செமினார்!- திராட கருத்தியல்
செமினார் ஆகஸ்ட் 2018
டெல்லியிலிருந்து வெளிவரும் செமினார் இம்மாதம் திராவிட இயக்க கருத்தியலை கொண்டு வெளிவந்துள்ளது. ராஜன்குறை, ஏ.எஸ். பன்னீர்செல்வம், ஆனந்தி, விஜய சங்கர் உள்ளிட்டோர் பங்களித்துள்ளனர்.
திராவிட இயக்கம், திராவிட முன்னேற்ற கழகம், பாப்புலிச கொள்கைகள், தனிநாடு கோரிக்கை, சமூகநலத்திட்டங்கள், திராடவிட இயக்கத்தின் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக கட்டுரையாளர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்திருந்தனர். இதில் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடசலபதி, ஃப்ரன்ட்லைன் ஆசிரியர் விஜயசங்கர், ராஜன்குறை, ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரைகள் எளிமையாகவும் தலைப்பிலிருந்து விலகாமலும் கருத்தை கூறிச்சென்றன.
சிலர் ராஜன்குறை, வேங்கட சலபதி கட்டுரைகளை வாசிக்கும்போது அப்படியில்லை இப்படி என ஆவேசப்படலாம். ஆனால் உண்மைகளை வாசிக்கும்போது நேரும் இடர்ப்பாடுகளை நாம் மறைக்கமுடியாது மறுக்கவே முடியும்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட மையக்கருத்தை சுற்றி எழுதப்படும் அறுபது ரூபாய் இதழில் மருந்துக்கும் புகைப்படங்கள் கிடையாது. முழுக்க எழுத்துக்கள் மட்டுமே நல்ல தெளிவான லே-அவுட்டில் படிப்பதற்கு மட்டும் வாங்கலாம். பெரும்பாலும் இதனை ஆண்டு சந்தா 650 கட்டி வாங்குவது சிறப்பு. தொடர்புக்கு: http://www.india-seminar.com/
-கோமாளிமேடை டீம்
நன்றி:கே.என்.சிவராமன், குங்குமம் ஆசிரியர்.