இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நேபாளத்தின் ஸ்கேட்டிங் பூங்கா!

படம்
ஸ்கேட்டிங் பூங்கா! நேபாளத்தின் காத்மாண்டுவில் நாட்டிலேயே முதல் ஸ்கேட்டிங் பூங்கா திறக்கப்பட்டுள்ளது. உஜ்வல் தங்கல் என்ற உள்ளூர் ஸகேட்டிங் வீரர் இதனை உருவாக்கியுள்ளார். தன் பதினான்கு வயதிலிருந்து ஸ்கேட்டிங் போர்டு ஏறி சுற்றி உலகம் சுற்றிவந்தவர் காத்மாண்டுவில் முதலில் தொடங்கியது ஸ்கேட்டிங் பொருட்களை விற்கும் கடைதான். 2014 ஆம் ஆண்டு பாங்காக் பயணத்தை முடித்துக்கொண்டு ஊர் திரும்பியவர் கடை மூலம் பல்வேறு ஸ்கேட்டிங் விளையாட்டிற்கான பொருட்களை பார்த்து பார்த்து சேர்த்தார் உஜ்வல் தங்கல். ஸகேட்டிங் பூங்கா தொடங்குவதற்கான வேலைகளின் ஆரம்பம் என இம்முயற்சியை கூறவேண்டும். இதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து கனவை நிறைவேற்றியுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஜப்பானின் டோக்கியோவில ஸ்கேட்டிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இன்றும் இவ்விளையாட்டு போதைப்பொருள், குற்றவாளிகள் சார்ந்ததாக பார்க்கப்பட்டு வருவதை மாற்ற உஜ்வல் தங்கல் மாற்ற முயற்சித்து வருகிறார்.

ஊழலில் கரைகண்ட தேசங்கள்!

படம்
ஊழல் தேசங்கள்! நேரடியாக பிடுங்கினால் வரி, மறைவாக கொள்ளையடித்தால் ஊழல் என்ற அளவில் ஊழல் வழக்குகள் உலகளவில் உண்டு. இந்த ஆண்டில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா, அர்ஜென்டினா முன்னாள் அதிபர் கிரிஸ்டினா கிர்ச்சனர், தாய்லாந்து முன்னாள் அதிபர் யிங்லக் ஷினவத்ரா ஆகியோர் ஊழல் வழக்குகள் காரணமாக செய்திகளில் அடிபட்ட பிரபலங்கள். ஊழல் ஏற்பட நாடுகளின சமூக அமைப்பும் முக்கியக்காரணம் என்பதை   அண்மையில் வெளியான அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. 80 நாடுகளிலுள்ள 20 ஆயிரம் குடிமக்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் இடத்தில் நைஜீரியாவும், அடுத்த இடங்களில் கொலம்பியா, பாகிஸ்தான், இரான், மெக்சிகோ ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் டாப் 10 இல் இந்தியா வரவில்லை என்பதற்கு பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அமெரிக்கா 61 இடத்திலும், ஆஸ்திரேலியா(79), கனடா(80) இடத்தையும் பிடித்துள்ளன.    

கூகுள் குரோம் பீட்டா!

படம்
கூகுள் குரோம் பீட்டா 70! அண்மையில் தனது பத்தாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ள கூகுள் குரோம், தனது புதிய ப்ரௌசரை சோதனை பதிப்பாக விரைவில் வெளியிடவுள்ளது. இதில் ஆப்பிளின் டச்ஐடி போன்ற பிங்கர்பிரிண்ட், விண்டோஸ் 10 ஓஎஸ்ஸிலுள்ள வெப் ப்ளூடூத்   வசதிகளும், ஸ்மார்ட்போன்களை இணையத்தில் ஈஸியாக இணைக்கும் புதிய வசதிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் லாகின் பாப் செய்திகள் வரும்போது உடனே புதிய குரோம் ப்ரௌசர் ஃபுல் ஸ்கிரீன் வசதி சுருக்கப்படுவதும் இதில் புதிது. எழுத்துகள், படங்களை எளிதில் கண்டறியும் அல்காரிதம் இதில் ஸ்பெஷல். கைரேகை மூலம் இணையதளங்களில் லாகின் செய்வதை குரோம் 70 இல் புதிதாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஜெயிக்கிறதோ இல்லையோ முயற்சி செய்து பார்க்க வாய்ப்புள்ளது. இணையதளம் பாதுகாப்பானதா இல்லையா என அறி சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை வரும் என்பதும் புதிய வசதிகளில் முக்கியமானது. இதன்மூலம் செக்யூர் எனும் பழையவசதி நீக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் XS Max

