இடுகைகள்

வெங்கடேஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அத்தையின் மந்திரி பதவியை அழித்து அவரின் மகளைக் கரம் பிடிக்கும் மருமகனின் கதை!

படம்
  பொப்பிலி ராஜா வெங்கடேஷ்,திவ்ய பாரதி  இயக்கம் பி கோபால்,  காட்டுக்குள் அம்மா, தாத்தாவுடன் சிறுவன் இருபது ஆண்டுகளாக வளர்ந்து பெரிதாகிறான். அவன்தான் பொப்பிலி ராஜா. அங்கு வரும் அமைச்சரின் பெண்ணுடன் நேசம் பிறக்கிறது. ஆனால் அமைச்சரோ, ராஜாவின் அம்மா, தாத்தாவை கட்டி வைத்து அடிக்கிறாள். காவல்துறை மூலம் சித்திரவதை செய்ய முயல்கிறாள். ஏன் அப்படி செய்கிறாள் என்பதே கதையின் முக்கியப் பகுதி.  தேர்தல் அரசியலுக்காக கொலை செய்யப்பட்டு, குணநலன்கள் களங்கப்படுத்தப்பட்டு காட்டுக்கு செல்ல நேருகிற சூழல் ராஜாவின் அம்மாவுக்கு நேருகிறது. ஆனால், அவர் பழிவாங்குவதை முக்கியமாக கருதவில்லை. தனது மகனை அவன் இயல்புப்படி வளர்க்கிறார். அவன் அரசு வனத்துறையோடுசேர்ந்து வேலை செய்கிறான். இந்த நேரத்தில் அங்கு வரும் அமைச்சரின் மகளை சந்திக்கிறான். இருவருக்கும் முதல் சந்திப்பிலேயே முட்டிக்கொள்கிறது. பிறகு இருவரும் மெல்ல மனதால் நெருங்கி வருகிறார்கள். அவன் யார் என அடையாளம் தேடும்போது, அவளின் அப்பா, அவன் உன் மாமன் முறைதான். கட்டிக்கொள்ளலாம் என வெளிப்படையாக சொல்கிறார். அதாவது, மனைவியின் தம்பி மகன்.  பழிவாங்குதலை தொடங்க வேண்டாமா? மந்திர

தனது குடும்ப சொத்தை மீட்டு சிதறிய குடும்பத்தை ஒருங்கிணைக்கும் நாயகன்!

படம்
  சர்தா புல்லோடு  வெங்கடேஷ் , நக்மா, சங்கவி  தனது அம்மாவை வேசி என சொல்லி அப்பாவிடம் இருந்து பிரித்து அவரை குடிநோயாளியாக்கி, தங்கையை பணி மனுஷியாக்கும் அத்தையை பழிவாங்கும் நாயகனின் கதை.  மேலே சொன்ன விஷயங்களை சீரியலுக்கு பொருத்தமாக வைக்கலாம். ஆனால் படத்திற்கு கதையாக வைத்து எடுத்தால் எப்படியிருக்கும்? கண்றாவியாகவே இருக்கும். மாற்றமே இல்லை. அதேபோல்தான் இருக்கிறது. கொஞ்சம் ஆசுவாசமாக இருக்க சங்கவி, நக்மாவின் கிளுகிளு நடனம் உதவுகிறது.  தெலுங்குபடங்களில் நாயகியை ஸ்டாக்கிங் செய்து காதலிக்கும் வம்பு பண்ணும் நாயகன் கூடவே அவரது மாமியாரையும் பாலியல் சீண்டல்களை செய்து ஆண்மையை நிரூபிப்பது வழக்கம். இதை நகைச்சுவை என நினைத்து செய்கிறார்கள். ஆனால் சண்டாளமான காட்சியாக வந்துவிடுவது வாடிக்கை. இதிலும் மாமியார் மஞ்சுளாவுக்கு அப்படியான காட்சிகள் ஒன்றல்ல இரண்டை வைத்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் இரு நாயகிகளை இடுப்பில் வைத்து ஆடுவது, அத்தை, அத்தை பெண்கள் இருவர் என த்ரீசம், ஃபோர்சம் செய்வதெல்லாம் உண்டு. கண்களைக் கட்டும் காம வித்தைகள் அவை.  கோட்டா சீனிவாசராவ், சத்ய நாராயணா என இரு நடிகர்கள் நன்றாக நடித்திருக்கிற

தனது காதலியைக் கொன்ற தேசவிரோத கூட்டத்தை ஒழிக்கும் சுமார் போலீஸ் - சூப்பர் போலீஸ் - வெங்கடேஷ், நக்மா

