இடுகைகள்

அனில் கபூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நல்ல படத்தை வசூலிக்கும் தொகை தீர்மானிப்பதில்லை - ஹர்ஷ்வர்த்தன் கபூர்

படம்
            ஹர்ஷ்வர்த்தன் கபூர் இந்தி நடிகர் இரண்டு பொதுமுடக்கங்கள் ஏற்பட்டுள்ளன. திரைத்துறை சார்ந்த வேலைகள் அனைத்துமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரங்களில் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்.  நான் அப்பாவுடன் இணைந்து டிஜிட்டல் வெளியீட்டிற்காக தயாராக உள்ள படங்களை உருவாக்கிக்கொண்டிருந்தோம். வாசன் பாலா எடுக்கவிருக்கும் படத்தில் நானும் அப்பாவும் நடிக்கிறோம். எனவே ஒருசில மாதங்கள் தவிர பிற நாட்களில் எனக்கு வேலை இருந்தது.  நீங்கள் அறிமுகமான படம் மிர்சயா வெற்றிபெறவில் லை. அடுத்து வெளியான பவேஷ் ஜோஷி படத்தில் உங்களுடைய நடிப்பு பேசப்பட்டது. ஆனால் அந்தப்படம் கூட சிறப்பான வெற்றியைப் பெறவில்லை. இந்த சூழ்நிலை உங்களுக்கு எப்படி இருந்தது? பவேஷ் ஜோஷி படம் பலராலும் சரியாக கவனிக்கப்படாத படமாக போய்விட்டது. அதற்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகிவிட்டது. அவர்கள், இன்றும் கூட அதன் அடுத்த பாகத்தை எடுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். எனக்கு சமூக வலைத்தளம் வழியாக இதுபோல கோரிக்கைகள் வருகின்றன. அந்தப்படம் வசூல் ரீதியாக சரியாக போகவில்லை என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. நல்ல  படத்தை வசூல் தீர்மானிப்

நடிகரை நடிக்க வைக்க சர்ச்சை இயக்குநர் செய்யும் சூப்பர் பிளான்! - ஏகே விஸ் ஏகே 2020

படம்
                    ஏகே விஸ் ஏகே விக்ரமாதித்ய மோட்வானே இந்த படம் முழுக்க நடைமுறையில் வாழும் இருமனிதர்கள் பற்றிய பாதி பாதி உண்மைகளைக் கொண்டு எழுதப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது . படம் முழுக்க அனுராக் காஷ்யப் , அனில் கபூர் பற்றிய ஏராளமான கிண்டல் , நக்கல் விரவிக் கிடக்கிறது . அதுதான் படத்தை சுவாரசியப்படுத்துகிறது . அனில் கபூர் , அனுராக் காஷ்யப் இருவரும் ஒரு ஊடக நேர்காணலுக்கு வருகிறார்கள் . அங்கு இருவருக்கும் மோதல் வெடிக்கிறது . அந்த சூழ்நிலையில் அனுராக் காஷ்யப் பிரபலமான இயக்குநராக இருக்கிறார் . அனில் கபூர் , மார்க்கெட்டை இழந்த நிலையில் சிறிய பாத்திரங்கள் செய்துகொண்டிருக்கிறார் . அனுராக்கிடம் கூட தனக்கு படத்தில் வாய்ப்பு கொடு என வாய்விட்டு கேட்கிறார் . நேர்காணல் நிகழ்ச்சியில் நடக்கும் அவமானத்தால் அனுராக் காஷ்யப்பின் இயக்குநர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது . எனவே அவர் தனது உதவியாளர் பிளஸ் பெண்தோழி யோகிதா கொடுக்கும் யோசனைப்படி அனில் கபூரை பழிவாங்க நினைக்கிறார் . இதற்காக கதை ஒன்றை எழுதி அதில் லைவாக அனில் கபூரை நடிக்கச்சொல்லி வற்புறுத்துகிறார் . அவர் நடிக்க மாட்ட