படம்
ஆப்பிள் MAX அதிரடி! ஆப்பிள் நிறுவனம், புதிய XS MAX ஐபோனை வெளியிட்டு சந்தையில் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஐஓஎஸ் 12 மூலம் ஹெக்ஸாகோர் சிப் செட்டில் இயங்கும் 208 கிராம் ஆப்பிள் எக்ஸ்எஸ் மேக்ஸ் போனின் நினைவகத்திறன் 64 ஜிபி. 6.50 இன்ச் டிஸ்ப்ளேயில் மனம் மயக்கும் ஆப்பிளின் தரம் வியக்கவைக்கிறது. முன்புறம் ஏழு எம்.பி கேமரா, பின்புறம் 12 எம்பி கேமராவுடன் ஃபேஸ் லாக், வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், லைட்சென்சார் 3டி சென்சார் என எக்கச்சக்க வசதிகளை உள்ளே நுழைத்திருக்கிறார்கள்.  வெள்ளை, மஞ்சள், ப்ரௌன் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் எக்ஸ்எஸ் மேக்ஸின் திரை அளவு 1242 X 2688. ஆனால் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் கிடையாது என்பது குறை. ஹெட்போன், சார்ஜர் அனைத்தும் அழகாக அம்சமாக வேலை செய்கின்றன. ஆப்பிள் 8, எக்ஸ் ஆகியவற்றை விட எக்ஸ்எக்ஸ் பேட்டரிகள் சிறப்பாக மல்டி டாஸ்கிங்கில் தாக்குப்பிடிக்கின்றன. இரண்டு நானோ சிம்களும் 3ஜி,4ஜி வசதிகளுக்கேற்ப இருந்தாலும் 5ஜிக்கேற்ப டிசைன் செய்திருந்தால் கொடுக்கிற காசுக்கு மதிப்பாக இருந்திருக்கும்.  

மூளையின் சூழ்ச்சி!

படம்
பொய்களை பரப்பும் மூளை! இணையத்தில் பரப்பும் போலிச்செய்திகளுக்கு மனிதரின் மூளைதான் காரணம் என எம்ஐடி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நம்பிக்கையான நாளிதழ்கள், டிவி சேனல்களை விட செய்திகளை வேகமாக தருவதில் சமூகவலைதளங்கள் முன்னணியில் இருந்தாலும் அவை சரியாக இருப்பதில்லை. 2006-17 வரையிலான ட்விட்டர் தகவல்களை ஆராய்ந்த சோரோஸ் வோசோகி, டெப்ராய், சினன் அரல் உள்ளிட்ட எம்ஐடி குழுவினர், 30 லட்சம் பேர் அனுப்பிய ஒரு லட்சம் தகவல்களை ஆராய்ந்தபோது அவை 4.5 மில்லியன் முறைகள் பகிரப்பட்டிருந்ததை ஆராய்ச்சி வழியாக கண்டறிந்தனர். இத்தகவல்களை தகவல்சரிபார்ப்பு ( snopes.com ,  politifact.com , factcheck.org ) தளங்களின் வழியே ஆராய்ந்தபோது போலித்தகவல்கள் பரவும் வேகம் ஆச்சரியப்படுத்தியுள்ளது.  குறிப்பாக 2013, 2015, 2016   ஆகிய காலகட்டங்கல் வதந்தி தகவல்கள் 70 சதவிகிதம் வேகமாக பரவி மக்களை குழம்பியுள்ளன. இந்தியாவில் கும்பல் படுகொலைகள் நிகழ வாட்ஸ்அப் செய்திகளே காரணம் என கூறுவது ஞாபகம் வருகிறதா? “கடவுளின் அருள் செய்திகளையும் தாண்டி மக்களின் வாழ்வைக் குலைக்கும் அதிர்ச்சியூட்டும் போலிச்செய்திகள் பெருமளவு பதட்

நெல்சன் மண்டேலாவின் அகிம்சை வழி!