படம்
  சூப்பர் போலீஸ்  வெங்கடேஷ், சௌந்தர்யா, நக்மா தேசவிரோதிகளை சப் இன்ஸ்பெக்டர் எப்படி பிடிக்கிறார், தனது காதலி பாரதி கொலைக்கு காரணமான சக்திகளை அழிப்பது எப்படி என கதை சொல்லுகிறது.  அப்பண்ணா என்ற தொழிலதிபர் இருக்கிறார். அவர் உள்துறை அமைச்சரோடு சேர்ந்து பாக் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வேலைகளை செய்துகொடுத்து சம்பாதித்து வருகிறார். இவரது மகள் ஏழை ஒருவரை காதலிக்கிறாள். இதற்கு உதவி செய்வதன் வழியாக வெங்கடேஷ், அப்பண்ணாவின் உலகில் உள்ளே வருகிறார். அப்பண்ணா, வெங்கடேஷ் தங்கியுள்ள வீட்டு உரிமையாளரான பத்திரிகையாளரை மதுபான புட்டியில் குண்டு வைத்து கொல்கிறார். அது வெங்கடேஷூக்கு வைத்ததுதான். ஆனால் தவறி பத்திரிகையாளர் இறந்துபோகிறார். இதனால் கோபம் கொள்ளும் வெங்கடேஷ் அப்பண்ணாவைக் கொல்ல சபதம் எடுக்கிறார். ஆனால் அதிகார சக்திகளுடன் மோதி தனது வேலையை இழக்கிறார். அப்பண்ணா நாயகனது காலை முறித்துப்போடுகிறார். இதிலிருந்து மீண்டு வரும்போது தனது முன்னாள் காதலி பாரதி காரில் அடிபட்டு இறந்துபோனதற்கு அப்பண்ணா காரணம் என அறிகிறார். பிறகு எப்படி பழிவாங்கினார் என்பதே கதை.  படத்தில் நாயகன் இறந்துபோவதே யதார்த்த படமாக இருக்கும். ஆனா

ஒருதலைக்காதலில் இழுத்துவிடப்படும் பெருமாள் பக்தனின் நிலை! - நமோ வெங்கடேசா - வெங்கடேஷ், த்ரிஷா

படம்
    நமோ வெங்கடேசா - தெலுங்கு  விக்டரி வெங்கடேஷ், த்ரிஷா, பிரம்மானந்தம். முகேஷ் ரிஷி, அலி இயக்கம் சீனு வைட்லா   வெங்கட்ரமணா, ஹைதராபாத்தில் தனது சித்தப்பா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு தொழிலே கலை நிகழ்ச்சிகளை செய்வதுதான். இந்த நிலையில் வயசாகிறதே திருமணம் செய்யலாம் என நினைத்து ஜோதிடம் பார்க்கிறார்கள். ஆனால் ஜோதிடர் போட்ட சோளிகளில் ஒன்று எந்த பக்கமும் திரும்பாமல் நடுவில் நிற்கிறது. அதாவது கல்யாணம் நடந்தாலும் நடக்கும். இல்லையானாலும் சரி. வெங்கட்ரமணாவைப் பொறுத்தவரை அவர் பிறரை ஏமாற்றுவதில்லை. அவரும் ஏமாறுவதில்லை. இப்படி இருப்பவருக்கு பாரிசில் நிகழ்ச்சி நடத்த அழைக்கிறார்கள். அழைத்த ஆள் லேசுபட்டவரில்லை. ஆனால் அவரையும் வெங்கட் ரமணா எந்த கல்மிஷம் இல்லாமல் நடந்துகொண்டு பீதிக்குள்ளாக்குகிறார். பிரசாத் என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கட் ரமணாவை தனது சொந்தக்காரப் பெண் காதலிப்பது போல மாயையை உருவாக்குகிறார். அதையும் வெங்கி நம்புகிறார். ஆனால் உண்மையில் அவர் காதலிக்கும் பெண் யார், அவர் யாரை விரும்புகிறார், பிரசாத்தின் பழிவாங்கும் திட்டம் நிறைவேறியதா என்பதை நகைச்சுவையாக சொல்ல

மாமா மாப்பிள்ளை பாச கிளிஷே காவியம் - வெங்கி மாமா!

படம்
வெங்கி மாமா - தெலுங்கு இயக்கம் - கே.எஸ். ரவீந்திரா கதை - ஜனார்த்தன் மகரிஷி ஒளிப்பதிவு - பிரசாத் முரல்லா இசை - தமன் எஸ்எஸ் ஆஹா... வெங்கடேஷ்தான் பளபளக்கிறார். படத்தின் முதல் காட்சி தொடங்கி கண்ணீர் மல்க தான் வளர்த்த மாப்பிள்ளை மீதே புகார் சொல்வதை பார்ப்பது என மனதில் நிற்பது இவர்தான். நாக சைதன்யா கேரக்டர் கூட மனதில் நிற்கவில்லை. குடும்பமாக இருக்கும் ஆட்கள். பாசம், மாமா, மாப்பிள்ளை என பேசுவது இதுதான் படத்திற்கான ஈர்ப்பாக உள்ளது. மற்றபடி கதையில் உறுதியான எந்த விஷயமும் இல்லை. தமனின் இசையில் ரெட்ரோ பாடல்கள் ஈர்க்கின்றன. ஐயய்யோ கதை, திரைக்கதை எல்லாமும்தான். ராசி கண்னா ட்ராக் பொறுமையை சோதிப்பது போல உள்ளது. படத்தில் ஜாதகம்தான் சிக்கல் என்றால் அதனையே முதன்மையாக வைத்து இருக்கலாம். ஜாதகம் அறிமுகமாவதற்கு முன்னாடியே ராவ் ரமேஷ் வில்லனாக புரமோஷன் வாங்கிவிடுகிறார். அப்புறம் ஜாதகம் என்ன செய்யப்போகிறது? பயிற்சி பெற்ற வீர ர்களை சாதிக்க முடியாததை, மாப்பிள்ளை மீது பாசம் கொண்ட வெங்கடேஷ் எப்படி சாதிக்கிறார்? இதெல்லாம் கேட்டால் அங்கு பனிமலை முகடுகளில் ... என பேசுவார்கள். பாச