ஆதரவற்றோரின் உடல்களை கௌரவமாக அடக்கம் செய்யும் சமூக சேவகர் - உறவுகள் - காலித் முகமது

 











ஆதரவற்றோருக்கு உறவினர்




வாழ்க்கையில் பிறப்பு எப்படியோ, இறப்பும் அப்படித்தான். ஆனால் இறப்பு என்பது நிறைய மனிதர்கப் பயப்படுத்துகிறது. பிறப்பில் உள்ள ஆரவார கூச்சல் இறப்பில் ஏற்படுவதில்லை. ஒரு விதமான சுமையான மௌனம் அனைவரின் மனதிலும் உருவாகிறது.  இறந்தவர்களுக்கு உறவினர்கள் பலம். ஏராளமான உறவினர்கள் உள்ளவர்களுக்கு அவர்களின் உடல்களை எளிதாக தகனம் செய்துவிட முடியும்.

ஆனால் ஆதரவற்றோருக்கு, குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கு  இறப்பு மிகவும் அவலமாகவே உள்ளது. இறந்தவர்கள் அதைப்பற்றி கவலைப்படபோவதில்லை. ஆனாலும் இறந்த உடல்களை முறையாக எடுத்ததுச்சென்று குறிப்பிட்ட இடத்தில் எரிப்பது, அல்லது புதைப்பது சிறந்தது.  இந்த சமூகப்பணியை 2017ஆம் ஆண்டு தொடங்கி  சென்னையைச் சேர்ந்த காலித் முகமது செய்து வருகிறார்.

ஆறு ஆண்டுகளில் காலித் முகமது தனது தொண்டு நிறுவனம் மூலம் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பிணங்களை கௌரவமான முறையில் தகனம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் ஆயிரத்திற்கும் அதிகமாக உடல்கள் வந்திருக்கின்றன. காலித் முகமது முதலில் தனியாக இப்பணியைச் செய்தாலும் இப்போது, ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உள்ளனர். சென்னையில் அமைப்பு இருந்தாலும், தேவை உள்ள இடத்திற்கு சென்றும் உடல்களை தகனம் செய்து உதவி வருகின்றனர்.

காலித் முகமது ஒருநாள் சாலையில் செல்லும்போது ஆதரவற்ற முதியவர் உணவின்றி மெல்ல இறப்பதைப் பார்த்தார். கண்முன்னே என்றாலும் அந்த நேரத்தில் காலித்தால் முதியவரைக் காப்பாற்ற முடியவில்லை. எனவே, வீடற்ற, ஆதரவற்றவர்கள் இறந்தால், அவர்கள்  உடலை தகனம் செய்து வருகிறார்.  வீடில்லாமல் சாலையில் வசிப்பவர்களை வீடுகளில் தங்க வைத்தும் உதவுகிறார். செயல்பாடுகளை தொடர்ச்சியாகவே செய்யவே, உறவுகள் என்ற அமைப்பை 2017இல் ஆரம்பித்தார்.  இந்த அமைப்பு நன்கொடை மூலமே இயங்கி வருகிறது.

ஆதரவற்றோரின் உடல்களை தகனம் செய்ய உதவும் உறவுகள் அமைப்பில் பெண்களும் உண்டு.பொதுவாக இதுபோன்ற பணிகளில் பெண்கள் பங்கேற்பது குறைவு. ஆனால் உறவுகள் அமைப்பில் காலித் பெண்களையும் இணைத்துக் கொண்டுள்ளார்.

ஈரோட்டில் இலஞ்சி என்ற அமைப்பு உறவுகள் அமைப்பு போன்ற ஆதரவற்றோரை தகனம் செய்யும் பணியைச் செய்து வருகிறது.  

ராஜலட்சுமி சம்பத்

தி  நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


கருத்துகள்