இடுகைகள்

பெரியார். தலித் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தி தன் வாழ்வில் கண்ட மகத்தான எதிரி!

படம்
காந்தியின் மகத்தான எதிரி! பி.ஏ.கிருஷ்ணன் ஈ.வி. ராமசாமி நாயக்கர் என்ற பெயரைக் கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? உறுதியான உண்மையைப் பட்டென்று பேசும் குரல்தானே! இருபதாம் நூற்றாண்டின் மகத்தான சீர்திருத்தவாதிகளில் பெரியாருக்கு முக்கியமான இடமுண்டு. அரசியல் பதவிகளுக்கு ஆசைப்படாத பெரியார், மக்களின் தலைவர். தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுடன் பேசுவதற்காகச் செலவிட்டு பரிசாக செருப்புகளையும் கற்களையும் பெற்றவர். ஆனால் தன் வாழ்நாள் முழுக்க சுயநலமாக மட்டும் செயல்படவில்லை. காந்தியின் மகத்தான எதிரிகளில் மூன்று முக்கியமானவர்கள் உண்டு. ஜின்னா, அம்பேத்கர் ஆகியோர் காந்தியைப் பற்றிய கருத்துகளை திடமாக எழுதி ஆங்கிலத்தில் வெளியிட்டனர். இதில் பெரியார் மூன்றாவதாக வருகிறார். தமிழ் பேசாதவர்களுக்கு பெரியார் அறியப்படாதவராக இருப்பார். ஆனால் அவரின் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்பவர், தீவிரமான அவரின் விசுவாசியாக மாறுவது நிச்சயம். இன்றும் கூட பெரியாருக்கு அவரின் முழு அரசியல் சமூக வாழ்க்கையைப் பேசும் வரலாறு கிடையாது. திராவிட இயக்கம் வெளியிட்ட வரலாறு போல் அல்லாது தமிழ் அல்லாதவர்களும் ப