இடுகைகள்

க்யூஆர்கோட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மோசடிகளை தடுக்க க்யூஆர் கோடை ஏடிஎம் கார்டு போல பயன்படுத்தலாம்!

படம்
  க்யூஆர் கோட் மூலம் ஏடிஎம் மில் பணம் எடுக்கலாம்! பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் குறைவாக நிரப்பப்படுகிறது. இல்லையெனில் அவுட் ஆப் சர்வீஸில் இயந்திரம் இருக்கும். இதையெல்லாம் தாண்டி செயல்பட்டால் ஏடிஎம் இயந்திரம் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் மெனு ஆப்சன்களைக் கொண்டிருக்கும். பணத்தை எடுக்க டெபிட் கார்டுகள் உதவுகின்றன. இதில் நிறைய மோசடிகள் நடந்து வந்தன. அதையெல்லாம் ஒழிக்க கார்டுகளைக் கூட நவீனப்படுத்தி ஒருவரின் பெயர் இல்லாமல் தயாரிப்பது, கார்டை ஸ்வைப் செய்யாமல் காட்டினாலே போதும் என நிறைய ஆப்சன்களை உருவாக்கினார்கள்.  இப்போது ஆர்பிஐ போனை ஏடிஎம் கார்டாக பயன்படுத்த யோசனை ஒன்றை சொல்லியிருக்கிறது. ஏடிஎம் சென்று யுபிஐ வசதியை இயக்கி, போனைத் திறந்து யுபிஐ வசதிக்காக பாரத் பே, சிட்டி யூனியன் மணி பிளஸ், அல்லது படுஸ்லோவாக வேலை செய்யும் யூனியன் பேங்க் ஆப்பைப் பயன்படுத்தலாம். ஏடிஎம் ஸ்க்ரீனில் உள்ள க்யூஆர் கோடை போனில் வெரிபை செய்தால் போதும். காசை மெஷினில் நிரப்பிப் பெற்றுக்கொள்ளலாம. இதற்கு முக்கியமாக இணைய வசதி கொண்ட போன் அவசியம். இல்லையெனில் பணத்தை எடுக்க முடியாது.  அதேசமயம் டெபிட், கிரடிட் கார்டுகளைப் பயன்ப

பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு!

படம்
  பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு ! கடந்த டிசம்பர் 3 அன்று ரஞ்சித் திசாலே குளோபல் டீச்சர் பிரைஸ் எனும் முக்கியமான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் . அதைவிட முக்கியம் , தான் பெற்ற ஆசிரியர் பரிசுக்கான தொகையை அவரோடு போட்டியிட்ட பிறருக்கும் பகிர்ந்து அளிக்க முன்வந்துள்ளார் .    2006 ஆம் ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தார் திசாலே . ஒருகட்டத்தில் படிப்பில் நம்பிக்கை இழந்து அதனை கைவிட்டு கல்வி தொடர்பான டிப்ளமோ ஒன்றுக்கு விண்ணப்பித்தார் . அதற்கும் கூட அவராக விண்ணப்பிக்கவில்லை . ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான மகாதேவ் தேசாய் , அதாவது அவரது அப்பாதான் மகன் வீட்டில் சும்மாயிருப்பதை விரும்பாமல் அப்ளை செய் என்று ஊக்கம் கொடுத்து இருக்கிறார் . திசாலேவுக்கு டிப்ளமோ படிப்பின்போது மறக்கமுடியாத இருநபர்களின் அறிமுகம் நடந்தது . ஒருவர் , அமர் நல்வாடே , மற்றொருவர் ராஜேந்திரன் மானே . நல்வாடே ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி தோழனாக இருந்து கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார் . இதுதான் அவரை படிப்பில் நிலையாக நிறுத்தி படிக்க வைத்திருக்கிறது .