இடுகைகள்

ஜனவரி, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்வி, செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிக்கென வாரி வழங்கிய தொழிலதிபர்கள்!

படம்
  அள்ளிக்கொடுத்த கரங்கள் உலகிலுள்ள பெரும்பாலான தொழிலதிபர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய செல்வத்தில் குறிப்பிட்ட பகுதியை, தங்களுடைய அறக்கட்டளைக்கு ஒதுக்கி வருகின்றனர். பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்குகிறார்கள். இதில் கணிசமான பகுதி கல்விக்கும், தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்கும் செல்கிறது. போர்ப்ஸ் இந்தியா ஆசியா பசிபிக் பகுதியில் இப்படி அள்ளிக்கொடுத்தவர்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் பதினைந்து பேர் இப்பட்டியலில் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.  ஜப்பானைச் சேர்ந்த தொழிலதிபர் டாகேமிட்சு டகிஸாகி. இவர், 2.6 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தன்னுடைய பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ, நிக்கோலா ஃபாரஸ்ட் ஆகியோர் 3.3 பில்லியன் மதிப்பிலான பங்குகளை தொண்டு நிறுவனமான மிண்டெரூவுக்கு வழங்கியுள்ளனர்.  பெரும்பாலான பணக்காரர்கள் உயர்கல்வி, ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றுக்காக தங்களது செல்வத்தை தானமாக வழங்கியுள்ளனர். மிட்டியா குழும நிறுவனர், ஹே ஷியாங்ஜியான் 140 மில்லியன் டாலர்களை செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்ற ஆராய்ச்சிக்காக ஒதுக்கியுள்ளார். சீன

Advt -Ara press -Rosegold &Co., Books

படம்
  Advt

மென்மையான வளைந்து செல்லும் நீரைப் போல இருங்கள்! - தாவோ தே ஜிங் - சந்தியா நடராஜன்

படம்
 தாவோ தே ஜிங் லாவோட்சு தமிழில் சந்தியா நடராஜன்  159 பக்கங்கள் இந்த நூல் லாவோட்சு எழுதிய பாடல்களை அடிப்படையாக கொண்டது. ஆனால் அதுமட்டும் போதாது என மொழிபெயர்ப்பாளர் பட்டினத்தார், தாயுமானவர், இளங்கோவடிகள், பாரதி, திருவள்ளூவர் என நிறையப்பேர்களை உள்ளே சேர்த்துக்கொண்டிருக்கிறார். இதன் காரணமாக நூல் தாவோ பற்றியதா அல்லது தமிழ்நாட்டு இலக்கிய நூல்களில் உள்ள மெய்யியல் பற்றியதா என குழப்பமே மேலோங்குகிறது.  தாவோ வழியில் பயணித்த துறவி லாவோட்சு. அவர் தனது நாட்டில் ஏற்பட்ட மோசமான சீரழிவுகளைப் பார்த்து பொறுக்கமுடியாமல் அங்கிருந்து வெளியேறுகிறார். அப்போது எல்லையில் உள்ள காவலர் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். தங்களது அறிவை போதனையாக்கி நூல் ஒன்றை எழுதிக் கொடுங்கள் என்கிறார். அந்த அடிப்படையில் தாவோ தே ஜிங் உருவாகிறது.  சீனாவின் மெய்யியல் நூல். தமிழில் மொழிபெயர்த்தாலும் அந்த தன்மையை விளக்கவேண்டும். ஆனால் இந்த நூல், லாவோட்சுவின் அனுபவ தரிசனத்தை தருவதை விட, அவரைப் போலவே தமிழ்நாட்டிலும் சிந்தித்திருக்கிறார்கள், செயல்பட்டிருக்கிறார்கள் என ஒப்பீடுகளில் இறங்கிவிடுகிறது. எனவே, லாவோட்சுவின் மொழிபெயர்ப்பு பாடலைப் பட

மாணவர்களை படுகொலை செய்த காவல்துறையை ஆதரித்துப் பேசிய அமெரிக்க மக்கள்!