படம்
நெல்சன் மண்டேலா வழியில்! 2005 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகையாளர் எஸ்கிண்டர் நெகா, மனைவி செர்கலம் ஃபாசில் எத்தியோப்பியா அரசினால் தேசதுரோக குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளாக பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார் நெகா. 1974 ஆம் ஆண்டு மார்க்சிய ராணுவம் எத்தியோப்பாவில் ஆட்சிக்கு வந்தபோது, நெகா அமெரிக்காவில் அரசியல் பொருளாதார பட்டம் பெற உழைத்துக்கொண்டிருந்தார். 1991 ஆம் ஆண்டு எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி(EPRDF) கட்சி ஆட்சிக்கு வந்தது. 1993 ஆம் ஆண்டு தைரியமாக புதிய நாளிதழை நெகா தொடங்கினார். அப்போது ஆட்சிசெய்தது, மக்கள் தொகையில் 6% உள்ள திக்ராயன்ஸ் மக்களைக் கொண்டுள்ளது எத்தியோப்பா அரசு. உள்நாட்டு நிகழ்வுகளை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில் நெகா எழுத அரசின் பார்வை இவர் மீது விழுந்தது. பொய் குற்றச்சாட்டுகளின் மூலம் சிறையிலடைக்கப்பட்டார் நெகா. “எத்தியோப்பா அரசு தென் ஆப்பிரிக்க அரசியல் மாதிரிகளை அப்படியே பின்பற்றுகிறது. நாம் அனைவரும் வெ்வேறு வேகத்தில் சென்றாலும் நம் இறுதி இலக்கு ஜனநாயக சுதந்திரம்தான்.

இலக்கணம் திருத்தும் நோய்!

படம்
பிட்ஸ்! படுக்கையில் படுத்துக்கொண்டு புத்தகங்களை படிப்பதற்கு Librocubicularist என்று பெயர். கூகுள் சர்ச் எஞ்சினில் Askew என டைப் செய்தால் கிடைக்கும் ரிசல்டுகள் சற்றே வலதுஓரம் தள்ளி கோணலாக வரும். பஜ்ஜி மடித்து கொடுத்த காகிதம் முதற்கொண்டு மாரியம்மன் கோவில் பத்திரிக்கை வரையில் இலக்கணத் திருத்தம் செய்யும் பழக்கத்திற்கு 'Grammar Pedantry Syndrome' என்று பெயர். உலகம் முழுக்க சீரியல்கொலைகாரர்களின் பொதுவான ராசிகள் சிம்மம்,கன்னி, தனுசு, மீனம். பீநட் பட்டரை கண்டறிந்த மர்சிலஸ் கில்மோர் எட்சன், அதனை உணவை மென்று தின்ன முடியாத பற்களில்லாத முதியவர்களுக்கு முதலில் பரிந்துரைத்தார். தாராள, பழமைவாதிகள் என அனைவரும் பெரும்பான்மையாக புகாரின்றி வாசிக்கும் பத்திரிகை வால்ஸ்ட்ரீட் ஜர்னல் மட்டுமே.          

கல்வி பணமில்லை; ஆயுதம் வாங்குவோம்!

படம்
ஆயுத தேசம்! கல்வி, உணவு அனைத்திற்கும் பற்றாக்குறை நிலவுகிற தேசம், ஆயுதங்களுக்கு பணம் செலவழிக்கிறது என்றால் நம்புவீர்களா? மத்திய ஆப்பிரிக்க குடியரசு செய்வது அதேதான். 65 மில்லியன் டாலர்களை கல்விக்காக மானியம் பெற்ற மத்திய ஆப்பிரிக்க குடியரசு, 53 மில்லியன் பற்றாக்குறை உள்ளது மீண்டும் கைவிரித்துள்ளது. ஆனால் போருக்காக 6 மில்லியன் டாலர்களை செலவழித்தது தற்போது தெரிய வந்துள்ளது. தினசரி இரண்டு டாலர்களை தனிநபர் வருமானமாக கொண்ட நாடு, மூன்றில் இருபங்கு ஏழைகள் 59 மில்லியன் டாலர்களை(2015) ஆயுதங்களை இறக்குமதி செய்ய பயன்படுத்தியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு மேல் நடந்த உள்நாட்டுப்போரினால் தனது தலைநகரமான பாங்குயியை 14 படைகள் மூலம் பாதுகாத்து வருகிறது. அரசு. ஆப்பிரிக்க குடியரசு நாட்டிற்கு தேவையான ஆயுதங்களை ரஷ்யா, ஐ.நா சபையின் அனுமதி பெற்று வழங்கிவருகிறது.     

கூகுளை நொறுக்கும் இன்டர்நெட் விதிகள்!

