இடுகைகள்

உறவுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆதரவற்றோரின் உடல்களை கௌரவமாக அடக்கம் செய்யும் சமூக சேவகர் - உறவுகள் - காலித் முகமது

படம்
  ஆதரவற்றோருக்கு உறவினர் வாழ்க்கையில் பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்தான். ஆனால் இறப்பு என்பது நிறைய மனிதர்கப் பயப்படுத்துகிறது. பிறப்பில் உள்ள ஆரவார கூச்சல் இறப்பில் ஏற்படுவதில்லை. ஒரு விதமான சுமையான மௌனம் அனைவரின் மனதிலும் உருவாகிறது.   இறந்தவர்களுக்கு உறவினர்கள் பலம். ஏராளமான உறவினர்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்களை எளிதாக தகனம் செய்துவிட முடியும். ஆனால் ஆதரவற்றோருக்கு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு   இறப்பு மிகவும் அவலமாகவே உள்ளது. இறந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை. ஆனாலும் இறந்த உடல்களை முறையாக எடுத்ததுச்சென்று குறிப்பிட்ட இடத்தில் எரிப்பது, அல்லது புதைப்பது சிறந்தது.   இந்த சமூகப்பணியை 2017ஆம் ஆண்டு தொடங்கி   சென்னையைச் சேர்ந்த காலித் முகமது செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளில் காலித் முகமது தனது தொண்டு நிறுவனம் மூலம் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிணங்களை கௌரவமான முறையில் தகனம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக உடல்கள் வந்திருக்கின்றன. காலித் முகமது முதலில் தனியாக இப்பணியைச் செய்தாலும் இப்போது, ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். ச

அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!

படம்
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார்.  சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார். அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும். படம்:Pixabay