படம்
  சில மனிதர்கள் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் சில சூழ்நிலைகளில் ஏன் அப்படி நடந்துகொண்டார்கள் என்றே நம்ப முடியாது. அந்த வகையில் பீதியூட்டும்படி நடந்துகொள்வார்கள். நமக்கு மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கூட அவன் என்ன பைத்தியமா என கூறும்படி நடவடிக்கை இருக்கும். இதுபற்றி ஆராய்ச்சி செய்தவர் உளவியலாளர் எலியட் ஆரோன்சன்.  இப்படி நடந்துகொண்டவர்களை பைத்தியம் என பிறர் நினைக்கலாம். ஆனால் அப்படி உடனே முடிவுக்கு வரவேண்டியதில்லை என்று ஆரோன்சன் கூறுகிறார். சிலர், வன்முறை, குரூரம் அல்லது முன்முடிவுகளின்படி செயல்படுவது உண்டு. நல்ல மனநிலையில் உள்ளவர்கள் கூட சில சந்தர்ப்பங்களில் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் செயல்படுகிறார்கள் என ஆரோன்சன் கருதினார்.  இதற்கு ஆதாரமாக ஆரோன்சன் காட்டும் எடுத்துக்காட்டைப் பார்ப்போம். 1970ஆம் ஆண்டு, ஓஹியோவில் உள்ள கென்ட் மாகாண பல்கலைக்கழகம். இங்கு, அமெரிக்க அரசு, கம்போடியாவுக்குள் நுழையக்கூடாது என மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். அப்போது தேசிய காவலர் ஒருவர், மாணவர்களுடன் வாக்குவாதம் முற்றி துப்பாக்கியை அவர்கள் புறம் திருப்பினார். விளைவாக, நான்கு மாணவர்கள் கொல்லப்பட

முற்பிறப்பில் சிறந்த வாள் வீச்சு வீரன்; மறுபிறவியில் வாள்வீச்சில் தடுமாறுகிற பலவீனமான இளைஞன்!

படம்
  சாவோட்டிக் ஸ்வார்ட் காட் மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம் 150--- முந்தைய பிறப்பில் வாழ்ந்த சிறந்த வாள் வீரன், ஒரு போரில் எதிரியைக் கொன்றுவிட்டு படுகாயமுற்று இறந்துபோகிறார். அவர் இறக்கும்போதுதான், சோல் ஸ்வார்ட் எனும் புதிய சக்தியைப் பெறுகிறார். அதை முதல்முறையாக பயன்படுத்தி எதிரியை வீழ்த்துகிறார். அவரது ஆன்மா மறுபிறப்பெடுக்கிறது. சாங்கியாங் எனும் அதிக வலிமை இல்லாத குலத்திற்கு செல்கிறது. அங்குதான் வாள் வீரர் குழந்தையாக பிறக்கிறார். பிறந்து சில ஆண்டுகளிலேயே நூல்களை வாசிப்பது. நடப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறார். சிறுவயதில் தீவிரமாக ஆன்ம ஆற்றல் பயிற்சியில் ஈடுபட்டதால், உடலில் வாள் வீச்சுக்கு தேவையான ஆற்றல் குறைந்துபோகிறது. இந்த நிலையில் அவரை வாள் வீச்சுக்கான செயின்ட் ஃபோர்ஸ் இருக்கிறதா என சோதிக்கிறார்கள். அந்த தேர்வில் சாங் தோல்வியடைகிறான். எனவே, அவனை சுற்றத்தார், ஊர், வீட்டிலுள்ள வேலைக்காரர்கள் கூட கேலி செய்கிறார்கள். ஆனால் சில ஆண்டுகளிலேயே சாங் செய்த பல்வேறு பயிற்சிகள் அவனை வலிமை கொண்டவனாக மாற்றுகின்றன. ஒரு மரக்கிளை ஒன்றை ஒடித்து வாள் போல பாவித்து அவனது சகோதரனை தாக்கி மார்ப

நல்ல செய்தி - முன்னர் இளம் குற்றவாளி இப்போது மாரத்தான் வீரர்!