படம்
வெனிசுலா அகதிகள்! ஹியூகோ சாவேஸ் ஆட்சிக் காலத்தில்(2000-2012) சமூகநல திட்டங்களுக்கு பெயர்பெற்ற நாடான வெனிசுலா இன்று உணவு, மருந்துகள் பற்றாக்குறையால் தவித்துவருகிறது. வெனிசுலாவிலுள்ள பிரச்னைகளால் 7 சதவிகித மக்கள்(2.3 மில்லியன்) நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். தென் அமெரிக்காவுக்கு செல்லும் வெனிசுலா மக்களின் சதவிகிதம் 900% என அறிவித்துள்ளது ஐ.நா சபை. 78 சதவிகித மருந்து பற்றாக்குறையால் அங்குள்ள மருத்துவமனைகளும், மருந்தகங்களும் அடைக்கப்பட்டுவிட்டன. சம்பளம் குறைப்படுவதால் நாட்டிலுள்ள ஐந்து பல்கலைகளிலிருந்து 1,600 ஆசிரியர்கள் பதவி விலகியுள்ளனர்(2012-18). வெனிசுலாவிலிருந்து வெளியேறிய 8,70,093 மக்கள் கொலம்பியாவில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இதில் 45 ஆயிரம் பேருக்கு முறையான அடையாள அட்டை இல்லாமல் (அ) காலாவதி விசாவை வைத்துள்ளனர். ஐரோப்பியநாடான ஸ்பெயினுக்கு அகதி மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது. அரசியல், பொருளாதார பிரச்னைகளை வெனிசுலா தீர்க்காதவரையில் அந்நாட்டு மக்களின் இடம்பெயர்வை தடுப்பது இயலாத ஒன்றே.   2 இயற்கையை அழிக்கும் வரிச்சலுகை! வரியற்ற சொர்க்கங்கள் எ

சுதந்திர மென்பொருட்கள் எதற்கு?

படம்
கட்டற்ற அறிவு!- வின்சென்ட் காபோ திலீப் பிரசாந்த் சில சொகுசு வசதிகளுக்கு பழகிவிட்டால் நம்மால் புதிய முயற்சிகளை செய்யமுடியாது. டிவியில் பட்டன்களை எழுந்து சென்று மாற்றும் எரிச்சல் பிளஸ் சோம்பலால் ரிமோட் உருவானது. ஆனால் அந்த ரிமோட்டைக் கண்டுபிடிக்கும் அறிவு நமக்கிருந்தால் அது பிளஸ்பாய்ண்ட்தானே! ஆனால புதியவற்றை கற்கும் இளமையில் சொகுசை தேடியதால்தான நம்மில் பலருக்கும் கணினி வசதிகளை பயன்படுத்தினாலும் புரோகிராம்களை சுயமாக எழுதமுடியாமல் போனது. கணக்கில் கில்லியானால் கணினி புரோகிராம்களை சொல்லியடிக்கலாம் என்பது அசல் உண்மை. நம்மில் பலரும் அதில் பங்கேற்பாளராக இன்றி பயனராக இருப்பது தற்செயலானதல்ல. மூளையை பயன்படுத்த விடாமல் சொகுசுக்கு பழக்கி பூட்டுவது பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களின் நெடுநாளைய கமர்சியல் சதி. சுதந்திரமும் கட்டுப்பாடும்! விண்டோஸ், மேக் ஓஎஸ்களில் சில புரோகிராம்களை இஷ்டமோ கஷ்டமோ பயன்படுத்த வேண்டியிருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த இஷ்ட மாற்றங்களை செய்தால் எப்படியிருக்கும்? கட்டற்ற மென்பொருளை நீங்கள் பழகவேண்டியது அதற்குத்தான். புரோகிராம்களில் தேவ

உடல் வெப்பநிலை மாறுவது எப்படி?

