டெக் நிறுவனத் தலைவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு ஆசிரியர்! - ஶ்ரீதர் வேம்புவின் புதிய ஐடியா!
டெக் தலைவர் இப்போது ஆசிரியர் ஜோஹோ கார்ப்பரேஷன் தலைவர் யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இருநூறு கோடிக்கும் அதிகமாக சொத்து மதிப்பு கொண்ட நிறுவனம் என இதனை போர்ப்ஸ் நிறுவனம் அட்டவணைப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் இயக்குநர், அண்மையில் தனது நிறுவனத்தை தென்காசிக்கு மாற்றினார். கடந்த ஆண்டு இவர் செய்த இந்த மாற்றம், முக்கியமானது. இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் செலவுகளை குறைத்து வீட்டிலேயே பணி செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. இவர் கொரானோ பாதிப்பிற்கு முன்னமே இந்த முயற்சியை செய்துவிட்டார். இப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியராகவும் மாறிவிட்டார். தென்காசியிலுள்ள மத்தாளம்பாறை கிராமத்திற்கு நிறுவனத்தை மாற்றியவர், குழந்தைகளுக்கு டியூசன் எடுக்கத் தொடங்கினார். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் இதனை செய்யத் தொடங்கியவர், இப்போது நான்கு ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி 52 மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறார். இம்மாணவர்கள் அனைவரும் கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்தவர்கள். ''நான் தொடங்கியுள்ள கல்வி ஸ்டார்ட்அப் இது. கல்வி,உணவு இலவசமாக கொடுத்து பாடங்களை சொல்லித்தர