படம்
  ஒருவர் இளம் வயதில் வழிதவறி சிறை சென்றுவிட்டால் இயல்பான வாழ்க்கைக்கு மீள்வது கடினம். வளர்ந்த நாடுகளில் குற்றவாளிகளை மீட்க சமூகத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் குற்றவாளிகளை மனம் திருந்தியபிறகு, இயல்பான சமூகத்தில் வாழ அனுமதிப்பது கடினமாகவே உள்ளது. சமூக கண்ணோட்டம், முன்முடிவுகள், போலியான செய்திகள், வதந்திகள்  என நிறைய அம்சங்கள் பின்னணியில் உள்ளன. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போகும் நபர் சிறை சென்றவர். ஆனால் விரைவில் அதிலிருந்து மீண்டு விளையாட்டு மூலம் தனது வாழ்க்கையை மடை மாற்றிக்கொண்டார். அதோடு பிறருக்கும் வழிகாட்டி உதவி வருகிறார்.  2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் ஜான் மெக்கவி அல்ட்ரா மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டு ஓடினார். அவரது இலக்கை எட்டிப்பிடிக்க நான்கு கி.மீ. தூரம்தான் இருந்தது. சாமோனிக்ஸ் என்ற இடத்திற்கு செல்லவேண்டும். அதை எட்டிப்பிடிப்பது சவாலானது. ஆனால் முடியாத ஒன்றல்ல. நாற்பது வயதில் தன்னுடைய கடந்தகாலத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாகத்தான் இருந்தது.  பத்தாண்டுகளுக்கு முன்னர் ஜானின் வாழ்க்கை வேறுவிதமாக இரு

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி தப்பிக்கும் சமூக மனநிலை - மெல்வின் லெர்னர்

படம்
  மனிதர்கள் தங்களுடைய பாதுகாப்பை அதிகம் விரும்புபவர்கள். அவர்களுடைய சொகுசு குறையாமல் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள். இதன் எதிரொலியாக, அவர்கள் எதை நம்புகிறார்கள். எதை மறுக்கிறார்கள் என்று பார்த்தாலே விஷயம் புரிந்துவிடும். ஒருவருக்கு தனது வாழ்க்கை மீது கட்டுப்பாடு இருந்தாலே, மனதில் நிம்மதியை உணர்வார். கெட்டவர்களுக்குச் செய்த தவறான செயல்களின் அடிப்படையில், தண்டனை கிடைக்கும். நல்லவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என பலரும் நம்புகிறார்கள். இப்படி நடக்கிறதோ இல்லையோ நம்புவதன் மூலம் தன்னைச் சுற்றி நடைபெறும் செயல்பாடுகளின் மேல் கட்டுப்பாடு உள்ளதாக ஒருவர் நம்புகிறார்.  இதை 'ஜஸ்ட் வேர்ல்ட்' எனும் கருத்தாக உளவியலாளர் மெல்வின் லெர்னர் வரையறுக்கிறார். மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டுப்பாட்டுடன் வாழ்வதாக நினைத்து, மக்களுக்கு அவர்களின் தகுதியைப் பொறுத்தே அனைத்தும் கிடைக்கும் எனும் இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். மெல்வின், மக்கள் இப்படி தவறான நம்பிக்கையை உறுதியாக நம்புவதால், உண்மையான தகவல்களை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினார். ஒருவர் தனது சுயநலனுக்காக உண்மையை புறக்கணிப்பது என்று கூறலாம்.  ஒருவர