படம்
உடலின் வெப்பநிலை! உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்(98.6 டிகிரி ஃபாரன்ஹீட்) என்பது மருத்துவர்கள் வாக்கு. வயது, பாலினம், சூழல் பொறுத்து ஏறி இறங்கும் வெப்பநிலையில்   1 டிகிரி செல்சியஸ் வேறுபாடு நிச்சயம் உண்டு. முதியவர்களின் உடல்வெப்பம் இயல்பைவிட குறைவாகவே இருக்கும். குழந்தைகளுக்கு 36.6 -37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பெரியவர்களுக்கு 36.1 –- 37.2 டிகிரி செல்சியஸ வெப்பநிலையம், 65 வயதை தாண்டியவர்களுக்கு 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் சராசரியாக இருக்கும்.   19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வுண்டர்பிலிச், உடலின் இயல்பு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் என வரையறுத்தார். ஆனால் பின்னாளில் வெப்பநிலை அளவு 36.8 டிகிரி செல்சியஸ் என குறைக்கப்பட்டது. தினசரி காலையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காய்ச்சல் குறைவாகவும் இரவு அதிகமாக இருக்கும். பெண்களின் உடல்வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கு ஹார்மோன்களும் முக்கியக்காரணம். காது(38 டிகிரி செல்சியஸ்), வாய்(37.8 டிகிரி செல்சியஸ்), அக்குள்(37.2 டிகிரி செல்சியஸ்) என மூன்று இடங்களில் காய்ச்சல் அளவீடு எடுக்க

தாய்நாட்டிற்கு ஏதும் நிகரல்ல! - காலெட் ஹூசைனி

படம்
 நேர்காணல் “சொர்க்கம் கூட தாய்நாட்டிலுள்ள வீட்டிற்கு நிகராகாது” காலெட் ஹூசைனி, ஆஃப்கன் எழுத்தாளர். ் பதினொரு வயதிலேயே ஆஃப்கானிஸ்தானை விட்டு பிரிந்துவிட்ட உங்களுக்கு கனவாக இருந்த வீடு, பிரிவு எழுதுவதற்கான தூண்டுதலா? நான் எழுதியுள்ள நான்கு புத்தகங்களிலும் வீடு, தாய்நிலத்தை பிரிவது என்பதுதான் மையம். தாய்நிலத்தை பிரிவது எனக்கு மட்டுமல்ல மத்திம வயதிலிருந்து என் குடும்பத்திற்கே அதிர்ச்சிதான். வேர்களை இழந்து அமெரிக்காவில் மீண்டும் வாழ்வை தொடங்குவது எளிதானதாக இல்லை. புதிய நூலான சீ பிரேயரை நாவலாக அல்லானல் நெடுங்கவிதையாக எழுதியது ஏன்? கடந்தாண்டு அகதிகளுக்கான நன்கொடை விழாவில் சீ பிரேயர் சிந்தனை தோன்றியது. 2015 ஆம் ஆண்டு இறந்த ஆலன் குர்தி என்ற சிரிய சிறுவனே இந்நூலின் கரு. எளியமக்களின் வாழ்வில் போர் திணிக்கப்பட கடத்தல்காரர்களின் அகப்பட்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் தந்தைகளின் கதை என்னை நெடுங்கவிதையாக இந்நூலை எழுத தூண்டியது. சோவியத் ஆக்கிரப்பின்போது ஆஃப்கனிலேயே தங்கியிருந்தால் என்னவாகியிருப்பேன் என யோசித்ததுண்டா? ராணுவ வீரர் (அ) அகதி ஆகியிருப்

பிளாசிபோ தெரியுமா?

படம்
போலி மாத்திரைகளின் சக்தி! காய்ச்சலின்போது பாட்டி வைத்து தந்த கோழி சூப் அல்லது அம்மாவின் கஷாயம் நிவாரணம் தந்ததாக நினைக்கிறீர்களா? இதைத்தான் மருத்துவ வட்டாரத்தில் பிளாசிபோ விளைவு என்கிறார்கள். சில உளவியல்ரீதியிலான நோய்களுக்கும், மருந்தின் விளைவுகளை அறியவும் மருத்துவர்கள் கொடுக்கும் சர்க்கரை அல்லது உப்பு கலந்த மாத்திரைகள் நோயாளிகளின் நோய்களை பெருமளவு குணப்படுத்தியுள்ளது. “மத்திய ரக மாத்திரைகளை விட சிறிய மற்றும் பெரிய மாத்திரைகள் தம் நோய்க்கு சிறப்பான தீர்வு தருவதாக நோயாளிகள் நினைக்கின்றனர்” என்கிறார் ஹார்வர்டு மருத்துவப்பள்ளியின் பிளாசிபோ ஆய்வு இயக்குநர்(PiPS) ஜான் கெல்லி. வலிநிவாரணத்திற்கு பயன்படுத்தும் போலிமாத்திரைகள் வலியை மறக்க வைப்பதாக நோயாளிகள் நம்பும்போது அவர்களுக்கு ஓபியாய்டு தேவைப்படுவதில்லை. இதன்மூலம், ஓபியாய்டு அடிமைத்தனத்தை தடுக்கலாம். அடுத்தமுறை தலைவலி வரும்போது, ஆஸ்பிரினுக்கு பதிலாக சர்க்கரை மாத்திரையை எடுத்துக்கொள்ளுங்கள். குணம் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில் மனம் அவ்வளவு சக்தி வாய்ந்தது. பிளாசிபோ என்பது நோயாளிகளின் பிரச்னைகளை கண்டறிய தரப்படும்

மூளையில் புதிய நியூரான்!

