உள்ளது. அதை நாம் விளக்கமாக பேசுவோம். மேற்படி அரசு பள்ளிகளில் மாணவர்கள் குவிகிறார்கள் என்ற ஆய்வை 2021ஆம் ஆண்டிற்கான ஏஎஸ்இஆர் அறிக்கைதான் கூறியது. ஆறிலிருந்து 14 வயது வரையிலான மாணவர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதுமே குறைந்துள்ளது. 2018இல் 32.5 சதவீதமாக இருந்த தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை இப்போது 24.4 (2021) சதவீதமாக குறைந்துவிட்டது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சதவீதம் 64.3 சதவீதமாக இருந்து 70.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது புதிதானது அல்ல. இருந்தாலும் அதன் சதவீதம் பெருமளவு வேறுபடுவது இப்போதுதான் தொடங்கியுள்ளது. இதற்கான காரணங்கள் என்ன? தனியார் பள்ளிகளில் பெருந்தொற்று காலங்களில் படிப்பு ஏதும் சொல்லித்தரப்படுவதில்லை இப்படி சொல்பவர்களின் அளவு 40 சதவீதம். 62 சதவீதம் பேர் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அரசுப் பள்ளிக்கு மாறியிருக்கிறார

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

பள்ளி இடைநின்ற மாணவர்களை மீட்கும் ஆசிரியர்கள்! - தமிழக அரசின் புதிய கல்வித்திட்டம்

படம்
  திருச்சியில் பள்ளியில் இடைநின்ற மாணவர்களை மீட்கும் முயற்சிகளை அரசுபள்ளிகள் தொடங்கியுள்ளன. அங்கு வறுமையால் குடும்பத்திற்கு உழைக்கும் நிலையில் உள்ள மாணவர்களை நேரடியாக சென்று சந்தித்து மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்க ஆசிரியர்கள் முயன்று வருகிறார்கள். இந்த வகையில் ஹரிதாஸ் என்ற மாணவர், விபத்தால் படுக்கையில் கிடக்கும் தந்தை காரணமாக கட்டிட வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவரது வயது 17. இப்போது ஆசிரியர்கள் அவரை மீண்டும் பத்தாம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இவரைப் போலவே உள்ள ஐம்பது மாணவர்களை சோமரசன்பேட்டை  அரசுப்பள்ளியில் மீண்டும் சேர்த்துள்ளனர்.  இப்படி  பள்ளியில் இடைநின்ற மாணவர்கள் சேர்க்கும் திட்டத்தை கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி தொடங்கியுள்ளார். கடந்த ஜூன் ஜூலையில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதில் கொரோனா முக்கியமான காரணமாக உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று மீண்டும் அவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்து வருகிறார்கள்.  திருச்சியில் மட்டும் இந்த வகையில் பள்ளியில் இடைநின்ற 3769 மாணவர்கள் பள

ஏழை மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நேரம் இது!

படம்
  தமிழ்நாட்டில் இப்போது மெல்ல பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஓராண்டாக ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து வந்த தலித், பட்டியலின மாணவர்கள், அரசின் கல்வி தொலைக்காட்சியைக் கூட அணுக முடியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். இதற்கு இவர்களின் பெற்றோரின் பொருளாதார நிலைதான் முக்கியமான காரணம்.  ஸ்மார்ட்போன் வாங்க முடியாத நிலையிலும் அரசின் கல்வி தொலைக்காட்சி பார்த்து கல்வி கற்க முடியாத நிலையில் கல்வி கற்றலில் ஓராண்டு தடை விழுந்துள்ளது. ஏன் வந்தது என்று கேள்வி கேட்டால் பதில் வந்திருச்சு என்றுதான் பதில் கிடைக்கும்.  ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களின் மீது அக்கறையாக செயல்படுபவர்கள் குறைவானவர்கள்தான். அரசின் கல்வி தொலைக்காட்சி பார்ப்பது போல புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஆதி திராவிடர் மாணவர்களை ஆசிரியர்கள் கேட்டுள்ளனர். உண்மையில் கல்வி கற்றலில் விழுந்த இடைவெளியை வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடும் கல்வி தொலைக்காட்சி புகைப்படம் நிரப்பிவிடும் என்றால் இதைவிட ஆச்சரியம் வேறு என்ன இருக்க முடியும்? சேத்துப்பட்டு, பெருநகர், மானாமதி ஆகிய காஞ்சிபுரத்தி

மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

படம்
  தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி! டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது?  டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங்.  இங்குள்

தனியார் வழங்கும் கல்வி உதவுமா?

படம்
  தனியார் வழங்கும் கல்வி உதவுமா?  கல்வித்துறையில் தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய அரசு இறங்கியுள்ளது.  அண்மையில் இந்திய நிதியமைச்சர் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார். இதில்  அந்நிய முதலீடு, குறைந்த வட்டியில் கடன் ஆகியவற்றை கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களாக கூறினார். ஆனால் கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள் கல்வித்துறையில் முதலீடு செய்ய மேலும் விதிகளை மாற்றவேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர்.   அமெரிக்காவிலுள்ள ஹார்ட்வர்டு பல்கலைக்கழகம் 4 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளை இந்தியக் கல்வித்துறையில் செய்ய முன்வந்திருக்கிறது. ஆனால் கல்வி நிறுவனங்கள்  நிதியை ஏற்கவோ, கையாளவோ தற்போதைய அரசு விதிகள் அனுமதிக்கவில்லை. இதைத்தான் மாற்றவேண்டும் இத்துறை சார்ந்த வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காரணம், இத்துறையில் ஏற்படவிருக்கும் வளர்ச்சிதான்.   ”இன்றுள்ள வளர்ச்சியோடு ஒப்பிட்டால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் கல்வித்துறை 80 ஆயிரம் கோடி மதிப்பு கொண்டதாக மாறியிருக்கும்” என்றார் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த நாராயணன் ராமசாமி.  இந்தியாவில் ஆராய்ச

பாலின பேதம் அகற்றும் உடைகள்! - புதிய முயற்சி!

படம்
பள்ளிகளில் வெள்ளைச்சட்டை காக்கி ட்ராயர் அணிந்து வந்தது காமராசர் காலத்தில். காரணம், ஏற்றத்தாழ்வுகள் மாணவர்களின் மனதைப் பாதிக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது. இன்று ஏற்றத்தாழ்வுகளை உடை கூறுவதில்லை. பிற பொருட்களை அதற்கேற்ப தயார் படுத்திவிட்டார்கள். பயன்படுத்தும் பொருட்கள், உணவு முதற்கொண்டு மாறுபடுகிறது. ஆனால் மாணவர்களை பார்க்கும்போது வேறுபாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இன்னொரு பிரச்னை காலப்போக்கில் முளைவிட்டது. அது ஆண், பெண் பாலின பேதம். பெண்ணுக்கு ஒருவிதம், ஆணுக்கு ஒருவிதமான உடை என்பது வகுப்பிலேயே அவர்களை பிரிப்பது போல என மேற்கத்திய நாடுகளில் உடை சீர்த்திருத்தங்கள் தொடங்கியுள்ளன. சமூகத்தில் வேலைத்திறன் என்பதைப் பார்க்காமல் பெண் செய்தால் குறைந்த கூலி, ஆண் செய்தால் அதிக கூலி என்ற பிரச்னை உருவாகி வருகிறது. இதனை பள்ளியிலேயே ஏன் உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்தான் உடை சீர்த்திருத்தங்களுக்கு முக்கியக்காரணம். எர்ணாக்குளத்தைச் சேர்ந்த வலையச்சிருங்காரா தொடக்கப்பள்ளி பாலின பேதமற்ற ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில் ஸ்கர்டுகளை அணிந்த மாணவிகளுக்கு அந்த உடை விளையாட்டுக்கு உதவியாக இல