உறவுகளை சீரமைத்தாலே மனநிலை குறைபாடுகளை தீர்த்துவிடலாம்! - வில்லியம் கிளாசர்

படம்
  மனிதர்கள் என்பவர்கள் சமூக விலங்குகள். இன்று பெருகியுள்ள தொழில்நுட்ப வசதிகளால் நிறைய மனிதர்கள் நெருக்கமாகி இருக்கமுடியும். ஆனால் சிலர் நெருக்கமாக இருந்தாலும் பலர் விலகி மனதளவில் தொலைதூரத்தில் இருப்பது போல சூழல் உள்ளது. இதைப் பற்றித்தான் வில்லியம் கிளாசர் என்ற உளவியலாளர் ஆய்வுசெய்து சாய்ஸ் கோட்பாட்டை உருவாக்கினார்.  மகிழ்ச்சி, பிழைத்திருத்தல், அதிகாரம், சுதந்திரம், வேடிக்கை என்பது அனைத்து மனிதர்களின் தேவை. அதை நோக்கித்தான் வாழ்க்கை முழுக்க ஓடுகிறார்கள். ஆனால் இந்த தேவைகளை அனைவரும் திருப்திகரமாக நிறைவேற்றிக்கொள்ள முடியாது. அதில் தோல்வி பெறுபவர்களுக்கு துன்பம், அவநம்பிக்கை, விரக்தி உருவாகிறது. இதை தீர்க்க மனநல மருந்துகளை சாப்பிட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. அவை மூளையிலுள்ள வேதிப்பொருட்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தாது. ஆரோக்கியமான இனிய உறவுகளை தேடி உருவாக்கிக்கொண்டால் நல்ல மனநிலையோடு, மகிழ்ச்சியும் உருவாகும் என உளவியலாளர் வில்லியம் கிளாசர் விளக்கினார்.  மனிதர்கள் சமூக விலங்குகளாக உருவாகிறார்கள். இதற்கடுத்து காதலும், சொத்துகளும் தேவையாக உள்ளன. உயிர் பிழைத்திருப்பதற்கு

மறுபிறப்பெடுத்து வந்து தீயசக்தி இனக்குழுவை அழிக்கப் போராடும் இரவு வீரன்! இம்மார்டல் இன்விசிபிள்

படம்
  இம்மார்டல், இன்விசிபிள் மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காகாமிக்ஸ்.காம் 150---- தீயசக்தியைச் சேர்ந்த இனக்குழுவில் உள்ள நாயகன், மக்களுக்கு பீதியூட்டிய தற்காப்புக்கலை மாஸ்டர். அனைத்து நாடுகளிலும் பொது எதிரியாக கருதப்பட்டு துரத்தப்படுகிறார்.  பின்னாளில், எதிரிகளால் வெட்டி படுகொலை கொல்லப்படுகிறார். ஆனால் அவர் மனதில் நம் வாழ்க்கையை முழுமையாக சுதந்திரமாக வாழ முடியவில்லை என்ற கருத்து இருக்கிறது. இதனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்கிறார். மறுபிறப்பில், சென் என்ற வணிக குடும்பத்தைச் சேர்ந்தவரின் வாரிசாக பிறக்கிறார். அப்பா, வணிகர். அம்மா, புகழ்பெற்ற வாள் வீராங்கனை. அம்மாதான், மகன் கோ உன்னுக்கு அடிப்படை தற்காப்புக்கலை பயிற்சிகளைக் கற்பிக்கிறார். தினசரி மறக்காமல் பயிற்சி செய்யவேண்டும் என கூறுகிறார். அதுவே கோ உன்னுக்கு போதுமானதாக இருக்கிறது. அம்மா சொல்லிக்கொடுத்த கலைகளோடு, அவன் முற்பிறவியில் கற்ற தீயசக்தி கலைகளையும் சேர்த்து பயிற்சி செய்கிறான்.  அவன் அம்மா முற்பிறவியில் எதிரிகளுடன் சண்டையிட்டு இறுதியாக இறந்துபோகிறார். எனவே, அந்த சூழ்நிலையை கோ உன் மாற்ற முயல்கிறான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அம்மாவின் வாள