படம்
மூளையில் புதிய நியூரான்! மூளை ஆராய்ச்சியில் ரோஸ்ஹிப் நியூரான் எனும் புதியவகை நியூரானை அமெரிக்காவின் ஆலன் மூளை அறிவியல் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ரோஸ்ஹிப் நியூரான் கண்டறியப்பட்டுள்ள நியோகார்டெக்ஸ் பகுதி பொருட்களை அடையாளமறிந்து புரிந்துகொள்ளவும், மொழியைப் பேசவும், சிந்தனை செய்வதையும் கட்டுப்படுத்துகிறது.  முதலில் எலியிடம் நியூரான் சோதனையை செய்த ஆலன் ஆராய்ச்சிக்குழு பின்னர் பல்வேறு விலங்குகளிடம் சோதனையை மேற்கொண்டது. “நம்மைப்போன்ற மூளையமைப்பு கொண்டது எலி என்பதால்தான் அதனை சோதனை செய்ய தேர்ந்தெடுத்தோம். பெரிய மூளை அமைப்பு கொண்ட டால்பின், குரங்கு ஆகியவற்றை ஆராயும்போதுதான் ரோஸ்ஹிப் நியூரான்களின் வேறுபாட்டை உணரமுடியும்” என்கிறார் குழுவின் தலைமை ஆய்வாளரான எட் லெய்ன். ஆறு அடுக்குகள் கொண்ட மூளை அடுக்கில் 16 பில்லியன் நியூரான்கள் உள்ளன. இதில் ஆய்வாளர்கள் முதல் அடுக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். காரணம், நேர்மின் தூண்டலைக் கொண்ட இன்கிபிட்டரி நியூரான்கள் இவ்வடுக்கில் அதிகம். “தானம் பெற்ற நியூரான்களிலுள்ள திசுக்களில் ஆய்வுகளை செய்து வருகிறோம். இதன் மூலம் நிய

சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் உதவி!

படம்
மானியம் தரும் மைக்ரோசாஃப்ட்! மைக்ரோசாஃப்ட்டின் AI For Earth திட்டத்தின் மூலம் உலகை மாற்றும் சூழல் திட்டங்களுக்கு ஆசிய அளவில் 50 மில்லியன் டாலர்கள் மானியம்(16 திட்டங்கள்) அளிக்கப்பட்டு வருகிறது. 45 நாடுகளில் 147(விவசாயம், பல்லுயிர்த்தன்மை, நீர், வெப்பமயமாதல்) சூழல் திட்டங்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிதியளித்துவருகிறது. கீழ்காணும் திட்டங்களை மைக்ரோசாஃப்ட் ஆதரித்துள்ளது. டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன், பெங்களூரு பெங்களூரைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சி மற்றும் சூழலியலுக்கான அசோகா அறக்கட்டளையைச் சேர்ந்தவர் டாக்டர் முனீஸ்வரன் மாரியப்பன். இவர், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த Hoolock Gibbon to the Phayre’s Leaf Monkey உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்கவும், இருப்பிடங்களை கண்காணிக்கவும் ஏஐ உதவியை நாடியுள்ளார். அங்கிதா சுக்லா, டெல்லி லக்னோவின் சிறுநகரில் பிறந்த அங்கிதா சுக்லா, டெல்லி ஐஐடி முனைவர் படிப்பு மாணவி. தலைநகரில் சுற்றியலையும் குரங்குகளின் எண்ணிக்கை, தடுப்பூசி, புகைப்படங்களை அடையாளமறிய ஆப்பை உருவாக்கி குரங்கினத்தை பாதுகாக்க முயற்சித்து வருகிறார். அர்ச்சனா சௌத்ரி, ம

இந்தியாவில் பல் தடயவியல்!

படம்
டென்டல் துப்பறிவாளர்! 2012 ஆம் ஆண்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்த மாணவியை ஆய்வு செய்த தடயவியல் மருத்துவர்களில் மரு.ஆஷித் ஆச்சார்யாவும் ஒருவர்.   தசைகளை போல சிதைவடையாத பற்கள் மூலம் வல்லுறவு நிகழ்வுகளை எளிதில் அடையாளம் காண முடியும். ஆண்டுக்கு இந்தியாவில் 26 ஆயிரம் பல் மருத்துவர்கள் உருவாகின்றனர். அதில் முதுகலை எட்டுபவர்களின் எண்ணிக்க 3 ஆயிரம். அதிலும் பாரன்சிக் படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பவர்கள் மிக சொற்பம். பற்களை ஆராய்வதற்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவர்களின் எண்ணிக்கை 10 என தடயவியல் சங்கத்தலைவர் சாம்ராஜ் கூறுகிறார். குற்றவாளியைக் கண்டறிய பற்களின் கடி தடயங்கள், அடையாளம் தெரியாத பிணங்களைப் பற்றிய குறிப்புகள் ஆகியவற்றுக்கும் பற்களை ஆராய்வது அவசியம். இவை பின்னாளில் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படும்போது வரும் தகவல்களுடன் ஒத்துப்போகும் ஆச்சர்யங்களையும் டாக்டர் ஹேமலதா பாண்டே சந்தித்துள்ளதாக கூறுகிறார். இவர் இங்கிலாந்தில் தடயவியல் தொடர்பான படிப்பை படித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். “வெளிநாடுகளில் பற்களை ஆராய்வது பரவலானது என்றாலும் இந்தியாவுக்கு அது ப

செலவழிக்கும் பணம் வீணாக கூடாது - சித்தார்த் ராய் கபூர்

படம்
யுடிவியின் முகவரி.. 50 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளவர். தற்போது ராய் கபூர் பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி பதினைந்து படங்களை தயாரித்து வருகிறார். அவர் வேறுயார்? சித்தார்த் ராய் கபூர்தான். நடிகை வித்யாபாலனின் கணவர்.  புதிய திறமையான ஆட்களை அறிமுகப்படுத்த விரும்புகிறீர்களா? தயாரிப்பாளராக திரைப்படத்திற்கு நிறைய கருக்களை எழுதும் எழுத்தாளர், நடிகர்கள் தேவை. புதிய இயக்குநர்களின் கதைக்கு புதுமுகங்கள் சரிபட்டு வருவார்கள் என்றால் அதனை தடுக்க மாட்டேன். ராஜ்குமார் குப்தா, நீரஜ்பாண்டே, திபாகர் பானர்ஜி, விக்கிரமாதித்திய மோட்வானே ஆகியோரை அப்படித்தானே யுடிவி அறிமுகப்படுத்தியது. படங்களை தயாரிப்பது எப்படி  பிடித்தமானதாகியது? படங்களை உருவாக்குவதை நேசிப்பதால்தான். செலவழிக்கும் பணம் வீணாக கூடாது. இரண்டு, கிரியேட்டிவிட்டியில் தடை இருக்க கூடாது என இரண்டு விஷயங்களையும் நான் கவனிக்கிறேன். இயக்குநரின் சிந்தனையோடு சேர்ந்து இயங்குவதை முக்கியமானதாக கருதுகிறேன். மார்ட்டின் ஸ்கார்சி போன்ற இயக்குநர்கள் சினிமா இறந்துவிட்டது என கூறிவருகிறார்களே? சினிமா எங்கேயும் போய்விடாது. சினிமாவின்

வேலைவாய்ப்பு கொடுத்தால் எங்களை நாங்களே பார்த்துக்கொள்வோம்!