யூதர் என்ற காரணத்திற்காக வேட்டையாடப்பட்ட உளவியலாளர் செர்ஜ் மாஸ்கோவிசி

  செர்ஜ் மாஸ்கோவிசி ரோமானியாவின் பிரெய்லாவில் யூதக்குடும்பத்தில் பிறந்தார். பிறகு பள்ளியில் சேர்ந்தார். யூதர் என்ற ஒரே காரணத்திற்காக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 1941ஆம் ஆண்டு, யூதர்கள் அவர்களின் மதம் காரணமாக சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். செர்ஜூவும் அவரது தந்தையும் உயிர் பிழைக்க பல்வேறு நகரங்களுக்கு நகர்ந்து சென்றுகொண்டே இருந்தனர்.  இரண்டாம் உலகப்போர் சமயத்தில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். அப்போது 'டா 'எனும் கலை பத்திரிகையை துணை நிறுவனராக இருந்து தொடங்கி நடத்தினார். பின்னாளில் இந்த பத்திரிக்கை தணிக்கை சட்டம் காரணமாக தடை செய்யப்பட்டது.  ரோமானியாவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு முகாம்கள் வழியாக நகர்ந்தார். ஓராண்டுக்குப் பிறகு பிரான்சிற்கு சென்றார்.  1949ஆம் ஆண்டு, உளவியலில் பட்டம் வென்றார். முனைவர் படிப்பை, டேனியல் லாகாசே என்பவரின் வழிகாட்டலில் செய்தார். இதற்கான கல்வித்தொகையை அகதி என்ற அடையாளத்தின் கீழ் பெற்றார். 1965ஆம் ஆண்டு, சமூக உளவியலுக்கான ஐரோப்பிய ஆய்வகத்தை உருவாக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள் உளவியல் பேராசிரியர

வெறுப்பும் கொலைவெறியும் மனதில் ஊற உருவாகிறான் ஊனக்கால் கொலைகாரன்!

படம்
  ஃபிஸ்ட் டிமோன் ஆஃப் மவுண்ட்குவா  மாங்கா காமிக்ஸ்  ரீட்மாங்காபேட்.காம். மனம் நிறைய வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்த நாயகனின் கதை.  கொள்ளையர்கள் ஒரு ஊரை வந்து தாக்குகிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். அங்குள்ள ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மாவைக் கொல்கிறார்கள். மகனையும் அடித்து உதைத்து குற்றுயிராக்கிவிட்டு அவன் தங்கையைக் கடத்திச்செல்கிறார்கள். அந்த சிறுவனை மவுன்ட் குவாவைச் சேர்ந்த கல்வியாளர் ஹியூன் சோ காப்பாற்றி எடுத்து வளர்க்கிறார். கொள்ளையர்களின் தாக்குதல் காரணமாக அவனுக்கு இடதுகால் ஊனமாக மாறுகிறது. இடதுகால் தொய்ய, வலது காலால் அடியெடுத்து வைத்து நகர்வதுதான் அவனது பாணி. அவனுக்கு சியோயங் என பெயர் வைக்கிறார்.  தற்காப்புக்கலைக்கு கால்கள் முக்கியம். அதுவே பழுதானதால், ஹியூன் சோவின் மாணவனாக இருந்தாலும் நொண்டி, அவமானச்சின்னம், நாய் என மவுன்ட் குவா இனக்குழுவில் அனைவருமே அவனை கேலி செய்கிறார்கள். உனக்கெல்லாம் தற்காப்புக்கலை எதற்கு என இழிவுபடுத்துகிறார்கள். ஆனால், சியோயங்கிற்கு ஒரு கிராமத்தை, அதிலும் தன் குடும்பத்தை அழித்த கொள்ளைக்காரர்களை யாரும் தண்டிக்கவில்லை என்ற ஆத்திரம், ஆதங்கம் உள்ளது. ஒரு கிரா

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்பது, அந்த

தனிநபர்கள் சமூகத்தை எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதைப் பற்றிய உளவியல் ஆய்வு - செர்ஜ் மாஸ்கோவிசி