படம்
சந்திரசேகர் ஆசாத்... ஊடகங்களுக்கு ராவணன்.  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பீம் ஆர்மியின் தலைவர். பாஜகவுக்கு எதிரான கட்சிகள் இவருடன் கூட்டு சேர விரும்புகின்றன. ஆசாத், ஒளித்து மறைத்தெல்லாம் பேசவில்லை. பாஜகவை எதிர்த்துதான் தேர்தல் என்று கூறிவிட்டார். பீம் ஆர்மியை எப்படி தொடங்கினீர்கள்? கன்ஷிராமின் கருத்துக்களை படித்து அமைப்பு தொடங்கலாம் என நினைத்தபோதுதான் உள்ளூர் பள்ளியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு சாதிரீதியான நெருக்கடிகள் ஏற்பட்டன. அதனை சமாளிக்க பீம் ஆர்மியை தொடங்கினோம். பாரத் இக்தா மிஷன் என்பது இதனை முன்னர் அழைத்து வந்தோம். உங்களது குடும்பத்தினரது கோரிக்கையை கேட்டுத்தான் உங்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டதா?  இந்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் என்னை கைது செய்து சிறையிலடைத்தது. சிறையிலிருந்து வெளியே வந்தாலும் என்மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் கைவிடப்படவில்லை. உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு வெல்லும் நம்பிக்கை எனக்கிருக்கிறது. செப்.14 ஆம் தேதியோடு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்து வைக்கும் காலம் முடிந்துவிட்டது. என் மீது குற்றத்தை உறுதியாக்கும் ஆதாரங்கள்

மகிழ்ச்சிக்கென பள்ளிகளில் வகுப்புகள் தொடக்கம்.!

படம்
happy வகுப்புகள்! இந்தியத் தலைநகரான டெல்லியில் ஆயிரத்து ஐநூறு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. கதை சொல்வது, குடும்ப உறுப்பினர்களில் பிடித்தவர்களை பற்றி எழுதுவது உள்ளிட்டவையே மாணவர்களுக்கான டாஸ்க்குகள். மகிழ்ச்சிக்கென எதற்கு வகுப்பு? என்று கேட்டால் உலகை நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். மாணவர்களுக்கு தேர்வு, பணியாளர்களுக்கு வேலை, தொழிலதிபர்களுக்கு பிஸினஸ் என மூளையைத் தின்னும் பட்டியலிடப்பட்ட வேலைகள்தான் பிரச்னை.  இதிலிருந்து காக்கவே டெல்லி கல்வி இயக்குநரகம் அரசு பள்ளிகளில் மகிழ்ச்சி வகுப்புகளை தொடங்கி போட்டித்தேர்வு, உச்சமதிப்பெண்கள் என தடுமாறும் மாணவர்களை மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க முயற்சித்து வருகின்றன. கல்வி மட்டுமல்ல கார்ப்பரேட் தொழில்துறையினரும் பணியாளர்களின் மனச்சோர்வை குறைத்து கிரியேட்டிவிட்டியை அதிகரிக்க மகிழ்ச்சி வகுப்புகளை ஹேப்பி ஹோ (அ) கார்ப்பரேட் குருக்களின் நிறுவனங்களை அழைத்து வந்து நடத்துகிறார்கள்.  இந்தியாவில் முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம், பூடான், அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிலிருந்து ஆலோச

2018 உணவு டிரெண்ட்: வீகன்

படம்
வீகன் உலகிற்கு வெல்கம்! – பால் பொருட்களை விலக்கி பதப்படுத்தப்பட்ட பொருட்கள் தவிர்த்து பழங்கள், காய்கறிகள், பருப்புகள், கொட்டைகளை உண்பதே வீகன் டயட். வெப்பமயமாதல் சூழலில் இறைச்சி, காய்கறிகளை விளைவிக்க செலவாகும் இயற்கை வளங்களை கூட்டிக்கழித்து பார்த்து குறைவான மாசுபாட்டை கொண்ட சரியான உணவுமுறை என வீகன்தான் என வீகன் ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். கனடாவைச் சேர்ந்த தடகள வீரர் பிராண்டர் பிரேஸியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் ஜூரெக் ஆகிய புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் வீகன் டயட்டை பின்பற்றுபவர்களே. கொழுப்பு உணவுகளை ஆதாரமாக கொண்ட பேலியோ டயட்டைப்போலவே வீகன் டயட்டை தொடக்கத்தில் தயக்கத்துடன் பின்பற்றிய இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்து 65 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இறைச்சி, முட்டை, கோதுமை, தேன், பால் பொருட்கள் ஆகியவை வீகன் டயட்டில் தவிர்க்கப்படவேண்டியது அவசியம்.   வீகன் டயட்டில் பொதுவாக பின்பற்றப்படும் ஏழு முறைகள் உள்ளன. பழங்கள், காய்கறிகள், பருப்புகள்,கொட்டைகள் கொண்டது முதல்வகை. மேற்சொன்ன பொருட்களை 48 டிகிரி செல்சியஸ வெப்பத்தில் சமைத்து உண்பது இரண்