படம்
  உளவியல் ஆராய்ச்சி செய்வதெல்லாம் சரிதான். ஆனால் இதில் பொதுமக்களின் கருத்துகள் பற்றிய அக்கறையே இல்லையே என அங்கலாய்த்த உளவியலாளர்கள் உண்டு. அவர்கள் என்ன கூற நினைத்தார்கள் என்பதைப் பார்ப்போம்.  ஒரு விஷயத்தைப் பற்றி பிறர் கூற அல்லது இணையத்தின் வழியாக கேள்விப்படுகிறோம். உடனே அதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள நினைக்கிறோம். அப்படி தெரிந்துகொண்ட விஷயங்களை ஏற்கெனவே தெரிந்தவற்றோடு அல்லது அனுபவத்தோடு இணைக்கிறோம். இப்படி தெரிந்துகொண்ட அனுபவங்களை ஒருவர் உரையாடல் வழியாக பிறருக்கு கடத்துகிறார். பகிர்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம். இதற்கு நட்பு, உறவுகள், சமூக வலைத்தளங்கள், மக்கள் பங்கேற்கும் டிவி நிகழ்ச்சிகள் உதவுகின்றன. நிறைய மக்கள் ஒன்றாக அமர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது, அங்கு கற்பதும், பெறுவதும் நடக்கிறது. இதன்வழியாக சமூகத்தின் மதிப்புகள், ஈடுபாடு தெரிய வருகிறது. மக்கள் உரையாடுவதன் வழியாக ஒருவர் மிகுந்த மேம்பாடு கொண்ட அறிவை அடைகிறார்கள் என்று கூற முடியாது. அது உரையாடலின் லட்சியமும் அல்ல. கலந்துரையாடலின் வழியாக சமூகம் தனக்கான தொலைநோக்கு பார்வையை, பாதிக்கும் விஷயங்களை எப்படி கையாள்வத

குருவுக்குத் துரோகம் செய்த நான்கு சீடர்களைக் கொல்வதற்கு முயலும் சிறுவனின் பயணம்!

படம்
  கோசு மாங்கா காமிக்ஸ் ரீட்மாங்காபேட்.காம் தற்காப்புக்கலையில் வித்தகரான குருவை அவரது நான்கு சீடர்கள் துரோகம் செய்து வீழ்த்துகிறார்கள். சண்டையில் குற்றுயிரான குரு எப்படியோ உயிர்பிழைத்து குகையில் வாழ்கிறார்.ஒரு சிறுவனை தனது சீடனாக்கி, தனது தற்காப்புக்கலைகளை சொல்லித்தருகிறார். இறக்கும்போது அவர் கேட்கும் வாக்குறுதி, எனது முன்னாள் மாணவர்கள் நால்வரையும் அழிக்கவேண்டும் என்பதுதான். அதை கேயங் என்ற சீடனும் ஏற்கிறான். அவனால் நான்கு மூத்த தற்காப்புக் கலை வல்லுநர்களை வீழ்த்த முடிந்ததா என்பதே கதை.  கோசு என்றால் தற்காப்புக்கலை வல்லுநர் என்று பொருள். இந்த காமிக்ஸில் அதிக வண்ணங்கள் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் பிரேமுக்கு பிரேம் தகவல்கள் துல்லியமாக உள்ளன. பழுப்பு,நீலமும் கலந்தது போலவே ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது காமிக்ஸ் படிக்கும்போது புதுவித அனுபவத்தைத் தருகிறது.  பொதுவாக தற்காப்புக்கலை சார்ந்த காமிக்ஸில் நாயகன் கட்டுடல் காளையாக இருப்பான். இந்த கதையில் டம்ளிங்கை விரும்பிச் சாப்பிடுகிற தொந்திச் சிறுவனாக கேயங் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதனால் அவனோடு சண்டை போடும் யாவருமே எளிதாக ஏமாறுகிறார்கள்